Friday, July 1, 2016

ஆடுதின்னாப்பாலை

   
ஆடுதின்னாப்பாலை
Aristolochia tagala.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
தரப்படுத்தப்படாத:பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:[Magnoliid]
வரிசை:[Piperales]
குடும்பம்:[Aristolochiaceae]
பேரினம்:[Aristolochia]
இனம்:A. tagala
இருசொற் பெயரீடு
Aristolochia tagala
ஆடுதின்னாப்பாலை அல்லது ஆடுதீண்டாப்பாலை அல்லது பெருமருந்து (Aristolochia tagala, Indian birthwort; "இடச்சுக்காரர் குழாய்" எனவும் அழைக்கப்படும்.[1]) என்பது ஒரு மூலிகைத் தாவரமாகும். ஆடு தின்னாத அளவுக்குக் கசப்புத்தன்மை உடையதால் ஆடுதின்னாப்பாலை, ஆடுதீண்டாப்பாலை என்னும் பெயர்கள் வழங்கலாயின.[2] வாரம் எனும் பெயரும் இதற்குள்ளது. எட்டித் தழையையும் மேயும் வெள்ளாடுகூட கறித்துப் பார்த்துவிட்டுத் தின்னாமல் ஒதுக்கி வாரம் செய்வதால் இந்தச் செடிக்கு வாரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

பரம்பல்[தொகு]

இது பரவலாகக் காணப்படுகிறது. இதன் பரம்பல் இமயமலை முதல் இலங்கை வரை தென்கிழக்காசியா (மியன்மர், இந்தோனேசியா, இந்தோசீனா, தாய்லாந்து உட்பட) சீனா, ஓசியானியா (மேலேசியா, சொலமன் தீவுகள், அவுத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வரை) ஆகிய இடங்களில் காணப்படுகிறது[1]