"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, April 3, 2016

விஷ கடி மருந்து



எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா??

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.

கடிகளைக் கண்டறிதல்.

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…

தேள் கடி மருந்துகள்.

எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும். குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறி நாய் கடித்து விட்டால்.

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

பாம்பு கடித்து விட்டால்.

உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க.

நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.

இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும்.

வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும். சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற
அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு.

சக்திகூர் அடைங்கள்


வர்மக்கலை மருத்துவ ரகசியம்"
1. சக்திகூர் அடங்கல் :
இந்த வர்மம் உள்ளங்கால் பள்ளத்தில் அமைந்துள்ளது, இந்த இடத்தில் கட்டைவிரலை வைத்து வலது புறம் மூன்று சுற்று சுற்றுவதால் மயக்கம், காக்கை வலிப்பு, உள்ளங்காலில் அதிக வியர்வை, உள்ளங்கால் எரிச்சல், வலி, குரல் இழப்பு, கண்பார்வை மங்கல், சிறுநீர் பிரிவதில் தொந்தரவு, தொண்டைப்புண், நாக்கு வறட்சி, உச்சந்தலை வலி, ஆகியவை தீரும். மன அமைதி கிடைக்கும். இந்த வர்மம் இரண்டு கால்களிலும் அமைந்துள்ளது.

கண் புகைச்சல் வர்மம்



"வர்மக்கலை மருத்துவ ரகசியம்"

2.கண் புகைச்சல் வர்மம் :
இந்த வர்மம் அமைந்துள்ள இடம் வெளிப்புற கணுக்கால் மூட்டின் ஒருவிரல் கீழே.
இந்த இடத்தில் கட்டைவிரலை வைத்து மெதுவாக மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
தலைவலி, தலை கிறுகிறுப்பு, தூக்கமின்மை, கவலை, மனஅழுத்தம், மனநோய்கள், கணுக்கால் வலி, வலிப்பு நோய்கள், கால் வலி, முதுகு வலி, போதைப் பழக்கம், கணுக்கால் வலி, ஆகிய நோய்கள் குணமாகும்.

குடுக்கை வர்மம்


"பெண்களுக்கான அற்புதமான வர்மம்"

தொப்புளிலிருந்து பத்து விரல் அளவு நேர் கீழே அமைந்துள்ள வர்மம் "குடுக்கை வர்மம்" ,இந்த வர்மத்தில் கட்டை விரலைக்கொண்டு லேசாக மூன்று முறை அழுத்தி விடவும் ,அதன் பின் அடிவயிற்றை மூன்று முறை தடவி விடவும் ,இதன் பயன்: பெண்களுக்குக்கு வரக்கூடிய மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும், அதிக இரத்தப்போக்கு சீராகும், மாதவிடாய் வயிற்று வலியை போக்கும், கர்பப்பையில் உள்ள நீர் கட்டிகள் நீங்கும்,கரு முட்டை முதிர்ச்சி அடைய உதவியாக இருக்கும்,பெண் இன உறுப்பு குறைபாடுகள் நீங்கும்.


விருத்தி அடங்கள்



"வர்மக்கலை மருத்துவம்"
"விருத்தி அடங்கல்"
இந்த அடங்கல் அமைந்துள்ள இடம் கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடைவெளியயிலிருந்து மூன்று விரல்கள் மேலே அமைந்துள்ளது.

இது ஒரு முக்கியமான அடங்கல் இவ்விடத்தில் கைபெருவிரலால் மேல்நோக்கி அழுத்தம் தர உடல் ஆரோக்கியம் ஏற்படும், உடல் தசைகளின் இறுக்கத்தினால் ஏற்படும் வலிகள் நீங்கும்,தலைசுற்றல், உயர் ரத்த அழுத்தம், தலைவலி, கண்நோய் ,கல்லீரல் பாதிப்புகள், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை ,ஹெர்னியா,மூச்சுப்பிடிப்பு,குழந்தைகளின் வலிப்பு,சிறுநீர் தேக்கம்,சிறுநீர் தானாக வெளியாதல் ஆகிய நோய்கள் தீரும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது 7 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்தவும்

மாரடைப்பு நீக்கும் வர்மக்கலை


"மாரடைப்பு நீக்கும் வர்மக்கலை வைத்திய ரகசியம்"

"திடீரென்று மாரடைப்பு (Heart attack) வந்து அவதியுரும்போது மேற்காணும் வர்ம புள்ளிகளில் அழுத்தம் கொடுத்தால் மார்வலி நீங்கும் தொடர்ந்து பத்து நாட்கள் அழுத்தம் கொடுத்து வர பூரணமாக மாரடைப்பு குணமாகும்.

கொண்டய்கொல்லி வர்மம்


"வர்மக்கலை அடிமுறை ரகசியம்"

'கொண்டக்கொல்லி வர்மம்'

வகையான தலைமுகிந்த கொண்டக் கொல்லி
வகுப்பாக கொண்டிடுகில் குணத்தைக்கேளு
துகையான கொண்டையது குழைந்து போகும்
தோகையரே ஸ்திரீபோகம் விழுந்து போகும்
பகையான சன்னி சீதங்கள் வந்து
பழிகேடு செய்திடுமே பாங்காய்க் கொண்டால்
தகையான பெரியோர்கள் வந்திட்டாலும்
தப்பாது மரணம்வரும் சார்ந்து கேளே.

பொருள்:-

சரியாக உச்சி நடுவில் கொண்டைகொல்லி வர்மம்.முறையாக அதில் தட்டோ,முட்டோ,அடியே பட்டால் தலை நிமிர்ந்து நிற்காது.லிங்கம் தளர்ந்து போகும்.உயிர்க்குப் பகையான சன்னி,குளிர்ச்சி இவை ஏற்பட்டு மரணமும் ஏற்படலாம்.மாசறக் கற்ற பெரியோர்கள் வந்து சிகிச்சை செய்தாலும் மரணம் வரும் என்பதை மேற்சொன்ன குறி குணங்களால் அறிந்துகொள்.


வழுக்கையில் முடி வளர்வதற்கு

"வழுக்கையில் முடி வளர்வதற்கு"

முற்றிய மருதாணி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணையில் போட்டதும் எண்ணை சிவப்பாகும் ,அந்த இலைகளை அரித்து எடுத்துவிட்டு மீண்டும் இவ்வாறு இலைகளை போட்டு ஆறு முறை காய்ச்சி எடுத்து வடித்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும் ,வழுக்கை விழுந்த இடங்களிலும் முடி வளர தொடங்கும்

சென்னி வர்மம்


"வர்மக்கலை அடங்கல் ரகசியம்"

அடியிடிகள் படுவதாலோ அல்லது கீழே விழுவதாலோ ,வாய் திறந்து விடும் வாயை மூட முடியாது அதற்குரிய வர்மக்கலை அடங்கல் முறை:-

'வல்லா வாயது திறந்திடுகில் வழுத்தும் சென்னியில் அழுத்திடபோம்'

அதாவது சென்னியில் அமைந்துள்ள சென்னி வர்மத்தில் இருபுறமும் கட்டைவிரல்கொண்டு அழுத்திவிட வாய்மூடி இயல்பு நிலைக்குவரும்.

G.k

  • உழவும் பசுவும் ஒழிந்த கதை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி,மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.
அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.

அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.

இப்பசுக்களை அழித்துவிட்டால்விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.

நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.

அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, "இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்' என்றார்.

1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்' என்றார்.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.

இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.

நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கானபசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.

இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்துபறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.

விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களைவிளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும்
பிராணிகள் நல அமைப்பினர்களின்புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.

இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.

இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.

இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?
மாட்டிறைச்சியை நாம் ஏன்
சாப்பிட கூடாது?...
மிருதுவான மாட்டிறைச்சியை
சாப்பிட்டுள்ளீர்களா?
அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில் கர்ப்பமுற்ற பசுக்களை வெட்டும் போது அதன் வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக்குட்டியின் கறி. அதை தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
மிளகாய் பொடி கண்ணில் தேய்கப்பட்டு;
மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை லாரியில்
நிற்க வைக்கப்பட்டு;
நீரும் புல்லும்
மறுக்கப்பட்டு;
கூட்ட நெரிசலில் கொம்புகள் குத்தி கண் இழந்து;
கால்கள் தளர்ந்து, முறிவுற்று;
பின்னர் லாரியில் இருந்து இறக்கப்பட காலில் கயிறு கட்டி இழுக்கப்பட்டு; மண்டையில் சுத்தியல் கொண்டு பலமுறை அடிவாங்கி, இரும்பு கம்பி மூளையில் செலுத்தப்பட்டு;
தலைகீழாக தொங்கவிடப்பட்டு;
உயிரோடு கழுத்தை அறுத்து...
இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமா?
மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல் துர் நாற்றத்தையும் அதிகரிக்கும்.
உலகளவில் இதய சம்பந்தப்பட்ட
நோய்களுக்கு மாட்டிறைச்சியே பிரதான காரணமாக கூறப்படுகிறது.
புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது.
எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டிறைச்சியிலுள்ள
Beef Tapeworm என்னும்
புழு பலநேரங்களில அழிக்கப்படுவதில்லை.
அதே போல E coli என்னும் கிருமியின் புதிய வகை (new toxic strain); dioxin எனப்படும் நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும் கிருமி என்று ஒரு பெரிய பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.
இயற்கை, உணவிற்காக
ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப்பாக மனித உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது.
மாடுகளை வதைப்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும், மாட்டிறைச்சியை சாப்பிடுவதன் மூலம் உள்ள தீங்கையும் அதனால் ஏற்படும் உடல்நோய் களையும் பிறருக்கு எடுத்து சொல்லி அதை தவிர்ப்பதன் மூலம் சந்தையில் மாட்டிறைச்சிக்கான வரவேற்பை குறைக்க முடியும்....
கருணை உள்ளம் உள்ள எல்லோருக்கும் பகிருங்களேன் !
பசுவதை 🐂தடுப்போம்
தேசம் 🐄 காப்போம்

காற்று பிரிவது நிற்க

"காற்று பிரிவது நிற்க அனுபவ வைத்தியம்"

சிலருக்கு அடிக்கடி 'டர் டர் ' என காற்று பிரிந்துகொண்டிருக்கும் அதற்கு காய்ந்த கறிவேப்பிலை ,ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல் ,சுக்கு இவற்றை சம அளவு எடுத்து நெய்விட்டு தனித்தனியே வறுத்து இடித்து பொடி செய்து அரை தேக்கரண்டி அளவு காலை மாலை வெந்நீரில் சாப்பிட்டு வர காற்று பிரிவது நின்று விடும்

ஒற்றை தலை வலி

"ஒற்றை தலைவலிக்கு அனுபவ வைத்தியம்"

அதிகாலை வெறும் வயிற்றில் அரை டம்ளர் திராட்சை சாறும், அதே அளவு கறிவேப்பிலை சாறும் கலந்து பருகிவிட்டு ,காலில் அமைந்துள்ள விருத்திக்கால அடங்கல் வர்மத்தில் பெருவிரல் கொண்டு அழுத்திவிட ஒற்றைதலைவலி பூரணமாக குணமடையும

வர்மகலை


''வர்மக்கலை மருத்துவம்''
`பிடரிக்காலம்`

இந்த வர்மப்பகுதி அமைந்துள்ள இடம் உச்சியில் இருந்து கீழாக பன்னிரண்டு விரல் அளவில் அமைந்துள்ளது இந்த இடத்தில் கால் மாத்திரை அளவு அழுத்தம் கொடுத்தால் வயிற்றுப்போக்கு நிற்கும் ,பெண்களுக்கான உதிரப்போக்கு குறையும்,விந்து கட்டும், கண் சிவப்பு நீங்கும் ,நாக்கின் நரம்புகளை சீர் செய்யும்.

வர்மகலை




"வர்மக்கலை மருத்துவ ரகசியம் "

"ஆக்ரண குருத்து குத்தி வர்மம்"

இவ்வர்மமானது நுனிநாசியிலே அமைந்துள்ளது

நடுவிரல்நுனிகொண்டு மூன்றுமுறை லேசாக அழுத்திவிட்டால் நுரையீரலுக்கும் இருதயத்திற்கும் பித்தப்பைக்கும் ஆற்றல் கொடுக்கும்.கைகால், உடல் ,காது ,கண் ,மூக்கு இவைகளுக்கு சக்தி தரும்.

தோல் நோய்களுக்கு மூலிகை பொடி


"தோல் நோய்களுக்கு தேய்த்து முழுக மூலிகை பொடி"(ஏட்டுமுறை ரகசியம்)

கோரைக்கிழங்கு, அதிமதுரம்,நன்னாரி வேர்,வெட்டி வேர், குனாவி வேர், கோஷ்டம்,கஸ்தூரி மஞ்சள்,கிச்சிலிக்கிழங்கு, திரவியப்பட்டை,மகிழம்பூ, ஆவாரம்பூ, (அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வகைக்கு 50 கிராம் வீதம் எடுத்து இடித்து தூள் செய்து கொள்ளவும், தினம் காலையில் குளிக்கும் போது போதுமான அளவு இந்த தூளை தண்ணீரில் குழைத்து உடலில் தேய்த்து வென்னீரில் குளிக்கவும், தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். (சோப் ஷாம்பூ உபயோகிக்க கூடாது)

வர்மகலை

"வர்மக்கலை மருத்துவ முத்தோட நேர ரகசியம்"

காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை வாதத்தின் நேரம்.

காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை பித்தத்தின் நேரம்.

மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை சிலேத்துமத்தின் நேரம்.

மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை வாதத்தின் நேரம்.

இரவு 10 மணிமுதல் பின்னிரவு 2 மணிவரை பித்தத்தின் நேரம்.

பின்னிரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை சிலேத்துமத்தின் நேரம்.

இந்த நேரங்களை கருத்தில் கொண்டு வாத பித்த சிலேத்தும வர்மங்களை இயக்கி நோய்களை தீர்க்க முடியும். அவ்விடங்களில் அடித்து நோயை உண்டாக்கவும் முடியும்.
இந்நேரங்களில் அந்தந்த தோடங்களுக்குரிய மருந்துகளை உட்கொள்வதன் மூலமாக நோய்களை எளிதில் நீக்க முடியும்.