"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, July 18, 2016

விந்து உற்பத்திக்கு | Sperms

விந்து உற்பத்திக்கு | Sperms

ஆண்களின் விந்து செழிக்க கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்:
1, வில்வ பழ சதையை கற்கண்டு கூட்டி தினமும் காலையில் உண்டு வர விந்துவை அதிகபடுத்தும்.
வில்வப் பழம் பல நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதை கொண்டு வந்து ஓட்டை நீக்கி விட்டு உள்ளிருக்கும் காய்ந்த சதையை மட்டு எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் கற்கண்டு தூளையும் நன்றாக சேர்த்து புட்டியில் பத்திரபடுத்தி கொள்ளவும். இதை தினமும் உபயோகித்து வரலாம்.
2, அஸ்வகந்தா பொடியை (ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்) தினமும் பாலில் தேன் அல்லது கற்கண்டு கலந்து அருந்தி வர விந்து உற்பத்தி அதிகமாகும். நாடி நரம்புகள் பலப்படும்.
3,தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது வலுப்பெறும்.
4,அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர விந்து எண்ணிக்கை கூடும்.
5,ஓரிதழ் தாமரை பௌடர் ஒரு ஸ்பூன் வீதம் இரண்டு நேரம் பசும் பாலில் கற்கண்டு  அல்லது தேன் சேர்த்து சாப்பிட விந்து உற்பத்தி அதிமாகும். அதுமட்டும் அல்லாமல் ஆண்மைசக்தி அதிகப்படும்.
6, நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி என்ற வித்தை 100 கிராம் அளவில் வாங்கி வந்து தூய்மை செய்து தினமும் ஒரு ஸ்பூன் அல்லது 2 இரண்டு ஸ்பூன் உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகி விந்து இறுகி வெண்ணெய் போலாகும். இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யகூடாது , சவ்வு போலாகிவிடும்.
ஆண்மை சக்திக்கு:(வெளிப் பிரயோகம்)
ஜாதி மல்லியின் இலைகளை நன்கு அரைத்து, அந்த விழுதை தளர்ந்து போன ஆண் குறியின் மேலும், தொடை இடுக்குகளிலும். வைத்து கட்டி வர இளமை உணர்சிகள் திரும்பும்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் | Home Remedies For Constipation


  • அகத்தி கீரை வாரம் ஒரு நாள் சாப்பிட தீரும்.
  • முளைக் கீரை அடிக்கடி சாப்பிட மலச்சிக்கல் வராது.
  • பப்பாளிப் பழம் ஒரு 100 கிராம் அளவு தினமும் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட தீரும்.
  • ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணம், வைச்னாவர சூரணம்,அவிபத்தி சூரணம் போன்றவை மருத்துவரின் அறிவுரைப்படி தினமும் எடுத்து கொண்டால் நல்லது.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதல் |Home Remedies For WhiteDischarge


இந்த நோய் பொதுவாக பெண்களுக்கே ஏற்ப்படும். ஆனால் ஆண்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. கீழ்காணும் முறைகள் இரண்டு பேர்க்கும் பொருந்தும்.
  • புளியிளைச்சாறும், நல்லெண்ணையும் சமன் கூட்டிக்காய்ச்சி வடித்து, காலை மாலை அருந்த நாளான வெள்ளை,நீர்சுருக்கு தீரும்.
  • நல்ல நயம் சந்தன பொடியும் , கசகசாவும் சமமாக சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவாக, பாலுடன் குடிக்க வெள்ளை, வயிற்றுகடுப்பு, சிறுநீர் துர்நாற்றம் இவை நீங்கும்.
  • பொரித்த படிகாரவும், வால்மிளகும் சமன் கூட்டிய சூரணம் 5-கி வீதம் தேனுடன் தர வெள்ளை தீரும்.
  • அருகம்புல்லை வேருடன் அரைத்து சரியிடை வெண்ணையில் சேர்த்து, 10-கி அளவில் உட்கொண்டு வர உட்சூடு. தளர்ச்சி, வெள்ளை நீங்கும்.
  • நன்றாக கழுவிய சோற்றுக்கற்றாழை சதை-50-கி,வெந்தயம்-10-கி, சீரகம்-10-கி கலந்து ஊறியபின் எடுத்து 2 வேளை சாப்பிடவும். தொடர்ந்து உண்ண வெள்ளை

பித்தம் குறைய

பித்தம் குறைய | Home Remedies For Pitta

  • இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து   41  நாட்கள் சாப்பிட பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.
  • இஞ்சி சாறு, வெங்காய சாறு தென் கலந்து குடிக்க பித்த மயக்கம் தீரும்.
  • ரோஜா பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட பித்தம் தணியும்.
  • விளாம் பழம் கிடைக்கும் காலத்தில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
  • பனங்கிழங்கு சாப்பிட பித்தம் நீங்கி உடல் பலம் பெருகும்.
  • எலுமிச்சம் இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்த பித்த சூடு தணியும்.
 

சாதிபத்திரி

சாதிபத்திரி:Myristica Fragrans

இந்தியாவில் பல இடங்களிலும் நட்டு வளர்க்கப்படும் மரமாகும். இதில் வளரும் காயை ஜாதிக்காய் என்றும் , காயின் சுற்றிலும் உள்ள தோட்டை ஜாதிபத்திரி என்று கூறுவர். இரண்டும் மருத்துவ குணம் உடையது. கபம், வாதம், வயிற்று மந்தம், வயிற்று வலி ஆகியவை தீரும். சுக்ல நஷ்டம், அக்னி மாந்தம் ஆகியவை தீரும்.இதை தேங்காய் பாலில் அரைத்து சிறிது வெள்ளமும், அரிசி மாவும் சேர்த்து அந்த தேங்காய் பாலை சிறிது வேகவைத்து சாப்பிட மூத்திரத்துடன் விந்து வெளியேறுவது குணமாகும்.

நெருஞ்சில்:

நெருஞ்சில்:Tribulus Terrestris


இதனால் சொட்டு மூத்திரம், சுரவெப்பம், கல்லடைப்பு, நீரடைப்பு, நீரெரிவு, வெள்ளை, முக்குற்றம், நீர்வேட்கை, முடக்குவாயு, சதையடைப்பு, உடலெரிவு,அழல்,தாது நட்டம், இருதய வீக்கம், காமாலை, மூத்திரகடுப்பு முதலியவை தீரும். உடல் வலிமை பெற்று, ஆண்மை பெருகும்