- "கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
- கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
- காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
- 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
- கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
- 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
- ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
- ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
- "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
- 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
- நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
- நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
- பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
- பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
- 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
- மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
- "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
- 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
- கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
- 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
- கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
- கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
- படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
- 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
- "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
- தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
- 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
- ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
- பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
- பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
- துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
- சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
- "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
- சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
- மத்தான மன்மதன்போல் தேகமாகும்
- மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
- எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
- ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
- அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
- அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)
இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள்.
- கணவனும் மனைவியும் கலவியில் ஈடுபடும் காலத்தில் கணவனின் வலதுநாசித் துவார வழியாக மூச்சு ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும்.
- இட நாசித் துவாரத்தின் வழியாக ஓடினால் பெண் குழந்தை பிறக்கும்.
- சுழுமுனை,அஃதாவது நடுவாக ஓடினால் அலி பிறக்கும்.
- மூச்சு ஜம்பூதங்களில் தோன்றி முழுமையாக ஓடினால் குழந்தை நூறு வயது இருப்பதோடு,ஆரோக்கியமாக இருக்கும்.
- குறைந்து ஓடினால் அதற்கேற்ற மாதிரி அதன் ஆயுள் குறையும்.
- ஓடுகின்ற மூச்சு மெல்ல ஓடினால் குழந்தை குட்டையாய்ப் பிறக்கும்.
- வளைந்து ஓடினால் முடமாகப் பிறக்கும்.இவைகள் எல்லாம் கலவி செய்கின்ற ஆண்களுக்கு.
- பெண்களின் வயிற்றில் மலம் தங்கியிருந்தால் குழந்தை மந்த புத்தியுடன் விளங்கும்.
- நீர் தங்கியிருந்தால் ஊமையாகப் பிறக்கும்.
- மலம், நீர் ஆகிய இரண்டும் தங்கியிருந்தால் குருடாகப் பிறக்கும்.
- இருவருக்கும் ஒரே மாதிரி நல்லமுறையில் சுவாசம் ஓடினால் பிறக்கின்ற குழந்தை அறிவோடும் அழகோடும் விளங்கும்.