"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, May 12, 2016

பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!


பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.
பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.


ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல் முரண்பாடுகளில் ஒன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம்.
இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.

இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய்(Breast cancer) தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.
மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.

புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக்கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதிவில் விரிவாய் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் அருளியிருக்கிறார். கூறியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!

தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு...

தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே

மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும் என்கிறார்.

மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துக் குடுவையில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.

ஆனைக் கற்றாழை



தமிழ் பெயர் : ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை

ஆங்கில பெயர் : Agave americana

மருத்துவ பயனுடைய பகுதிகள்

பெரிய மடல்களையுடைய கற்றாழை இனம். இராகாசிமடல், ரயில் கற்றாழை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அதலிருந்து கிடைக்கும் நாருக்காக வறட்சியான இடங்களில் வளர்க்கப்படுகின்றது. இதன் மடல், குருத்தின் கீழ் உள்ள கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சிறுநீர் பெருக்குதல் உடல் தேற்றுதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது.
வீக்கம் குறைய

ஆனைக்கற்றாழை மடலை வாட்டிப்பிழிந்த சாற்றில் போதுமான அளவு கேழ்வரகு மாவையோ மூசாம்பரப் பொடியையோ கலந்து கொதிக்க வைத்து வீக்கமுள்ள இடங்களில் பற்றுப்போட வீக்கம் கரையும்.

பாலியல் நோய்

50 கிராம் மடலுடன் 25 கிராம் நன்னாரி வேரைப் பொடித்துச் சேர்த்து ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை மதியம் மாலை 30 மி.லி. யாகக் குடித்து வரப் பாலியல் நோயான கொறுக்குப் புண், கிரந்தி ஆகியவை தீரும்.
வெள்ளை குணமாக

குருத்தின் கீழ் உள்ள மென்மையான கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை குணமாகும்.

சிறுநீர்

ஆனைக்கற்றாழை வேரை 30 கிராம் நசுக்கி 1 லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிப் பாதிப்பாதியாய் காலை, மாலை குடித்து வர சிறுநீரைத் தாராளமாக வெளிப்படுத்தும்.

வலி குணமாக

மடலைக் குழகுழப்பாகுமாறு துவைத்து வலியுள்ள இடங்களில் வைத்துக்கட்ட வலி குணமாகும்.

சீழ்ப்பிடித்தல் குணமாக

மடல் சாற்றை அடிபட்ட காய்ங்களின் மீது தடவி வைக்க சீழ்ப்பிடிக்காமல் ஆறும்.

ஆனை நெருஞ்சில்


ஆனை நெருஞ்சில்
பொதுவான குணங்கள்:

சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி, உடலுக்கு வலிமை தரும் 'டானிக்', குளிர்ச்சி உண்டாக்கும், உள்ளழலாற்றும்.
நெருஞ்சில் மருத்துவ குணம்

பெயர்கள்

தாவரவியல் பெயர் : Tribulus Terrestris
குடும்பம் : Zygophyllaceae
இதர பெயர்கள் : சமஸ்கிருதம் - கோக்சுரா
இந்தி: கோக்ரூ / காக்ரூ, ஆங்கிலம் - Caltrops
தமிழில் இதர பெயர்கள்: திரிகண்டம், கோகண்டம், நெருஞ்சி புதும், காமரசி
பயன்படும் பாகங்கள்

சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி. தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது. இலை, தண்டு, விதை ஆகியவை மருத்துவப்பயனுடையவை. சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல், காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.
மலட்டுத்தன்மை

ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும். இதனைச் சிறிது சர்க்கரைச் சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை ஆகியவை தீரும்.
வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி

10 கிராம் இலைப் பொடி சர்க்கரையுடன் பாலில் கலந்து பருகிவர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.

சிறுநீர்த்தடை நீரெரிச்சல், வெள்ளை, உடம்பெரிவு

50 கிராம் இலையை மென்மையாய் அரைத்துத் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை நீரெரிச்சல், வெள்ளை, உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.

விந்தணுக்கள் பெருக

20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைத்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மாலையாகச் சாப்பிட்டு வர நீர்ச்சுருக்கு தீரும். விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும்.

சிறுநீர் பெருக்கும் மூலிகை

இதன் முக்கிய பயன் சிறந்த சிறுநீர் பெருக்கி ஆயுர்வேத ஆசான் சரகர் நெருஞ்சிலை சிறந்த ஐந்து சிறுநீர் பெருக்கும் மூலிகைகளில் ஒன்றாக சொல்லுகிறார்.

நெருஞ்சில் விதை
வலிகளுக்கு

சிறுநீரக பாதையில் ஏற்படும் வலிகளுக்கு பாலில் கொதிக்க வைத்த நெருஞ்சில் கஷாயம் நல்லது.

நெருஞ்சில் விதை

பொடிக்கப்பட்ட நெருஞ்சில் விதைகளுடன் தேனும், ஆட்டின் பாலும் கலந்து குடிக்க சிறுநீரக கற்கள் நீங்கும். சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலுக்கு, தனியா விதைகளுடன் நெருஞ்சில் சேர்த்து செய்யப்பட்ட கஷாயம் நிவாரணமளிக்கும்.

மூலிகை சேர்த்த நெய்

சிறுநீரக கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அநூரியா (Anuria) எனும் சிறுநீர் வராமல் போகும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்ந்த கோக்சூராதி க்ருதம் (மூலிகை சேர்த்த நெய்) நல்ல மருந்து.
நீரிழிவு

நெருஞ்சில் நீரிழிவு நோயை எதிர்க்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு தரப்படும் மருந்தில் ஒன்று.
ஆண்மை குறை தீர

ஜனன உறுப்புக்களின் செயல்பாட்டை சீராக்கி, ஆண், பெண் இருவருக்கும் பாலியல் உணர்வை தூண்டுகிறது. சதவாரி, அஸ்வகந்தா, இவற்றுடன் சேர்ந்து, பெண்களின் கர்பப்பை (Uterus) பாதிப்புகளுக்கு மருந்தாகும். ஆண்களின் ஆண்மையை பெருக்குகிறது. ஆண்மை குறை தீர, நெருஞ்சிலை தேனுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலியல் நோய்களான கொனோரியா (Gonorrhoea) போன்றவற்றுக்கும் நெருஞ்சில் அருமருந்து. ஆண் ஹார்மோனான Testosterone உற்பத்திக்கு காரணமான Luteinizing hormone களை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் இளமையாக இருக்க உதவுகிறது. 30 நாட்கள் நெருஞ்சிலை உட்கொண்டு வர, ஆண்மலட்டுத்தன்மை நீங்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதவிடாய்

10 கிராம் கருப்பு எள் மற்றும் 10 கிராம் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து 250 மி.லி தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.
கருப்பு எள் மற்றும் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.
குழந்தை வரம் தரும் நெருஞ்சி

சாலை ஓரங்களிலும், விளை நிலங்களிலும் களைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பிரச்சனைகள்

நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இது பாலியல் பிரச்சினைகளையும், சிறுநீர் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. இதன் மருத்துவகுணம் பண்டைய கிரேக்க நாடுகளிலும், சீனா, வியட்டநாம், போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது.

பூப்படையாத பெண்கள் பூப்படைய

பெண்களுக்கு நிவாரணம் நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவர்.

கருப்பை கோளாறுகள்

நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.
வெட்டை நோய்

நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.
வீரிய விருத்தி

ஆண்மை பெருக நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.

ஆண்மை அதிகரிக்க

நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும்.
கர்ப்பிணி பெண்கள் சிறுநீர் பிரச்னை

கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சிறுநீர் பாதையில் எரிச்சலோ, வலியோ காணப்பட்டால் நெருஞ்சி செடியுடன் நித்யகல்யாணி பூ சம எடை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்துவர அந்த பாதிப்பு குணமாகும்.

சிறுநீரில் ரத்தம்

சிறுநீரக கல் அடைப்பு நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள்

சிதைத்த நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
கல் அடைப்பு

நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.
கண்ணில் நீர் வடிதல்

கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலைக்கு நிவாரணம் நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் தணியும். இதனை அரைத்துச் சாறு பிழிந்து குடித்தால் சிறுநீருடன் இரத்தம் கசிவது நிற்கும். விதையினை அவித்துக் காயவைத்துத் தூளாக்கி இளநீருடன் உட்கொண்டால் சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

மாதவிடாய் இரத்தப்போக்கு

10 கிராம் கருப்பு எள் மற்றும் 10 கிராம் நெருஞ்சி முள் ஆகிய இரண்டையும் எடுத்து 250 மி.லி தண்ணீரில் கலந்து ஊற வைத்து கொள்ளவும். தினமும் 2 முறை இந்த நீரை குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வெளிப்படாதது குறைந்து இயல்பான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும்.




மார்பக வளர்ச்சி


 




Add caption

 

 



எழுத்தாணிப் பூண்டு, முத்தெருக்கன்
English : Launaea sarmentos
தமிழ் : எழுத்தாணிப் பூண்டு, முத்தெருக்கன்
மருத்துவ பயன் தரும் பாகங்கள் : செடியின் இலை மற்றும் வேர்

இதன் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்.
  • நிலக் கடம்பு மூலிகை
கால்சியம், இரும்பு, புரதம் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு
ஆங்கில பெயர் : Asarabacca, Asara, Asarabácara, Snakeroot, Wild Ginger, Wild Nard
தாவரவியல் பெயர் : Asarum europaeum,

தமிழ் பெயர்கள் : நிலக்கடம்பு, மிட்டிருக்கன் செவி, நிலக் கடம்பு


நிலக் கடம்பு


நிலக்கடம்பு மலர்



நிலக்கடம்பு தாவர வரைபடம்
பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் தமது பாடலில் கூறியுள்ளார்.
"தேரையர் பாடல்"

"தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே"


தேரையர் பாடல் விளக்கம்

மார்பக வளர்ச்சி அற்ற பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களின் மீது தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிமார்பக வளர்ச்சிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும். மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை எடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துத்தில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி பெற்று உடல் மிக அழகாக ஆகும் என்கிறார் தேரையர்.

நிலக்கடம்பு மருத்துவ பயன்கள்

மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சு பிடிப்பு, மூச்சுக்குழாய் ஆஸ்த்துமா, நிமோனியா, நெஞ்சு வலி, ஒற்றைத் தலைவலி, கல்லீரல் நோய், நீர்ப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன் படுத்தப்படுகிறது.

குமிழம் செடி


குமிழம் செடி படர்ந்து வளரும் முட்களை உடைய தாவரம். இதன் பூகள் தங்க நிறத்திலும், இலைகள் நீள்வட்டத்திலும், மஞ்சள் நிறப் பழங்களையும் உடைய முட்களைய தாவரம். மலை பாங்கான இடத்தில் குமிழம் மரமாகவே கணப்படுகின்றன. குமிழமரத்தின் வேர், பழம், பட்டைகள் மற்றும் இலைகள் மருத்துவ தன்மை நிறைந்து காணப்படுகின்றன.
குமிழம் மருத்து தன்மை

மாதவிடாய் வலி
பெண்களுக்கு மாதவிடய் காலத்தில் ஏற்ப்படக் கூடிய வயிற்றுவலி போக்கும் மருந்தாக பயன்படுகிறது. குமிழம் இலையை கைப்பிடியளவு எடித்து அதில் சீரகம், நறுக்கிய சிறிய வெங்காயம் கைப்பிடியளவு சேர்த்து நங்கு இடிதெடுத்து அதில் சாறு பிழிந்து ஆழாக்களவு நீரகத்தில் விட்டு கலக்கி மாதவிடாய் ஆன மூன்றாம் நாள் சாப்பிட்டு வர அடுத்த விலக்கின் போது வலி ஏற்ப்படாது, மருந்து சாப்பிடும் காலத்தில் புளி சேர்க்க கூடாது.
வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி
குமிழம் இலை சாற்றுடன் பால், சக்கரை கலந்து காலை மாலை பருகிவர வெள்ளை, இருமல், சிறூநீர்பை வலி ஆகியவை தீரும்.

தலைவலி
இலையை அரைத்து பற்று போட காய்ச்சலின் போது ஏற்படும் தலைவலி தீரும் என மருத்துவ குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




ஜோதி விருட்சம்




ஜோதி விருட்சம்
ஜோதிட விருட்சம் என்பது ஓர் அபூர்வ மரவகையை சேர்ந்தது, மூலிகை வளம் நிறைந்த கொல்லி மலையில் ஜோதி விருட்சம் மரம் இருந்துள்ளது தற்போது அம் மரம் ஒடிந்து விழுந்து விட்டதாகவும் அதன் அடிபகுதி மரம் மட்டும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

இம் மரத்தின் இலைகள் நாவல் மரத்தின் இலைகளை போலவும், பூக்கள் நீலம் கலந்த வெண்மை நிறமாகவும் காணப்படும். மரம் முலுவதும் பட்டைகளில் வெடிப்புகள் உள்ளன அந்த வெடிப்பு பகுதிகளில் ஒருவகையான பிசின் போல பால் கசிந்து கொண்டே இருக்கும்.


ஜோதி விருட்சம்
இந்த பாலில் உள்ள ஈரம் காயும் வரை இரவில் மின்மினி பூச்சி அல்லது கடிகாரத்தில் உள்ள ரேடியன் போல ஒளிர்ந்து கொண்டே இருக்கும் இரவில் இந்த வெளிச்சத்தை கொண்டு ஜோதி விருட்சத்தினை அடையாம் காண்பது எளிது. பாலின் ஈரப்பதம் காய்ந்த பிறகு ஒளிரும் தன்மை மறைந்து விடும்.

ஜோதி விருட்சம் மரத்தினை இரவில் காண்போருக்கு அதன் ஜோதி பிரகாசமகவும் மனதில் ஒருவகையான அமைதியும் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

100 ஆண்டுகள் வலிமையோடு வாழ

ஜோதி விருட்சம் பட்டையைத் நன்கு தட்டி சாறு பிழிந்து அதில் செம்பை உருக்கி சேர்த்தால் செம்பு களிம்பு அற்ற பொன்னாகும். பட்டையை உலர்த்தி குழித்தலைம் எடுத்து சிறு கண்ணாகத்தை உருக்கி ஏழுதடவை சாய்த்தால் நாகம் புகையாது கட்டும் கட்டிய நாகத்தை குகையில் வைத்து உருக்கி அதன் எடைக்கு நிகர் எடை தங்கம் சேர்த்து எடுத்து கல்வத்திலிட்டு அதற்க்கு இரண்டு பங்கு பாதரசம் சேர்த்து அரைத்து உருட்டி வெண்ணை போல் செய்து எடுத்து கொள்ளவும்.
கந்தகம் இரண்டு பங்கு தாளகம் ஒரு பங்கு கூட்டி ஜோதி விருட்சம் பிசின் விட்டு அரைத்து ரச உருண்டை மேல் கவசம் போல் பூசி, அதன்மேல் சீலை மண் செய்து உலர்த்தி, 50 எருவில் புடம் போட்டு ஆறியபின் எடுத்தால் செந்தூரம் ஆகும். அதைக் கல்வத்திலிட்டு அரைத்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப் படுத்தவும்.

இதில் அரிசி எடை அளவு எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை இரு வேளையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் அருணனை யொத்த தேஜசும் யானையை நிகர்த்தமான வலிமையைப் பெற்று 100 ஆண்டுகள் வாழலாம் என்று காலாங்கி நாதர் கூறியுள்ளார்.
சோதி விருட்ச்சம், விருட்சம், சோதிட விருட்சம், ஜோதிட விருட்சம், விருச்சம், ஜோதிட விருட்சம் மரம் படம். கொல்லி மலை.

நாய்வேளை


நாய்வேளை
நாய்வேளை, நாய்பூண்டு, நாய்பூடு, மஞ்சவேளன், வேளக்கீரை, நாய்கடுகு, காட்டுக்கடுகு, என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது ஓர் செடி வகையை சார்ந்தது, சற்று பிசு பிசு தன்மையும், துர் நாற்றம் முடைய தாவரம். இதன் விதைகள் கடுகை போலவே உள்ளதால் நாய்கடுகு என்று கூறப்படுகிறது.
மருத்துவ பயனுடைய பகுதிகள்

நாய்வேளையின் விதைகள் மற்றும் இலை மருத்துவ தன்மை நிறைந்து காணப்படுகிறது.
இதன் இலைகள் நாடி நடைகளை சமப்படுத்தும் தன்மை கொண்டது மேலும் கட்டிகளை உடைக்க மருந்தாக பயன் படுத்தப் படுகிறது. நாய்வேளை இலைகள் சிறிது அதாவது 4 அல்லது 5 இலைகள் நாம் அன்றாடும் உணவாக பயன்படுத்தும் கீரையுடன் சேர்த்து சமைத்து உண்டு வர குடல் பகுதியில் ஏற்படும் தேவையற்ற வாயுவை வெளியேற்றி பசியை தூண்டும் தன்மையுடையது. பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதித உதிர சிக்கலை சமன்படுத்துகிறது.
நாய்வேளை விதைகள்

குடலில் ஏற்ப்படும் வாயு அகற்றியாகவும், நுண் புழுக்கள் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மாந்தக் ஜுரம் குணமாக

நாய்வேளை இலை, தும்பை இலை, ஆடாதொடை, ஆதண்டை, கஞ்சாங்கோரை ஒவ் ஒன்றிலும் கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் 5 கிராம் சிற்றரத்தையை சேர்த்து எல்லாவற்றையும் பிட்டவியலாக அவித்து சாறு பிழிந்து, வடிகட்டி ஒரு வேளைக்கு சங்களவாக காலை, மதியம், மாலை மூன்று வேளையும் கொடுத்து வர மாந்தக் ஜுரம் குணமாகும்.
குடல் புழு வெளி வர

நாய்கடுகு பொடி தயார்செய்து 1/2 கிராம் அளவு நாட்டு சக்கரை சேர்த்து காலை, மாலை இருவேளையும், இரண்டு நாட்கள் மட்டும் கொடுத்து, மூன்றாவது நாள் விளகெண்ணெய் பேதிக்கு கொடுக்க குடல் புழுக்கள் அனைத்தும் வெளியேறும்.
காதில் சீழ் வடிதல்.

நாய்வேளை இலை சாற்றுடன் அதே அளவு நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி வெள்ளை துணியால் சுத்தமாக வடித்து காதில் விட்டு வர சீழ் வடிதல் குணமாகும்.



ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது





இன்று ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது சிக்கலாக உள்ளது. இதற்கான காரணம் ஆண் உறுப்புக்கு இரத்தம் முழுமையாக செல்வதில்லை இதனால் உடல் உறவின்போது ஆண்குறி முழுமையான எழுச்சி அடைவதில்லை, பாதி உடல் உறவின் போது ஆண்உறுப்பு தளர்ந்து போதல், விந்து முந்துதல் அல்லது வயது முதுமையால் விரைப்பற்று போதல் மேலும் இன்று மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் ஆண் உறுப்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.இதை எளிதில் குணபடுத்தக் கூடிய நோய் என சித்த மருத்துவத்தில்கூறப்பட்டுள்ளது.
அந்த அற்புத சக்திவாய்ந்த மூலிகை பூனைகாலி விதை பொடி. இது அனைது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்ககூடியது பூனைகாலி விதை பொடி தினம் தண்ணீரில் கலந்து காலை, மாலை குடித்து வரவும் மூன்று நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து 20 நாட்கள் மட்டும் குடித்தால் போதும்.


பூனைகாலி விதை
பூனைகாலி விதை

தண்ணீரில் கலந்து குடிக்க சிரமமாக இருந்தால் சிறு சிறு உருண்டையாக்கி மாத்திரை போல் விழுங்கலாம். உங்கள் இழமையை திரும்ப பெருவது உறுதி. பூனைகாலி விதை பொடி விலையும் மிகக்குறைவு. 50gm 30 க்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

பூனைகாலி விதை குணப்படுத்தும் நோய்கள்:

1. ஆண் உறுப்பு விரைப்பின்மை
2. ஆண் உறுப்பு தளர்ச்சி
3. ஆண்மையை பெருக்கும்
4. கை,கால் நடுக்கம்
5. நரம்பு தளர்ச்சி

கரும் பூத விருட்சம்


கரும் பூத விருட்சம்
கரும் பூதவிருட்சம் இதன் இலைகள் சிவந்து காணப்படும், காய்கள் கருமையான நிறத்தில் சற்று பெரிதாக இருக்கும். விதைகள் தாமரை விதைப்போல் கருமையாக காணப்படும்.
இதன் விதைகளை இரண்டு படி அளவு எடுத்து மண்பாண்டத்தில் போட்டு வாய் பகுதி மூடி, மண்சீலை செய்து, மண்பாண்டத்தின் அடியில் சிறிது துளை செய்து ஒரு முழ ஆழத்தில் குழி தோண்டி அக் குழியில் ஒரு பீங்கானால் செய்யப்பட்ட கோப்பை வைத்து, அதன் மீது மண்பாண்டத்தை வைத்து, பாண்டத்தை சுற்றி எருவாள் புடம் போடவும். புடம் ஆறிய பின் எடுத்து பீங்கானில் கோப்பை உள்ள தைலத்தை கண்ணாடி பாட்டிலில் சேகரித்தால் வேண்டும் இதனையே கரும் பூத விருட்சம் குழித்தைலம் என்பார் என்று காலாங்கி நாதர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அம்மான் பச்சரிசி


அம்மான் பச்சரிசி
ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறுசெடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப் பற்களுடன் கூடிய ஈட்டிவடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.

வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயற்படும்

இலையைச் சமைத்து உண்ண வறட்சி அகலும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் தீரும்.

தூதுவேளை இலையுடன் துவையல்செய்து சாப்பிடத் தாது, உடல் பலப்படும்.

கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இருவேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.

பூவுடன் 30 கிராம் அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய்ப்பால் பெரும்.

பாலைத்தடவி வர நகசசுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.

இலையை நங்கு அரைத்து நெல்லிக்காயளவு பசும்பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுக்கச் சிறுநீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும்.


மருத்துவப் பயனுடைய அழிஞ்சல்


மருத்துவப் பயனுடைய அழிஞ்சல்

நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது. இதில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு முதலிய இன வேறுபாடு உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது. வேர்ப்பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. அழிஞ்சில் என்றும் அழைக்கப்படும்.

நோய்கள்

நோய் நீக்கி உடல் தேற்றுதல், வாந்தி உண்டு பண்ணுதல், பித்த நீர்ச்சுரப்பை மிகுத்தல், மலமிளக்குதல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல், காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணங்களையுடையது. அழிஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் சாப்பிடுவதனால் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுவதாயின் இடையிடையே 1 வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.
கடி விஷங்கள்

வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய்) தொழுநோய், கிரந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.
கப நோய்கள்

இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.
தொழுநோய்

சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.
தோல் நோய்கள்

அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள் குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.

ஓரிதழ் தாமரை



ஓரிதழ் தாமரை உட்கொள்ளும் முறை மற்றும் செய்முறை விளக்கம் -
ஓரிதழ் தாமரை

தேவையன மூலிகைகள்:-
ஓரிதழ் தாமரை
சீரகம்
செஞ்சந்தனம்
சாதிக்காய்
சாதிபத்திரி
அதிமதுரம்
சர்க்கரை
ஆகியவற்றை சம அளவு எடுத்து நிலலில் உலர்த்தி நன்கு பொடிசெய்து வைத்து கொள்ளவும்.

தீரும் நோய்கள்:-

தினமும் காலை மற்றும் மாலை இருவேலைக்கும் தலா 4 கிராம் நெய் அல்லது 150 மில்லி பாலுடன் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) கொடுத்து வந்தால் உட்காய்ச்சல், எரிச்சல், நீர்க்கடுப்பு, காந்தல், உடல் சூடு, எலும்புருக்கி(TB), சிறு நீர் குழாய் புண்கள் ஆகிய நோய்கள் தீரும்.
மேலும் இது ஆண் மகனுக்குரிய மிக சிறந்த ஆண்மை வலுவினை கொடுக்க கூடியது.
அல்லது

ஓரிதல் தாமரை செடியை வேறுடன் பிடுங்கி நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ளவும் தினமும் காலை மாலை இருவேலைக்கும் தலா ஒரு டேபுல் ஸ்பூன் சாப்பிடவும். சாப்பிட ஆரம்பித்த ஐந்தாவது நாள் முதல் உங்கள் ஆண்மையில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட ஆண்மை குறைபாடு முலுமையாக சரியாகும்.
மேலும் சிறு நீர் சம்மந்தமான பல வித நோய்களையும் குணபடுத்துகிறது.
குறிப்பு:-
மூலிகை பொருட்களை அரைக்க மிக்சீயை பயன் படுத்த வேண்டாம் ஏன்னெனில் மிக்சீயை பயன் படுத்தி அரைக்கும் பொழுது மின்காந்த சுலர்ச்சி ஏற்ப்பட்டு மூலிகை தன்மையை மாற்ற கூடும். ஆகயால் அம்மிக்கல்லை பயன்படுத்தி செய்யும் மூலிகை மருந்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் இது நமது பாரம் பரியமும் கூட.

 

விந்து முந்துதல் தடுக்கும் மூலிகைகள்


விந்து முந்துதல் தடுக்கும் மூலிகை - VINTHU MUNTHUTHAL THADUKKUM MOOLIGAI


விந்து முந்துதல் தடுக்கும் மூலிகைகள்

1. நெருஞ்சி முள் செடியின் வேர் பகுதி மற்றும் காய்கள் விந்து உற்பத்தி பெருக்கும், மேலும் இது சிறு நீரக நோய்களை குணப்படுத்துகிறது.
2. ஜாதிகாய் தினமும் காலை மாலை சிறிது அதாவது ஒரு முலு
ஜாதிகாயில் 15-தில் ஒரு பங்கு மட்டும். இது காம உணர்வுகளை தூண்டுவதற்கு பயன் படுகிறது. அதிகம் உட்கொள்ள கூடாது.
3. அமுக்கராங் கிழங்கு அல்லது அஸ்வகந்தா தினம் ஒரு வேலை மட்டும் 10 கிராம் அளவிற்கு பாலில் கலந்து குடிக்க விந்தனு உற்பத்தி பெருக்கி கெட்டி படுத்தும். அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும்.
4. பூனைகாலி விதை தினம் காலை மாலை 5 கிராம் அளவு பாலில் சாப்பிட ஆண் உறுப்பு அதி படியான விரைப்படையும். அதிகமாக சாப்பிட்டால் மயக்க நிலை வரலாம்.
5. நத்தை சூரி அல்லது தாதரா செடியின் வேர் பகுதியை எடுத்து தினம் காலையில் மட்டும் சாப்பிட 10 நாட்களில் விந்துவை கெட்டிபடுத்தி விந்து முந்துதல் தடைபடும். நீண்ட நேரம் உடல் உறவு சுகத்தில் ஈடு பட வழி வகுக்கும்.
6. ஓரிதல் தாமரை செடி முழுவதையும் ஒரு கைபிடி அளவு எடுத்து சுத்தப் படுத்தி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை விருத்தியாகி குழந்தை பாக்கியம் அடைய பெரிதும் உதவும்.
மேற் குறிப்பிட்டவைகளை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து சாப்பிட ஆண்மை சம்பந்த பட்ட நோய்கள் தீர்வதோடு மட்டும் இல்லாமல் அனைத்து வகையான சிறு நீரக பிரச்சனைகளும் தீரும் என்று சித்தர்களின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிட்டு குறுவி லேகியம், chittukuruvi legiyam, vinthu velivaruthal, விந்து வெளிவருதல், விந்து மூலிகை, ஆண்மை மூலிகை ஆண் மூலிகை, செக்ஸ் மூலிகை, ஆண் மருத்துவம், ஆன் மூலிகை மருத்துவம், sex maruthuvam
ஆண் குறி அமைப்பின் பலன்கள்



நீண்ட நேர போக இன்பத்திற்கு



நீண்ட நேர போக இன்பத்திற்கு - long time sex mooligai

பெரும்பாலன ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேர போகத்தில் ஈடுபட விரும்புகின்றனர் அதற்காக மருந்து கடைகளில் கிடைக்கும் பல வகையான மாத்திரைகளை பயன்படுத்தி போகத்தை நீட்டித்து கொள்கின்றனர். இது தற்காலிகமாக மட்டுமே செயல்படக்கூடியது. மேலும் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தி போக இன்பம் என்ற சொல்லிற்கே முற்று புள்ளி வைத்து விடக்கூடும்.


தாதரா வேர்
ஆனால் நம் இயற்கை அதற்கும் ஒரு தீர்வை தாதரா பூடு என்ற செடி வழியாக வழங்கியுள்ளது. இதை நத்தைசூரி என்றும் கூறப்படுகிறது. மழைக் காலங்களில் தமிழகத்தில் பரவலாக வளரும் தாதரா செடியின் வேர் மிக முக்கிய மூலிகை பகுதி. இச்செடிக்கு சாப நிவர்த்தி இல்லை. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு செடியை ஆணி வேர் அறாமல் பிடுங்கி நன்கு சுத்த படுத்தி, பல் துலக்கிய பின்பு வெறும் வயிற்றில 5 கிராம் அளவு சாப்பிட்டு பின்பு 100 மில்லி பால் அருந்தி வர 7வது நாள் முதல் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதனை தொடர்ந்து சில நாட்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
இது விந்துவை கெட்டிப்படுத்துகிறது. விந்து முந்துவதை முழுமையாக கட்டுபடுத்தி நீண்ட நேர போக இன்பத்திற்கு நிரந்தரமாக வழி வகுக்கிறது. மேலும் ஆண்மை சார்ந்த நோய்களையும் குணப்படுத்துகிறது உடலின் சதை பகுதிகளை இறுக்கி வலு சேர்க்கும். பழங்காலங்களில் திருமணத்தின் போது இத்துடன் சில மூலிகைகளை சேர்த்து கொடுத்து பிறகு தாம்பத்தியத்திற்கு அனுமதிப்பது வழக்கத்தில் இருந்துள்ளது. இதனால் குழந்தை பேறு எளிதில் கிடைக்கும் எனபதால் தான்.

இச் செடியின் விதைகளை புறாக்கள் விரும்பி உண்ணும் ஓர் தானியமாகும் இதனல் புறாவின் உடல் பகுதி இறுகி வலுவாக காணப்படும்.

மனிதனால் செயற்கையாக் உருவாக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் ஒரு நோயை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோய்கள் உருவாக காரணமாகிறது. ஆனால் இயற்கையால் உருவாக்கப்பட்ட மூலிகை ஒரு நோய்க்காக சாப்பிடும் போது அதை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோயைகளை குணமாகச் செய்கிறது. இயற்கையை யாரேனும் வெற்றி கொள்ள முடியுமா!!!

சில தவிர்க்க முடியாத காரணங்களால் இம் மூலிகை செடியின் படத்தை வெளியிட முடியவில்லை. விரைவில் வெளியிடுகிறோம்.

ஆண் குறி அமைப்பின் பலன்கள்
long time sex, neenda nera kaamathirku moolikai, vinthu keddiyaka, vinthu munthuthal, neenda nera inpaththirku moolikai,thatharaa moolikai, nathai soori, thadara poondu, vinthu katta, vinthu ketti aga, vinthu munthuthal, vindhu, aanmai, viraivil vinthu varamal iruka. pengalai mulumaiya thirupthi padutha, vinthu keddi aka, sapa nivarthi illa mooligai, vinthu varaamal thadukka, vithu veliyagamal thaakku pidikka, long time sex mooligai, vindhu viraivil varamal irukka, Aanmai Kuraivu Tamil Naddu Maruthuvam விந்து கெட்டி ஆக, விந்து கட்டு, விந்து நீர்த்து போதல், விந்து வராமல் இருக்க, விந்து விரைவில் வெளியேறுதல் வெளியாதல், விந்துவின் பயன், விந்து கட்டு மூலிகை, ததரா செடி, ஆண்மை மூலிகை, ஆண் மூலிகை.

விந்து உற்பத்திக்கு

விந்து உற்பத்திக்கு

ஆண்களின் விந்து செழிக்க கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்:

1, வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும்.
வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து வரலாம்.
2, அஸ்வகந்தா பொடியை (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தி வர விந்து உற்பத்தி அதிகமாகும். நாடி நரம்புகள் பலப்படும்.
3,தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும்.
4,அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து எண்ணிக்கை கூடும்.
5,ஓரிதழ் தாமரை பௌடர் ஒரு ஸ்பூன் வீதம் இரண்டு நேரம் பசும் பாலில் கற்கண்டு அல்லது தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி அதிமாகும். அதுமட்டும் அல்லாமல் ஆண்மைசக்தி அதிகப்படும்.
6, நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி என்ற வித்தை 100 கிராம் அளவில் வாங்கி வந்து தூய்மை செய்து தினமும் ஒரு ஸ்பூன் அல்லது 2 இரண்டு ஸ்பூன் உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகி விந்து இறுகி வெண்ணெய் போலாகும். இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யகூடாது , சவ்வு போலாகிவிடும்.

ஆண்மை சக்திக்கு:(வெளிப் பிரயோகம்)
ஜாதி மல்லியின் இலைகளை நன்கு அரைத்து, அந்த விழுதை தளர்ந்து போன ஆண் குறியின் மேலும், தொடை இடுக்குகளிலும். வைத்து கட்டி வர இளமை உணர்சிகள் திரும்பும்.