"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Wednesday, May 11, 2016

பெண்களுக்கு ஏற்படும் எலும்பு அரிப்பு நோய்

பெண்களுக்கு ஏற்படும் எலும்பு அரிப்பு நோய்

எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை.

எலும்புகள் எழும்பு அரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.

பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட எலும்பு அரிப்பு' தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.

இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பு அரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள்.

ஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பு அரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.

பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.

நோய் தடுக்கும் முறைகள்

நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.

உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். இவ்வாறு சரி செய்து கொண்டால் எலும்பு அரிப்பு நோயை தடுக்கலாம்.

உடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா?

உடல் கழிவுகள் வெளியேற வேண்டுமா?

ஆசியாவின் தென் பகுதியில் மட்டுமே வளரும் நன்னாரியில் அனேக பயன்கள் அடங்கியுள்ளன.

இதன் வேரில் இருந்து சார் எடுத்தே நன்னாரி சர்பத் தயாரிக்கப்படுகின்றன. இந்த சர்பத் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் உடனடி புத்துணர்ச்சியையும் தருகிறது.

மேலும் ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மையும் இந்த வேருக்கு உண்டு. இது மட்டுமில்லாமல் சிறுநீர் பிரச்சனையை சரிசெய்வது, உடலில் வேர்வையின் உற்பத்தியை அதிகரிப்பது, மூட்டுவலி, உடல் சூடு, தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் இந்த நன்னாரி ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு பிடி நன்னாரி வேரை எடுத்து இடித்துகொள்ளுங்கள். பின்னர் அதை நீரில் இட்டு கொதிக்க வைத்து ரசம் வைக்க வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் ரசத்தை சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் சிறுநீர் பிரச்சனை தீரும்.

அது போல் நன்னார் வேர்த்தூள், கால் பங்கு தண்ணீர், அரை பங்கு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மணப்பாகு போல் செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில் சிறு அளவில் இதை சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் குறையும்.

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள்.

உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நன்னாரி பால்

நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம்.

காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும்.

உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.


எலும்பு அரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்!



எலும்பு அரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்!

இன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்கொல்லி நோய் 'எலும்பு அரிப்பு நோய்'. நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகையுள்ள இந்தியாவில் நாற்பது சதவீத பெண்கள், மாதவிடாய் நின்றபின் எலும்பு அரிப்பு நோய் ஏற்பட்டு அதனால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்போதே பொதுச் சுகாதார அமைப்புகளும் மருத்துவர்களும் போர்க்கால அடிப்படையில் இந்நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்ளாவிட்டால் நம் அடுத்த தலைமுறையினரில் மூன்றில் ஒரு பங்கினர் ஊனமுற்ற நிலைக்கு தள்ளப்படுவர் என்பது அதிர்ச்சித் தரும் தகவலாகும். இந்நோயினால் எலும்பு முறிவதும் சகஜமாகிவிடும்; எலும்புகள் வலுவிழக்கவும் செய்யும்!

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கும். ஆனால், மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்பு திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக் கொண்டு வருவதில்லை. எலும்புகளில் எலும்பு அரிப்பு ஏற்பட்டு அது பலவீனமாக இருக்கும்போது நாம் பலமாக இருமினால் கூட அது, எலும்பு முறிவை ஏற்படுத்தும். பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்று நோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட 'எலும்பு அரிப்பு நோய்' தான் மிக அதிக அளவில் ஏற்படுகிறது என்பதும் அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரமாகும். இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பு அரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறார். ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் பாதிப்படையக் காரணம், பெண்களுக்கு ஆண்களை விட எலும்புத் தசைகள் குறைவு என்பதுதான். மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலவீனம் அடைவதும் முக்கிய காரணமாகும்.

பெண்களுக்கு 35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும் மொத்த எடையும் ஒரே சீராக இருக்கும். அதன் பிறகு ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும்பு அரிப்பின் துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்றபின் எடையில் பெண்களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகுசுலபமாக ஏற்படுகிறது.

ஆண்களுக்கு இந்த எலும்பு அரிப்பு விகிதம் பெண்களுடையது போல் இல்லை. ஆண்கள் 70 வயதிற்கு மேல்தான் இந்நிலையை எதிர்கொள்கின்றனர். பொதுவாக பெண்களை விட ஆண்களின் எலுமபுத் திசுக்கள் வலிமையாகவும், உறுதியாகவும், அளவில் அதிகமாகவும் உள்ளன. இதற்கு காரணம் அவர்களின் உடற்பயிற்சியோடு கூடிய தினசரி வாழ்க்கை முறையாகும். சதவீத அடிப்படையில் சொல்வதானால் எலும்பு அரிப்பு நோய் 80 சதவீதம் பெண்களுக்கும், 20 சதவீதம் ஆண்களுக்கும் வருகிறது.

நம் எலும்புகள் கல் போன்று உறுதியானது என்று நினைக்கிறார்கள். ஆனால் இது தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் எலும்பு மென்மைப் பட்டு, வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது. இது போன்ற எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயமும், இயல்பு நிலைக்கு வராமல் அவதியுறும் தன்மையும் ஏற்படுகிறது. எலும்பு அரிப்பு முதுகெலும்பில் ஏற்பட்டால் சாதாரணமாகக் குனியும்போதுகூட எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். சாதாரண சுளுக்கும் கூட எலும்பு முறிவுக்கு காரணமாகி விடும். இது தீமைகளுக்கு அடிகோல்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு 'ஈஸ்ட்ரோஜன்' அளவு குறைவதும் எலும்பு அரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருக்குமேயானால் அது எலும்பு அரிப்பு நோயையும், அதன் தொல்லைகளையும் தவிர்க்க உதவும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும் சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமன்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை. கிராமப்புறங்களில் உள்ளப் பெண்கள் பல குழந்தைகளைப் பெறுவதால் மாதவிலக்கு நிற்கும் முன்னே அவர்கள் எலும்பு அரிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு நிற்கும் காலம் வரும் போது 'ஈஸ்ட்ரோஜன்' குறைபாடு ஏற்படுவதால் அதுவும் எலும்பு அரிப்பு நோய்க்கு ஏதுவாகிறது. இக்காலத்தில் பெண்களுக்குச் சுண்ணாம்புச் சத்தும், ஈஸ்ட்ரோஜனும் மருத்துவரின் மேற்பார்வையில் செலுத்தப்பட வேண்டும் என்பது அதி முக்கியமானது.

எலும்பு அரிப்பு நோயின் வெளிப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்களுக்கு நாளையே கூட எலும்பு அரிப்பு நோய் ஏற்பட்டு அதன் காரணமாக எலும்பு முறிவும் ஏற்படலாம். எக்ஸ்ரே கூட, நோய் முற்றிய நிலையில் தான் அதை துல்லியமாக காண்பிக்கும். B.M.T. சோதனைகள் மூலம் எலும்புகளில் உள்ள தாது உப்புகள், எலும்பின் எடை பற்றி துல்லியமாக அறியலாம். ஒரு முறை எலும்பு அரிப்பு நோய் வந்துவிட்டால் மேற்கொண்டு அந்த நோய் தீவிரமடையாமல் தடுக்க சில மருந்துகள் உதவும்.

நோயைத் தடுக்கும் முறை:

நடை பயிற்சி சிறந்த பலனை அளிக்கும். ஆல்கஹால், சிகரெட் பிடிப்பது போன்றவற்றை அறவே நிறுத்த வேண்டும். உணவில் கால்ஷியம், வைட்டமின்-டி சரியான அளவில் இருக்க வேண்டும். பெண்களுக்குப் போதிய உடற்பயிற்சி அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களும், நீண்ட நாள் தடைபட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் அந்த கோளாறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறைவால் பெண்களுக்கு எலும்பு அரிப்பு நோய் ஏற்படுவது போல, TESTOSTERONE அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பு அரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம். ஆண்டுதோறும் இந்நோய் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் அச்சுறுத்தி வருகின்றன. அதிகம் விழிப்புணர்வு இல்லாத இந்த காலத்தில், மக்கள் தொகைப் பெருக்கத்தில், வியாதிகள் பெருக்கத்தில், சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில், சுய பச்சாதாபம் என்ற ஆட்கொல்லி எண்ணத்தில் என்று நாம் இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எலும்பு அரிப்பு நோய்க்கு CAL-CAREACARS, ARNICA, PLATINA போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் உள்ளது.

வலிமையான, ஆரோக்கியமான எதிர்கால இளைய தலைமுறையினரை உருவாக்கும் மாபெரும் பொறுப்பு நம் கைகளில்தான் உள்ளது. எலும்பு அரிப்பு நோயை கண்டறியும் சிகிச்சை முறைகள் தமிழ்நாட்டில் சென்னையிலும், திருச்சியிலும் மட்டுமே உள்ளன. எலும்பு அரிப்பு நோய் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றுங்கள்! வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்!


ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்



ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கேமல்லியா சினசிஸ்(Camellia sinensis) என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகிறது.

பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ.

* ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

* இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு ப்ளாக் டீ உதவுகிறது.

* ப்ளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.

* ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கிறது.

* மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் ப்ளாக் டீயில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமும் ப்ளாக் டீயை தொடர்ந்து பருகுவதன் மூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்குகின்றன.

* ப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது, உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


சுவையான மாம்பழ ஐஸ்க்ரீம

சுவையான மாம்பழ ஐஸ்க்ரீம
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறும். இந்த தித்திக்கும் கனியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

இதில் பல வகையான ரெசிபிக்கள் செய்யலாம், அதில் ஒன்றான மாம்பழ ஐஸ்க்ரீம் இதோ

தேவையான பொருட்கள்

மாம்பழம்- 4

சர்க்கரை- 300 கிராம்

பால் (காய்ச்சி ஆறியது) – 2 ஸ்பூன்

திராட்சை- 2 ஸ்பூன்

செய்முறை

நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சீவி, சதை பாகத்தை துண்டுகளாக்கி சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகிவிடும்.

பின்னர் இதில் பால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். இதை குளிர வைத்து கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி, திராட்சை தூவி பரிமாறினால் ஐஸ்கிரீம் தயார்!!!


கொலஸ்ட்ராலை குறைக்கும் "நட்ஸ் பிரியாணி"


கொலஸ்ட்ராலை குறைக்கும் "நட்ஸ் பிரியாணி"

கொலஸ்ட்ராலை குறைக்க, இதய நோய்களை தடுக்க என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நட்ஸ்.

சிறுவர்களோ, பெரியவர்களோ நொறுக்குதீனிக்கு பதிலாக பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

குறிப்பாக தினமும் 15- 20கிராம் வரை சாப்பிடலாம்.

பாஸ்பரஸ், தாது உப்புக்கள் அதிகம் நிறைந்துள்ள பாதாம் பருப்பை உட்கொண்டால் ஜீரண சக்தியை அதிகரித்து செரிமானத்தை துரிதப்படுத்துகிறது, இதயத்தின் நண்பனான பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

இப்படி பல்வேறான மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் மற்றும் முந்திரியை வைத்து சுவையான பிரியாணி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

முதலில் பாசுமதி அரிசியை (250 கிராம்) 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி (ஒரு சிறிய துண்டு), பூண்டு (8- 10பல்), மிளகாய் தூள்- தனியா தூள் (தேவையான அளவு), சோம்பு- பட்டை- கிராம்பு- ஏலக்காய் (தேவையான அளவு), தேங்காய் துருவல் (2 டீஸ்பூன்) போட்டு அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் (ஒன்று), தக்காளி (இரண்டு) பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

செய்முறை

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.

இதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் இதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை போட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் நெய்யில் பொன்னிறமாக வறுத்த பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து கிளறினால் சுவையான பிரியாணி ரெடி.

பாதாம் மட்டுமின்றி உங்களுக்கு தேவையான நட்ஸ் வகைகளும் சேர்த்து பரிமாறலாம்!!!

ஆப்பிள்

கொலஸ்ட்ராலை குறைக்கும் சத்தான ஆப்பிள் ரசம்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது பழமொழி.

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.

கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயிற்றுப் போக்கு, சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.

செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது.

இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது, சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.

இப்போது ஆப்பிள் ரசம் எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – ஒரு கப்,

துவரம்பருப்பு – அரை கப்,

தக்காளி – கால் கப்,

கடுகு, சீரகம் – தலா அரைத்தேக்கரண்டி

மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் துவரம் பருப்பு 2 தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-2, தனியா 4 தேக்கரண்டி ஆகியவற்றை வாணலியில் போட்டு வறுத்தி பின்னர் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

ஆப்பிள், தக்காளியை பொடியாக நறுக்கவும், மீதமுள்ள துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளை வேகவிடவும்.

இதில் தக்காளி, மசித்த பருப்பு, அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கொதிவந்ததும் இறக்கவும்.

இதில் கடுகு, சீரகம் தாளித்து ஊற்றிக் கொள்ளவும், பின்னர் கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான ரசம் ரெடி.

தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா?

தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா?
சிறந்த அருமருந்தான தயிர், பாலை விட வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் சக்தி கொண்டது.

உதாரணத்திற்கு பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

மேலும் நன்மை தரும் பக்டீரியாக்களை உருவாக்குவதால், ஜீரணி சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.

இதன் மற்ற பலன்கள்,

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.
வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

தினமும் கீரை சாப்பிடுங்கள்

தினமும் கீரை சாப்பிடுங்கள்
அன்றாடம் ஏதேனும் ஒருவகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதனால், எந்தெந்த கீரையில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்துசாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்புஆகியவை குணமாகும்.

கீரைகளில்மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பைசேர்த்துச் செய்ய வேண்டும். இதுசுவையைக் கூட்டுவதோடு, உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.
பாலக்கீரையில்அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்புசேர்த்து லேசாக வேக வைத்து,மிக்ஸியில் அரைத்து… கடுகு, காய்ந்த மிளகாய்தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாகவைக்கும்.

வயிற்றில்இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச்செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு.லேசாக வேக வைத்து பொரியல்செய்துகூட சாப்பிடலாம்.

மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறிவெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.
இரவுவேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.

சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு,தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிதுபருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… பித்தம்,நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம்குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம்.கீரையை நிறம் மாறாமல் நன்றாகவதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டுபல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும்.

பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச்சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும்அப்படியே உடல் சேரும்.

சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாதம்!



சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாதம்!

அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை.

குழந்தைகள் பீட்ரூட்டை சாப்பிட மறுத்தால், அதனை கொண்டு விதவிதமான ரெசிபிக்கள் செய்து கொடுங்கள்.

பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்

பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 சதவீதம், புரதம் 17, கொழுப்பு 0.1, தாதுக்கள் 0.8, நார்ச்சத்து 0.9, கார்போஹைட்ரேட் 0.8 சதவீதமும், கால்சியம் 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் 5.5, இரும்புச்சத்து 10, விட்டமின் 'சி' 10 மில்லி கிராமும் உள்ளன.

மருத்துவ பயன்கள்

பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். மேலும் ரத்தத்தில் கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்யும்.

அதோடு, விட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், அயோடின், தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் எனப்படும் குடற்புண் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் வீக்கமாக மாறாமல் விரைவில் குணமடையும்.

பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும்.
பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சைச் சாறில் தோய்த்து உண்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

பீட்ரூட் சாதம்

வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாயைபொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகுபோட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின்பு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டைநன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும்போது தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.

பின்னர் கறிவேப்பிலை சேர்த்துபிரட்டி அடுப்பை அணைக்கவும்.

பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதேஅதில் சிறிது சிறிதாக சாதத்தைசேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

எந்த பழத்தில் என்ன உள்ளது



எந்த பழத்தில் என்ன உள்ளது? தெரிந்து கொள்ளுங்கள்

ஆரோக்கிய வாழ்க்கைக்கு அன்றாடம் ஏதேனும் ஒரு வகை பழம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எனவே பழங்களின் பயன் அறிந்த சாப்பிடுங்கள்.

அவகேடா

கெட்ட கொழுப்பை குறைத்து நல்லகொழுப்பை அதிகரிக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்வைக்கும்.

லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும்.
வாய் துர்நாற்றத்தை போக்கும்.

இதயம் தொடர்பான நோய்களை தடுக்கும்.

வாழைப்பழம்

உடனடி ஆற்றல் கிடைக்கும்.

விட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது.
மன அழுத்தம் நீங்கும்.

அல்சரை தடுக்கும்.

மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பேரிக்காய்

சிறுநீரக கோளாறுகளை சீர்செய்யும்.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.
எலும்புகளை வலுவாக்கும்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில்இருந்து பாதுகாக்கும்.
நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைபோக்கும்.

மாம்பழம்

உடலில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கிறது.
செரிமான சக்தியை மேம்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்களுக்குநல்லது.

திராட்சைப்பழம்

பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைகுறைக்கும்.
குடல் புற்றுநோய், பிராஸ்டேட்புற்றுநோயை தடுக்கும்.
இதய பாதிப்பு, ரத்தக்குழாய் பிரச்சனைகளைதடுக்கும்.
வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுநோய்களைதடுக்கும்.
சிறுநீரகத்தின் செயல்திறன் மேம்படும்.

 
 

 


 

 

 


நண்டு வறுவல் சாப்பிடுங்கள்:

நண்டு வறுவல் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமானது.

நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது.

எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நண்டில் உள்ள புரோட்டீன் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது.

எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது விட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்.

நண்டில் பல்வேறு வகையான ரெசிப்பிக்கல்செய்யலாம், இருப்பினும் இன்று நண்டு வறுவல் செய்து சாப்பிடுங்கள்.

நண்டை நன்றாக கழுவி சுத்தம்செய்த பிறகு நண்டுடன் மிளகாய்த்தூள், மிளகுத் தூள், மஞ்சள்தூள், பூண்டு விழுது, தேவையானஉப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிசறிஊற வைக்கவும்.

அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து ஒருமேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும்மசாலாவுடன் சேர்த்து பிரட்டி ஊற வைத்திருக்கும்நண்டை போட்டு முன்னும் பின்னுமாகபிரட்டு, மூடி போட்டு இரண்டுபக்கமும் நன்றாக வேகும் வரைவதக்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

பாசிப்பயறு

பாசிப்பயறு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்

அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைட்ரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். காய்ச்சல் குணமாகும்.

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம்.

அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?



பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது.

குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.

பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் இதனை சாப்பிடலாம்.

மேலும், இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

மஞ்சை வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது, ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்பதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், இதில் விட்டமின் B6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது, மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் B6 அவசியமான ஒன்றாகும்.

மேலும், விட்டமின் B6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்.