Friday, July 1, 2016

ஆடாதோடை

ஆடாதோடை
   


 
ஆடாதோடை
Justicia adhatoda 1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
பிரிவு:பூக்கும் தாவரம்
வகுப்பு:இருவித்திலைத் தாவரம்
வரிசை:Lamiales
குடும்பம்:Acanthaceae
பேரினம்:Justicia
இனம்:J. adhatoda
இருசொற் பெயரீடு
Justicia adhatoda
L.
ஆடாதோடை (Adhatoda zeylanica) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
  • வேறு பெயர்: ஆடாதொடை, வாசை
  • தாவரவியல் பெயர்:Adathoda zeylanica
  • குடும்பம்: Acanthaceae
  • இச்செடி இந்திய முழுவதிலும் ஏராளமாக பயிராகின்றது.
  • பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர்.
  • சுவை: கைப்பு
  • தன்மை: வெப்பம்
  • பிரிவு: கார்ப்பு

செய்கைகள்[தொகு]

  • கோழையகற்றி
  • நுண்புழுக்கொல்லி
  • சிறுநீர் பெருக்கி
  • வலிநீக்கி

முக்கிய வேதிப்பொருள்கள்[தொகு]

  • வாசிசின்
  • வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின்
  • வைட்டமின் சி
  • கேலக்டோஸ்
இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.

மருத்துவ பயன்பாடுகள்[தொகு]

இம்மூலிகை இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும்.
"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி."

- (அகத்தியர் குணவாகடம்)

பயன்படுத்தும் முறைகள்[தொகு]

  • சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
  • இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க
ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
  • இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க
இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.
  • இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
  • இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்
கொடுக்க இருமல் தீரும்.
  • இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
  • ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்