ஆடுதின்னாப்பாலை அல்லது
ஆடுதீண்டாப்பாலை அல்லது
பெருமருந்து (
Aristolochia tagala,
Indian birthwort; "இடச்சுக்காரர் குழாய்" எனவும் அழைக்கப்படும்.
[1]) என்பது ஒரு மூலிகைத் தாவரமாகும்.
ஆடு தின்னாத அளவுக்குக் கசப்புத்தன்மை உடையதால் ஆடுதின்னாப்பாலை, ஆடுதீண்டாப்பாலை என்னும் பெயர்கள் வழங்கலாயின.
[2] வாரம் எனும் பெயரும் இதற்குள்ளது. எட்டித் தழையையும் மேயும் வெள்ளாடுகூட கறித்துப் பார்த்துவிட்டுத் தின்னாமல் ஒதுக்கி வாரம் செய்வதால் இந்தச் செடிக்கு வாரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.
பரம்பல்[தொகு]
இது பரவலாகக் காணப்படுகிறது. இதன் பரம்பல்
இமயமலை முதல்
இலங்கை வரை தென்கிழக்காசியா (மியன்மர்,
இந்தோனேசியா,
இந்தோசீனா,
தாய்லாந்து உட்பட) சீனா,
ஓசியானியா (
மேலேசியா,
சொலமன் தீவுகள், அவுத்திரேலியாவின்
குயின்ஸ்லாந்து வரை) ஆகிய இடங்களில் காணப்படுகிறது
[1]