"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, July 17, 2016

- மருத்துவ பயன்கள்!


[17/07 11:55 PM] DR.A.ANANTH:
இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!
இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!
நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.
...
வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் �
[18/07 12:03 AM] DR.A.ANANTH: இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்:
துளசி:- ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:- காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.
...
அருகம்புல்:- எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

சங்கு புஷ்பம்


சங்கு புஷ்பம் :-

சங்கு போன்ற அமைப்பில் பூ இருப்பதால் நீல நிற பூக்கள் பூக்கும் இந்த தாவரம் சங்கு கொடி என்று அழைக்கப்படுகிறது .இது பெரும்பாலும் அலங்காரக் கொடியாகவே வீடுகளில் படரவிடப்படுகிறது .ஆயினும் இந்தக் கொடிவகைத் தாவரம் சிறந்த மருத்துவ குணங்களையும் அடங்கியது. இது ஆசியாவில் தோன்றிய வகை தாவரமாக இருந்தாலும் அனைத்து ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்த்ரேலியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. பிலிப்பின், இந்தோனேசியாவில் மலேசியாவில்
அதிகம் . இதில் வெள்ளை பூ பூக்கும் விதமும் உண்டு

தாவரப் பெயர் Ternatea ternatea (L.)
குடும்பம் FABACEAE, (PAPINONACEAE)

இதர இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு பெயர்கள்

Shankapushpi,
shankupushpam,
aparajit (Hindi),
aparajita (Bengali),
kakkattan (Tamil)

நீல மலருடையதைக் கறுப்புக் காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கரட்டான் என்றும் கூறுவார்கள் .

இதன் இலை வேர் விதைகள் மருத்துவ பயன் மிக்கவை .

காக்கரட்டான் விதைகள் மணம் உடையதாகவும் புளிப்புச்சுவையுடன் இருக்கும்.
இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் நீக்குதல் , , பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.
நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிடதங்கம் பஸ்பமாகும்.
நீண்ட நாள் கப நோய்களுக்கு காக்கரட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் நிவாரணம் கிடைக்கும்

காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீர்
நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.பை நோய்கள் குணமாகும் .
மேலும் இந்த கொடியின்
இலைகள் ஞாபக சக்தியை புத்திசாலித்தனத்தை
வளர்க்கும் சக்தி கொண்டது நரம்பு சம்பந்தமான குறைகாயும் போக்கும் .
சில பழங்குடிகளிடம் இதை கரு நீக்க பயன் செய்தாலும் உண்டு .
இதன் இல்லை சாறு வயறு உப்புசத்தை போக்கும் .
தொண்டை புண்ணை ஆற்றும் .

The juice of the root is mixed with cold milk and is drunk to remove phlegm and for chronic bronchitis (1).
The roots are bitter, refrigerant, laxative, diuretic, anthelmintic and tonic and are useful in dementia, hemicrania, burning sensation, leprosy, inflammation, leucoderma, bronchitis, asthma, pulmonary tuberculosis, ascites and fever while the leaves are useful in otalgia and hepatopathy and the leaves, cathartic . The plant is considered useful for eye infections, skin diseases, urinary troubles, ulcers and has antidotal properties .

நமக்கு எளிதில கிடைப்பதால் இந்தன் அருமை நமக்கு புரிவதில்லை .தங்கத்தையே பஸ்மாக்கி சாப்பிடக்கூடிய தன்மை கொண்டது இந்தக் கொடி சளியை அப்படியே அறுத்து கொண்டுவந்துவிடும் இதன் வேர் சாறு.

சங்குன்னா சும்மாவா ! இனி இந்தக் கொடியைப் பார்த்தால் கொஞ்சம் மரியாதையோடு அணுகுங்கள் !

சிறியாநங்கை




சிறியாநங்கை
நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு… நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர் Andrographis paniculata.

அதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது.

மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி

சித்தர் இரசவாதம்



சித்தர் இரசவாதம்

உண்மையான இரசவாதம் என்பது தத்துவம். தத்துவம் என்பது இந்து, விந்து, உயிர், அணு என்று பொருள்.

முதல் கீரன் உகத்தில் கல் தோன்றி மண் தோன்றி இயற்கை என்ற பஞ்சபூத தத்துவத்தின் செயல்பாட்டால் விதை தோன்றி பருவகால மாற்றத்தால் பயீரினம், உயிரினம் தோன்றி உயிர்களின் என்நெற்ற மாற்றத்தால் உருவம் தோன்றி உருவமாற்றத்தால் மனிதன் தோன்றினான். மனிதன் மனிதனாக வாழ்வதற்க்கு இயற்கையீன் சத்திகளை கண்டு சிந்தித்து பயிற்சி, முயற்சி செய்து சித்தியானர் சித்தர்கள்.

சித்தர்களின் இந்து மதமான இந்து வேதம் இந்து வேதத்தின் ஆண்டு இன்று சுமார் 43,73,116 நாற்பத்தி மூன்று லட்சத்து எழுபத்தி மூன்று ஆயிரத்து நூற்றி பதினாறு ஆண்டுகள் ஆகிறது.
இவ்வண்டுகளுக்கு முன் சித்தர்களின் தலைவனான முதல் சித்தன் சீவனான சிவன் ஆயகலை 64- அறுபத்தி நான்கு அதில் 54- ஐம்பத்தி நான்காவது கலையாக ரசவாதக் கலை தத்துவம் என்று கூறுகிறார்.

இரசவாதம் என்பது மிகவும் கீழான உலோகமான இரும்பை மிக உயர்ந்த உலோகமான பொன் தங்கம்.

தங்கமாக செய்வதற்கு பல ரசவாத மூலிகைகளின் சாறு கொண்டு சுருக்கு கொடுத்து அரைத்து கவசம் செய்து புடம் செய்து தங்கம் செய்யலாம்.

அத்தங்கத்தை இதே மூலிகைகள் கொண்டு பற்பம் செந்தூரம் செய்து சாப்பிட உடம்பை காயத்தை எந்தவித பிணி பதிப்பு இல்லாமல் நீண்ட நாள் ஆயுளுடன் இருப்பதற்க்கு செய்த பொருள் இதுவே ரசவாத மூலிகை என்றும், காய கற்பம் என்றும் பல தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர்.

இரசவாதம் என்பது திரவம் தண்ணீர் வடிவம் உள்ள இலிங்க ரசத்தை சில மூலிகைகளின் சாறு கொண்டு திட பொருள் அதாவது கெட்டியான பொருள் செய்வதற்கு உதவும் மூலிகை ரசவாத மூலிகை என்று தமிழ் சித்தர்கள் கூறுகின்றார்கள்.

இத்திடப் பொருளை பல ரசவாத மூலிகைகளின் சாறு கொண்டு சுருக்கு கொடுத்து அரைத்து கவசம் செய்து புடம் போட்டு பற்பம் செந்தூரம் செய்து சாப்பிட உடம்பை காயத்தை அழியாதிருக்க செய்து காக்கின்ற மூலிகைகள் என்ற காயகற்ப மூலிகைகள் என்று பல தமிழ் சித்தர்கள் கூறுகின்றார்கள்.

இரசவாதம் வேறு ஆடல்வல்லான் எல்லாம்வல்லான் சித்தர்களின் தலைவன் முதல் சித்தன் சித்தர் பீடாதிபதி சிவனான சிவன் சிவபெருமான் ரசம் என்பதை நவநீதிஎன சிறப்பித்து சொல்லப்படும் பூமிலுள்ள சத்திவாய்ந்த பொருளான தொட்டால் ஓடக்கூடியதுமான பாதரசத்தை புகையாது செய்தும் மணியாக கட்டி அதற்க்கு சாரனை மூலம் குளிகை செய்து சித்திக்கு வேண்டிய வழியில் பயன்படுத்தினர்.

இதை தாயுமானவர் கூறுகிறார்,

வெண் தணலில் ரசம்வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம்
மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்.

இதையே அகத்தியர் கூறுகிறார்,

தானென்ற ஞானிக்கு குளிகை யுண்டு
சர்ருகிறேன் புலத்தியனே சார்ந்துகேளு
தேனென்ற விந்துவல்லோ ரசமிதச்சு
திரண்டுமணி யாவதற்கு வகையைக்கேளு
மானென்ற அக்னியே புடந்தா னாகும்
மக்களே ரசமனியின் மார்க்கத் தாலே
ஊனென்ற சடத்திலே மணிபோற் செய்தால்
உத்தமனே ககனத்தி லோ லாமே

கொங்கணர் கூறுகிறார்,
ஓடலாம் அட்சயமாம் ரசத்தை கேளு
உத்தமனே பதினொருக்கால் விடுவித்தாக்கால்
ஆடலாம் அட்டமா சித்தியெட்டும்
அணி மாவும் கரிமாவும் லகிமாவோடு
தேடலாம் மகிமாவும் பிரார்த்தியோடு
சேர்ந்த எட்டு மாடலாம் செய்யக்கேளு
நீடலாம் பூரணத்தில் சென்றுபுக்கி
நிலைக்கலாம் திரும்பலாம் நீங்கள்கேளே

பாம்பாட்டி சித்தர் சொல்லுகிறார்
தேனில் வீழ்ந்த ஈயைப் போலச் சிந்தை குலைந்து
திகையாமல் சிற்சொருப தெரிச னைக்கண்டு
வானிற்பறந் திடச்சுத வான்ம ணிதீர்ந்து
வாயீற் போட் டேகநீ நின்று ஆடு பாம்பே!


யூகிமுனி சொல்லுகிறார்,

இருந்து பார் சூதத்தை எவ்வண்ணத்தாலும்
இருக்கினலன் தேவனடா இடுக்கணீல்லையே

போகர் சொல்லுகிறார்,
ஆடுகின்ற சூதமென்ற யானை கட்டுமானால்
ஆச்சர்ய ரசவாதம் கொசுவைப் போலாம்
நாடுகின்ற சூதமணி தாழ்வாடமாய்ப் போட்டு
நலமாக சுகாசனத்தி லிருந்து கொண்டு
ஊடுவாய் சிவசிவா வென்று கொண்டால்
உவந்து முன்னே பஞ்சகர்த்தர் நிர்பார்பாரு
தேடுவார் கேட்டதெல்லா மீவார் ரசன்
செக சால வித்தையெல்லார் தெளிந்து போமே

உண்மையான இரசவாதம் என்பது தத்துவம். தத்துவம் என்பது இந்து, விந்து, உயிர், அணு என்று பொருள்.

இருத்தி பார் பாதரசத்தை எந்த விதத்தாலும் ரசத்தை இருக்கி கட்டியவன் இறைவனுக்கு சமம் ஆன்றோர் வாக்கு ஆண்டவன் வாக்கு மெய்ஞான சித்தர்களின் வாக்கு. ரசம் என்பது விந்து கரு உரு உருவம் மனிதன் என்று பொருள் மண் நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்றும் மெய்,வாய், கண், மூக்கு, செவி என்றும் சொல்லுகிறார்கள். இதை ஆள்வது ஒரு தத்துவம்.

இத்தத்துவத்தை சீவனான சிவன் முதல் சித்தன் சொன்னது. ரசம் என்ற விந்து நாதம் என்ற சுரோணிதம் சேர்ந்து கருவின் மூலமாக ஏற்பட்ட உயிர் என்ற உயிர் உருவத்தை ஆள்வது தொன்னுத்தாறு தத்துவம் கூறுகின்றது. இதை திருமூலர் திருமந்திரத்தில் விளக்குகிறார்,

முப்பது முப்பது முப்பத் தறுவரும்
செப்பு மதிலுடைக் கோவிலுள் வாழ்பவர்
செப்பு மதிலுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்பி லனைவரும் ஓடெடுத்தாரெ



சிவ தத்துவம் ஐந்து
வித்தியா தத்துவம் ஏழு

ஆன்ம தத்துவம் இருப்பதினான்கு

பூதங்கள் ஐந்து
ஞானேந்திரியம் ஐந்து
தன்மாத்திரைகள் ஐந்து
கன்மேந்திரியங்கள் ஐந்து
அந்தகரணம் நான்கு

தாத்துவீகம் அறுபது
பிருதிவியின் காரியம் ஐந்து
அப்புவின் காரியம் ஐந்து
தேயுவின் காரியம் ஐந்து
வாயுவின் காரியம் ஐந்து
ஆகாயத்தின் காரியம் ஐந்து

வாயுக்கள் பத்து
நாடிகள் பத்து
ஏடனை மூன்று
கன்மேந்திரியங்களின் தொழில் ஐந்து
குணங்கள் மூன்று
வாக்குகள் நான்கு

தத்துவம் முப்பத்தாறு தாத்துவிகம் அறுபது ஆக தத்துவங்கள் தொன்னுத்தாறு.


தத்துவங்களின் தோற்றம் ஒடுக்கம் முதலியவைகளை ஆராய்ந்து அறிவது தத்துவ விசாரணை. அவற்றை தன் வசப்படுத்தி வெற்றி கொண்டால் மரணம் இல்ல பெருவாழ்வு வாழலாம்.


இல்லையேல் திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்
கோயில் கொண்டன்றோ குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டங்கே வழிநின்றளுவர்
தாயில் கொண்டாற் போல் தலைவனென் னுட்புக
வாயில் கொண்டீசனு மாளவந்தானே

டெங்கு, சிக்குன் குனியா

டெங்கு, சிக்குன் குனியா

CONTENTSகொசு எப்போது கடிக்கும்?நோய் அறிகுறிகள்டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை.மூலிகைச்சாறு தயாரிப்பது எப்படி?சிக்குன் குனியாகொசுக்களை ஒழிக்க..

மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல், இருமல், டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களை தவிர  சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இந்த அச்சம் ஒவ்வொரு  மழைக்காலத்திலும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது.  தற்போது மக்களின் பெரும் அச்சத்துக்கு காரணமான டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் வகை  கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு வைரஸ் நோயாகும். இந்த வைரஸ் டைப்1, டைப்2, டைப்3 மற்றும் டைப்4 ஆகிய 4 வகைகளில் உள்ளது. வெப்ப  மண்டல நாடுகளில் காணப்படும் ஏடிஸ், ஏஜிப்டி என்ற கொசுவால் இது பரவுகிறது.

1990ம் ஆண்டுகளில் ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் நோயாக டெங்கு அடையாளம் காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால்  லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்காசிய நாடுகள், இந்தியா மற்றும் அமெரிக்கா  போன்ற வெப்பமண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது. இந்த காய்ச்சல் கண்ட ஒருவரை கடிக்கும் ஏடிஸ் வகை கொசு  மற்றொருவரை கடிக்கும்போது அவருக்கும் டெங்கு வைரஸ் தொற்றுகிறது.

டெங்கு காய்ச்சல் தீவிரமாகும்போது மூக்கு, பல் ஈறு மற்றும் தோலிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும். வயிற்று குடலினுள் ரத்தம் வடியும் நிலை  ஏற்பட்டால் வாந்தி காபி கொட்டை நிறத்தில், மலம் கறுப்பு நிறத்தில்  வெளியேறும். டெங்கு என்ற ஸ்பானிய மொழிச்சொல் எலும்பு முறிக்காய்ச்சல்  என பொருள்படும். இந்நோய் டெங்கு  வைரசால் ஏற்படுகிறது.

கொசு எப்போது கடிக்கும்?

ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு கடித்த 2 முதல் 7 நாட்களுக்குள் நோய் ஏற்படும். இந்த கொசுக்கள் கறுப்பு நிறமானவை. இறக்கையில் வெள்ளை  நிறப்புள்ளிகள் தென்படும். மற்ற கொசுக்களை விட தோற்றத்தில் சிறியவை. முதுகில் வெள்ளை நிறக்கோடுகள் 2 தெரியும். பெண் வகை  கொசுக்கள்தான் நோயை பரப்பும். இந்த கொசுக்கள் சூரிய உதயத்திற்கு பின் 2 அல்லது 3 மணிக்குள்ளும், சூரிய அஸ்தமனத்திற்கு முன் 2 அல்லது 3  மணி நேரத்திற்குள்ளும் கடிக்கும். இந்த கொசுக்கள் சாதாரண சூழலில் 60 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது.

நோய் அறிகுறிகள்

அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை.ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் நிலை.ரத்தப் பெருக்குடன் கூடிய டெங்குக் காய்ச்சல் நிலை.

டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை.

முதல் நிலையை தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும். ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் ஓரிரு நாட்களில்  குறையவில்லை எனில் உடனடியாக உரிய சிகிச்சை பெற்றால் மரணத்தை தவிர்க்க முடியும்.  கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி,  முன்தலை பக்கத்தில், கண்களின் பின்புறத்தில் வலி, கண்களை உருட்டும்போது கடுமையான வலி, உடல்வலி, மூட்டுக்கள், தசைகள், கை, கால்,  எலும்பு போன்றவற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிறிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிரங்குகள், கண் சிவத்தல், உடல் சோர்ந்து வெளிறிய நிலை,  பசியின்மை, வெளிச்சத்திற்கு பயம், திடீரென காய்ச்சல் குறைதல் போன்றவை ஏற்படும்.

உடம்பு குளிர்தல், பதற்றம், அரைத்தூக்கம், அதிர்ச்சி நிலை, அதிகரித்த சுவாசம், அதிகரித்த நாடித்துடிப்பு, தோலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி, கறுப்பு நிற  மலம், வயிறு, கால் முதலியவற்றில் வீக்கம், ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைப்படுவது, ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் மற்றும்  ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் முதலியன டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும். ரத்தத்தில் சிறுதட்டுகளின் எண்ணிக்கை 28,000க்கு கீழ்  குறையும்போது நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து மரணம் ஏற்படும். இந்நிலை ஏற்பட்ட பின் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்றுதல் மிகவும்  கடினம்.

நோயை கண்டறிதல் வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல். அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய  லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (400010,000 சி.எம்.). டெங்கு காய்ச்சலின்போது ரத்தத்தில் உள்ள ரத்த தட்டுக்களின்  எண்ணிக்கை குறைவாக காணப்படும். டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டிபயாடிக் என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை  பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

சிகிச்சை: டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை ஓய்வு அவசியம். திரவ வகை உணவு அதிகம் உட்கொள்ளலாம். உடல் உஷ்ணத்தை குறைக்க  அசிட்டாமினோஃபென் மாத்திரைகளை பயன்படுத்தலாம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுவது அவசியம்.  டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. காய்ச்சலை குறைப்பது,  ரத்ததட்டு அணுக்கள் குறைவதை தடுப்பது போன்றவைகளுக்கு பொதுவான சிகிச்சை வழங்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தில்  பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும். நிலவேம்பு கசாயம் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும்.  மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

மூலிகைச்சாறு தயாரிப்பது எப்படி?

சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு, நிலவேம்பு குடிநீர் கசாயம் ஆகியவைகளை வீட்டிலேயே  தயாரிக்கலாம். பப்பாளி இலை சாறு: புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது  இடித்து வடிக்கட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள்  அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது.

இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் பயன் கிடைக்கும். பப்பாளி இலையில் வைட்டமின்  ஏ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  மலைவேம்பு இலைச்சாறு: புதிதாக பறித்த  மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று  முறை அருந்த வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

நிலவேம்பு குடிநீர் நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவைகளை தேவையான  அளவு தண்ணீர் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும். வீட்டில் தயாரிக்க  முடியாதவர்கள் மருந்து கடைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி மேற்கண்ட முறையில் தயார் செய்தும் அருந்தலாம். நிலவேம்பு குடிநீர்  டெங்கு வைரசை அழித்துவிடும். இவற்றையும், குடிநீரையும் ஐந்து நாட்கள் அருந்தி வர காய்ச்சல் தணிந்துவிடும். காய்ச்சல் தணிந்த பிறகு மேலும்  இரண்டு நாட்களுக்கு அருந்தி காய்ச்சலின் தாக்கத்தை தடுத்துவிடலாம்.

சிக்குன் குனியா

சிக்குன்குனியா நோயும் ஈடிசு ஈஜிப்டை என்ற கொசு கடிப்பதால்தான் பரவுகிறது. ஈடிசு ஈஜிப்டை, ஈடிசு அல்போபிக்டசு இரு வகைக் கொசுக்கள்  திறந்தவெளியில் இருக்கும்போது கடிக்கும். ஈஜிப்டை வகைக்கொசு வீடுகளின் உள்புறங்களிலும் உலவுவதால் உள்புறங்களிலும் கடிக்கின்றன.  பெரும்பாலும் இவை பகல் நேரங்களிலும், அதிலும் குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகம் கடிப்பவை. இவை இரவில் கடிப்பதில்லை. அதிலும்  பெண் கொசுக்கள்தான் கடிக்கின்றன.

அதிகமான காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் இருக்கக்கூடும். பெரும்பாலும்,  ஓரிரு நாட்கள் நீடித்த பின்னர் காய்ச்சல் குறைந்து விடும். எனினும், கடுமையான தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை ஆகியவை ஐந்து முதல் ஏழு  நாட்கள் வரை நீடிக்கக்கூடும். அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றால் ஒரு வாரத்திலேயே நோய் குணமாகும்.  மேலும் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு சாறு ஆகியவற்றையும் குடிக்கலாம்.

கொசுக்களை ஒழிக்க..

தண்ணீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும். சுற்றுபுறத்தில் உள்ள தண்ணீர்  தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பைகள், உடைந்த பானைகள், கண்ணாடி பாட்டில்கள், பழையை டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை புதைத்து  விட வேண்டும்.

பயன்படுத்தாத பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும்  நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும். எறும்பு வராமல் இருக்க மேசை கால்களுக்கு வைக்கும் பாத்திரங்களின் தண்ணீரையும் ஒரு நாள்  விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும்.

ஏசியிலிருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும். தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பை சேர்க்கலாம். கொசு ஒழிப்பு மருந்துகளை  தெளிக்