"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, April 24, 2016

சித்த மருத்துவம் சிறுநீரகக்கல் கரைத்துவிடும் பீன்ஸ்



சித்த மருத்துவம்
சிறுநீரகக்கல் கரைத்துவிடும் பீன்ஸ்..!



( ¼ ) கால் கிலோ பீன்ஸ் , விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீரும்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தரும்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீரும்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.


கல்லும் மெல்லக் கரையும்


பொறுக்க முடியாத அடி வயிற்று வலியோடு, ஒரு நடுத்தர வயதுக்காரர் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். நான் உறக்கத்தை விட்டு எழுந்து வந்து அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உங்கள் சிறுநீர்ப்பையில் கல் உள்ளது. அதனால்தான் இந்த வயிற்றுவலி என்றேன். உடனே அவர் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகக் கோபமாகச் சொன்னார்: அரை ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்தப் பெட்டிக்கடை அரிசியை வாங்க வேண்டாம்னு தலையில அடிச்சி அடிச்சிச் சொன்னேன். கேட்டியா?
அரிசியில் சரிபாதி கல்லு!
அதை வச்சி இட்லி செய்துபோட்டா கிட்னியில் கல்லு வராம என்ன செய்யும்?

இப்படி அரிசியில் உள்ள கல்தான் சிறுநீரகக் கல்லாக உருவாகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் உண்ணும் உணவிலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன், ஜான்தைன், ஸ்ட்ரூவைட் என்று பல தாது உப்புகள் உள்ளன. சாதாரணமாக இவை சிறுநீரில் கரைந்து வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் எல்லையைத் தாண்டும் போது, அடர்த்தி அதிகமாகிவிடும். இதன் விளைவால், தண்ணீர்க் குழாயில் பாசி சேருகிற மாதிரி இவை சிறுநீரகப்பாதையில் உப்புப்படிகமாகப் படிந்து, மணல் போல் திரண்டு விடும். ஆரம்பத்தில் சிறு கடுகு போலத் தோன்றும், நாளடைவில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு அது வளர்ந்துவிடும். சிலருக்குக் கிரிக்கெட் பந்து அளவிற்கும் கல் உண்டாவது உண்டு.
சிறுநீரகக்கல் உருவாவதற்குப் பல காரணங்கள் உண்டு. தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்காதது முதல் காரணம். கற்களை உண்டாக்கும் உப்புகள் மிகுந்த உணவுகளை அதிகமாக உண்பது அடுத்த காரணம். சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்படுவது இன்னொரு காரணம். இது எப்படியென்றால், கிருமிகள் சிறுநீர்ப்பாதையின் தசைச்சுவரை அரித்துப் புண்ணாக்கும்போது, அங்கு பல்லாங்குழிகளைப் போல பல குழிகள் உண்டாகும். இவற்றில் சிறுநீரின் உப்புகள் தங்கும். அப்போது சிறுநீரகக்கல் உருவாகும். அடுத்ததாக, ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்ளும். அப்போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் சிறுநீர்ப்பையிலும் சிறுநீர் தேங்கும். விளைவு, சிறுநீரகக்கல்! இன்னும் சிலருக்கு பேராதைராய்டு இயக்குநீர் மிகையாகச் சுரந்து ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரித்துவிடும். இதனாலும் சிறுநீரகக்கல் உண்டாகும்.

சிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் இருக்கலாம். சிறுநீர்ப்பையில் இருக்கலாம். அல்லது இந்த இரண்டையும் இணைக்கின்ற சிறுநீர்க்குழாயில் இருக்கலாம். ஏன், சிறுநீர்த் தாரையிலும் இருக்கலாம். எங்கிருந்தாலும் சரி அது சும்மா இருப்பதில்லை. விருந்துக்கு வந்த வீட்டிலேயே திருடின கதையாக, அது தங்கியிருக்கும் இடத்தையே பழுதாக்கும். மேலும் அது சிறுநீர்ப்பாதையை அடைத்து, சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்து, சிறுநீரகத்திற்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். வீங்கிய சிறுநீரகத்தில் நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக்கொள்ள அது விரைவிலேயே செயலிழந்துவிடும்.

சிறுநீரகத்தில் கல் இருந்தால் வலது அல்லது இடது பக்கக் கீழ்முதுகில் வலி ஏற்படும். சிறுநீர்க்குழாயில் இருந்தால் வலி விலாவிலிருந்து வயிற்றுக்கும் விரைக்கும் பரவும். சிறுநீர்ப்பையில் இருந்தால் அடிவயிறு வலிக்கும். அத்தோடு நீர்க்கடுப்பு, வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் ஆகிய அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளும். சமயங்களில் கற்களோடு நோய்த்தொற்றும் கைகோர்த்துக் கொண்டால் குளிர்காய்ச்சலும் வரலாம். எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாக 3 - 6 மி.மீ. அளவில் கல் இருந்தால் அது மெல்ல மெல்லக் கரைந்து தானாகவே வெளியேறிவிடும். 2 செ.மீ. வரை உள்ள கற்களை லித்தோட்ரிப்சி எனும் மின் அதிர்வு அலைகளைச் செலுத்தி, கல்லை உடைத்து, அது தானாகச் சிறுநீரில் வெளியேறும்படிச் செய்யலாம். சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை லித்தோகிளாஸ்டி எனும் கருவியை சிறுநீர்த்தாரை வழியாகச் செலுத்தி உடைத்து விடலாம். 2 செ.மீ.க்கு மேல் உள்ள கல்லை சாவித்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

உணவு உட்கொள்ளும் முறை:

பொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம். அதிலும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களைவிட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகமாக வருகிறது. ஆதலால் இவர்கள்தான் சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும் தடுக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக கோடை காலம் சிறுநீரகக் கல்லுக்கு வசந்த காலம். வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிக நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும். இதனால் சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்புக் கிடைக்கும். இந்தச் சமயத்தில் தினமும் 10 தம்ளர் - அதாவது 2 லிட்டர் - தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தோடு இளநீர், பார்லி நீர், எலுமிச்சைச் சாறு, நீர் மோர், பழரசங்கள் சாப்பிட வேண்டியதும் முக்கியம். தினமும் இரண்டு வேளை காபி போதும். தேநீர் அறவே வேண்டாம். நாளொன்றுக்கு 250 மி.லி. பால் போதும். அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் குறைத்துக் கொண்டால் நல்லது. கோக்கில் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆகாது.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். அசைவம் அவசியம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம். மீன் சாப்பிடலாம். முட்டை எந்த வடிவத்திலும் வேண்டாம். மேலும் கால்சியம், ஆக்சலேட், பாஸ்பேட், யூரிக் அமிலம், சிஸ்டின் ஆகிய உப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, ஐஸ்கிரீம் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. கருப்புத் திராட்சை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், தக்காளி, அவரை, பீட்ரூட், கீரைகள் (குறிப்பாகப் பசலைக்கீரை), இலந்தைப்பழம், சீத்தாப்பழம், முந்திரி போன்ற உலர்ந்த பழங்கள், தேநீர், கோக், சாக்லேட் முதலியவற்றில் ஆக்சலேட் மிகுதி. காலிஃபிளவர், பூசணி, காளான், கத்தரிக்காய், வெண்டைக்காய், பேரிக்காய், கொய்யா ஆகிய காய்கனிகளிலும் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற உலர்ந்த கொட்டைகளிலும் ஆட்டு இறைச்சியிலும் யூரிக் அமிலம் அதிகம். இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். இயலாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. ஆகையால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். காய்களில் காரட், பாகற்காய், வாழைப்பூ முதலியவற்றைச் சேர்க்கலாம். பழங்களில் வாழைப்பழம், அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

சிறுநீரக கல்



சிறுநீரக கல்

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம்.

* சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.

* சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவது நல்லது.

பல்வேறு காரணங்களினால் சிறுநீரகங்களில் பிரச்னைகள் தோன்றலாம், அது வேலைநிறுத்தம் வரை சென்றுவிடலாம் என்றாலும் முக்கியக் காரணம் உயர்ரத்த அழுத்தமாக இருக்கும்.

மற்றொரு முக்கியக் காரணம் சர்க்கரைநோய்.

கருவில் உண்டான பிரச்னைகளால் சிலருக்குப் பிறவியிலேயே சிறுநீரக நோய்கள் உருவாகிவிடும். வேறு சிலருக்கு மரபணுவின் காரணமாக, அதாவது முன்னோர்களின் 'அருட்கொடை'யாக சிறுநீரக நோய்கள் தோன்றும். இதை என்பார்கள். மூன்றாவது 'வந்து சேர்ந்த சிறுநீரக நோய்கள்'. அதாவது இந்த மூன்றாவது வகையின் கீழ் வருகிற நீண்டகால சிறுநீரக நோய்க்கு முக்கியக் காரணங்களாகத்தான் அதிக ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அமைகின்றன.

ஏன், எப்படி என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக ரத்த அழுத்தம் 120/80 என்கிற அளவில் இருந்தால் அதை நார்மல் என்பார்கள். இதில் 120 என்பது 'சிஸ்டோலிக் ரத்த அழுத்தம்'. அதாவது இதயம் முழுவதுமாகச் சுருங்கும்போது, உண்டாகும் ரத்த அழுத்தம்.80 என்பது 'டயஸ்டோலிக் ரத்த அழுத்தம்'. அதாவது இதயம் முழுவதுமாக விரிவடையும்போது, உண்டாகும் ரத்த அழுத்தம்.நம் உணர்வுகளுக்கும், உணவுக்கும் தகுந்தமாதிரி அவ்வப்போது ரத்த அழுத்தம் கொஞ்சம் ஏறலாம். இறங்கலாம். தப்பில்லை. ஆனால் பொதுவாகவே ரத்த அழுத்தம் அதிகமானால் அது கவலைக்குரிய விஷயம்தான்.ரத்த அழுத்தம் அதிகமாவதற்குப் பல காரணங்கள். கொழுப்புச் சக்தி அதிகம் உள்ள உணவு வகைகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் இப்படி ஆகலாம். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, ரத்தக் குழாயின் உள் பக்கத்தில் படிந்துவிடுகிறது. இதனால் ரத்தக் குழாயின் உள்பக்கம் சிறுத்துவிடுகிறது. பாதை குறுகலாகிவிட்டாலும் அதே அளவு ரத்தம் அங்கு பாய வேண்டுமென்றால், அதிக அழுத்தம் அதற்குத் தேவைப்படும் இல்லையா?உணவில் அதிக உப்பைச் சேர்ப்பதாலும் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். ரத்தத்தில் உள்ள தண்ணீரை உப்பில் உள்ள சோடியம் இழுத்துக் கொள்கிறது. இதனால் ரத்தத்தின் அளவும், ரத்த அழுத்தத்தின் அளவும் அதிகமாகின்றன.மன அழுத்தம் காரணமாகவும் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உண்டு.

ரத்தக் குழாய்கள் குறுகலாகி விடுவதால், அவற்றில் செல்லும் ரத்த அளவு குறைந்துவிடும். முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், மூளை போன்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த அளவு குறையும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.கடுமையான உயர் ரத்த அழுத்தம் குறுகிய காலத்திலேயே சிறுநீரகங்களைப் பாதிக்கும். மிதமான உயர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி, தொடர்ந்து பல வருடங்களாக சிறுநீரகங்களைப் பாதித்து மோசமான இழப்பினை நாம் உணராமலேயே உண்டாக்கிவிடும். அதனாலேயே உயர் ரத்த அழுத்ததினை ஒரு மௌனமான உயிர்க் கொல்லி என்கிறார்கள்.

சிறுநீரகங்கள் ரத்த அழுத்தத்தினைச் சீர்செய்யும் ரெனின் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன என்று குறிப்பிட்டோம். சிறுநீரகம் பாதிக்கப்படும்போது. இந்த ஹார்மோன் சுரப்பதிலும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு ரத்த அழுத்தம் மேலும் சீரின்றிப் போகலாம். இதனால் சிறுநீரகங்களுக்கு மேலும் பாதிப்பு.எனவே, சிறுநீரகங்களை மனத்தில் கொண்டும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதித்து சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகக்கும். மாரடைப்பு, ரத்த நாளங்கள் வெடித்தல் போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கும். கண்ணில் உள்ள ரத்த நாளங்களைச் சிதைத்து, கண் பார்வை இழப்பும் நேரலாம்.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை எப்படி அறிவது?
ரத்த, சிறுநீர் சோதனைகள், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதனைத் தெரிவிக்கும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கச் சிறுநீரில் புரதம் இருப்பது தான் முக்கியமான அறிகுறி.

ரத்தத்தில் உள்ள கிரியாட்டினைன் அளவு, சிறுநீரகங்களால் கழிவுப் பொருள்கள் போதுமான அளவு வெளியேற்றப்படுகிறதா என்பதனைக் காட்டும்.
உங்களுக்குக் கால்களில் வீக்கம், காரணம் சொல்லமுடியாத சோர்வு, பலவீனம், தினசரி பழக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில் சிரமம், பசியின்மை, குமட்டல் ஆகியவை தொடர்ந்து இருந்தால், கட்டாயமாக மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இப்போது சிறுநீரக நோய்களின் இன்னொரு காரணமான சர்க்கரை நோயைப் பார்ப்போம்.
விளையாட்டு வீரர்களுக்கு அடிக்கடி பரிந்துரைக்கப்படும் ஓர் உணவுப் பொருள் குளுக்கோஸ். சேர்ந்த உடலுக்கு உடனடியாகச் சக்தி தரும் விஷயம் இது.ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அப்படியே உடலுக்குத் தேவைப்படும் சத்தாக மாறிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சிலருக்கு இப்படி நடப்பதில்லை. ஏன்?ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நம் உடலிலுள்ள திசுக்கள் அப்படியே உறிஞ்சி விடுவதில்லை. நம் கணையத்தில் சில திசுக்கள் உள்ளன. 'ஐலெட்ஸ் ஆஃப் லங்கர்ஹான்ஸ்' எனப்படும் இந்தத் திசுக்கள். இன்சுலின் என்ற சுரப்பியைச் சுரக்கின்றன. இந்தச் சுரப்பிதான் குளுக்கோஸை, திசுக்கள் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுகிறது.

துரதிர்ஷ்டவசமாகச் சிலருக்கு இன்சுலின், தேவையைவிடக் குறைவாகச் சுரக்கலாம். அப்போது என்ன ஆகும்? ரத்தத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் தங்கிவிடும் ( அவை திசுக்களால் உறிஞ்சிக்கொள்ளும் விதத்தில் இல்லாதவை) அதேசமயம் தேவைக்குக் குறைவான அளவே திசுக்களால் குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் உடலில் சோர்வு, களைப்பு.இது ஒரு பக்கமிருக்க, இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் சிறுநீரகங்களுக்கு வேலை அதிகமாகிறது. அதிக அளவ குளுக்கோஸை வடிகட்ட வேண்டியிருக்கிறதே!அளவுக்கு மேல் பாரம் ஏற்றினால், அது மயிலிறகாக இருந்தாலும் வண்டியின் அச்சாணி முறிந்துவிடுமல்லவா? அதுபோல, எல்லை தாண்டி குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து விடுவதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது.சர்க்கரைநோய் பல வருடங்களுக்குக் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மற்ற பாகங்களைவிட கண்களும் சிறுநீரகங்களும் அதிகம் பாதிப்படைகின்றன. இதற்குக் காரணம், அவற்றில்தான் நிறைய ரத்தக்குழாய்கள் உள்ளன. தவிர, அவை மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வேறு.
நம் சிறுநீரகங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சக்தி உண்டு. பகலில் அதிகமாக வடிகட்டும் பணியைச் செய்யும் இவை, இரவில் குறைவாகவே இந்த வே¬யைச் செய்கின்றன. இல்லையென்றால் என்னவாகும்? இரவில் பலமுறை நாம் எழுதந்திருக்க வேண்டி வரும். அதனால்தான் இயற்கை, சிறுநீரகங்களை இப்படிச் செயல்பட வைத்திருக்கிறது.

ஆனால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக ஆக, சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. அதிகப்படியான குளுக்கோஸ் விஷமாக மாறி, அங்கு நெஃப்ரான்களைப் பாதிக்கிறது. இதைத் தொடர்ந்து சிறுநீரகத்தின் வடிகட்டும் பணியிலும் மாறுதல் ஏற்படுகிறது. காலக்கட்டுப்பாட்டோடு இயங்குவதைச் சிறுநீரகம் மாற்றிக்கொள்கிறது. இதனால்தான் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர் இரவில் பலமுறை சிறுநீர் கழிக்கிறார்.சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என்பதன் மூலம் அறிகுறி சிறுநீரில், மிகவும் சிறிய அளவிலான ஆல்பியுமின் என்ற புரதச்சத்து வெளியேறுவது£ன். இந்தக் கட்டத்திலேயே இதை அறிந்துக்கொண்டு, சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பைச் சரி செய்யமுடியும். இல்லையென்றால் சிறுநீரில் உப்பு அதிகமாகக் கலந்து, நாளடைவில் கைகால் வீக்கம் என்று தொடங்கி சிறுநீரகச் செயலிழப்பில் முடியலாம்.

அடுத்தடுத்து உடனடியாக இவை நேர்ந்துவிடுமா? நல்லவேளையாக இல்லை.புரதச் சத்துக்களை இழக்கத் தொடங்கி சில வருடங்கள் (சுமார் எட்டு வருடங்கள்) தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருக்கவிட்டால், சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பு மிக அதிகம்.இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது செயல்திறனை இழக்கும் சிறுநீரகம், நாளடைவில் தனது வடிகட்டும் திறனை மொத்தமாகவே இழந்துவிடலாம். (அப்போது உடலுக்குத் தேவையான, புரதம் உள்ளிட்ட, பல சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் சேரும் சத்துக்கள், சிறுநீர் வழியாக வெளியேறிவிடுவதால்தான், அவர்கள் மிகவும் இளைத்துவிடுவார்கள்.)சர்க்கரைநோயைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், சிறுநீரகப் பாதிப்புகளையும் கணிசமாகக் குறைக்கலாம். பாதிப்பு நேர்ந்தபின் சிறுநீரகங்களைச் சரிசெய்வது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்.நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கியக் காரணங்கள், சர்க்கரை நோயும் அதிக ரத்த அழுத்தமும் என்பதைப் பார்த்தோம். இதே காரணங்கத்£ன். கண்களின் பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும்கூட முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.

எனவே உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டும் இருந்தால், உங்கள் பார்வை மிகுந்த ரிஸ்கில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த இரண்டு காரணிகளையும் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

கிட்னி கல்லின் அற்குறிகளும், தடுப்பு முறைகளும்:

கிட்னி கல்லின் அறிகுறிகள்:

* சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

* சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும். நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும்.

* தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

* சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

சிறுநீரக கல் வராமல் இருக்க தடுப்பு முறைகள்:

* அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. அதிகமான பருப்பு மற்றும் விதைவகைகள் உட்கொள்வது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.

* முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல் குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.


மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட


                             மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட

                             மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட  [Image]
காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர்  .
கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்
( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்.
இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம். இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருருக்கவேண்டும், வலியில் எங்கே தூங்குவது சிரமமாக இருக்கும் ...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவரும்.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் ,
சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
நோய்வந்தவருக்கு மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது என தகவல். அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடலாம்.,  கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்... நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு `
இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொட்டாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம். மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள். 
1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்,.   

                            கொள்ளு
கொள்ளு -இளைத்தவனுக்கு எள்ளு -கொழுத்தவனுக்கு கொள்ளு -கொள்ளு -கருப்பு பயிரை -இரவில் ஊறவைத்து காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும் .

சிறுநீரகல்


கொள்ளு -macrotyloma uniforum

கொள்ளு -
இளைத்தவனுக்கு எள்ளு -கொழுத்தவனுக்கு கொள்ளு -
கொள்ளு -கருப்பு கானபயிரை -இரவில் ஊறவைத்து
காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும் .
மாவிலங்கு -creteva magna

மாவிலங்கு -
மாவிலங்க பட்டை -ஆயுர்வேதத்தில் வருண இன்று அழைக்க படுகிறது.
மாவிலங்கப் பட்டையினால் வாதமொடு சன்னிகளும்
பாவுகின்ற கல்லடைப்பும் பாருமே -அகத்தியர் குண பாடம்
சீறுநீரக கல் ,பித்தப்பை கல்லும் கூட -மாவிலங்க பட்டை யினால் கரையும்.
ஆயுர்வேத மருதுக்கடைகளில் வருனாதி கசாயமாக இது எளிதாக கிடைக்கும்
நெருஞ்சில் முள் -tribulus terrestris

நெருஞ்சில் முள் ஆயுர்வேதத்தில் கோக்ஷுர என்றழைக்கபடுகிறது
சொல்லண்ணா நீர்க்கட்டு துன்மா மிசமருகல்
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டக்கால்-வல்லக்
..............................அகத்தியர் குணபாடம்..
எவ்வளவு பெரிய கல்லானாலும் நெருஞ்சில் முள்ளுக்கு முன்னே -பயந்தோடும்
சிறு பீளை

சிறு பீளை -
சிறு பீளை ஆயுர்வேதத்தில் பாஷாண பேதம் என்று அழைக்கப்படுகிறது -
பொங்கலுக்கு இதனை மண் பானையோடு வைத்து கட்டுவது வழக்கம்-
இது கன்னுபுள்ளை செடி என்றும் கூறுவார்.
நீரடைப்பு கல்லடைப்பு நீங்காகக் குடற்சூலை
பொரடரி ரக்த கணம் போக்குங் காண்-வாரிறுக்கும்
பூண் முலையே ! கேளாய் பெருந்துஞ் சிறுபீளை
யாமிதுகற் பேதி யறி..
இலைசாற்றால்-அல்லது சமூலக்கஷாயதால் கல் கரைந்து வெளியேறும் .
சிறு நீரகக் கல் மருத்துவம்
"சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கைவிக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவேகூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்புகாட்டிற் கழன்றோடுங்காண் "
( தேரையர் அருளிச்செய்த குணவாகடத்திரட்டு.)
சிறு கண் பீளை(AERVA LANATA) சமூலம்
"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலைபேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறு பீளையாமிது கற்பேதி யறி." (பதார்த்த குணபாடம் 291
சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம்,
முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.
சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS)
இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்றதனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.
" சொல்லவொண்ணா நீர்க்கட்டு துன்ப மாமிச மருகல்கல்லடைப்பெனும் பிணிகள் கண்டாக்கால் வல்லக்கருஞ்சிமவேற் கன்மதே காசினிற் தோன்றுநெருஞ்சின்றும் வித்தே நினை." (பதார்த்த குணபாடம் _ 876 )
பொருள் : நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு, மூத்திர எரிச்சல்,
துர் மாமிச அடைப்பு கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு.
மாவிலங்கப்பட்டை (CRATEVA MAGNA )
" மாவிலங்கப் பட்டையினால் வாத மொடுசந்நிகலும் பாவுகின்ற கல்லடைப்பும் மாறுமே. "
பதார்த்த குணபாடம் _ 550.
பேராமுட்டி வேர் (PAVONIA ODORATA )கல் கரையும்போது ஏற்படுகின்ற வலி காய்ச்சல் போன்ற துயர்களை நீக்க வல்லது.பேராமுட்டி வேரினால் வாதசுரம் , தாக நோய்கள் , மாந்த கணம், குளிர்ச்சுரம் பித்த நோய்கள்ஆகியவை குணமாகும்.
" வாத சுரந் தாகம் மதலைக் கணமாந்தஞ்சீத சுரம் பித்தமெனச் செப்பணங்கு மோது நம்மாற்சேரா முட்டிக்கேகுஞ் செய்ய மட மயிலேபேரா முட்டித் தூரைப் பேசு. "
(பதார்த்த குணபாடம் _51 )
எலுமிச்சன் துளசி -ocimum grattissiumum

எலுமிச்சன் துளசி -it  is having lithotriptic properties
அட துளசி கல்லை கரைக்கும் என்கிறீர்களா ?.நிச்சயமாக மூத்திரப்பை யில் உள்ள கல்லை கரைப்பதாக பல சான்றுகள் உள்ளது
கமேல -கம்பில்லக -mallotus phillippinesis
இது ஒரு வகை மரத்தின் பழங்களின் மீது படிந்திருக்கும் சிவந்த பொடி.இது பேதியுண்டக்கும் எனவே கவனத்துடன் கொடுப்பது நல்லது.
பெருங்களர்வா-salvdora indica

பெருங்களர்வா-
இது பெரிய மரமாகும்.இந்த மரத்தின் பழம் சிறுநீரக கல்லை கரைக்கும் தன்மையுடையது .
வாழை தண்டு -musa paradisiaca-

வாழை தண்டு -
வாழை தண்டின் சாறு கல்லை கரைக்கும் .இது மிக சிறந்த மூத்திர பெருக்கி .தயவு செய்து மூன்று நாட்களுக்கு மேல் வாழைதண்டு சாறை குடிக்காதீர்கள்.அவ்வாறு குடித்தால் எலும்பின் பலமும் குறைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
வாழை தண்டும்-தண்டங்கீரையும் யானைக்கு தொடர்ந்து கொடுத்தால் யானையும் படுத்துக் கொள்ளும் என்பது தென் நாட்டு பழ மொழி .
கல்லை கரைக்க வாழை தண்டை விட பல மூலிகைகள் உள்ளன.எனவே வாழை தண்டை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டா தீர்கள்

முருங்கை இலை சாறு குடித்தாலும் கல் கரைகிறது .

கல்லுருக்கி இலை - கல்லை கரைக்கிறது -இந்த செடி கண்டறிவதில் சில முரண்பாடுகள் உள்ளது.இருந்தாலும் இந்த புகைப்படம் சரி என்றே கருதுகிறேன்.எனது ஊருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு அணைக்கட்டின் அருகிலுள்ள மலையில் இந்த மூலிகை கிடைக்கிறது இது carcara sargada வை  ஒத்துள்ளது

தென்னம்பூவில் ஒரு மருந்து செய்வதுண்டு -அதுவும் கல்லை கரைத்து வெளியேற்றும்.