"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, July 1, 2016

ஆடாதோடை

ஆடாதோடை
   


 
ஆடாதோடை
Justicia adhatoda 1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:தாவரம்
பிரிவு:பூக்கும் தாவரம்
வகுப்பு:இருவித்திலைத் தாவரம்
வரிசை:Lamiales
குடும்பம்:Acanthaceae
பேரினம்:Justicia
இனம்:J. adhatoda
இருசொற் பெயரீடு
Justicia adhatoda
L.
ஆடாதோடை (Adhatoda zeylanica) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
  • வேறு பெயர்: ஆடாதொடை, வாசை
  • தாவரவியல் பெயர்:Adathoda zeylanica
  • குடும்பம்: Acanthaceae
  • இச்செடி இந்திய முழுவதிலும் ஏராளமாக பயிராகின்றது.
  • பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர்.
  • சுவை: கைப்பு
  • தன்மை: வெப்பம்
  • பிரிவு: கார்ப்பு

செய்கைகள்[தொகு]

  • கோழையகற்றி
  • நுண்புழுக்கொல்லி
  • சிறுநீர் பெருக்கி
  • வலிநீக்கி

முக்கிய வேதிப்பொருள்கள்[தொகு]

  • வாசிசின்
  • வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின்
  • வைட்டமின் சி
  • கேலக்டோஸ்
இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.

மருத்துவ பயன்பாடுகள்[தொகு]

இம்மூலிகை இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும்.
"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி."

- (அகத்தியர் குணவாகடம்)

பயன்படுத்தும் முறைகள்[தொகு]

  • சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
  • இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க
ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
  • இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க
இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.
  • இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
  • இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்
கொடுக்க இருமல் தீரும்.
  • இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
  • ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்