"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, March 14, 2016

மருந்தில்லா இறைவழி மருத்துவ சூட்சும திறவுகோல்


நமது மாபெரும் அண்டத்தில்( இவ்வுலகத்தில்) பஞ்சபூதம் என்ற  நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம், போன்ற இயற்கையானவற்றால் உலகம் இயங்கி கொண்டிருப்பதை போல நமது உடலான பிண்டத்திலும் மேற்கண்ட ஆற்றலுடன் நமது உள் உறுப்புக்கள் இயங்கிகொண்டுள்ளதை பலரும் அறிதல் வேண்டும். கடநத் காலங்களில் பஞ்சபூத ஆற்றல்களுக்கு   உட்பட்ட வாழ்க்கை  முறை இருந்தது. இதனால் மனித ஜீவராசிகள் துன்பங்கள் நோய்கள் பெறிதும் அற்ற நிலை இருந்தது. இதுபோலவே அண்டத்தில்  உள்ள பூமி ,நீர், காற்று  போன்றவைகள் சுற்றுச்சூழல்  கெடாமல் நன்றாக இருந்தது.
இன்று நிலைமையோ வேறாக உள்ளது. லைப் ஸ்டைல், மனிதனிடம் பல மாற்றங்களை விதவிதமாக வியாதிகளை இருதய நோய் , சர்க்கரைநோய், புற்று நோய், போன்றவைகள் உண்டுபண்ணியதுபோல் இயற்கையாக நன்றாக இருந்த பூமி, நீர் காற்று போன்ற இயற்கையும், சுற்றுச்சூழல் மாசு படிந்து உள்ள நிலைமையில் பூகம்பம், சுனாமி, புயல், வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களால் உலகம் தவிக்கும் நிலை உள்ளது.
உலகம் இனறு உள்ள நிலையை சீர்செய்ய மனிதகுலம் ஆராய்ந்து வருகிறது.
மனிதகுலம் மேற்கண்ட நோய்கள் நிலைமையை சரிசெய்ய என்ன செய்யபோகிறது? புது, புது ஆராய்ச்சிகள் புது, புது மருந்துகள் என்கிறார்கள்.ஆனால் முடிவு தொடர்ந்த மனிதகுல நோய்துன்பங்களுமாக ,இன்று உள்ள நிலைமையை மாற்றி கொள்ள சிறிய சூட்சும திறவுகோல்  இனி....

பஞ்சபூதங்கள்   5
1.தீ, 2.நிலம்,  3.காற்று,  4.நீர், 5.ஆகாயம் 
பஞ்ச பூத உறுப்புகள் 12   தீ=4,   நிலம்=2  ,  காற்று=2,  நீர்=2,   ஆகாயம்=2


உடல் உறுப்புக்கள் நனறாக இயங்கும் நேரம் 24 மணியில்
அதிகாலை மணி     3=5     நுரையீரல்        காற்று
காலை மணி 5=7 பெருங்குடல்     காற்று காலஸ்ஹஸ்தி
காலை மணி 7=9 வயிறு            நிலம் காஞ்சிபுரம்
காலை மணி 9=11 மண்ணீரல்                       நிலம்
மதியம் மணி 11=1    இருதயம்         நெருப்பு
மதியம் மணி 1=3 சிறுகுடல் நெருப்பு திருவண்ணாமலை
மாலை 3=5 சிறுநீர்ப்பை      நீர்
மாலை 5=7 சிறுநீரகம்    நீர் திருவாணைக்காவல்    
இரவு மணி 7=9 இருதய மேலுறை     நெருப்பு
இரவு மணி 9=11 மூ.வெ.க.உறுப்பு    நெருப்பு
இரவு மணி 11=1 பித்தப்பை          ஆகாயம்(மரம் சிதம்பரம்)
இரவு மணி 1=3 கல்லீரல்          ஆகாயம் (மரம்)

மேற்கண்ட நேரங்களில் செயல்படும் உறுப்புக்களின் இயக்கத்தை அனுசரித்து நமது உணவு, உறக்கம் இயற்கை  உபாதைகள் கழித்தல் என இவற்றை அமைத்துக்கொண்டால் நோயின்றி வாழலாம். நோய்ப்பட்ட நிலைமையில் மேற்கண்ட உறுப்புக்களின் பஞ்சபூதத்துவ புள்ளிகள் 60யை தெரிந்து வைத்துகொண்டு அவற்றில் 25 புள்ளிகளை பயன்படுத்தியே தொட்டும் தொடாமலும்  ஆங்கில மற்றும் மரபு வழி மாற்று  மருத்துவத்தால்  தீராத இருதய வியாதி, சர்க்கரை  நோய் போன்ற நீண்ட நாட்கள் மருந்து சாப்பிட்டும் தீராத  இது போன்ற வியாதிகளை  மிகவும் சுலபமாக , துன்பம் தராமல் , இறைவன் அளித்த மற்ற உறுப்புகளுக்கு தீங்கு ஏதும் தராமல் சுகமான மனிதர்களாக நீண்டநாட்கள் வாழ பல சூட்லசுமங்கள் உள்ளன.
ரிஷிகளும் , மனிவர்களும், சொல்லி வைத்ததைதான் இன்று நாம் மறந்தோம்.அதை புரியாமல் இன்று பலரும் உள்ளோம்.உடல் இயங்கு இயல் தெரியாமல் நமது மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்களும் கூட அதை , மருநதால் தீர்க்கிறேன் என்றெல்லாம் பிழைப்புக்காக வருவாய் பெருக்கும் நிலை உள்ளது.
வாழ்க்கை நடைமுறையும், இன்றைய காலத்தில் எப்படஇருக்கவேண்டும் என்ற நிலையை நாம் ஈடுகொடுத்து இயற்கை நமக்காக கொடுத்த நோய் எதிர்ப்பு சக்தியை நாம் பயன்படுத்தி பொறுமை, விருப்பம் இரண்டையும் கடைபிடித்து நவீன மருந்துகள் எனச்சொல்லி நச்சுக்களை உட்கொள்ளும் நிலையில் இருந்து விடுபடுவோம்.
இரத்தக்கொதிப்பு
இறைவன் , இயற்கை படைத்த இருதயம் எப்படி இருக்கவேண்டும் என்பதை படைத்த இறைவனுக்குதான் தெரியும்.அவனிடம் பொறுப்பேற்றிட வேண்டும். எதையும் அவன் பார்த்துகொள்வான் என்ற உள்ள நிலைமையை மனதில் நினைத்தால் இரத்தக்கொதிப்பு வராது.
நமது உள்ளுறுப்புக்கள் 12ல் ஏதாவது ஒரு உறுப்பில் பழுது ஏற்ப்பட்டாலும் அநத் உறுப்புக்கு உடனடியாக இரத்தத்தை செலுத்தி சரிசெய்யும் காரியத்தை இருதயம் செய்வதை நாம் உணரவேண்டும்.அதன்செயலே மருந்து மாத்திரைகள் கொண்டு தடைபடககூடாது.இ்ரு
தயம் அந்த காரியத்தை முடித்தபின் தன்நிலைக்குத்தேவையான துடிப்புக்கு தன்னை ஆளாக்கிக்கொள்ளும்.எனவே நாம் நோயின்றி விடுபட இரத்தகொதிப்பு தேவை.அதை பாதுகாக்கவேண்டும்.இது இறைவனின் இயற்கையின் செயல் என்பதை உரைவேண்டும்.
சர்க்கரை நோய்
அதுபோலவே  சர்க்கரையின் அளவினை ஆராய்ந்து அதை குறைக்கிறோம் என்று இரசாயன மாத்திரைகளை தின்று ஏற்கெனவே ,ஜீரணம் குறைவாக இருந்த வயிற்றினை மேலும் மோசமான நிலைக்கு வெளியேற்ற வேண்டிய சர்க்கரை கழிவுகளை நவீன ரசாயன மாத்திரைகளைகொண்டு உடமபிற்குள்ளேயே சுழற்சியாக விட்டு கண்ணுக்கும், காலுக்கும், கெடுதலை  உண்டுபண்ணி கொள்ளும் நிலைமையையும் மேலும் கல்லீரலையும், சிறுநீரகத்தையும், இருதயத்தையும் சீரழிக்கும் காரியத்தை இநத் நவீன மருத்துவம்செய்துகொண்டு வருகிறது.நவீன ரக மருந்துகளை நீக்கவேண்டும்.அதனையும் நமது மக்கள் மற்றும் மாற்றுமறை மருத்துவர்கள் கூட நம்பி நஷ்டமடைகிறார்கள். இரத்தக்கொதிப்பும், சர்க்கரை வியாதியும் மேலும் சின்னதாக வரும் , சுரம் போன்றவற்றிற்கு பல பெயரிட்டு அதற்கான மருந்துகள் எனசொல்லி உடலின் உயிர் சக்தியை கெடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை வீணடிக்கிறார்கள்.பின்பு காலத்திற்கும் மருந்து மாத்திரை மருத்துவர்கள் என அலைந்துகொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற  நோய்களை பெரிதாக்கிகொள்னிறார்கள்.
காலை 8 மணி, இரவு 8 மணி, பகல் 1மணிக்கு உணவு உண்ணவேண்டும்.இரவு 10 மணிக்கு தூங்கி 5 மணிக்கு, 7 மணிநேரம் தூங்கிய பின் எழுந்தால் எந்த  நோய்க்கும் இடமில்லாமல்  போகும்.இரவு கண்விழிக்ககூடாது.மது, புகை, போதை தரும் பொருட்களையும் மனதையும் உடலையும் தடமாற செய்பவைகளை தொடாமல் மேலே கண்டபடி வாழ்வியலை நடத்தினால் இன்பமே.
கூல்டிரிங்க்ஸ் என்ற பெயரில் சாயத்தண்ணீரை பாட்டிலில் விற்பவற்றை உபயோகிக்க கூடாது.அதனால்  எலும்பினுடைய உறுதித்தன்மை கெட்டுப்போகும்.9க்கும் மேற்பட்ட கெமிக்கல்விஷயங்கள் கலந்த பற்பசை எந்த கம்பெனியாக இருந்தாலும்  உபயோகிக்ககூடாது.அலுமினிய பாத்திர சமையல் கூடாது.சின்னவெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துகொள்ளவேண்டும். காலை 7 மணிக்குள் மலஜலம் கழிக்கவேண்டும்.
குறிப்பாக சித்தர் வாக்குடன் முடிக்கிறோம்.
தினமிரண்டு சிக்காமல் மடக்காமல்
பெண்ணின் பால் ஆசை பெருக்காமல், உண்ணுங்கால்
நீர்சுருக்கி, மோர்பெருக்கி, நெய் உருக்கி
உண்பார்தம்  பேர் உரைக்க போமே பிணி   
                       =சித்தர்வாக்கு
இரண்டு வேளை மல ஜலம் கழிப்பவரும், பெண்போகம் அதிகம் இல்லாதவரும் சாப்பிடும்போது சுண்ட வைத்தநீர், தண்ணீர்போல் மோர், நெய் உண்பவர் பேர்சொன்னால்  நோய்போகும்.

அன்பு அறக்கட்டளை உதயமானதின் நோக்கம்



கடலூர் மாவட்டம்  புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பில் 1985 ல் மார்ச் 7ல் டாக்டர் ஜே.அன்பழகன்  ஆர்ஐஎம்பி, ஏ.தேன்மொழி ஆகியோருக்கு இரண்டாவது மகனாய் பிறந்தேன்.சேத்தியாத்தோப்பில் அரசு பள்ளியில் தொடக்க கல்வி முடித்து , சேத்தியாத்தோப்பு டிஜிஎம் மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி முடித்தேன்.சிதம்பரம்  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருந்தாற்றியல் (டிபார்ம்) முடித்தேன்.பின்பு வேலூர் மாவட்டம் போரூரில் உள்ள தனியார் கல்லூரியில்  (பிஇகெச்எம்எஸ்) அதாவது(எலக்ட்ரோ கோமியோபதி) முடித்துவிட்டு 2007ல் ஆம் ஆண்டு என்னுடைய பொது சேவை தொடங்கி தொடர்ந்து செய்து வருகிறேன்.


எனது தந்தையார் உயர்திரு  டாக்டர் ஜே.அன்பழகன்  ஆர்ஐஎம்பி,  அவர்கள் சேத்தியாத்தோப்பில் கிளினிக் நடத்தி வந்தார். பல வித இன்னல்களால் தற்கொலைக்கு முயலும்  விஷ மருந்து  குடித்து தற்கொலைக்கு  செல்பவர்களை சிறப்பாக காப்பாற்றி விடுவதில் கைதேர்ந்தவராக இருந்து வந்தார். ஆனால் அவரிடம் உள்ள துரதிஷ்டம் அவர் தினமும் மதுவுக்கு அடிமையாகிய நிலையில் வாழ்ந்து வந்தார்.அவர் மது குடித்திருந்தாலும் தன்னுடைய கிளினிக்கில் வைத்தியம் செய்யும்போது வெற்றிகரமாக செய்துவந்தவர். எதிர்பாராமல் ஒரு நாள் மதுவோடு உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்ல பேருந்தில் முன் படிக்கட்டில்தொங்கிகொண்டு சென்றவர் நிலை தடுமாறி பேருந்திலிருந்து விழுந்து பின்சக்கரம் ஏறி அவ்விடத்திலேயே உயிரைவிட்டார்.(1997).

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து வந்தேன். இதனால் பல இன்னல்களை அனுபவித்து வந்தேன்.எனது உடன் பிறந்தோர் இருவர்.ஒரு அண்ணன், ஒரு தங்கை.இருவருமே மருத்துவ துறையில் இருக்கிறார்கள்.இதில் எனது அண்ணன் எனது தந்தையை போலவே மதுபோதையில்  சில வருடங்களுக்கு முன்பு தன்னுயிரை மாய்த்துகொண்டார்.இதற்கு பிறகுதான் இனியாரும் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டதைபோல மதுவால் சீரழியக்கூடாது என்று அன்பு மருத்துவ அறக்கட்டளை என்பதை கடந்த 2013 ஆம் ஆண்டு துவக்கி என்னால் முடிந்தளவு போதையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிசெயல்பட்டு வருகிறேன்.இந்த போதை தடுப்பு மறுவாழ்வு  மையத்தின்மூலம் சமூகத்தின் எளிய மக்கள் மற்றும் போதையினால் பாதிக்கப்பட்வர்களை காப்பாற்றுவதே எனது லட்சியம்.அதற்கு உங்களது ஆதரைவையும்கோருகிறேன்.

                                                                                                       இப்படிக்கு நிர்வாகி
                                                                                                                        ஆனந்தபாபு