"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, June 30, 2016

சிறுநீர் கற்களைக் கரைக்கும்வெங்காயம்!

சிறுநீர் கற்களைக் கரைக்கும்
வெங்காயம்!
  • வெங்காயத்தின்
காரத்தன்மைக்குக் காரணம்…
அதில் உள்ள 'அலைல்
புரோப்பைல் டை சல்பைடு'
என்ற எண்ணெய். இதுவே
வெங்காயத்தின் நெடிக்கும்,
நமது கண்களில் கண்ணீர்
வருவதற்கும் காரணமாக
அமைகிறது. வெங்காயத்தில்
புரதச்சத்துக்கள், தாது
உப்புக்கள், வைட்டமின்கள்
ஆகியவை உள்ளன. அதன்
பலன்களை இங்கே பார்ப்போம்,
வெங்காயம் ஒரு நல்ல
மருந்துப் பொருள். இதை
இதயத்தின் தோழன் என்றும்
சொல்லலாம். இதிலுள்ள
கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில்
கொழுப்பு சேர்வதை
இயல்பாகவே கரைத்து,
உடலெங்கும் ரத்தத்தை
கொழுப்பு இல்லாமல் ஓட
வைக்க உதவி செய்கிறது.
குளவியோ, தேனீயோ
கொட்டிவிட்டால் பயப்பட
வேண்டாம். அவை கடித்த
இடத்தில் வெங்காயத்தை
எடுத்துத் தேய்த்தாலே
போதும். வெங்காயத்தில் உள்ள
ஒரு வகை என்சைம்,
கொட்டியதால் ஏற்படும்
உடலில் வலியையும்,
அழற்சியையும்
உண்டாக்குகின்ற
ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற
கூட்டுப் பொருளை சிதைத்து
விடுகிறது. விஷத்தையும்
முறித்து விடுகிறது.
சிறுநீர் அடக்கிவைக்கும்
பழக்கம் ஆண்களைவிட
பெண்களிடம் அதிகம் உண்டு.
அவ்வாறு சிறுநீரை
அடக்குவதால் அதில்
நுண்ணுயிரிகளின் உற்பத்தி
அதிகமாகி, நோய் உண்டாகும்
வாய்ப்பு அதிகரிக்கும். இந்த
பழக்கத்தை தொடர்பவர்களுக்க
ு சிறுநீர்த்தாரைத் தொற்று
வரும். இவர்கள்,
வெங்காயத்தை உணவில்
அதிகமாகச் சேர்த்துக்கொண்ட
ால் போதும். வெங்காயம்
கழிவுப் பொருட்களை கரைத்து,
அழற்சியைக் குறைத்து
கழிவுகளை வெளியே
தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த்
தாரைத் தொற்றும் குறையும்.
யூரிக் அமிலம் அதிகமாக
சிறுநீர்ப் பையில் சேர்ந்தால்
கற்கள் தோன்றும்.
வெங்காயத்தை அடிக்கடி
சாப்பிட்டால் அந்த கற்கள்
கரைந்துவிடும்.
முதுமையில் வரும் மூட்டு
அழற்சியை கட்டுப்படுத்தும்
ஆற்றல் வெங்காயத்திற்கு
உண்டு. இதற்கு
வெங்காயத்தையும், கடுகு
எண்ணெயையும் சேர்த்து
மூட்டு வலி உள்ள இடத்தில்
தடவினால் போதும். வலி
குறைந்துவிடும்.
செலனியச் சத்து
இருப்பவர்களுக்குத்தான்
கவலை, மன இறுக்கம்,
களைப்பு போன்ற பிரச்சினை
தோன்றும். இதைத் தவிர்க்க
சுலபமான வழி வெங்காயத்தில்
இருக்கிறது. வெங்காயத்தை
தொடர்ந்து உணவில் எடுத்து
வந்தாலே போதும்.
தேவையான செலினியச்சத்து
கிடைத்துவிடும். வெங்காயம்
தவிர, பூண்டையும் இதற்காக
பயன்படுத்தலாம்.
சீதோஷ்ண நிலை
மாறும்போது அடிக்கடி
இருமல் வரும். நுரையீரல்
அழற்சி, மூக்கு எரிச்சல்
போன்றவையும் ஏற்படும்.
சிறிது வெங்காயச் சாற்றில்
தேன் கலந்து சாப்பிட்டால்
மேற்கண்ட பிரச்சினைகள்
நீங்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்
மருந்துப்பொருள்
வெங்காயத்தில் இருப்பதாக
சமீபத்திய ஆராய்ச்சியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகைபிடித்தல், காற்று
மாசுபடுதல், மன இறுக்கம்
போன்றவற்றால் ஏற்படும் செல்
இறப்புகள், செல் சிதைவுகளை
இது சரிசெய்து விடுகிறது.
நாலைந்து வெங்காயத்தை
தோலை உரித்து அதோடு
சிறிது வெல்லத்தைச் சேர்த்து
அரைத்து சாப்பிட பித்தம்
குறையும், பித்த ஏப்பம்
மறையும்.
வெங்காயத்தை வதக்கிச்
சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும்
ஆசனக் கடுப்பு நீங்கும்
வெங்காயச் சாறு சில
வயிற்றுக் கோளாறுகளை
நீக்கும். இதை மோரில் கலந்து
குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும்,
வெந்நீரையும் கலந்து வாய்
கொப்பளித்து, வெறும்
வெங்காயச் சாறை பஞ்சில்
நனைத்து பல் ஈறுகளில்
தடவிவர பல்வலி, ஈறுவலி
குறையும்.
அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள்
வெங்காயச் சாற்றை நாள்
ஒன்றுக்கு அரை அவுன்ஸ்
வீதம் மூன்றுவேளை
சாப்பிட்டு வர நுரையீரல்
சுத்தமாகும்.

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க
உதவும் பழங்கள் :-
தர்பூசணி :
தர்பூசணி பலருக்கும் பிடித்த
பழம். குறிப்பாக, பயண
வேளைகளின்போது தாகம்
தணிக்க இது மிகவும்
உதவுகிறது. தர்பூசணியில்
நீர்ச்சத்து அதிகமாகவும்,
கொழுப்பு குறைவாகவும்
இருப்பதால் இதனை
உட்கொண்டால் உடல் வறட்சி
அடையாமல் இருப்பதுடன்,
அடிக்கடி பசி ஏற்படுவதையும்
தடுக்கும். இதனால் உடல்
எடையை அதிகரிக்காது.
பப்பாளி :
இதில் கொழுப்பு, கலோரிகள்
மிகவும் குறைவாக
இருப்பதால், உணவுக்
கட்டுப்பாட்டின்போது
பப்பாளியைச்
சேர்த்துக்கொண்டால், உடல்
எடை குறைவதுடன், வயிற்றுப்
பிரச்சினைகளும் தீரும்.
லிச்சி :
நார்ச்சத்து அதிகம் கொண்ட
லிச்சி, மிகவும்
இன்சுவையான பழம். இந்தப்
பழமும் உடல் எடையைக்
குறைக்க உதவியாக இருக்கும்.
பிளம்ஸ் :
பிளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம்
உடலில் உள்ள
கொழுப்புகளைக்
கரைத்துவிடுகிறது. மேலும்
உடலில் தங்கியுள்ள
நச்சுப்பொருட்களையும்
வெளியேற்றிவிடும்.
மாம்பழம் :
பலரும் விரும்பிச் சாப்பிடும்
மாம்பழத்தில் எண்ணற்ற
நன்மைகள் அடங்கியுள்ளன.
உடல் எடையைக் குறைக்க
விரும்பும் நபர்களுக்கு உகந்த
பழம் இது.

அனைத்து நோய்களுக்கும்தீர்வு தரும் சோற்றுகற்றாழை...

அனைத்து நோய்களுக்கும்
தீர்வு தரும் சோற்று
கற்றாழை...
1. சோற்றுக் கற்றாழையின்
சாற்றையோ அல்லது
உள்ளிருக்கும்
கூழ்ப்பகுதியையோ தினமும்
அளவோடு சாப்பிடுவதால்
கண் பார்வை தெளிவு பெறும்.
2. சோற்றுக் கற்றாழை
உள்ளுக்குச் சாப்பிடுவதாலும்
மேலுக்கு
உபயோகப்படுத்துவதாலும்
பெண்கள் மற்றும் ஆண்களின்
சிறுநீர்த் தாரையில் உள்ள
எரிச்சல், புண் குணமாகும்.
3. சோற்றுக் கற்றாழையை
ஓரிரு சாக்லேட் அளவு
வில்லைகளாக்கி காலையில்
வெறும் வயிற்றில்
சாப்பிடுவதால் உண்ட உணவு
குடலில் தங்கி நஞ்சாகி
நமக்குத் துன்பம் தரும்
நோய்களைத் துடைக்கும்
வகையில் குடலுக்கு
பாதிப்பின்றி தேங்கிய
நச்சுக்களை வெளியேற்ற
உதவுகிறது. இதனால்
வயிற்றிலுள்ள வாயு
வெளியேற்றப்படுவதோடு மன
இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்)
தணிந்து ஆரோக்கியம்
கிடைக்கின்றது.
4. சோற்றுக் கற்றாழையின்
இளமடலை தோல் சீவி
சோற்றை சுத்திகரித்து உடன்
சீரகம், கற்கண்டு, சிறிதளவு
மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட
குருதியும் சீதமும் கலந்த
வயிற்றுப்போக்கு
குணமாகும்.
5. 100கிராம் கற்றாழைச்
சோற்றை எடுத்து கொண்டு
அத்தோடு 10கிராம் ஊறவைத்த
வெந்தயத்தையும் சிறிதாக
அறிந்த ஒரு
வெங்காயத்தையும் சேர்த்து
அரைத்து 350கிராம்
விளக்கெண்ணெயில் இட்டு
பதமாகக் காய்ச்சி வடித்து
பத்திரப் படுத்திக் கொண்டு
அந்தி, சந்தி இருவேளை ஒரு
தேக்கரண்டி அளவு சாப்பிட்டு
வர உடல் உஷ்ணம் தணிந்து
உடல் பெருகும், அழகான
தோற்றம் பெருகும்.
6. சோற்றுக் கற்றாழை மடலை
நன்கு முற்றியதாகத்
தேர்ந்தெடுத்து இரண்டாகப்
பிளந்து அதன் இடையே ஒரு
ஸ்பூன் வெந்தயத்தை
திணித்து கற்றாழையின்
மடல்கள் இருபகுதியும்
ஒன்றாக சேரும் வண்ணம்
நூலால் இறுகக் கட்டி இரவு
முழுவதும் வைத் திருந்து
மறுநாள் காலையில் எடுத்துப்
பார்க்கையில் வெந்தயம் நன்கு
முளை விட்டு இருக்கும். அந்த
வெந்தயத்தை மட்டும் எடுத்து
உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத
வயிற்று வலி, வாய் வேக்காடு,
வயிற்றுப்புண், சிறுநீர்த்
தாரைப்புண் ஆகியன
குணமாகும்.
7. கற்றாழைச் சோற்றை மோரில்
கலந்து அன்றாடம் குடித்து வர
உடல் சூட்டினால் ஏற்படும்
முகப்பருக்கள், கட்டிகள்,
வெயிலில் அலைவதால்
ஏற்படும் தோலின் கருமை
மற்றும் மேல் தோலில்
ஏற்படும் கருந்திட்டுக்கள்
குணமாகும்.
8. சோற்றுக் கற்றாழையின்
வேர்களை சேகரித்து
சிறுதுண்டுகளாக வெட்டி
சுத்தம் செய்து பால்ஆவியில்
வைத்து வேகவைத்து எடுத்து
வெயிலில் இட்டு உலர்த்தி
நன்றாக பொடித்து வைத்துக்
கொண்டு தினம் இரவு படுக்க
போகுமுன் ஒரு தேக்கரண்டி
அளவு எடுத்து பாலில் கலந்து
சாப்பிட்டு வர ஆண்மை மிகும்.
விந்துக்களின்
எண்ணிக்கையும் பெருகும்.
9.. சோற்றுக் கற்றாழைச்
சோற்றை சுத்தம் செய்து 10
முதல் 15 கிராம் அளவு எடுத்து
நீராகாரத்துடன் (பழையது நீர்)
சேர்த்து காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வர
சிறுநீரில் ரத்தம் போவது
குணமாகும். மூத்திரக்கிரிச்
சாம் என்னும் சிறுநீர்த்தாரை
எரிச்சல் தணியும்.
10. சுத்திகரித்த கற்றாழைச்
சோறு ஒருகப் அளவு எடுத்து
இதனோடு 5 சிறு
வெங்காயத்தைப் பொடித்து
நெய் விட்டு சேர்த்து வதக்கிச்
சேர்த்து சுடுக்காய் கொட்டை
நீக்கியபின் மூன்று
கடுக்காயின் தோலைப்
பொடித்துச் சேர்த்து ஒன்று
கலந்து சிறிதளவு நீர்விட்டு
ஒரு பாத்திரத்தில் வைத்து
மூடிவைத் திறந்து அரைமணி
நேரம் கழித்துப் பார்க்க
அனைத்துப் பொருட்களின்
சாரமும் ஒன்றாய்க் கலந்து
வடிந்து தெளிவாய் இருக்கும்.
இதை உள்ளுக்குச் சாப்பிட சில
மணித் துளிகளில் சிறுநீர்கட்டு
தளர்ந்து தாராளமாக சிறுநீர்
வெளியேறும்.
11. சோற்றுக் கற்றாழைச் சாறை
தினமும் 2 அவுனஸ்
உள்ளுக்கு கொடுப்பதால் இதய
ரத்த நாளங்களில்
கொழுப்புச்சத்து படிவதால்,
ஏற்படும் இதய நோய்கள்
அச்சம் தரும் உயிர் போக்கி
நோய்களைத் தணிக்கிறது.
12. சோற்றுக் கற்றாழையில்
உள்ள ஹார்போஹைட்ரேட்ட
ு மெட்டபாலிசம் சர்க்கரை
நோய்களுக்கு ஒரு
வரப்பிரசாதம் ஆகும். இது
ரத்தத்தில் உள்ள
உணவுக்குமுன் ஆன சர்க்கரை
அளவையும், உணவுக்கு பின்
ஆன சர்க்கரையின்
அளவையும் குறைக்க
உதவுகிறது.
13. இதயத்துக்கு போதிய
பிராணவாயு கிடைக்க
வழிசெய்கிறது. பிராணவாயு
சரியான அளவு இதயத்துக்கு
கிடைக்காத போது கடும்
நெஞ்சுவலி உண்டாகிறது.
சோற்றுக் கற்றாழைச் சாறு
இப்படி மாரடைப்பு வருவதைத்
தடுக்கிறது.
14. சோற்றுக் கற்றாழையில்
உள்ள வேதிப் பொருட்கள்
பேகொசைட்டோஸிஸ் மற்றும்
ஆண்டிபாடீஸ் என்னும் நோய்
எதிர்ப்பு சக்தியைத் தாண்டி
ஆரோக்கியத்திற்க
ு வழிவகுக்கிறது.

தொப்பை மற்றும் உடல்பருமனைக் குறைக்க உதவும்

தொப்பை மற்றும் உடல்
பருமனைக் குறைக்க உதவும்
இயற்கை மருத்துவ வழிகள் :-
1. நெல்லிக்காயை கொட்டை
நீக்கி சுத்தம் செய்து, சாறு
எடுத்து அதனுடன் சிறிது
இஞ்சிச்சாறு கலந்து தினமும்
காலையில் குடித்து வந்தால்
கொழுப்பு குறையும்.
2. கடுக்காய், நெல்லிக்காய்,
தான்றிக்காய் (திரிபலா)
இவைகளை பொடியாக்கி
வெந்நீரில் கலந்து காலையில்
குடித்தால் எடை குறையும்.
சிறிது வெதுவெதுப்பான
தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன்
கலந்து பருகி வந்தால் உடல்
பருமன் குறையும்.
3. அருகம்புல் சாறெடுத்து
தினமும் காலையில் வெறும்
வயிற்றில் குடித்து வர
தொப்பை குறையும்.
4. ஆமணக்கின் வேரை இடித்து
தேன் கலந்து நீரில் இரவு ஊற
வைத்து காலையில் கசக்கிப்
பிழிந்து, நீரை வடிகட்டி
குடித்தால் உடல் பருமன்
குறையும்.
5. பாதாம் பவுடரை எடுத்து
சிறிது தேன் கலந்து
காலையில் சாப்பாட்டிற்கு
பிறகு சாப்பிட்டு வந்தால் உடல்
எடை குறையும்.
6. கேரட்டுடன் தேன் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் தேவையற்ற
கொழுப்பு குறைந்து உடல்
எடை குறையும்.
7. வெள்ளரி, நெல்லி, கோஸ்,
கொத்தமல்லி, முருங்கை,
திராட்சை, ஆரஞ்சு, தக்காளி,
பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை,
கொய்யா, புதினா, வெங்காயம்,
தர்பூசணி, பேரிக்காய்,
கறிவேப்பிலை, வாழைத்தண்டு
இவைகளை சாறு எடுத்து
குடிக்க உடல் எடை குறையும்.
8. கரிசலாங்கண்ணி இலையை,
பாசி பருப்புடன் சேர்த்து
சமைத்து தினமும் சாப்பிட
உடல் எடை குறையும்.
சோம்பு எடுத்து சுத்தம்
செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி
அடிக்கடி குடித்து வந்தால்
உடல் எடை குறையும்.
9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு
துண்டுகளாக நறுக்கி நான்கு
தேக்கரண்டி ஓமத்தை பொடி
செய்து அதில் போட்டு
நன்றாகக் கிளறி ஒரு ட்மளர்
தண்ணிர் ஊற்றிக்
கொதிக்கவிடவும்.இரவில்
அதை அப்படியே வைத்திருந்து
மறு நாள் காலையில் அதைப்
பிழிந்து சாறு எடுத்து வெறும்
வயிற்றில் சாப்பிடவும். இந்த
முறைப்படி பத்து நாட்கள்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
உங்கள் தொப்பை கரைய
ஆரம்பிக்கும்.

நீரழிவு நோயாளிகளுக்கானஉணவு அட்டவணை.சாப்பிடக் கூடாது:


நீரழிவு நோயாளிகளுக்கான
உணவு அட்டவணை.
சாப்பிடக் கூடாது:
1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.
அளவோடு சாப்பிடலாம்:
1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.
அளவில்லாமல் சாப்பிடலாம்:
1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
  1. 24. சீமை கத்திரிக்காய்.

ஒற்றைத் தலைவலி - நிரந்தரதீர்வு!!

ஒற்றைத் தலைவலி - நிரந்தர
தீர்வு!!
எட்டி மரத்தின் கொழுந்து
இலைகளை கொண்டுவந்து,
பொடியாக நறுக்கி - ஒரு
கைபிடியளவு எடுத்து - ஒரு
சட்டியில் போட்டு , அத்துடன்
வெள்ளைபபூண்டு , மிளகு
வகைக்கு ஒருரூபாய் எடை ( 12
Gram ) எடுத்து அம்மியில்
வைத்து அரைத்து அதையும்
சட்டியில் போட்டு - ஒரு டம்ளர்
அளவு நல்லெண்ணெய் விட்டு
கலக்கி அடுப்பில் - மிகவும்
சிறு தீ யாக வைத்து
காசவேண்டும்.
எண்ணையில் உள்ள நீர் தன்மை
அகன்று, இலை சிவந்து வரும்
பொது இறக்கி வைத்து
ஆரவிடவேண்டும். பிறகு
வடிகட்டி வைத்து கொண்டு ,
தினசரி இரண்டு தேக்கரண்டி
அளவு எண்ணையை தலை
உச்சியில் வைத்து தேய்த்து,
அரைமணி நேரம் ஊரியபின் -
சியக்காய் தேய்த்து வெந்நீரில்
தலைக்கு குளிக்கவேண்டும்.
தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு
குளிக்கவேண்டும். இப்படி
செய்துவந்தால் ஒற்றை
தலைவலி குணமாகும். பிறகு
வரவே வராது

#திருமணமாகி #நீண்ட #நாட்களாக #உங்களுக்கு #குழந்தை #இல்லையா ? ? ? ?

#திருமணமாகி #நீண்ட #நாட்களாக #உங்களுக்கு #குழந்தை #இல்லையா ? ? ? ?

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.

வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.
இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.
கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.
பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

பாம்பின் விசம்


பாம்பின் விசம்
*****************
பாம்பின் விசம் என்பது பாம்பின் உமிழ்நீர்
ஆகும்
இதில் 95% புரதம் உள்ளது.
இதை நம் உடலால் ஏற்க இயலாமால்
மரணம் நிகழ்கின்றது.
சிரியாநங்கை பெரியாநங்கை வசம்பு
செடிகளில் ஒன்று வளர்த்தால் வீட்டில்
பாம்பு வரது என்பது திண்ண ம்

நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரை வகைகள்; நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழவகைகள்;

நீரிழிவை கட்டுப்படுத்தும் கீரை வகைகள்;
1.முருங்கைக்கீரை 2.அகத்திக்கீரை
3.பொன்னாங்கண்ணிக்கீரை 4.சிறுகீரை
5.அரைக்கீரை 5.வல்லாரைக்கீரை
7.தூதுவளைக்கீரை 8.முசுமுசுக்கைக்கீரை
9.துத்திக்கீரை 10.மணத்தக்காளிக்கீரை
11.வெந்தயக்கீரை 12.கொத்தமல்லிக்கீரை
13.கறிவேப்பிலை
கீரைகளில் பெரும்பான்மையாக், கால்சியம், புரதம், இரும்புச்சத்துகள் கிடைக்கிறது. கீரைகளில் மாவுப்பொருள் மிகவும் அரிது. எனவே கீரைகள் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழவகைகள்;
  1.விளாம்பழம் -50கிராம்
2.அத்திப்பழம் -3எண்ணிக்கை
3.பேரிச்சம்பழம் -4 எண்ணிக்கை
4. பெரிய நெல்லிக்காய் -5 எண்ணிக்கை
5.அருநெல்லிக்காய் -100 கிராம்
6.நாவல் பழம் -100கிராம்
7.மலை வாழை -30 கிராம்
8.அன்னாசிப்பழம் -40கிராம்
9.மாதுளம்பழம் - 90கிராம்
10. எலுமிச்சை -1 எண்ணிக்கை
11.ஆப்பிள் -75 கிராம்
12.பப்பாளிப்பழம் -75கிராம்
13. கொய்யாப்பழம் -75கிராம்
14.திராட்சை -100கிராம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழங்களில் ஏதேனும் ஒன்று மட்டும் தினசரி சாப்பிடலாம். கொடுக்கப்பட்ட எடையளவு மற்றும் எண்ணிக்கையை மனதில் கொண்டு சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயின் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் நேரடி இனிப்பு சாப்பிட நேர்ந்தால் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு, பிற உணவு பொருட்களையும் மாவுப்பொருட்களையும், தவிர்ப்பது நல்லது. அப்படி இருக்கும் பட்சத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட குளுகோஸ் எளிதில் ஜிரணிக்கப்படுகிறது.
நீரிழிவை கட்டுப்படுத்தும் சாறு வகைகள்;
1.எலுமிச்சை சாறு -200மில்லி
2.இளநீர் -200மில்லி
3.வாழைத்தண்டு சாறு -200மில்லி
4.அருகம்புல் -100மில்லி
5.நெல்லிக்காய் சாறு -200மில்லி
6.கருவேப்பிலை சாறு -100மில்லி
7கொத்தமல்லி சாறு -100மில்லி
(கொடுக்கப்பட்டுள்ள சாறுகளில்) ஏதேனும் ஒன்று மட்டும் எடையளவு மீறாமல் தினசரி சேர்த்துக் கொள்ளவும்.
சர்க்கரை நோயாளிகள் இளநீர் சாப்பிடக்கூடாது என்ற தவறான் அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகிறது.
இளநீரில், இளமைத்தன்மையுள்ள கால்சியம் காணப்படுகிறது.அதாவது மருத்துவ குணம் கொண்ட கால்சியம் இதனால் இளநீர் உள்ரணம் ஆற்றுவதிலும், எலும்புகளைப் பலப்படுத்துவதிலும், மூத்திரை தாரைகளை சுத்தப்படுத்துவதிலும்,சிறுநீரகங்களை நன்கு இயங்கச் செய்வதிலும் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒன்று அல்லது இரண்டு இளநீர் சாப்பிடலாம் தவறில்லை.
இயற்கை உணவும் நீரிழிவும்;
நீரிழிவைக் கட்டுப்படுத்துவதிலும், நிரந்தர குணம் தருவதிலும் இயற்கை உணவின் பங்கு மிக இன்றியமையாதது, இயற்கை உணவுகளில் கார்போஹைட்ரேட் மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகிறது.இதனால் இயற்கை உணவை உணவாக கொண்டால் நீரிழிவுக்கு நிரந்தர குணம் விரைவில் காணப்படும்.
ரத்த சிவப்பணுக்களைப் பெருக்கி உடம்புக்கு எதிர்ப்புத்திறன் தருகிறது. ரத்தத்தில் கலந்துள்ள கார்4பன் மூலக்கூறுகளை வெளியேற்றுகிறது .ரத்தத்தில் பிராண சக்தி அதிகரிக்கிறது.
இதனால் இதயம், மூளை, நரம்பு,எலும்பு,சிறுநீரகம் பலப்படுறது.
ஒரு காயை சமைத்தாலோ, அல்லது எண்ணேயிலிட்டு வறுத்தாலோ,அதில் கார்பன் மூலக்கூறுகள் மிகுந்து விடுகிறது.ருசிக்கு அடிமைப்பட்ட மனித தேகம் தான் நித்தம் ஒரு வியாதியில் விழ்ந்து கிடக்கிறது.