"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, June 6, 2016

மூலிகையின் பெயர் -: அந்தரத்தாமரை

c.
மூலிகையின் பெயர் -: அந்தரத்தாமரை
2. தாவரப் பெயர் -: PISTIA STRATEUTES.

3. தாவரக்குடும்பம் -: ARACEAE.

4. வேறு பெயர்கள் -: ஆகாயத்தாமரை.

5. பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மட்டும்.

6.வளரியல்பு -: அந்தரத்தாரமரை நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடிகள். சுத்தமான தண்ணீரில் வளரக்கூடியது. இலைகள் நீளம் சுமார் 13 செ.மீ. இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் ஜோடியாக இருக்கும். இதற்கு காம்புகள் (ஸ்டெம்) கிடையாது. கூடை வடிவ இலை இழம்பச்சை நிறமாக இருக்கும். அதில் மொசுப்பான முடிகள் இருக்கும். இது முதன் முதலில் ஆப்பிரிக்காவில் 'Lake Victoria' என்ற ஏரியில் தோன்றியதாகச் சொல்வர். இது அமரிக்காவில் 1765 ம் ஆண்டில் 'புளோரிடா' என்ற இடத்தில் ஏரிகளில் கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்வர். இதை ஆங்கிலத்தில் 'Water Cabbage' மற்றும் 'Water Lettuce' என்றும் கூறுவார்கள். இதன் வேர்கள் குஞ்சம் போல் இருக்கும். தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. பூக்கள் செடி நடுவில் மிகச் சிறிதாகத் தென்படும். இது இன விருத்திக்கு தாய் செடியுடன் சிறு குட்டிச் செடிகள் நூல் இழை போன்று தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும்.
+
7.மருத்துவப் பயன்கள் -: இது வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றை துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.

25 மி.லி. இலைச்சாற்றை சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் கொடுக்க மார்பிலும் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

அந்தரத்தாமரையிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல மூளை அகலும்.

இதன் இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி வகைக்கு 10 கிராம் போடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத்தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

1) மூலிகையின் பெயர் -: அக்கரகாரம்.

அக்கரகாரம்.


1) மூலிகையின் பெயர் -: அக்கரகா

2) தாவரப்பெயர் -: ANACYCLUS PYRETHRUM.


3) தாவரக்குடும்பம் -: COMPOSITAE.


4) வேறு பெயர்கள் -: அக்கார்கரா, ஸ்பானிஷ்பெல்லிடோரி,அக்கரம் முதலியன.


5) தாவர அமைப்பு -: அக்கரகாரம் என்னும் மூலிகைச் செடி கருமண்கலந்த பொறைமண்ணில் நன்கு வளரும். இதன் அமிலத்தன்மை 5 - 6 சிறந்தது. வட ஆப்பிரிக்க வரவான இது ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட மூலிகையாகும். தமிழ் நாட்டில் 1000 முதல் 1500 அடி வரை உயரம் உள்ள மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம். இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு உடையது. இலைகள் 15 செ.மீ. நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம்பச்சை நிறமாகவும், முதிர்சியாகின்ற தருணத்தில் லேசான ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். வேர்களில் சல்லி வேர்கள் அதிகம் காணப்படும். வேர்கள் 5 - 10 செ.மீ. நீளமானதாக இருக்கும்.
ஜெர்மனி, எகிப்து, கனடா, நாடுகளில் பயிர் செய்யப்படிகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாசலம் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. வேர்களில் அனாசைக்ளின்பெல்லிட்டோரின், எனிட் ரைன் ஆல்கஹால், ஹைடிரோகரோலின்,இன்யூலின், ஆவியாகும் தன்மை உள்ள எண்ணெய், செசாமையின்I, II, III, IV, அமைடுகள் ஆகியவை குறைந்த அளவில் வேரில் உள்ளன. இதில் இருந்து பெல்லிட்டோரின் அல்லது பைரித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது நட்ட ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு மாத வயதுடைய நாற்றை நடவேண்டும். இலைகள் பழுப்பு நிறமாக மாறி, பூக்கள் காய்ந்து விடும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். வேர்களை நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி பத்து நாட்கள் உலர்த்த வேண்டும். இது பயிரிடஏற்ற பருவம் ஏப்ரல், மே மாதங்களாகும். அக்கரகாரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.


6) பயன் படும் பாகங்கள் -: வேர்கள் மட்டும்.


7) மருத்துவப் பயன்கள் -: மருந்துப் பொருட்கள் செய்யப் படுகின்றன.இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு மருந்துப் பொருள் செய்யப்பயன்படுகிறது. வாதநோய் நிவாரணத்திற்கும், நரம்புத்தளர்ச்சி நோயால் ஏற்படும் காக்காய் வலிப்பு நோயிக்கும் உடனடி நிவாரணமாகும். மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
"அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக் கால்
உக்கிரகால் அத்தோடம் ஓடுங்காண் - முக்கியமாய்
கொண்டால் சலம் ஊறும் கொம்பனையே! தாகசுரம்
கண்டால் பயந்தோடுங் காண்."

அக்கரகாரத்தால் பயங்கரமான வாத தோஷமும் தாக சுரமும் நீங்கும். இதன் வேர் துண்டை வாயிலடக்கிக் கொள்ளின் சலம் ஊறும்.


உபயோகிக்கும் முறை - :இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம். ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் போம். இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும், இதனைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைல முறைப் படி தைலம் வாங்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும். ஆண்குறிக்கு லேசாகப் பூச தளர்ச்சி நீங்கி இன்பம் அதிகரிக்கச் செய்யும். அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி உபயோகப் படுத்து வதுண்டு.


தளகண்டாவிழ்தம் -: அக்கரகாரம், அதிமதுரம்,சுக்கு, சிற்றரத்தை,கிராம்பு, திப்பிலி, திப்பிலிமூலம், பவளம், மான்கோம்பு, ஆமைஓடு இவைகளை தனித்தனி சந்தனக் கல்லின் பேரில் தாய்ப்பால் விட்டு ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு புளியங்கொட்டைப் பிரமாணம் சந்தனம் போலுறைத்து ஒரு கோப்பையில் வழித்துச் சேகரமு செய்யவும். அப்பால் முன் போல் அந்தச் சந்தனக் கல்லின் பேரில்தாய்ப் பால் விட்டு உத்திராட்சம், பொன், வெள்ளி, இவைகளிலொவ் வொன்றையும் 30 - 40 சுற்றுறையாக உறைத்து அதனாலேற்பட்ட விழுதையும் வழித்து முன் சித்தப் படுத்திய கோப்பையில் சேர்க்கவும். இதற்குமேல் கறுப்புப் பட்டுத் துணியில் மயிலிறகை முடிச்சுக் கட்டித்தேனில் தோய்த்து ஒரு காரம் படாத சட்டியின் மத்தியில் வைத்து அடுப்பிலேற்றி எரித்து நன்றாகக் கருகின பின் அதனில் அரைவிராகனெடை நிறுத்து ஒரு கல்வத்தில் போட்டு அத்துடன் முன்கோப்பையில் சித்தப்படுத்தி வைத்துள்ள கற்கத்தை வழித்துப் போட்டு அப்பட்டமான தேன் விட்டுக் குழம்புப் பதமாக அரைத்து வாயகண்ட கோப்பையில் பத்திரப படுத்துக. வேண்டும் போது விரலாலெடுத்து நாவின் பேரில் அடிக்கடி தடவிக் கொண்டு வர சுர ரோரகத்தில் காணும் நாவறட்சி, விக்கல், வாந்தி, ஒக்காளம், இவை போம். இன்னும் சில நூல்களில் இச்சரக்குகளுடன் வில்வப் பழத்தின் ஓடு, விழாம் பழத்தின் ஓடு இவற்றை உறைக்கும் படி கூறப் பட்டிருக்கின்றன. இவையும் நற்குணத்தைக் கொடுக்கக் கூடியனவே.


அக்கரகார மெழுகு - :அக்கரகார கழஞ்சி 10, திப்பிலி கழஞ்சி 7,கோஷ்டம் கழஞ்சி 4, சிற்றரத்தை கழஞ்சி 8, கிராம்பு கழஞ்சி 7, இவைகளைத் தனித்தனி இடித்துச் சூரணம் செய்து கல்வத்திலிட்டு அதனுடன் சிறு குழந்தைகளின் அமுரியால் (மூத்திரம்) 2 நாழிகை சுறுக்கிட்டு 2 விராகனெடை பூரத்தைக் கூட்டி தேன் விட்டுக் கையோயாமல் மெழுகு பதத்திலேயே 2 சாமம் அரைத்து வாயகண்ட சீசாவில் பத்திரப் படுத்துக. இதனை வேளைக்கு அரை அல்லது ஒரு தூதுளங்காய்ப் பிரமாணம் தினம் இரு வேளை மூன்று நாள் கொடுக்க எரிகுன்மம், வலிகுன்மம், நாவின் சுரசுரப்பு, தோஷாதி,சுரங்கள் தீரும். இந்த மெழுகை நீடித்துக் கொடுக்கக் கூடாது. நோய்பூரணமாகக் குணமாகாவிடில் மீண்டும் ஒரு வாரம் சென்ற பின்கொடுத்தல் நன்று. ( இம்மருந்தை உண்ணும் காலத்தில் புளி தள்ளி இச்சாப் பத்தியமாக இருத்தல் வேண்டும்.)இடையல் சேர்ப்பு நன்றி வள்ளார்பிரகாஷ்-
வள்ளலார் பிரகாஷ் தேங்காய் ஓட்டின் கண் பகுதி மட்டும், அக்கிரகாரம், சிற்றரத்தை,அதிமதுரம் இவற்றை தனித்தனியே பொடியாக்கி முறையே 1,2,4,8 ஆக கலந்து கொண்டு திருகடிகையளவு 50மில்லி பாலில் கலந்து வாய்வழியாகவோ மூக்கில் நுழைத்துள்ள குழாய்(ரைஸ் டியூப்) வழியாகவோ மெல்ல செலுத்த மூளையில் அதிக சேதாரமில்லாத(பிரைன் ஹாமரேஜ்) கோமா நோயாளிகள் விரைந்து குணமாவர். மூளைச்சாவு ஏற்பட்டவர்களுக்கும் இறுதி முயற்சியாக செய்து பார்க்கலாம். நன்றி

பருத்தி



மூலிகையின் பெயர் –: பருத்தி..

தாவரவியல் பெயர் -: GOSSYPIUM HERBACEUM.

;தாவரக்குடும்பம் -: .MALVACEA..

பயன்படும் பாகங்கள் -: இலை, மொட்டுகள், பூ மற்றும் விதை.

வளரியல்பு -: பருத்தி கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடையது. பச்சையான அகலமான இலைகளை மாற்றடுக்கில் கொண்டது. மஞ்சளான பூக்களைக் கொண்ட செடி. இது சுமார் 4அடி முதல் 5 அடி வரை வளரக்கூடியது. . பூக்கள் முற்றி 3 அரை கொண்ட சப்பைகள் உண்டாகி பிஞ்சாக பச்சை நிறத்தில் இருக்கும். பிஞ்சுகள் முற்றி காய்ந்து பருத்திப் பஞ்சாக விரியும். பஞ்சு வெள்ளை நிறமாக இருக்கும்.. இது தமிழகமெங்கும் வளர்கிறது. பஞ்சிலிருந்து கொட்டையைப் பிறித்தெடுத்து எண்ணெய் எடுக்குவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் உபயோகிக்கிறார்கள். மருந்தாகவும் பயன் படுகிறது. பஞ்சிலிருந்து நூல் எடுத்து ஆடைகள் செய்யப் பயன்படுத்திகிறார்கள். இதில் பல ரகங்கள் உண்டு. நீர் பாய்ச்சியும், மானாவாரியாகவும் பயிர் செய்வார்கள். வரலச்சுமி என்ற ரகம் நல்ல மகசூல் கொடுக்கிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் – இது மலமிளக்கி, காமம் பெருக்கி, கோழையகற்றி மேலும் இரத்த கிரஹினி, முழங்கால் வலி, பெண் குறியில் வலி, சிறுநீர்தடை, நீர்ச்சுருக்கு, மாதவிடாய் தடை போன்றவறை குணமாக்க வல்லது.

பருத்துயின் இலை அல்லது மொக்கையாவது கால் பலம் அரைத்து, அரைஆழாக்குப் பசும்பாலில் கரைத்து உண்ணச் சீழ்ப் பிரமேகம், இரத்த பித்த ரோகம், இரண சோபை ஆகியவற்றை நீக்கும்.

இதன் கொழுந்து அதிசார பேதியையும், இதன் இலையைச் சாம்பலாக்கி இரணங்களில் போட ஆறும். பருப்பு லேகியங்களில் சேர்க்கத் தாது விருத்தி உண்டாகும்.

'பருத்தி பெரும்பாட்டைப் போக்கும்' –யோகர் நிகண்டு 1500

பருத்தி விதை, அரிசித் திப்பிலி, நெற்பொறி, ஏலக்காய், சர்கரையும், தேனும் மேற்படி சூரணத்துடன் கலந்துண்ண விக்கல், வாந்தி தீரும்.

மூலிகையின் பெயர் -: எலும்பொட்டி.

எலும்பொட்டி.

மூலிகையின் பெயர் -: எலும்பொட்டி.

தாவரப்பெயர் :– ORMOCARPUM COCHINCHINCENSE.

தாவரக்குடும்பம் :– FABACEAE..

:
பயன்தரும் பாகங்கள் :– சமூலம்.

வளரியல்பு :– எலும்பொட்டி செடி வகையைச் சேர்ந்தது. இது வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோஸ்ணம் போதுமானது. இது பற்றி பழங்காலத்தில் கிராமங்களில் எலும்பு முறிவை குணமாக்கும் என்று தெறிந்து வைத்து அதை இரகசியமாக வைத்திருந்தனர். இந்தச் செடி எப்போதும் பச்சையாக இருக்கும். இது 6 அடி முதல் 9 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகிவிடும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். அவை 9 – 17 இணுக்குகள் இருக்கும். இலை 1.5 சி எம்.முதல் 2.5 சி.எம் நீளம் இருக்கும். இவைகள் முதிர்ந்து பழுத்தால் கருப்பாக இருக்கும். பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கால்ச்சியம் அதிகமாக இருக்கும். விதைகள் ஓவல் வடிவத்தில் பிரவுன் நிறத்தில் இருக்கும்.ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும். விதை அக்டோபர் மாதத்தில் எடுக்க வேண்டும் இது தாய்வான், இந்தியா, ஜப்பான், மலேசியா, பசிபிக் தீவவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் வியட்னாமில் காணப்படும். இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :– எலும்பொட்டி செடியில் கால்சியம் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள். அதை எலிகளுக்குக் கொடுத்து அதன் எலும்பு முறிவை விரைவில் குணமாவதைக் கண்டரிந்தார்கள். அந்தக் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் இலையை நன்கு அரைத்து அதை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டி விரைவில் குணமாவதைக் கண்டறிந்தனர். ;இதை இரகசியமாக வவைத்திருந்தனர். இதனால் இதற்குக் காரணப்பெயராக அமைந்தது. இதன் சமூலத்தில் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு நன்கு சுண்ட வைத்து அதன் 'எக்ஸ்ட்ராக்' எடுத்து வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இரு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணிசுத்தி கட்டுப்போடுவார்கள். பின் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பர். இப்படி செய்யும் போது ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணமடைந்து விடும். இது கேராளாவில் முட்டிகுளக்கரையில் செய்து வருகிறார்கள்.

பெண்களின் வெளள்ளைக்கு பழம்பாசி இலை

பெண்களின் வெளள்ளைக்கு
பழம்பாசி இலை

பெண்களுக்குவெள்ளை
படுதல் நோயிற்கு பல மூலிகை மருந்துகள் இருந்
தாலும் கிராமங்களில் இன்றும் அதிகமாகப் பயன்படுதிதி
வருவது பழம்பாசி இலை.

இது வயல் வரப்புகளில்
பரவலாகக் கிடைக்கும்.
இங்கு படத்தில் காட்டியி
ருப்பது முதல் தரம். இது
கிடைக்கவில்லை என்றால்
இரண்டாம் தரமான பழம்
பாசியைப் பாசியைப் பயன்
படுத்தலாம்.

எல்லா மூலிகையிலும்
ஆண் பெண் மூலிகைகள்
உண்டு. அதில் பெரும்புலும்
பெண் மூலிகையே அதிக
மருத்துவத் தன்மை கொண்ட தாக இருக்கும். இனி அடுத்து
எழுதும் போது அம்மூலிகை
பற்றி பிரித்து படத்தோடு
எழுதுகிறேன்.

இம்மூலிகையின் இலை
களைக் கைப்பிடி அளவு
பறித்து சிறிது சீரகம் சேர்த்து
தண்ணீர் அல்லது மோர்
விட்டரைத்து காலையில்
வெறு லயிற்றில் குடிக்க
நோய் குணமாகும்.

மேலும் நிழலில் காய
வைத்த பழம்பாசி இலை
50 கிராம்; லோசாக வறுத்த
சீரகம் 50 கிராம்: லேசாக
வறுத்த வெந்தயம் 50 கிராம்
சேர்த்து இடித்து வைத்துக்
கொண்டு மூன்று விரலால்
அள்ளும் அளவு எடுத்து
ஆண் பெண் இரு பாலரும்
மோரில் சாப்பிட்டு வர
உடல் சூடு வெள்ளைபடுதல்
ஆண்சளுக்கு சிறுநீரில்
விந்து வெளியேறுதல் நின்று
மூலநோய் இருந்தாலும் குண
மாகும். சர்க்கரை நோயின்
தன்மையும் குறையும். பெண்
களுக்கு சூட்டினால் கர்ப்பம்
தடைபட்டிருந்தாலும்
குணமாகும்

முதல் தரமான
பழம்பாசி👇🏻👇🏻

G.K

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

🍴
🍹
🍡

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

🍴
🍹
🍡

பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

🍴
🍹
🍡

மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

🍴
🍹
🍡

உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.

🍴
🍹
🍡

வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

🍴
🍹
🍡

கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

🍴
🍹
🍡

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

🍀
🌹

உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

🍀
🌹

காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

🍀
🌹

உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.

🍀
🌹

இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.

🍀
🌹

சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.

🍀
🌹

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

🍀
🌹

காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.

🍀
🌹

சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

🍀
🌹

உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!

🍀
🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.

🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.

🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

🍀🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.

🍀🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

🍀🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

🍀🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

🍀🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

🔥🔥🍍
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.