"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, April 7, 2016

வெள்ளைபடுதல்



"வெள்ளைப்படுதல் குணமாக அனுபவ வைத்தியம்"

வெள்ளருகு இலைகளைக் கொண்டுவந்து மூன்று மிளகு சேர்த்து அரைத்து சுண்டைக்காயளவு பசும்பாலில் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும், மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும், உணவில் புளி, கடுகு நீக்கி பத்தியம் இருக்கவும்.
  • ஓகத்தின்படி நம் உடலில் ஏழு அடிப்படையான தளங்கள் உள்ளன. இவற்றை சக்கரம் என்றும் இயம்புகின்றனர். இதில் மூலாதாரம் எனும் மூல அடிப்படையில் குண்டலினி எனும் ஆற்றல் பாம்பு வடிவில் உறைவதாகச் சொல்வர். ஓகம் (யோகம்) பயிற்றுவிக்கும் ஆசான்கள், குருமார்கள் இந்த குண்டலினி ஆற்றலை முதுகந்தண்டு வழியே மேலே ஏற்றிக் கொண்டு போய் உச்சந்தலையில் அமைந்த பதின்நூறு ஆரச்சக்கரத்தில் (ஸஹஸ்ராரம்) சேர்க்க வேண்டும் என்பதை மட்டும் சொல்கின்றரே தவிர அதை மீண்டும் அப்படி கீழே கொண்டு வந்து மூல அடிப்படையிலேயே சேர்த்துவிட வேண்டும் என்று சொல்வதேயில்லை. அச்சாகும் ஓக நூல்களிலும் இந்தக் குறை உள்ளதை வாசிப்பவரால் அறியமுடியும். இது ஏனென்றால் அந்த ஆசான்களுக்கு, குருமார்களுக்கு அது பற்றி தெரியாமை ஒரு காரணம் எனலாம், மற்றொன்று ஒருவரது ஓக அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமே எனலாம். ஓகத்தை பழகுவோர் தம் குண்டலினி ஆற்றலை மேலே ஏற்றி பதின்னூறு ஆரச்சக்கரத்தில் கொண்டு சேர்ப்பதற்கு அவரது முயற்சியைப் பொருத்து 12 முதல் 30 ஆண்டுகள் வரை பிடிக்கின்றன. இதனாலேயே பலர் ஓகத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. மாறாக ஆன்மீக முன்னேற்றம் தராத சடங்கு, மதம் ஆகியவற்றை காலம், எளிமை கருதி கைக் கொள்கின்றனர்.


இந்த நீண்ட கால ஓகப் பயிற்சியைத் தவிர்த்து சில நாள்களில் அல்லது சில மாதங்களில் அந்தக் குண்டலினியை பதின்னூறு ஆரச்சக்கரத்திற்கு கொண்டு போவதோடு அல்லாமல் அதை மீண்டும் கீழேயுள்ள அதன் மூலஅடிப்படையிலேயே கொண்டு வந்து சேர்க்கவும் அமைந்த எளிய ஓகப் பயிற்சி தான் இந்த வாசி யோகம் எனும் காற்றுப் பயிற்சி. இதை தமிழ் நாட்டு சித்தர்கள் பன்னூற்றாண்டுகளாகப் பழகி வந்துள்ளனர். ஆனால் ஒரு இயக்கம் நடத்தி மக்களிடையே இந்த வாசி ஓகத்தைக் கொண்டு செல்லாமல் தம்மை அண்டிவந்த தம் மாணவர்களுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தனர். அந்த மாணவர்கள் தம் இசைவைப் பெறாமல் வாசி ஓகத்தை பிறருக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்தம் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்று எச்சரித்து மக்களிடம் பரவாமல் தடுத்துவிட்டனர். இது ஏனென்றால் இந்த பயிற்சியால் கிட்டும் சித்துகளை பக்குவமற்ற பழகுநர் தம் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தி தமக்கும், பிறருக்கும் கேட்டை பயக்குவர் என்பதால் எனலாம். மக்களுடைய எல்லா நல்ல, தீய செயல்களுக்கும் எங்கும் நிறைந்த பரம்பொருளே கட்டுப்பாட்டாளன் (controller) என்பதால் சித்தர்களின் இந்த அச்சம் தேவையற்றது. தமிழ்ச் சொல் ஆண்டவன் என்பதற்கும், சமற்கிருதத்தில் ஈஸ்வர என்பதற்கும் கட்டுப்பாட்டாளன் என்பதே பொருள்.


இனி, வாசி ஓகம் பழகும் முறையை குறித்து தெளிவான விளக்கமும், அதன் பின் அதைப் பழகுபவருக்கு அதனால் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களும் என்னென்ன என்பதும் சொல்லப்படும். வாசிஓகத்தில் அடிப்படையானது காற்று. வாசி என்றால் காற்று எனப் பொருள். இதை பழக விரும்பவர் எட்டு அகவைக்கு மேற்பட்டவராக, உடல் வளைவதற்கு இயன்றவராக இருந்தால் போதும். பிற ஓக, ஊழ்க (தியான) பயிற்சி முறையில் உள்ளது போல் சைவ உணவே உண்ணவேண்டும் என்பது போன்ற உணவுக் கட்டுப்பாடு ஏதும் இதில் இல்லை. ஒரு நாளில் ஒரேஒரு முறை மட்டும் இதைப் பழகினால் போதும். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு அமைதியான மன நிலையில் இதைப் பழுகுவது சாலவும் நன்று.

பயிற்சி முறை:

வாசிஓகம் பழகுநர் முதலில் ஒரு தடியான விரிப்பை தரைமேல் விரித்துக் கொள்ள வேண்டும். இது முட்டியில் வலி ஏற்படாமல் தவிர்க்கும் உடலை வளைத்து பழக வேண்டி உள்ளதால் தளர்த்தியான ஆடையே மிகவும் ஏற்றது. முதலில் விரிப்பின் ஒரு கோடியில் முட்டி போட்டு அமர்ந்து இடது கால் கட்டை விரல் மேல் வலது கால் கட்டை விரலை வைத்து அழுத்தியபடி புட்டத்தை கால்களின் மேல் இருத்தி அமர வேண்டும். பின்பு, வலதுகைப் பெருவிரலால் வலது மூக்குத் துளையை மூடி இடது மூக்குத் துளை வழியாகக் காற்றை மெல்ல மெல்ல முழுமையாக இழுத்து பின்பு அக்காற்றை உள்ளே நிறுத்தி வைக்காமல் உடனேயே இடது மூக்குத் துளையை நடுவிரலால் மூடி வலது மூக்குத் துளை வழியாக உள்ளே உள்ள காற்று முழுவதையும் வெளியே விட்டுவிட வேண்டும். அதனைத் தொடர்ந்து அதே வலது மூக்குத் துளை வழியாக காற்றை மெல்மெல்ல உள்ளுக்கிழுக்க வேண்டும். காற்றை இழுத்த பின் இப்போது வலது மூக்குத் துளையை மூடிவிட்டு இழுத்த காற்று அத்தனையையும் மெதுவாக இடது மூக்குத் துளை வழியாக முழுவதுமாக வெளியே விட்டுவிட வேண்டும். இது மூக்கில் உள்ள காற்றடைப்பை அகற்றி இனி செய்ய இருக்கின்ற வாசிஓகப் பயிற்சியில் தடை ஏதுமின்றி மூக்குத் துளையில் காற்று போய் வருவதற்கு உதவிசெய்யும். (கீழே உள்ள படம் ஒரு தெளிவிற்காக)



இனி, முட்டியிட்டு அதே உட்கார்ந்த நிலையில் இரு தொடைகளின் மேல் கைகளை வைத்து இடக்கால் பெருவிரலை வலக் கால் பெருவிரலால் அழுத்தியபடி முதுகை நேராக நிமிர்த்தி இருக்கவேண்டும். பின்பு வாயை முன்குவித்து காற்றை மெல்லிதாக 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும். காற்று உள்ளே செல்லும் போது அடிவயிறு இயல்பாகக் குறுகி மார்பு விரிவடையும். இப்படி முக்கால் அளவிற்கு காற்றை இழுத்துக் கொண்டிருக்கும் போது தலையை முன்னோக்கி வளைத்தபடியே தொடை மீதுள்ள இரு கைகளையும் தரையோடு தேய்த்தாற்ப்போல் நீட்டி தரையில் கையை பதித்தபடி குனிந்து நெற்றியால் தரையைத் தொடவேண்டும். நெற்றியால் தரையைத் தொடுவதற்கு வளைகின்ற போது வயிறு அப்படியே மடிந்து உள்நோக்கி சுருங்கி வளையும். வயிறு வளைந்தால் அவர் பயிற்சியை முறையாகச் செய்கின்றார் எனக் கொள்ளலாம். குனியும்போது உடலும் முன்னோக்கி நகரும். நெற்றியால் தரையைத் தொடும் வரை காற்றை 'ஊ' என உள்ளே இழுக்கவேண்டும்.


கீழே குனிந்து நெற்றியால் தரையைத் தொடும் போது மட்டும் வாயை லேசாக திறந்து 'ஆ' என்று காற்றை வெளியே விடவேண்டும். ஆனால் முழுமையாக விடவேண்டும் என்று இல்லை. அதைத் தொடர்ந்து இரு கைகளையும் தரையை ஓட்டினார் போல் தொடையை பின்நோக்கி இழுக்க வேண்டும். கைகளை இழுக்கின்றபோது மீண்டும் வாயைக் குவித்தபடி 'ஊ' என்று காற்றை உள்ளுக்கிழுத்தபடியே தோளைத் மேலே தூக்காமல் கழுத்தையும் சேர்த்தே பின்னோக்கி இழுத்து நேராக நிமிர்ந்து இரு கைகளையும் தொடைகளின் மேல் இருத்த வேண்டும். இப்படி குனிவில் இருந்து மெல்ல எழுந்து நிமிரும் வேளையில் காற்றை முக்கால்வாசி இழுத்திருப்பீர்கள். மீண்டும் முன்போல் காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே தொடைமேல் உள்ள கைகளை முன்னோக்கி நகர்த்தி தரையைத் தேய்த்தாற் போல குனிய வேண்டும். நெற்றி தரையைத் தொடும் நேரத்தில் மட்டும் சிறிது வாய் திறந்து காற்றை 'ஆ' என்று விடவேண்டும். பின் மீண்டும் இரு கைகளையும் தொடையை நோக்கி இழுக்க வேண்டும். தோளை உயர்த்தாமல் கழுத்தையும் பின்னே இழுத்து உடலை நிமிர நிறுத்த வேண்டும். பின்னோக்கி இழுக்கின்ற போது வாயைக் குவித்து காற்றை மெல்லமாக 'ஊ' என்று இழுக்கவும் வேண்டும். இதனால் காற்று உடல் முழுவதும் நிறையும். உடல் காற்றாலேயே நிறைந்து போகும். உடல் முழுதும் வியர்க்கும். இப்படியே 30 நிமிடங்கள் காற்றை உள்ளுக்கிழுத்தும் விட்டும் வரும் பயிற்சியால் காற்று கழுத்து வரை நிரம்பிவிடும். (காற்றை விரைந்து நிரப்ப சில நாள்களில் இந்த குனிந்து நிமிர்வதை வேகமாக செய்யவேண்டும்).


காற்று கழுத்து வரை நிரம்பிய பின் குனிந்து எழுவது கடினமாகிப் போகும். அப்போது முதுகு நிமிர்ந்த நிலையிலேயே கண்ணைமூடி சிதறாத கவனத்துடன் வலக்கண் பாப்பாவில் மனத்தைக் குவித்தபடி வாயைக் குவித்து காற்றை 'ஊ' என்று உள்ளுக்கு முழுமையாக இழுக்க வேண்டும் பின் வாயை சிறிதளவே திறந்து 'ஆ' என்று சிறிதளவே காற்றை விட வேண்டும். இப்படியே சில நிமிடங்கள் காற்றை இழுப்பதும் விடுவதும் நிகழ்த்திவந்தால் காற்று கண் வரை நிரம்பும். அதன் பின் கண்ணைத் திறந்து ஒரு கண்ணாடியில் தன் வலக்கண் பாப்பாவை மட்டும் முறைத்துப் பார்க்கவேண்டும். இதனால் அப்போது கண்ணில் நீர் கசியும். கண்ணீர் நின்றதும் காற்று வலக்கண்ணுக்கு மேலே ஏறுவது தெரியும். காற்று அப்படியே ஏறிச்சென்று உச்சந்தலையில் உள்ள பதின்னூறு ஆரச்சக்கரதில் நுழையும். காற்று நுழைவதை உற்று கவனிப்பதால் உச்சந்தலையில் குயவன் சக்கரம் சுழல்வது போல் ஒரு சக்கரம் அல்லது தாங்கி (bearing) சுழல்வதை உணரமுடியும். அங்கேயே எண்ணம் சிதறாமல் கவனித்துக் கொண்டிருந்தால் அருவி போல் நீர் வடியும். இது நீரில் குளிப்பது போல இருக்கும். இதை அந்த வாசிஓகப் பழகுநர் மட்டுமே அனுபவித்து உணர்வார். மற்றவர் கண்களுக்கு இது தெரியவே தெரியாது. இதைத் தான் காசியில் குளிப்பது என்றனர் ஓகியர். இதில் குளிப்பவர்க்கு மறுபிறப்பு கிடையாது என்பர். இந்த வாசிஓகப் பயிற்சியில் ஈடுபடுபவர் உள்ளுக்கு இழுத்து விடும் காற்றை மட்டுமே கவனிக்க வேண்டும் வேறு சிந்தனையில் ஈடுபடக் கூடாது. காற்று உடலின் உள்ளே எங்கே நுழைகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


இந்த பயிற்ச்சியை தொடர்ந்து செய்து வந்தால் நாளாவட்டத்தில் குனிந்து விழுந்து எழுவதை தவிர்த்து நிமிர்ந்த நிலையிலேயே வாய்வழியாகவே காற்றை இழுத்தும் வாய்வழியாகவே விட்டும் பழகிக்கொள்ளலாம்.


இன்னும் சில நாள்கள் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்துவர வாசிஓகப் பழகுநரின் தலை உச்சியில் (பதின்னூறு ஆரச்சக்கரத்தில்) கவனம் மேம்பட்டுவரும். அந்த சிதறாத கவனத்தால் அக்காற்று பனியாக மாறி பழகுநருக்கு பனிக்காற்று உணர்வை ஏற்படுத்தும் அதனால் உடல் முழுவதும் குளிரால் நடுங்கும். இதில் வெப்பக் காற்று குளிர் காற்றாக மாறுகிறது. இதன்பின் கட்டி கட்டியாகத் தொங்கும் பனியாக அது வளர்ச்சி பெறும். இதை 'வெள்ளி பனித்தலையர்' நிலை எனலாம். இதை அந்த வாசிஓகியால் மட்டுமே அனுபவிக்க முடியும் மற்றவருக்கு இது சிறிதளவும் தெரியவராது. இந்த நிலையை கடந்தால் சில நாள்களில் பதின்னூறு ஆரச்சக்கரம் தானாகவே திறக்கும். அப்போது வான்மண்டலமே அங்கு தெரியும். பின் காற்று அதன்வழியே வெளியே போகும். அண்டவெளிக் காற்று அந்தத் துளை வழியாக இறங்கும். இதுவே பத்தாவது வாசல் காற்று எனப்படும். இங்கு தான் நான் என்ற தனியாள் உணர்வு அந்த சுழியத்தோடு (cosmic entity) இணைகின்றது. அப்போது நானும் அவனும் ஒன்று என்ற உணர்வு மேலிடும். இதுவே துவைதம் எனப்படும் இருமை நிலை ஆகும். இதாவது, இறைவனும் இருக்கிறான் நானும் இருக்கிறேன் என்பது.


இந்த இருமை நிலையை உணரும் போது நீல நிறம் தெரியும் என்பது மட்டும் அல்ல கண்ணால் காணும் புற உலகப் பொருள்கள் யாவும் நீலநிறமாகவே காட்சியளிக்கும். அந்த நீல நிறத்தை பதின்னூறு ஆரச்சக்கரத்தின் வழியாக கீழே உடலுள் இறக்க வேண்டும். இதற்கு பதின்னூறு ஆரச்சக்கரத்திலேயே கவனத்தை குவிதிருந்தால் போதும் காற்றை இழுத்து விடத் தேவை இல்லை. இந்த நீல நிறத்தின் ஊடாகவே இறை மூலஅடிப்படையில் (supreme muladhara) இருக்கும் ஐம்பெரும் பூதங்களையும் ஒவ்வொன்றாக உடலுள் ஈர்க்க வேண்டும். இதை ஈர்க்கும் போது முட்டிபோட்டு வாசிஓகம் செய்வது போல் உட்காரத்தேவையில்லை. அப்போது இயல்பாக உட்கார்ந்து கொண்டு வலது கால் மேல் இடது காலை வைக்க வேண்டும் அல்லது தட்சிணாமூர்த்தி போல் அமர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இடக் காலை வலக் காலின் மேல் போட்டு உட்காருவது காற்றை கீழ் நோக்கி செலுத்தவும் உடலைக் குளிருட்டவும் செய்கின்றது. இந்த நிலையில் வாய்வழியாக காற்றை உள்ளிழுத்து விடுவதை நிறுத்த தேவையில்லை. மூக்கு வழியாக இயல்பாக மூச்சை இழுத்து விட்டால் போதுமானது. இந்த பயிற்சியை சிலநாள்கள் தொடர்ந்தாற்போல் செய்தால் அந்த இறை மூலஅடிப்படையை நம்முடைய மூலஅடிப்படையில் கொண்டு வந்து சேர்க்க முடியும். இடையில் கிட்டும் சித்துக்களில் ஈடுபாடு உண்டாகுமானால் மேற்சொன்ன முன்னேற்றம் கிட்டாமல் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடை உண்டாகும். ஆதலால் அவற்றை நாடவே கூடாது. இவ்வாறு இறை மூலஅடிப்படையை சேர்த்தால் ஒருவர் ஐம்பெரும் பூதங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதோடு முக்காலத்தையும் உணர்ந்தவர் ஆகின்றார். இந்த நிலையில் அந்த வாசிஓகப் பழகுநர் "அவனே நான், நானே அவன்" என்ற உணர்வை அடைகின்றார். இதுவே "நான் கடவுள்" எனும் "அஹம் பிரம்மாஸ்மி" என்ற உபநிடதக் கருத்துநிலை எனப்படுகிறது. இந்த நிலைதான் இரண்டன்மை எனும் அத்துவைதம் ஆகும். இது தான் உண்மையில் வீடுபேறு எனும் மோட்சமுமாகும். மோட

G.k

  • "சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..."

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில் b, நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை...!

1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு...
சாப்பிடுங்கள் முறையாக...
வாழுங்கள் ஆரோக்கியமாக!...
: 🔴நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

🔴இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

தேவற்ற முடியை நீக்கும் ரகசிம்




'தேவையற்ற முடியை நீக்கும் ரகசிய முறை '

தாளகத்தையும் கல்சுண்ணாம்பையும் கலந்து அரைத்து தடவி நான்கு மணிநேரம் பொறுத்து கழுவி துடைக்க அனைத்து முடியும் சுத்தமாக வந்துவிடும் .தாளகம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .

அசிடிட்டி


அசிடிட்டி எதனால் வருகிறது? தீர்வு என்ன?

உணவுக் குழாய் வயிற்றுடன் சேரும் இடத்திலுள்ள வட்ட வடிவ தசைகள் வயிற்றிலிருந்து ஆசிட் மேலே வர விடாமல் இறுகி தடுக்க வேண்டும். இந்த பிடிப்பு சரியில்லை எனில் ஆசிட் எளிதில் மேலே வந்து விடுகின்றது. இதனையே நெஞ்செரிச்சல் அல்லது `அசிடிடி' என்கிறோம்.

`அசிடிடி' எனப்படும் இந்த வார்த்தை அடிக்கடி அநேகரால் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதை முறையாய் கட்டுப்படுத்தாவிடில் மிகப்பெரிய பிரச்சனைக் கூட உருவாக்கிவிடும். நெஞ்செரிச்சலில் காணப்படும் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்...

வயிற்றில் எரிச்சல்: உணவுக் குழாய், வயிறு கபகபவென எரிவது போல் இருக்கும்.

நெஞ்சு வலி: நெஞ்சு வலி ஏற்படுவதன் காரணம் வயிற்றிலிருந்து `ஆசிட்' உணவுக்குழாய் மேல் நோக்கி அள்ளி வீசுகின்றது. இதன் வலி அதிகமாகவும், அதிக நேரமும் இருக்கின்றது. பலர் இந்த வலியினை நெஞ்சு வலியாக எடுத்துக் கொள்வர். இருப்பினும், நெஞ்சு வலி எதனால் என்பதனை மருத்துவ பரிசோதனை மூலம் அறிய வேண்டும்.

ஓய்வின் போது அதிக வலி: வயிற்றில் உள்ள `ஆசிட்' வயிற்றின் மேலாக ஒருவர் படுத்திருக்கும் பொழுதும், முன் பக்கமாக குனியும் பொழுதும் மேலெழுந்து வரும். நேராக அமர்ந்திருந்தால் இது நிகழாது. அதனால்தான் `ஆசிட்' தொல்லை இருக்கும் பொழுது நேராக அமர்ந்தோ அல்லது தலையை உயர்த்திய வாக்கில் சாய்ந்தோ இருக்கவேண்டும்.

உணவுக்குப் பிறகு வலி: விருந்து போன்ற கனமான உணவுக்குப் பிறகு ஏற்படும் வலியின் பொருள் வயிற்றினால் அந்த கனத்தினை தாங்க முடியவில்லை என்பதே. அதேபோல் உணவு உண்ட உடனே படுப்பதும், சாய்ந்து அமர்வதும் கூடாது.

கசப்பு ருசி: வயிற்றிலிருந்து வெளிவரும் `ஆசிட்' தொண்டை வழி வாய்க்கு வரும்பொழுது வாயில் ஒருவித கசப்பு உணர்வு ஏற்படும். ஒருசில நேரங்களில் இது தொண்டை அடைப்பினை ஏற்படுத்தலாம். இவ்வாறு ஏற்பட்டால் அதுவும் குறிப்பாக இரவில் ஏற்பட்டால் உடனடி மருத்துவரை அணுகவும்.

குரல் கரகரப்பு: திடீரென குரல் தடித்து மாறுகின்றதா? ஆசிட் தொண்டை வரை வந்து குரல் வளையை பாதித்து உங்கள் குரல் ஓசையை கடினமானதாக மாற்றலாம்.

தொண்டை பாதிப்பு: தொண்டை வலி குறிப்பாக சாப்பிட்ட பிறகு ஏற்படலாம்.

இருமல், இழுப்பு: சாப்பிட்ட பிறகு ஏற்படும் இருமல், மூச்சிழுப்பு போன்றவை இருந்தால் `அசிடிடி' இருக்கின்றதா என பரிசோதனை செய்துக் கொள்ளவும்.

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல், ஆஸ்த்துமா: நெஞ்செரிச்சல் இருமல், இழுப்பு என ஆஸ்த்துமா வரை கொண்டு செல்லலாம். வயிற்றில் உள்ள ஆசிட், நெஞ்சில் உள்ள நரம்புகளைத் தூண்டுவதால் மூச்சு குழாய்கள் ஆசிட் உள்ளே நுழையாதிருப்பதற்காக சுருங்குகின்றன. இதனால் ஆஸ்த்துமா ஏற்படுகின்றது.

வயிற்றுப் பிரட்டல்: வயிற்றுப் பிரட்டல் வாந்தி வருவது போன்ற ஒரு தவிப்பு இவற்றிற்கு பல காரணங்கள் கூற முடியும். என்றாலும், உணவுக்குப் பிறகு இவ்வாறு ஏற்படுவது `அசிடிடி' காரணமாக இருக்கக் கூடும்.

அதிக எச்சில்: வயிற்றில் உருவாகும் ஆசிட்டை வெளியேற்ற வாயில் அதிக எச்சில் சுரக்கும். சில நேரங்களில் `அசிடிடி' காரணமாக விழுங்குவது சிரமமாகத் தெரியும்.

* புகைபிடித்தல் வயிற்றில் உள்ள வால்வினை பலமிழக்கச் செய்வதன் மூலம் அசிடிடி ஏற்படலாம்.

* வலிக்கான மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது `அசிடிடி' உருவாகக் காரணமாகலாம்.

* மன உளைச்சல் உடையோருக்கு அசிடிடி அதிகம் இருக்கும்.

* பெப்பர்மென்ட் போன்ற உணவு அசிடிடியை உருவாக்கலாம்.

* அதிக எடை அசிடிடி உருவாக்கும்.

* அசிடிடிக்கு மரபணு ஒரு காரணம். தவிர்க்கும் முறைகள்:

* இரவில் அதிக நேரம் கழித்து உணவு உண்பதனை தவிர்த்து விட வேண்டும்.

* எப்பொழுதும் கைவசம் இதற்காக எளிதில் மருந்துக் கடைகளில் கிடைக்கும் மருந்தினை வைத்திருங்கள்.

* சர்க்கரை இல்லாத `சூயிங்கம்மினை' 30 நிமிடங்கள் மெல்ல அசிடிடி நீங்கும் என ஆய்வு கூறுகின்றது.

* `பேக்கிங் சோடா' அதனை அரை டீஸ்பூன் ஒரு கிளாஸ் நீரில் கலந்து உட்கொள்ள அசிடிடி குறையும். ஆனால், இதனை அடிக்கடி செய்யக்கூடாது. இதில் உப்பு அதிகம் என்பதால் வீக்கமும், வயிற்றுப் பிரட்டலும் ஏற்படக்கூடும்.

* சோற்றுக்கற்றாழை ஜுஸ் மிகச்சிறந்த நிவாரணி.

* அதிக கொழுப்புச்சத்து, எண்ணெய், மசாலா உணவைத் தவிர்த்து ஓட்ஸ், வாழைப்பழம் என உணவுப் பழக்கத்தினை மாற்றுங்கள்.

* தினமும் 4 கிராம் இஞ்சி (அ) 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* தக்காளியினை தவிர்த்து விடுங்கள். எலுமிச்சை ஜுஸ், ஆரஞ்சு இவற்றினை தவிர்த்து விடுங்கள்.

* சிறு சிறு உணவாக அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

* ஆல்கஹாலை அடியோடு தவிருங்கள்.

* மசாலா, கார உணவு, வெண்ணெய், பச்சை வெங்காயம் இவை கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.

* மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள்.

* தலையை சற்று உயர்த்தி படுங்கள். செய்யக்கூடியதும், செய்யக் கூடாததும் செய்யக் கூடாதவை:-

* அதிக காரம், மிளகாய் கூடாது.

* அதிக கொழுப்பு மிக்க பால், சீஸ் அல்லது ஐஸ்க்ரீம் கூடாது.

* பட்டாணி, பீன்ஸ், கோஸ் கூடாது.

* பச்சை காய்கறிகளை அப்படியே உண்ணுவது கூடாது.

செய்யக் கூடியவை:-

* சிறிதளவு இனிப்பு, உணவுக்கு முன்னால் எடுத்துக் கொள்ளலாம்.

* பேரீச்சை, அத்தி, நாவல்பழம், தேங்காய், மாம்பழம், பப்பாளி, மாதுளை எடுத்துக் கொள்ளலாம்.

* காரட் இலை, செல்லெரி இலை, கறிவேப்பிலை மிகவும் உகந்தது.

* சர்க்கரைவள்ளி கிழங்கு, காரட், பீட்ரூட் அசிடிடிக்குச் சிறந்தது.

* சீரகம், தனியா, ஏலக்காய் சிறந்தது.

* பார்லி, கம்பு, கோதுமை நல்லது.

* அதிக கொழுப்பற்ற வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது குளிர்ந்த பால் நல்லது.

* பாதாம் மிக மிகச் சிறந்தது.

* புதினா இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பது சிறந்தது.

* துளசி இலை சிலவற்றினை மெல்வது நல்லது.

* இளநீர் 4-5 முறை சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.

* தர்பூசணி, வெள்ளரி அசிடிடிக்கு மிகவும் சிறந்தது.

* இஞ்சி சாறு 2 டீஸ்பூன் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

* துளசி, சோம்பு, கிராம்பு, சீரகம் போன்றவை அசிடிடியினை தவிர்க்கும்.

* காலையில் 1-2 க்ளாஸ் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிப்பது அடிசிசிடிக்கு நல்லது.

* சிறு துண்டு வெல்லத்தை 2 மணிக்கொரு முறை வாயில் வைத்து அந்நீரை விழுங்க அசிடிடி கட்டுப்படும்.

* காலையில் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு பருக அசிடிடி குறையும்.

* வெள்ளரிக்காய் ஜுஸ் அல்லது வெள்ளரி உண்பது அசிடிடியை குறைக்கும்.

* அரிசிப்பொறி சாப்பிட அது அசிடிடியை உறிஞ்சி விடும்.

* அதிக பழம், காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* இதுபோன்ற உணவு செரிக்க உடலுக்கு குறைந்த சக்தியே தேவைப்படுகின்றது. இந்த உணவினால்...

* மூளை சுறுசுறுப்பு

* சுத்தமான ஆரோக்கிய சருமம்

* அதிக நோய் தாக்குதல் இன்மை

* ஆழ்ந்த தூக்கம்

* நல்ல செரிமானம்

* உறுதியான எலும்பு

* அதிக சக்தி

* எடை குறைதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றது.

ஆசிட் வகை உணவுகளான காப்பி, ஆல்க ஹால், சர்க்கரை, உப்பு, சிகப்பு மாமிசம் இவற்றினை தவிர்த்து விடுங்கள். இதுபோன்ற அசிடிக் உணவினால் * எடை கூடுதல்

* சோம்பல்

* வயிறு உப்பிசம்

* மோசமான சருமம்

* கவனமின்மை

* செரிமானக் கோளாறுகள்

* ஆரோக்கியமற்ற கூந்தல்

* உடையும் நகம்

* பல் பிரச்சனைகள்

* சோர்வு

* தலைவலி

* நரம்புத் தளர்ச்சி

* மன உளைச்சல்

* உடல் உஷ்ண குறைவு ஏற்படும்.

ஹீமோகுளோபின்

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது என வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

ஆரோக்கியமற்ற உணவுமுறை தான் ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதற்கான முதல் காரணி ஆகும். பெரும்பாலும் பெண்கள் மத்தியிலும், குழந்தைகள் மத்தியிலும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைபாடு தென்படுகிறது.

தலைசுற்றல், தலைவலி, மயக்கம், நெஞ்செரிச்சல் போன்ற ஒருசில அறிகுறிகளை வைத்து உங்கள் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என கண்டறிய முடியும். ஆனால், அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்படாது.

பொதுவான அறிகுறிகள், அரிதான அறிகுறிகள், குழந்தைகளுக்கான அறிகுறிகள் என மூன்று வகைகளாக ஒருவரது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என கண்டறியலாம்....

பொதுவான அறிகுறிகள்

காரணமின்றி அல்லது பெரிதாக எந்த வேலைகளும் செய்யாத போது தலை சுற்றுதல், உடல் சோர்வு, தலை வலி, மயக்கம் போன்றவை ஏற்படுவது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதை வெளிகாட்டும் பொதுவான அறிகுறிகளாகும்.

அரிதான அறிகுறிகள்

அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, வாந்தி வருவது, நெஞ்செரிச்சல், கை, கால்களில் வீக்கம் ஏற்படுவது போன்றவை ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அரிதான அறிகுறிகள் ஆகும்.

குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறி

குழந்தைகளிடம் வெளிப்படும் அறிகுறிகள் சற்று கடுமையானதாக இருக்கும். அளவுக்கதிகமான இதயத்துடிப்பு, வெளிர்நிறத்தில் தோற்றமளிப்பது, ஓர் செயலில் கவனம் செலுத்த முடியாமல் போவது, நரம்பு மண்டல வலிமை இழப்பு, நடத்தையில் மாற்றம் போன்றவை குழந்தைகளிடம் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளாக இருக்கின்றன.

பெண்கள் மத்தியில்

பெண்கள் மத்தியில் பிரசவ காலத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவது இயல்பு. சில பெண்களுக்கு அவர்களது வேலை காரணமாக கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படலாம்.

நோய்கள்

சிவப்பு இரத்த அணுக்கள் குறைபாடு கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய காரணியாக இருக்கிறது. இரத்த சோகை, புற்றுநோய், சிறுநீரக நோய்கள் போன்றவை கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய காரணிகளாக இருக்கின்றன.

இரும்புச்சத்து குறைபாடு

ஹீமோகுளோபின் உருவாக இரும்புச்சத்து மிகவும் அவசியம். உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது எனில், ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று தான் அர்த்தம்.

வைட்டமின் குறைபாடு

வைட்டமின் பி 12, ஃபோலைட் போன்றவை உங்கள் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் புதியதாக உண்டாக உதவுகின்றன. எனவே, இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டாலும் கூட ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

பழங்கள், காய்கறிகள்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய முட்டைக்கோஸ், பட்டாணி, பீன்ஸ், கீரை, ப்ராக்கோலி மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளும், திராட்சைப்பழம், ஆரஞ்சு, வாழைப்பழங்கள், ராஸ்பெர்ரி, கிவி மற்றும் மாம்பழம் போன்ற பழங்களும் மிகவும் சிறந்தது.

வைட்டமின் சி

வைட்டமின் சி இரும்புச்சத்து அதிகம் உள்வாங்க உதவுகிறது, இதனால் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கலாம். எனவே, வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

மற்ற உணவுகள்

நட்ஸ், மீன் மற்றும் மெலிந்த இறைச்சிகள், கோழி, முட்டை, உறுப்பு இறைச்சிகள் போன்ற அதிக வலிமையளிக்கும் டயட்டும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

மூலிகைகள்

ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் உணவில் சிறிதளவு வெந்தையம் மற்றும் துளசி போன்றவற்றி சேர்த்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய முடியும்.