"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, May 22, 2016

ஆண்மை -


ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்

தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.


சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.

இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.

பூனைக்காலி விதை
இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.

அமுக்கராக் கிழங்கு
அசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.

பூமிச்சக்கரைக் கிழங்கு
உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் , சுரம் , மூலம் போகும் உடல் பூரிக்கும்.

விஷ்ணுகிராந்தி
விஷ்ணு கிராந்தி, தேகத்தில் உள்ள பல பிணிகளை நீக்கும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.விஷ்ணு கிராந்தியை எடுத்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண, எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்து போன அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் முற் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை மிக நீண்ட தொலைவு வரை தெரியும்.
மெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கறுத்து மின்னும்.

சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.இவ்வளவு அற்புத சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.

நிலப்பனங்கிழங்கு
நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் , சுரம் , மூலம் இவைகள் நீங்கும் .

ஒரிதழ்த்தாமரை

ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.
ஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா!


நெருஞ்சில் விதை
நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .

நீர்முள்ளி விதை
நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.

சாதிக்காய்
தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும்.


இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.


வெறும் ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.

ஜாதிக்காயின்

உடல் நலத்தை பாத்துகாக்கும் ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்
ஜாதிக்காய் என்பது ஒரு காரமான, சூடான மற்றும் இனிப்பு சுவை கொண்ட மசாலா பொருளாகும். இது உங்களுடைய சாப்பாட்டிற்கு சுவை, மணத்தை மட்டும் கொடுப்பதில்லை அதோடு உடல் நலத்திற்கு பல வழிகளில் ஊட்டத்தையும் அளிக்கிறது.
* ஜாதிக்காயில் உள்ள எண்ணெய் மூட்டு வலி குணமாக உதவுகிறது. மேலும் வலி, வீக்கம் உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* ஜாதிக்காயில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளது. இது நம்முடைய உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
* ஜாதிக்காயை தூளாக்கி அதனுடன் தண்ணீர் அல்லது தேன் கலந்து பேஸ்டாக செய்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். இந்த பேஸ்டை தொடர்ந்து உபயோகித்து வந்தால் உங்கள் சருமம் தூய்மையாகவும், பருக்கள் மறைந்தும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.
* பற்களை பாதுகாக்க இது மிகவும் உதவுகிறது. இதில் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி உள்ளது. அதனால் இது பற்பசைகளில் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
* ஜாதிக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு மருத்துவ பொருளாக பயன்படுகிறது.

சிறுநீர் பிரிய

சிறுநீர் பிரிய
* முருங்கைக்கீரை (ஒரு கைப்பிடி), பார்லி (20 கிராம்), சீரகம் (கால் ஸ்பூன்), மஞ்சள் (சிறிதளவு) ஆகியவற்றை ஒன்றாக்கி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
* புதினா இலையை ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நன்கு சிறுநீர் பிரியும்.
* வெங்காயத்தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியைப் பொடியாக்கி சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர் எரிச்சல், நீரடைப்பு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* வெந்தயக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கி சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் சரியாகும்.
* முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை கலந்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு உடையும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.
* கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* முடக்கத்தான் கீரையுடன் சிறிது சதகுப்பையைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
* பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டும் குணமாகும்.
* சதகுப்பைக் கீரையைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். கால் வீக்கமும் குணமாகும்.