"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, June 16, 2016

உங்களுக்கு பல் சொத்தைப் இருக்கா?

உங்களுக்கு பல் சொத்தைப் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.

1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,

2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,

4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,

6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,

7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

தசவாயுக்கள்

"தசவாயுக்கள்"

வாயுக்களாய் பிரிந்து நின்று, உடலின் செயல்பாடுகளில் பங்களிப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர்.

இவற்றில் ஏதேனும் ஒன்றின் செயல்பாட்டில் குறைபாடு உண்டானாலும் உடலின் ஆரோக்கியம் கெடும்.

அவை பற்றி சுருக்கமாய் இன்றைய பதிவில் காண்போம்.

பிராணன்

மூலாதாரத்தில் சேர்ந்து, இதயத்தில் நின்று மூக்கின் வழியே சென்று திரும்பி வரும் காற்று பிராணன் எனப்படுகிறது. இது மேல் நோக்கி இயங்கக் கூடியது. மற்ற ஒன்பது வகை காற்றுக்கும் ஆதார காற்று இதுதான்.

அபானன்

இது குதத்தை பற்றி நின்று நமது உடலின் கழிவுகளான மலம்,சிறு நீரை வெளியே தள்ளுகிறது. இது கீழ்நோக்கி இயங்கும் தன்மை உடையது.

வியானன்

நரம்புகளின் ஊடே நின்று உணர்வுகளை கடத்தும் வாயு வியானன் எனப்படுகிறது. மூளையின் கட்டளைகளை உறுப்புகளுக்கும், உணர்வுகளை மூளைக்கும் கொண்டு செல்லும் வாயு இது. இதனை தொழில் காற்று என்றும் கூறுவர்.

உதானன்

நமது நாபிக்கமலத்தில் நின்று, குரல் நான்களை அதிரச் செய்வதன் மூலம் ஒலியை எழுப்பும் காற்று உதானன் எனப்படும்.

சமானன்

நாம் உண்ணும் உனவினை ஜீரணித்து அதில் இருக்கும் சத்துக்களை பிரித்து இரத்தத்திற்கும்,உறுப்புகளுக்கும் தரும் காற்று சமானன் எனப்படும். இதற்கு நிரவல் காற்று என்றொரு பெயரும் உண்டு.

நாகன்

இது நமது உடலில் சேர்ந்த நச்சு உணவை புரட்டி வாய் வழியே வெளியே தள்ளும் காற்று இது. குமட்டல், வாந்தி போன்றவைகளை உருவாக்கிடும் காற்று நாகன் எனப்படுகிறது.

கூர்மன்

இது கண்ணில் நின்று அதன் இயக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு துணை புரியும் காற்று.

கிரிதரன்

இது நமது உடலில் நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகள், தூசி, துரும்பு, மாசு போன்றவைகளை உடம்பில் நுழைய விடாமல் தடுக்கும் காற்று. இதற்கு தும்மல் காற்று என்று பெயர்.

தேவதத்தன்

மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைதல்,அல்லது இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைதல், அல்லது நுரையீரலில் புழங்கிடும் காற்றின் அளவு குறைதல், உடல் உறக்க நிலைக்கு தயாராகும் போது ஏற்படும் காற்று இது. கொட்டாவி, விக்கல் போன்றவை தோன்ற இந்த காற்றே காரணமாகிறது.

தனஞ்செயன்

மேலே சொன்ன ஒன்பது காற்றுகளும் நமது உடலில் இருந்து வெளியேறிய பின்னர் செயல்படும் காற்று இது. நமது உடலில் நுண்ணுயிரிகளைத் தூண்டி உடலை அழுகச் செய்து உடல் உப்பி வெடித்து வெளியேறும் என்கின்றனர். இதனை வீங்கல் காற்று என்றும் அழைப்பர்.

இவற்றை முறையே பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியதந்த மேம்படுத்தி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும் என்பதை சுட்டிடவே இந்த தகவலை இன்று பகிர்ந்து கொண்டேன்.

"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)

யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம்"

"இதை அனைவருக்கும் பகிர்வோம்"

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

தொப்பை வருவதற்கு முக்கிய காரணம்

"ஆண்களுக்கு மட்டுமில்லாமல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் Toothpaste என்றால் நம்புவீங்களா?
.
பெண் குழந்தைகளுக்கு
சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும்
10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம்
என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன
.
கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான்
நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பல் பிரச்சனைகளை......
.
இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாக
மாற்றியது எது?
Toothpaste
Toothpaste ஐ பயன்படுத்த வேண்டாம்
.
என்பதற்கான அறிவியல் காரணங்கள்
பல உண்டு
.
1.பற்பசையில் உள்ள புளோரைடின் அனவானது
17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பது
மருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் Colgate, close up ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது
.
2. பற்பசையில் உள்ள bleaching agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை
தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை
உருவாக்கும்
.
பற்பசையில் பல் துலக்கிய பிறகு உற்று
நோக்கினால் ஈறுகள் சிவப்புநிறத்தில்
காண்பதற்கு இதுவே காரணம்
.
3. Sodium lauryl sulfate (sls) இவை இல்லாத Toothpaste இல்லையென்றே கூறலாம்
.
Sls இந்த வேதி பொருள் பெட்ரோல்
உற்பத்தி நிலையங்களில் எண்ணெய்
பிசுபிசக்கை போக்க பயன்படும் உயர் வேதி பொருள்
.
இந்த sls ஆனது வயிற்றில் உற்பத்தியாகும் Hcl உடன் வினைபுரிந்து வயிற்றின் உட்பகுதியில்
புண்களை ஏற்படுத்துகிறது
.
இந்த புண் தான் ulcer ஆக
உருமாறி நமது உடலின் திரிதோசமான...
வாதம்+ பித்தம்+ கபம்
சீர் கேட்டை உருவாக்கி எல்லா
நோய்களையும் அழையா விருந்தாளியாக
வரவழைத்து வரவேற்கும்
Toothpaste
அவசியமா?
.
4. நமது பற்களுக்கும் மூளைக்கும் நேரடி
தொடர்பு உள்ளது
கை விரலால் பல் துலக்கும் போது பற்களில்
மேல் பகுதியில் அமைந்துள்ள நரம்பணுக்கள்
மூலம் தூண்டபட்டு
அகோர பசி உருவாவதை உணரலாம்
.
இதுவும் ஒரு சிறந்த தொடு சிகிச்சை தான்
.
பாரம்பரிய முறையாக மூலிகை பொடிகளை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அளப்பரிய
நன்மைகளால் உடல் ஆரோகியம் பெரிதும் பாதுகாக்கபடுவது மட்டுமின்றி நோய் அணுகாமல் வாழலாம்
.
நமது உடலின் நுழைவாயிலான பற்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி ....
அதன் மூலம் மட்டுமே நோய்களை உற்பத்தி செய்ய இயலும் என்பதை உணர்ந்த மேலைநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு எலி கள் இந்தியர்கள்
.
கிராமத்தில் வாழும் மக்கள்
இயற்கையாக உள்ள வேம்பு,ஆழங்குச்சி இருந்தும் இவற்றை பயன்படுத்துவதை மறந்து
.
மெல்ல கொள்ளும் விஷமான Colgate, close up" Etc.... தான் பயன்படுத்துகின்றனர்
.
பல் போகமா இருப்பதற்கான மரபான தரவுகளை முன்னெடுப்போம்

மின்சாரத் தைலம்

அனைவரின் வீட்டிலும்
அவசியம் இருக்க வேண்டிய
மின்சாரத் தைலம்

தைமால்' மெந்தால் பச்சக்
கற்பூரம் சம அளவு.

ஒவ்வொன்றிலும் பத்து
கிராம் ஒவ்வொரு வீட்டிற்கும்
போதுமானது.

இது எல்லா நாட்டு மருந்துக்
கடைகளில் கிடைக்கும்.

ஒவ்வொன்றையும் தனித்
தனியாக நுணுக்கி ஒரு
கண்ணாடி சீசாவில் போட்டு
ஒரு குலுக்கு குலுக்கி வைத்து
விட வேண்டும். சுமார் நான்கு
மணி நேரத்திற்குள் தைலமாக
மாறிவிடும்.

பல்வலிக்கு:- ஒரு சொட்டு
தைலத்தைப் பல்வலி உள்ள
இடத்தில் பஞ்சில் தொட்டு
வைத்து ஐந்து நிமிடம் கழித்து
சோற்றுப்பில் சுடு தண்ணீர்
கலந்து வாய் கொப்பளிக்க
ஐந்து நிமிடத்தில் பல்வலி
குணமாகும்.

எங்சள் வைத்திய சாலையில்
பல்வலிக்கு இலவசமாக மருந்து கொடுத்து வருகிறோம்.

மூச்சுத் திணறலுக்கு
அதிகமாக மூச்சுத் திணறல்
உள்ளவர்களும் இழுப்பு நோய் உள்ளவர்களுக்கும் மூன்று
சொட்டு தைலத்தை ஐம்பது
மில்லி லேசான சுடு தண்ணீரில்
குடிக்க இரண்டு நிமிடத்தில்
நோயின் தன்மை குறைந்து
விடும். மேலும் அவர்களுக்கு
இளைப்பு வராமல் இருக்க
தினம் காலையும் இரவும்
உணவு உண்ட அரைமணி
நேரம் கழித்து மூன்று சொட்டு
தைலத்தை ஐம்பது மில்லி
லேசான சுடு தண்ணீரில் குடித்து வர நோயின் பாதிப்பு
குறையும்.

தலைவலிக்கு
ஒரு சொட்டு தைலத்தை..பெரு
விரலிலும் ஆள்காட்டி விரலி
லும் படும்படி தொட்டு மூக்கில்
நன்றாக உறிஞ்சி பின் நெற்றி
யிலும் புருவத்திலும் தடவ
உடனே தலைவலி குறையும்.

உடம்பு குளிர்ச்சி ஏற்பட்டால்

அதிகமான நோய் பாதிக்கப்
பட்டவர்களுக்கு திடீரென்று
கால் கே குளிர்ச்சி ஏற்படும்.
உடனே அவர்களின் உள்ளங்
காலிலும் உள்ளங்கையிலும்
அழுத்தி தேய்த்து விட உடல்
முழுவதும் உடனே சூடறும்.

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு நெஞ்சில்
சளி இருந்தால் ஐந்து சொட்டடு
தைலமும் பத்து சொட்டுத்
தேங்காய் எண்ணையும் கலந்து முதுகிலும் மார்பிலும்
லேசாக தேய்த்து விடவும்.

முழங்கால் வலிக்கு

முழங்கால் மற்றும் உடம்பில்
எங்கு வலி இருந்தாலும் ஒரு
பங்கு தைலத்திற்கு இரண்டு
பங்கு தேங்காய் எண்ணை
கலந்து இரவில் தேய்த்து
காலையில் சுடுதண்ணீரில்
ஒத்தடம் கொடுக்க வலி
குறையும்.

கொசு தொல்லை மாற

கொசுவின் தொல்லையில்
இருந்து மீள நாம் மின்சாரத்
தில் பயன் படுத்தும் காலியான
ஆல் அவுட்டிற்குள் இந்தத்
தைலத்தை செலுத்தி கதவு
ஜன்னலை பூட்டி விட்டு ஒரு
மணி நேரம் போட்டு பின்
நிறுத்தி விட்டால் கொசு வராது
முழு நேரம் பயன் படுத்த
வேண்டாம்.

மின்சாரம் இல்லை என்றால்
ஒரு பங்கு தைலத்திற்கு மூன்று பங்கு தேங்காய் எண்ணை
கலந்து உடம்பில் லேசாகத்
தேய்த்து விட அன்று முழுவ
தும் கொசுக் கடியாது. இதனால்
உடலிற்கு நன்மையே தவிர
  • தீமை இல்லை.

சகல சித்தி தரும்சிவகரந்தை காயகல்பம்


சகல சித்தி தரும்
சிவகரந்தை காயகல்பம்

சிவகரந்தை மூலிகையை
பூப்பூதற்கு முன் பஞ்சமி
அல்லது பௌரணமி நாளில்
முறையாக சாப நிவர்த்தி
செய்து சமூலமாகப் பிடுங்கி
வேரிலுள்ள மண்ணை நன்
றாக அலசி நிழலில் காய
வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.

முறையாகச் செபம் செய்
யும் சித்த வித்தியார்களுக்கு
சாபநிவர்த்தியும் மந்திரமும்
தேவையில்லை. அவர்கள்
மூலிகையைத் தொட்டு
ஜெபம் செய்து எடுத்துக்
கொள்ளலாம்.

பின் காயவைத்த மூலியை
இடித்து பொடி செய்து அந்த
பொடியுடன் மீண்டும் சிவ
கரந்தைச் சாறு விட்டு குறைந்
தது மூன்று தடவை பாவனை
செப்து வெபிலில் காய
வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்
பின் அதைப் பாலில் பிட்ட
வியலாகச் செய்து மீண்டும்
வெயிலில் காய வைத்து
இடித்து கண்ணாடி சீசாவில்
பத்திரப் படுத்தி வைத்துக்
கொள்ள வேண்டும்.

சிவகரந்தை உப்பு:-
வேண்டிய அளவு முற்றிய
சிவகரந்தை சமூலமாக
எடுத்து நிழலில் காயவைத்து
சாம்லாக்கி ஒருபடிச் சாம்ப
லுக்கு நான்கு படித் தண்ணீ
ரில் கலந்து அந்தத் தண்ணீர்
கலவையை தினம் நான்கு
தடவை மூங்கில் குச்சியால்
கலக்கி வர வேண்டும். பின்
ஐந்தாம் நாள் அந்தத்
தெளிந்த தண்ணீரை மட்டும்
கலங்காமல் எடுத்து வடி
கட்டி இரும்புச் சட்டியில்
காய்ச்சி வர வேண்டும். தண்
ணீர் வற்றி மெழுகு பதமாக
வந்தவுடன் இறக்கி வெயி
லில் வைக்க உப்பாகி விடும்
அந்த உப்பை கண்ணாடிச்
சீசாவில் பத்திரப் படுத்தவும்.
அறுபது கிலோ காய்ந்த சிவ
கரந்தைக்கு நூறு கிராம்
உப்பு கிடைக்கும்.

பின் முன் செய்து வைத்
துள்ள சிவகரந்தைப் பொடி
100 கிராமிற்கு ஐநது கிராம்
சிவகரந்தையின் உப்பையும்
கலந்து வைத்துக் கொண்டு

காலையும் மாலையும் உணவு உண்பதற்கு முன்
மூன்று விரலால் அள்ளும்
அளவு கோடை காலமானால்
பசுவின் நெய்யிலும் மழை
மற்றும் குளிர் காலமானால்
தேனிலும் கலந்து சாப்பிட்டு
வரவும்.

இக்காயகல்பத்தை அவர்
களின் விருப்பப்படி ஒரு
மாதம் முதல் பத்து மாதம்
வரை சாப்பிடலாம். பத்திய
முறைப்படி சாப்பிட முழுப்
பலனையும்; பத்தியமில்லா
மல் சாப்பிடுவோர்களுக்கு
பாதிப் பலனும் கிடைக்கும்.

மேலும் இக்காய கல்பம்
யோகம் உள்ளவர்களுக்கு
மட்டுமே கிடைக்கும்.

இதை சாப்பிட ஆரம்பித்த
மறு நாளே குணம் தெரியும்.
பத்து நாளில் சளி இருமல்
குறைந்து இரத்தத்திள்ள
கிருமிகள் அழிந்து இரத்தம்
தூய்மையாகி உடல் நறு
மணம் வீசும். ஒருமாதம்
சாப்பிட வாத பித்த சிலேத்
துமம் என்ற முதோசமும்
நீங்கும்.

இக்காயகல்பம் சித்த வித்தி
யார்களுக்கு ஆன்மீகத்தில்
இருப்பவர்களுக்கு யோகப்
பயிற்சி பயின்று சாதனை
செய்ய நினைப்போர்க்கு
மிக மிகச் சிறந்தது.

போகர் கற்பம் 300 என்ற
நூலில் இதன் மகிமையைப்
பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நான்கு மாதம் சாப்பிட
நாட்டில் நடக்கும் அதிசயங்
களெல்லாம் தெரியுமென்
றும் பத்து மாதங்கள் சாப்பிட
சிவபெருமான் தன் தலையில்
வைத்து முத்தம் கொடுப்பார்
என்றும் ஒரு வருடம் சாப்பிட்டு வர ஆகாயத்தில்
பறக்கும் சக்தி கிடைக்க்கும்
என்றும் சொல்லப்பட்டு
இருக்கிறது.

மேலும் அரை லிட்டர் சிவ
கரந்தைச் சாற்றை ஒரு
லிட்டர் தேங்காய் எண்ணை
யில் பக்குவமாகக் காய்ச்சி
தலைக்குத் தேய்த்து வர
தலையில் ஒரு பேன் கூட
இருகிகாது. செண்ட் மணம்
இருக்கும்.

போகர் 700 என்ற நூலில்
சிவகரந்தை மூலிகையோடு
32 கடைச்சரக்குகள் சேர்நித
லேகியத்திற்கு எல்லாவித
புற்று நோய்கள் தீரும் என்றும் குறிப்பாக 4448 நோய்கள்
தீர ரசபஸ்பம் சேர்த்துக்
கொடுக்கும் பதி சொல்லப்
பட்டு இருக்கிறது.

மேலம் பல சித்தர் நூல்க
ளில் இம்மூமூலிகையைப்
பற்றி சொல்லப்பட்டிருக்கிறத

சிவகரந்தைச் சாற்றில் சுத்தி
செய்த வாலை ரசத்தை
சுருக்கு கொடுத்து கட்டிய
ரசமணியை நாம் தினந்
தோறும் சுடு பாலில் போட்டு
அந்தப் பாலை அருந்திவர
வாழ்நாள் முழுவதும் எந்த
நோயும் லராது.

அவ்வாறு கட்டிய ரசமணி
யுடன் சவகரந்தைச் சாறு
விட்டரைத்து புடம் போட
பஸ்பமாகும். இப்பஸ்பம்
புற்று நோயிலிருந்து எயிட்ஸ்
நோய் வரை எல்லா நோயை
யும் குணமாக்கக் கூடியது
இன்னும் அதிகமாகச்
சொல்லிக் கொண்டே போக
லாம். எல்லாம் நல்லெண்
ணம் உள்ளவர்களுக்கு இம்
மூலிகை கிடைக்கவும்
சித்தியாகவும் செய்பும்.

இலந்தை இலை

இலந்தை இலைக்கு தசை மற்றும் நரம்புகளை சுருங்க செயும் தன்மை உள்ளது . இதற்கு கர்பப்பை கோளாறுகளை சரிசெயும் குணம் உண்டு .இதன் வேர் மற்றும் பட்டை இரண்டும் நல்ல பசி தூண்டியாகவும் உள்ளது. இதன் பழம் மலசிக்கலை சரியாக்கும் சளியை நீக்கும். உடல் வலி நீக்கும் மன அமைதி தந்து மன உளைச்சலை சரியாக்கும் .

இது ஆஸ்துமாவை குணபடுத்தும் . இருதய நோய் சரிசெயும். கண் பார்வை தெளிவாகும். ஜப்பான் சைனா கொரியா போன்ற நாடுகளில் இலந்தை இலையை டீ தயாரித்து குடிக்கின்றனர். பங்களாதேஷ் மேற்க்கு வங்காளம் போன்ற இடத்தில் ஊறுகாய் தயாரித்து உண்பர் . தமிழ்நாடுகளில் உப்பு இலந்தை பழம் மிளகாய் வற்றல், புளி சேர்த்து இடித்து வடையாக தட்டி வெயிலில் காயவைத்து உபயோக்கின்றனர்.

இதில் வைட்டமின் எ, பி2 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு சத்து, கால்சியம் உள்ளது . இதில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது.

ஒரு கை பிடி இலந்தை இலை,பூண்டு 4பல், மிளகு6 சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் மாதவிலக்கான முதல் இரண்டு நாள் உள்ளுக்கு கொடுக்க கர்பப்பை குற்றம் சரியாகி குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இரத்ததை சுத்தம் செயும் குணம் இலந்தைக்கு உண்டு மற்றும் இரத்தில் உள்ள கழிவை அகற்றி இரத்தத்தை சீராக ஓட உதவி செய்கிறது. இது குளிர் காலத்தில் வரும் பழம் ஆகும். இதை சிறிய பேரிட்சை என்பர்.