"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, March 28, 2016

வெங்காயம், பூண்டு, தேன்

வெங்காயம், பூண்டு, தேன் !!!

உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மூல முதற் காரணம்
நம்முடைய இயற்கை விதி மீறல் செயல்களால்
, நம் செல்களுக்கு உள்ளும் , வெளியேயும் தேங்கும் கழிவுகளே நோய்களுக்கு மூல காரணம்

  • 🌀 இந்த கழிவுகளை வெளியேற்ற

சின்ன வெங்காயம் 1
பூண்டு 1 பல் சாறு எடுத்து
1 டம்ளர் சுடு நீரில் கலந்து
1 ஸ்பூன் தேன் சேர்த்து
காலை மாலை அருந்தினால் செல்களுக்கு உள்ளே உள்ள கழிவுகளும் வெளியேறும்.

🌀 நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மிக எளிய குறிப்பு
இரவு ஒரு மண் பாணையில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அடுப்பை அனைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி சீரகம் போட்டு மூடி விட வேண்டும்.
காலையில் அந்த தண்ணீரை உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடித்து வரவும்.

உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் படிப் படியாக வெளியேறி விடும்.

செல்களில் இருந்து கழிவு வெளியேறினால்
அந்த செல் தன் வேலையை சரியாக செய்யும்
செல் சரியாக உள்ள போது, அதனால் உருவாக்கப்பட்ட திசு சரியாக இயங்கும்

திசு சரியாக இயங்கினால், அதனால் உருவாக்கப்பட்ட உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும்.

உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும் போது மனித உடலுக்கு எந்த நோயும் ஏற்படாது.

தகவல் நன்றி :-நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்

இரத்தக் கொதிப்பு

இரத்தக் கொதிப்பு எனப் படும் பிளாட் பிரசர் நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருந்து

சீந்தில் கொடி ...பத்து கிராம் ( சீந்தில் கொடியை மட்டும் இலை இல்லாமல் தண்டு போதும் -- பச்சையாக எடுத்து வந்து அதை இடித்துக் கொள்ளவுவும்)
அதி மதுரம் ...இரண்டு துண்டுகள்
சோம்பு ... கால் தேக்கரண்டி
மல்லித் தழை .......ஐந்து கிராம்
நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியாக ஒவ்வொன்றும் கொதித்தபின் வரிசையாகப் போட்டு ஐம்பது மில்லி தீநீராக சுண்டியபின் இறக்கி வடிகட்டி தினமும் காலை உணவுக்குப் பின் அரைமணி நேரம் கழித்துக் குடித்துவர இரத்த அழுத்தம் நோய் படிப் படியாகக் கட்டுக்குள் வரும் நோய் கட்டுக்குள் வந்ததும் மருந்து குடிப்பதை நிறுத்து விடலாம்
முடிந்த வரை வீட்டில் சீந்தில் கொடியை வளர்த்து வாருங்கள் அனைத்து உள் உறுப்பு நோய்களுக்கும் சீந்தில் கொடி ஒரு அற்புதமான நிவாரணி ஆகும்

 
மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீந்தில் கொடி!!!

சிறிய மஞ்சள் நிறப் பூக்களை இது பெற்றிருக்கும். சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பழங்கள் பவழ நிறமுடையதாகவும் இருக்கும். பெரிய மரங்களைப் பற்றிப் படரக்க கூடிய இச்சீந்தில் கொடி வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலினுடைய இலை, தண்டு, வேர் அத்துனையும் மருந்தாகிப் பயன் தரக்கூடியது. சீந்தில் உடலுக்கு மிக வலிவைத் தரக்கூடியது.

இது தாது விருத்தியை உண்டாக்கக் கூடியது. சீந்தில் கொடி தீநீர் முறைசுரம் (விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் சுரம்), சோர்வு, செரியாமை, வளிநோய்கள் என்னும் வாத மிகுதியால் ஏற்பட்ட நோய்கள், சிரந்திப் புண்கள் ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. வீக்கத்தை கரைக்கக் கூடியது. வலியைப் போக்க கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடியது. கடுப்பு தரும் விட்டு விட்டு வருகின்ற வலியை விரட்டக் கூடியது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது.

கல்லீரலைப் பாதுகாக்கக் கூடியது. அல்லது பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. உள்ளலை ஓட்டக் கூடியது. வெப்பத்தை தந்து உள்ளுறுப்புகளைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறு களை வேரறுக்கக் கூடியது. பலம் தரவல்லது. சிறுநீரப் பெருக்கியாகச் செயல்படுவது, சீந்தில் கொடியின் சாறு கடுமையான காய்ச்சலின் போது காயச்சலைத் தணிக்கப் பயன்படுகிறது. சீந்தில் கொடி தீ நீர்வாத சுரத்தையும் பித்த சுரத்தையும் தணிக்கக் கூடியது.

இதன் மாவு (சீந்தில் கொடியினின்று தயாரிக்கப்படும் சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேறும் அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. மேலும் வயிற்றுப் போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்த வல்லது. சீந்தில் கொடியின் தண்டுப் பகுதியில் ஆல்கலாய்ட்ஸ் என்னும் வேதிப்பொருட்களான பெர்பெரின், கசப்புச் சுவைகள் எனப்படும் கொலும்பின், சேஸ்மான்தின், பால்மரின் மற்றும் டினோஸ்போரான், டினோஸ்போரிக் ஆசிட் மற்றும் டினோஸ்போரால் ஆகியன அடங்கியுள்ளன.

நவீன வலி நீக்கும் மருந்தான சோடியம் சாலிசிலேட் என்னும் மருந்தில் ஐந்தில் ஒரு பங்கு வீரியத்தை சீந்தில் பெற்றிருக்கிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக் கின்றன. சீந்தில் கொடியினின்று எடுக்கப்படும் சத்துவம் இன்று நவீன மருத்துவமும் கண்டு அஞ்சுகின்ற ஈகாலி என்னும் எஸ்செரிச்சியா சாலி என்று சொல்லப் பெறுகின்ற நுண்கிருமிகளையும் கொன்று வெளியேற்றும் வல்லமையுள்ளது. இந்த ஈகாலி என்னும் கிருமி இரையறைப் பகுதியில் புண்களை ஏற்படுத்துவதோடு வயிற்றில் தாங்கவொண்ணாத வலியையும், அடிக்கடி வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தி உடலை மெலியச் செய்வதோடு பெருந்துன்பத்துக்கு ஆட்படுத்துகிறது.

இது மட்டுமின்றி காசநோய் என்று சொல்லப் பெறும் என்புறுக்கி நோய்க்குக் காரணமாக அமை கின்ற மைக்கோபாக்டீரியம் ட்யூபர் குளோசிஸ் என்னும் கிருமிகளையும் கொல்லும் திறன் வாய்ந்தது என்பதும் நவீன ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீந்தில் சத்துவத்தை உள்மருந்தாக கொடுத்து சோதித்துப் பார்த்ததில் ரத்தத்தில் கலந்து இருக்கும் சர்க்கரையின் அளவும் சிறுநீரில் கலந்து வெளியாகும் சர்க்கரையின் அளவும், ரத்தத்தில் பரவியுள்ள கொழுப்புச்சத்தின் அளவும் கணிசமான அளவுக்கு குறைந்து வந்ததும் தெரிகின்றது.

சீந்தில் மருந்தாவது எப்படி?

சீந்தில் கொடியினின்று இலைகளைப் பிரித்து சுத்திகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரண்டு வேளையும் நீரோடு குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சீந்தில் தண்டுகளைக் காயவைத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி பொடியோடு நான்கு டம்ளர் நீர்விட்டு அடுப்பிலிட்டுக் காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சுண்டும்படி எடுத்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வயிற்று பொருமல், செரிமானமின்மை, காய்ச்சல் ஆகிய துன்பங்கள் விலகும்.

நல்ல குணம் கிடைக்கின்ற வரையில் தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். சீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைத்து மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பிலியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருக்க நீர் தெளிந்துவரும் அந்த தெளிந்த நீரை இருத்தி விட்டு வேறு புதிதாக நீர் சேர்த்து கலக்கி வெயிலில் இட்டு சுண்ட வைக்க வேண்டும். இப்படிப் பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும்.

இது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இதை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடுஞ்சுரத்துக்குப் பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம் அல்லது நம்மை துன்புறுத்தும் வலி, காமாலை, இருமல், மூர்ச்சை, வாந்தி, கோழைக்கட்டு, ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு தருவதாக அமையும். சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி இளஞ்சுட்டோடு புண்களின் மேல் போட்டு வர வீக்கம் கரைந்து வலியும் குறைவதோடு புண்களும் ஆறி விடும்.

சீந்தில் பற்பாடகம், சந்தனம், விலமிச்சு, சுக்கு, வெட்டிவேர், சிற்றாமுட்டி, கோரைக்கிழங்கு ஆகியவற்றைக் சூரணமாக சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவு சூரணத்தை எடுத்து தீநீராக்கி கொடுக்க பித்தத்தால் ஏற்பட்ட காய்ச்சல் தணியும். சீந்தில் கொடியை நசுக்கி 35 கிராம் அளவு எடுத்துக் குளிர்ந்த நீரில் இட்டு இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு ஊறிய பின் வடிகட்டி சிறிது இலவங்கப்பட்டை அல்லது இலவங்கப் பொடி சேர்த்து 50 மி.லி. வீதம் தினம் இரண்டு அல்லது 3 முறைகள் குடித்து வர காய்ச்சல், செரியாமை, மஞ்சள் காமாலை, ஈரல் வீக்கம், ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவு ஆகியன கட்டுக்குள் அடங்கி வரும்.

சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்து அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர், ரோஜாப்பூ ஆகியன வகைக்கு 10 கிராம் அளவு சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஓரிரு மணி நேரம் ஊற வைத்து பிறகு வடிகட்டி வைத்துக் கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினம் காலை வேளையில் கொடுத்து வர முறைக் காய்ச்சல், வயிற்று உப்பிசம், நீண்ட நாட்பட்ட செரியாமை, வயிற்றைப் பாதித்து துன்பம் செய்கின்ற பல்வேறு நோய்களும் விலகிப் போகும்.

சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து 1 லிட்டர் நீர்விட்டு காய்ச்சி 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினம் இருவேளை 50 மி.லி. குடித்து வர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். சீந்தில் எந்த சிரமமுன்றி வளரக்கூடியது. வீடுகளில் கூட பயிரிட்டு படரவிட்டு பயன்படுத்த இயலும்.

சீந்தில் கொடி

சீந்தில் கொடி!!!

மூலிகைகளின் பயன்களை இன்று உலகம் உணரத் தொடங்கிவிட்டது. மூலிகைகளின் ஆராய்ச்சி இன்று எங்குபார்த்தாலும் நடைபெறுகிறது. மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் இந்தியா மூலிகை ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில்தான் உள்ளது. ஆனால் சீனாவோ மூலிகை ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் தவப்பயனால் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து மக்களுக்கு மருத்துவத்தை செய்து வந்தனர். இடைப்பட்ட காலத்தில் இந்த மூலிகைகளின் பயன்களை அறியாமல் மக்கள் ஆங்கில மருத்துவம் நோக்கி சென்றதால் மூலிகைகளைப் பற்றி ஒரு சந்ததியினர் அறிய முடியாமல் போனது. ஆனால் மேலை நாட்டினர் இந்த மூலிகைகளின் மருத்துவக் குணங்களை நம் ஏட்டுச் சுவடிகள் மூலம் கண்டறிந்து பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது காப்புரிமையையும் பெற்றுள்ளனர்.

இப்படி அருகில் இருந்தும் அறியப்படாத மகத்துவமாய் மறைந்து கிடக்கும் மூலிகைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் இம்மாத மூலிகை என்ற பகுதியில் அறிந்துவருகிறோம். இந்த மாதம் எங்கும் நிறைந்து காணப்படும் அமிர்தவல்லி என்ற சீந்திலின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொள்வோம்.

இது கொடியினத்தைச் சேர்ந்தது. மலை அடிவாரங்களில் அதிகம் காணப்படும். இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.

இது அமிர்தவல்லி, சோமவல்லி,அமிர்தை, அமிர்தக்கொடி, குண்டலி என பல பெயர்களில் வழங்கப்படுகின்றது.

கூச்ட்டிடூ - குஞுஞுணtடடிடூ டுணிஞீடி
உணஞ்டூடிண்ட - எதடூச்ணஞிடச் tடிணண்ணீணிணூச்
கூஞுடூதஞ்த - கூடிணீணீச்-tஞுஞுஞ்ச்
Mச்டூச்தூச்டூச்ட் - அட்ணூடிtடத
குச்ணண்டுணூடிt - அட்டிணூtடச்
ஆணிtச்ணடிஞிச்டூ Nச்ட்ஞு - கூடிணணிண்ணீணிணூச் ஞிணிணூஞீடிஞூணிடூடிச்
சீந்தில் மூன்று வகைப்படும்.

1) சீந்தில், 2) பொற்சீந்தில், 3) பேய்ச்சீந்தில்

இதில் பேய்ச்சீந்தில் என்பது ஆகாசக் கருடன் அல்லது கொல்லன் கோவை எனப்படுகின்றது.

ஆறாத புண்கள் ஆற

இதன் இலைகளை அனலில் வாட்டி அதன் சாற்றை புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். சீந்திலின் முற்றிய கொடியே அதிக மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது.

புகலுஞ் சீந்திற் பற்படகம் பூசுஞ் சந்தம் விலாமிச்சந்
திகழ்வேர்க் கொம்பு மிருவேலி சிற்றாமுட்டியுடன் காசுந்
தகவே யொவ்வொன் றோர்கழஞ்சு தண்ணீ ரிரண்டு நாழியிட்டுச்
சுகமாய்க் காய்ச்சிக் கொடுத்தற்காற் சேரும் பித்தஞ் சுரந்தானே
(குணபாடம்)

சீந்தில் கொடி - 10 கிராம்

பொடி செய்தது பற்படகம் - 10 கிராம்

சந்தனம் - 10 கிராம்

விலாமிச்சவேர் - 10 கிராம்

சுக்கு - 10 கிராம்

வெட்டிவேர் - 10 கிராம்

சிற்றாமுட்டி - 10 கிராம்

கோரைக் கிழங்கு - 10 கிராம்

இவற்றை எடுத்து அரைத்து 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு சீந்தில் கொடி அருமருந்தாகும். இந்த மதுமேக நோய்க்கு அப்போதே தேரையர் தன் வெண்பாவில்

மேகமெனு மாதபத்தால் வெந்த புயிர்ப்பயிரைத்
தாக மடங்கத் தணித்தலால் - ஆகம்
அமர ரெனலிருக்க வாதரித்த லாலே
அமுதவல்லி சஞ்சீவி யாம்.

சீந்தில் கொடியை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தினமும் காலை மாலை அருந்திவந்தால் உடலில் உள்ள சர்க்கரை சீராகி இந்நோயின் தாக்கம் குறையும்.

சீந்தில் கொடி - 34 கிராம்

கொத்துமல்லி - 4 கிராம்

அதிமதுரம் - 4 கிராம்

சோம்பு - 4 கிராம்

பன்னீர் பூ - 4 கிராம்

எடுத்து 300 மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இரண்டு மணி நேரம் ஆறவைத்து பின்பு வடிகட்டி நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும் 25 மிலி முதல் 30 மிலி வீதம் அருந்தி வந்தால் உப்பிசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

சீந்தில் கொடியைக் கொண்டு சீந்தில் எண்ணெய், சீந்தில் நெய் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவகையான உப்புக்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர்.

குட்டம் பதினெட்டும் குஞ்சரத்தின் றோற்சொறியுங்
கட்டம் பெரிதாங் கயநோயும் - பட்டவுடன்
செந்தீமுன் பஞ்செனவே சீத்தலுப் போடளைத்த
தந்தா வளநீர்க்குச் சாம்
(தேரன் வெண்பா)

இந்த சீந்தில் சர்க்கரையானது பதினொரு வகையான நோய்களை குணப்படுத்தும். யானைத் தோல் போன்ற சொறியும், கொடிய கபப் பிணிகளையும் போக்கும் குணமுண்டு.

பசியைத் தூண்ட

சீந்திற் கிழங்கருந்தக் தீபனமாம் மேகவகை
போந்தவுதி ரப்பிதம் பொஞ்குசுர-மாந்தம்
அதிசாரம் வெய்யகணம் ஆம்பலநோ யோடே
கதிவிடமுங் கெட்டு விடுங் காண்
(அகத்தியர் குணபாடம்)

சீந்தில் கிழங்கை பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இரத்த சோகையைப் போக்கும். சுரம், மாந்தம் போன்றவற்றை நீக்கும்.

சீந்தில் முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும். கிழங்கு, மேகம், காய்ச்சல், கழிச்சல், மாந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றைக் குணமாக்கும்.
இலை, தண்டு உடல் பலத்தை அதிகரிக்கும். சிறுநீர் பெருக்கும். முறைக் காய்ச்சல் தீர்க்கும். அஜீரணம் குணமாகும்; வாதநோய்கள், கிரந்தி முதலியவை கட்டுப்படும்; காமம் பெருகும்.
பல்லாண்டு வாழும் ஏறு கொடி வகையைச் சார்ந்தது. கிளிப்பச்சை நிறமான இதய வடிவ இலைகள், 5-10 செ.மீ. வரை நீளமானவை, தெளிவான 7-9 நரம்புகளுடன் இருக்கும். தண்டு பச்சையானது, சாறு நிறைந்தது, தக்கையான தோலால் மூடப்பட்டிருக்கும்.
தண்டும், கிளைகளும் வெண்மையான சுரப்பிப் புள்ளிகளுடன் காணப்படும். கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கும் பூக்கள், மஞ்சளானவை, கொத்தானவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை.
காய்கள் உருண்டையானவை, கொத்தானவை, பச்சையானவை. பழங்கள் சிவப்பானவை, பட்டாணி அளவில் காணப்படும். இந்தியாவின் வெப்பமண்டலப் பிரதேசம் முழுவதும் வளர்கின்றது. காடுகளிலும் வேலியோர மரங்களிலும் படர்ந்து காணப்படும்.
பழங்கால இலக்கிய நூல்களில் பொற்சீந்தில் கொடி என்கிற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி, சஞ்சீவி, ஆகாசவல்லி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டுகள் அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.
சாதாரண சளியுடன் வரும் காய்ச்சலுக்கு ஒரு அடி நீளமான சீந்தில் தண்டிலிருந்து, அதன் மேல் தோலை அகற்றி, இடித்து, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் அளவாக இரசம் செய்யவும். ஒரு கோப்பை அளவு இந்த இரசத்தைப் பருக வேண்டும். இதேபோல் மூன்று நாட்களுக்கு, தினம் மூன்று வேளைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
நோயால் இளைத்த உடல் உறுதியடைய முதிர்ந்த கொடிகளை, தோல் நீக்கி, உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை வேளைகளில், ½ தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் பாலுடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும்.
நாவறட்சி, தாகம் குணமாக மேல் தோல் நீக்கிய சீந்தில் தண்டு, நெற்பொரி, வகைக்கு 50 கிராம், நசுக்கி, ஒரு லிட்டர் நீரில் இட்டு, ¼ லிட்டராக சுண்டக்காய்ச்சி, வேளைக்கு 50 மி.லி. வீதம், 4 வேளைகள் குடிக்க வேண்டும்.
குறிப்பு:
ஈரல் வலுவடையும் உடலின் சக்தி அதிகரிக்கவும், தாய்ப்பாலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும் இதே இரசத்தை 7 லிருந்து 21 நாட்கள் வரை தினம் இரு வேளைகள் 30 மி.லி. அளவு பருகி வரலாம்.
சீந்தில் சர்க்கரை:
முதிர்ந்த, முற்றிய கொடியை, மேல் தோலை உரித்து, நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக இடித்து, தேவையான அளவு தூய்மையான நீரில் கரைத்து, 4 மணி நேரம் வைத்திருந்து நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டியது போக சிறிதளவு மாவு போன்ற பொருள் பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும்.
மீண்டும் மீண்டும் நீர்விட்டு இதனைத் தெளியவைத்து, வடிகட்டி எடுத்து நிழலில் உலர்த்தினால் வெண்மையான தூள் கிடைக்கும். இதுவே எளிய முறையில் தயாரிக்கப்பட்ட சீந்தில் சர்க்கரை ஆகும்.
இதனை, ஒரு கிராம் அளவில் உள்ளுக்குச் சாப்பிட, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கை நீக்கும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.
வாய்ப்புண். உதடுவெடிப்பு (ORAL ULCER) !!!

1.கோவைக்காயில் சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும்
2.சீரகத்தை சம அளவு நாட்டுசர்க்கரையுடன் பொடித்து காலைமாலை 1தேக்கரண்டி சாப்பிட உதடுவெடிப்பு,உதட்டுப்புண் குணமாகும்
3.தவசுமுருங்கை இலைகளை மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
4.கொப்பரைத்தேங்காயை துருவல் அரை கோப்பையுடன் அரை தேக்கரண்டி கசகசா சேர்த்தரைத்து துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
5.திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்
6.1பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
7.நெல்லிபட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணம் ஆகும்
8.மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்
9.மணத்தக்காளியிலைகளை மென்று சாறை 1நாளைக்கு 6முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்
10.மருதாணிஇலைகளை 1மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய்கொப்புளிக்க வாய்வேக்காடு,வாய்ப்புண்,தொண்டைப்புண் ஆறும்
11.மாதுளம்பூச்சூரணம் அரைதேக்கரண்டி, 250மிலி நீரில் காய்ச்சி வாய்கொப்புளிக்க வாய்ப்புண், தொண்டைரணம், வலி தீரும்.
12.அன்னபேதிச்செந்தூரம்200மிகி,,திரிபலாச்சூரணம்1-2கிராம்,5-10மிலி தேனில் குழைத்து தினமிருவேளை சாப்பிட வாய்ப்புண் ஆறும்.
13.நன்னாரி மணப்பாகு 5-10மிலி,தினமிருவேளை கொள்ள வாய்ப்புண்கள் ஆறும்
14.வெங்காரமது 3-5துளி வாய்ப்புண்களின்மீது தடவிவர குணமாகும்
15.மாசிக்காயை இழைத்து வாய்ப்புண்களின் மீது தடவ குணமாகும்.
16.அகத்திக்கீரையை கழுநீரில் வேகவைத்துக் குடிக்க வாய்ப்புண்கள் ஆறும்
17.வசம்பைச் சுட்டு சாம்பலாக்கி,தாய்ப்பாலில் உரைத்து நாவில் தடவ, நாத்தடுமாற்றம்,வாய்நீரொழுகல் குணமாகும். நன்கு பேச்சுண்டாகும்.
18.ஒதியம்பட்டைசூரணம் 1-2கிராம்,தினம்3வேளை,மோரில் உண்டு வர வாய்ப்புண்,குடற்புண்,பேதி,குருதிக்கழிச்சல் தீரும்.
19.பச்சைபயரை முளைகட்டி காலையில் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும்
20..ஆவாரைபட்டையை பொடித்து கசாயமிட்டு வாய்கொப்புளிக்க வாய்ப்புண், வாய்துர்நாற்றம் நீங்கும்
21.சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்
22.கொய்யாஇலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்ப்புண் குணமாகும்
23.தான்றி தளிரிலைச் சாற்றினை வெள்ளைத் துணியில் தடவியுலர்த்தி, நீரில் பிழிந்து,வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்
24.அகத்திக்கீரை கொழுந்தை வாய்கொண்டமட்டும் காலையில் மென்று தின்ன 3நாளில் வாய்வேக்காடு தீரும்
25.மருதாணி இலையை கியாழம்செய்து வாய் கொப்புளிக்க வாய் வேக்காடு நீங்கும்
26.மணித்தக்காளியிலையை சிறுபயர் போட்டு சமைத்துச்சாப்பிட வாய்வேக்காடு நீங்கும்
27.மல்லிகை இலையை வெற்றிலைபோல் மென்று துப்பிவர வாய்ப்புண் ஆறும்
28.அம்மான்பச்சரிசி இலையை சமைத்துண்ண வறட்சி அகலும். வாய்,நாக்கு, உதடுவெடிப்பு,ரணம் தீரும்.
29. ஆலம்பாலை காலைமாலை தடவிவர வாய்ரணம், உதடு, நாக்குவெடிப்பு, கைகால் வெடிப்பு, பல்ஆட்டம் தீரும். 30.ஒருபங்கு எலுமிச்சைசாறு,5பங்கு நீர் கலந்து வாய்கொப்புளிக்க வாய் வேக்காடு தீரும். 31.திருநீற்றுப்பச்சிலையை வெறும் வயிற்றில் வாய் கொண்டமட்டும் மென்று தின்ன வாய்வேக்காடு தீரும். 32.உணவுக்குமுன் எலுமிச்சம்பழசாறு பருக அஜீரணம்,வாய்வேக்காடு தீரும்

மூலம்,பவுத்திரம்(HEMORROIDS) !!!



மூலம். ஆசனவாய் வழியாய் கனலேறி தூவாரப்பட்டு 9 விதமான மூலத்தையும் பற்பல வியாதிகளையும் பிறப்பிப்பது.
உள்மூலம், பிறமூலம், இரத்தமூலம், சீழ்மூலம், மூலபாண்டு, முளைமூலம், வாதபித்தசிலேத்துமமூலம்என 9வகைப்படும்
மூலம்வரும்காரணம்.
காயத்தில்மூலம்கண்டவிதம்கேளு பாயொத்த தீவனம்பரிந்தே அடக்கிடினும் வாயைமயக்க மலத்தை அடக்கிடினும் ஓயற்ற குண்டலிக்குள்புகும் வாயுவே
உள்மூலக்குணம்:அபானத்துள்தசைபோலவளர்ந்திருக்கும்.மலத்தைஇறுக்கும்.மந்திக்கும்.இரத்தம் மலத்தில் விழும். இடையில் வயிறுவலிக்கும். பலங்கெடும். தேகம் வரளும். பிறமூலக்குணம்:அஸ்தியில்அனல்ஏறிஅபானவழியில்கத்திபோல்சதைவளர்ந்துஉள்ளும்புறமுமாயிருக்கும்.அபானங்கடுக்கும்.தினவெடுக்கும்.உதிரம்விழும்
சீழ்மூலத்தின்குணம்:தேகத்தில்அக்னிஅதிகரித்தால்அடிவயிறுநொந்துபுண்ணாகிச்சீழ்தோன்றிமலத்துடன்சிறுத்திரங்கும்,அபானங்கெடுக்கும்.மயக்கங்காணும்.வாயுஅதிகரிக்கும்.மலங்கழியும்போதுஅபானம்எரிந்துசீதமும்இரத்தமும்விழும்.நாபியைச்சுற்றிவலிக்கும்
இரத்தமூலக்குணம்:தொப்புளைச்சுற்றிவயிறுவலித்துநொந்துஇரத்தம்விழும்.மூலம்வெளியில்தள்ளும்.மலம்சிக்கும்.அடிவயிறுஇரையும.கைப்பையும்புளிப்பையும்மிகவிரும்பும்.அன்னஞ்செல்லாது.உடல்வெளுத்துவற்றும்.அபானங்கடுத்துஎரியும்.வெப்புதோன்றும்
இரத்தமூலப்பாண்டுக்குணம்:பித்தம்உடல்எங்கும்பாய்தலால்தேகம்வெளுத்துஊதும்.இரத்தம்உருண்டுதிரண்டுவயிற்றில்தங்கிபிதிர்போல்மிகவிழும்.தொப்புளைசுற்றிவலிகாணும்.மேல்மூச்சுஇளைப்புகாணும்.அடிவயிறுஇரையும்.மலஞ்சிக்கும்.அன்னஞ்செல்லாது.கைப்பையும்புளிப்பையும்மிகவிரும்பும்
மூலவாயுக்குணம்:மந்திக்கும்,உடல்வெளுக்கும்,வயிறுசதாகாலமும்இரைந்துகொண்டேஇருக்கும்
பவுத்திரம்-மூலத்தில்வாயுகண்டு,மேகநீர்உண்டாகிபுரையோடிகண்விட்டுசீழ்ப்பாச்சல்கண்டுமுளைவிழுதல்
குணம்:போகத்தினால்கனல்மிகுந்துமேகம்உண்டாகிபீஜத்திற்க்கும்அபானத்திற்க்கும்இடையில்கொடியின்அடிநரம்பிலாவது,அதன்வலம்இடப்புறத்திலாவதுஅண்டத்திலாவதுஅபானவாயுவிலாவதுநமைச்சல்எடுத்துவீங்கிநொந்துகொப்புளித்துசீழும்சலமும்வடியும்.
புரையோடிநரம்புஅழுகிகண்விழுந்துஅதனவழியேநீரும் மலமும்இறங்கும்அல்லதுஅபானவாயில்கழற்காய்போலும்,குமிழ்முளைபோலும்,கல்போல்புடைத்துப்பழுத்துசீழ்வடியும்,புரையோடும்,வேதனைகாணும்.மலசலம்சிறுக்கும்அபானம்கடுத்துஎரியும்.கைகால்காந்தும்,கடுத்துஉளையும்,நித்திரைசற்றும்வரா.உடல்மெலியும்,அன்னஞ்செல்லாதுஆயாசம்களைப்புஉண்டாகும்

1. திரிபலாச்சூரணமாத்திரை 3,தினம்3வேளை,வெந்நீருடன் கொள்ள மூலம் கட்டுப்படும்
2. 2.பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,இம்பூரல்மாத்திரை2 தினம்3வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும்
3. மூலக்குடோரித்தைலம் 1015மிலி,50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவு கொள்ள மூலம் கட்டுப்படும்
4. திருநீற்றுப்பச்சை விதையை ஊறவைத்து,நீரைப்பருகிவர இரத்தமூலம் குணம்கும்
5. அருகம்புல் கைப்பிடியரைத்து,200மிலி காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து பருகிவர மூலம் ,இரத்தமூலம் கட்டுப்படும்
6. 1கிராம் குங்கிலியத்தை தூள்செய்து,200மிலி பாலில் கலந்து பருக இருமல்,மார்புச்சளி, இரத்தமூலம் கட்டுப்படும்
7. தான்றித்தோடு கருகாமல், லேசாக வறுத்து,பொடித்து 1கிராம்,சிறிது சர்க்கரை சேர்த்து,200மிலி மோரில் தினமிருவேளை பருகிவர இரத்தமூலம் குணமாகும்
8. பிரண்டைதுவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர.இரத்தமூலம் குணமாகும்.வயிற்றுப்பூச்சி கட்டுப்படுத்தும்.
9. மாதுளை பூச்சாறு 15மிலி, சிறிது கற்கண்டு சேர்த்து காலையில் பருகிவர இரத்தமூலம் கட்டுப்படும்
10. .கொன்றைப்பூ 2 0 0கிராம்,மையாக அரைத்து மோரில்கலநது சாப்பிட சர்கித்தைலம் 10-15மிலி, 50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவு கொள்ள மூலம் கட்கரைவியாதி தீரும்்டுப்படும்
11. துத்திஇலையை வி.எண்ணையில் வதக்கி கட்ட மூலம்,பவுத்திரம்,ஆசனவாய் கடுபபு குணமாகும்
12. .துத்திஇலையை பருப்பு சேர்த்து சமையல்செய்து சாப்பிட்டுவர மூலம் குணம் ஆகும்.
13. 10கிராம் நாயுருவி இலையையரைத்து,10மிலி ந.எண்ணையில் கலந்து,தினம்2வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும்
14. தேற்றான்கொட்டைசூரணம் 1கிராம்,பாலில் கலந்து,தினம்2வேளை பருகிவர neerkattu, neer erichal, vellai, moolam theerum.
15. சின்னவெங்காயத்தை சன்னமாயரிந்து பாலில் காய்ச்அழுத்தம்,நீரிழிவு குணமாகும்சி சீனிசர்க்கரை கலந்து சாப்பிட்டுவர இரத்தமூலம் கட்டுப்படும்
16. புளியங்கொட்டையை 3நாள் ஊறவைத்து,4ம்நாள் மேல்தோல் நீக்கி,பொடித்து,2மடங்கு சர்க்கரை சேர்த்து காலை சாப்பிட்டுவர மூலக்கடுப்பு தீரும்
17. சேனைக்கிழங்கு,வெங்காயம் சேர்த்து வேகவைத்து,பசுநெய் கலந்து சாப்பிட்டுவர மூலம் குணமாகும்
18. இம்பூரல்மாத்திரை2, தினம்3வேளை சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்
19. சின்னவெங்காயத்தை சன்னமாயரிந்து,வதக்கி,சீரகம்,கற்கண்டு தூள்கலந்து,கடுகு தாளித்து, நெய்யுடன்,சோற்றில் பிசைந்து சாப்பிட்டுவர மூலம் குணமாகும்
20. துத்திஇலை,பச்சரிசிமாவு தேவைக்கேறப எடுத்து களிபோல் கிளறிக் கட்ட மூலமுளை,மூலக்கடுப்பு தீரும்
21. குங்கிலிய வெண்ணையை மேலேபூச மூல எரிச்சல் தீரும்,
22. கால்படி பசும்பாலில் 3 எலுமிச்சம்பழச்சாறுவிட்டு சிறுகுச்சியால்கிளற, தெளியும் நீரைப்பருக ஆசனகடுப்பு நீங்கும்
23. வேப்பம்பட்டைசூரணம்10கிராம்,பாலில் சாப்பிட்டுவர மூலம்,மலக்கட்டு,குன்மவலி நீங்கும்
24. அத்திப்பிஞ்சை வற்றலாகவோ,காயாகவோ சமைத்துச்சாப்பிட்டுவர மூலநோய்கள் குணமாகும்
25. அந்தரத்தாமரைஇலையை நீரிலிட்டுக்கொதிக்கவைத்து,10நிமிடம் ஆசனவாயில் ஆவிபிடிக்க மூலமுளை அகலும்
26. அந்தரத்தாமரைஇலைச்சாறு25மிலி,தேனுடன் தினம்2வேளை பருக மார்பினுள் கிருமிக்கூடுகள்,நீர்ச்சுருக்கு,மூலம்,சீதபேதி,இருமல் தீரும்
27. அந்தரத்தாமரைஇலைச்சாறு500மிலி,ந.எணணை1லி,சிறுதீயில் காய்ச்சி,கிச்சிலிகிழங்கு சந்தனத்தூள்,வெட்டிவேர்,சாம்பிராணி,கஸ்தூரிமஞ்சள்,வகைக்கு10கிராம்,பொடித்துப்போட்டு, வாரமொருமுறை தலைமுழுகிவர உட்சூடு,கண்ணெரிச்சல்,மூலநோய் தீரும்
28. அந்ணரதாமரைஇலையையரைத்துக்கட்ட கரப்பான்,தொழுநோய்புண், வெளிமூலம், ஆசனக்குத்தல் தீரும்
29. ஆவாரங்கொழுந்தை,வி.எணணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க மூலமுளை கருகி,கடுப்பு,ஊறல் தணியும்
30. வேப்பம்பருப்பை எலுமிச்சையளவரைத்துப்பில்லை தட்டி,3இரவுக்கட்ட புழுக்கள் செத்துவிழும்.முளை கரையும்
31. பாகல்இலையை வி.எண்ணையில் வதக்கி 40நாள் கட்டிவர வெளிமூலம் தீரும்
32. சிறுகருணைகிழங்கை தோல்நீக்கியரிந்து,3முறை தயிரிலூறவைத்துலர்த்தியது 200கிராம்,சுக்கு40கிராம்,இந்துப்பு40கிராம்,தனித்தனியே பொடித்து எலுமிச்சைசாற்றிலரைத்து, பனங்கற்கண்டுப்பொடி சேர்த்துப்பிசைந்து,நெல்லிக்காயளவு, காலைமாலை,6மாதம் சாப்பிட்டுவர நவமூலமும் தீரும்
33. பொடுதலைஇலையை,உ.பருப்புடன் நெய்யில் வதக்கித்துவையல் செய்து பகல் உணவுடன் கொள்ள இரத்தமூலம்,உள்மூலம்,பவுத்திரம் தீரும்
34. குப்பைமேனி செடியை வேகவைத்த தண்ணீரை குடித்துவர மூலம்,பவுத்திரம் குணமாகும்
35. கருப்புஎள், கடுகு, திப்பிலி, சுக்கு வகைக்கு 40கிராம், வெதுப்பி, பொடித்து, திரிகடி, காலை மாலை வெந்நீரில் 5நாள் கொடுக்க சீழ்மூலம் தீரும்.
36. திரிகடுகு, கோஷ்டம் சமன்பொடித்து, சமஅளவு வெள்ளைசர்க்கரை, முந்திரிப்பழம் சேர்த்து. பசுநெய்யில் லேகியம்செய்து, கொட்டைப்பாக்களவு 2வேளை, 5நாள் கொடுக்க இரத்த மூலபாண்டு குணமாகும்.
37. பிரண்டைக்கொழுந்தையரைத்து,ந்எண்ணயில்குழப்பிஉண்ணஇரத்தமூலபாண்டுதீரும்.
38. எருக்கம்பட்டை,வெள்ளுள்ளிவகைக்கு20கிராம்மைபோலரைத்து,பாக்களவு,2வேளை5நாள்,எருமைதயிரில்கொள்ளமுளைவேர்அற்றுவிழும்.
39. புளியங்கொட்டையின்மேல்தோலைபசும்பாலில்,எலுமிச்சையளவுஅரைத்து5நாள்சாப்பிடமூலமுளைநீங்கும்.
40. பிரண்டைசூரணத்துடன்சமன்சர்க்கரைகலந்து,திரிகடி,ஆவின்நெய்யில்மண்டலம்கொள்ளநவமூலமும். தீரும்.
41. மாவிலங்கு இலையை அரைத்து பாக்களவு, எருமைதயிரில் கொள்ள நவமூலமும் தீரும்.
42. வெள்ளுள்ளி 80 கிராம்அரைத்து, 6 உருண்டைசெய்து, வேளைக்கு 1 உருண்டை புளியந்தனலில் போட்டு புகைபிடிக்க முளை கரையும்
43. திப்பிலி 10 கிராம் அரைத்து, 100 கிராம் கோதுமைமாவில் கலந்து, திருகுகள்ளியை நறுக்கி 2 படி தண்ணீரில்போட்டு வேடுகட்டி, அதில் மாவைபிட்டவியல் செய்து நல்லெண்ணையும் வெல்லமும் கலந்து 7 நாள் சாப்பிட உள்மூலம் குணமாகும்.
44. ஈருள்ளி 200 கிராம் அரிந்து பன்றி நெய்யில் பொரித்து 5 நாள்கொடுக்க சீழ்மூலம் குணமாகும்
45. எருமைத்தயிரை துணியில் முடிந்து தொங்கவிட்டு நீர்வடிந்தபின் எடுத்து, வெள்ளைப்பூண்டு பாக்களவரைத்து அதில்கலந்து கொள்ள மூலவாயுநீங்கும்.
46. குப்பைமேனி, திப்பிலி சமன்பொடித்து திரிகடி, ஆவினெய்யில்மண்டலம் கொள்ள பவுத்திரம் நீங்கும்.
47. எருமைத்தயிரைதுணியில்முடிந்துதொங்கவிட்டுநீர்வடிந்தபின்எடுத்து,வெள்ளைப்பூண்டுபாக்களவரைத்துஅதில்கலந்துகொள்ளமூலவாயுநீங்கும்.குப்பைமேனி,திப்பிலிசமன்பொடித்துதிரிகடி,ஆவினெய்யில்மண்டலம்கொள்ளபவுத்திரம் நீங்கும்.

முட்டக்கோஸ் ஜூஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!




முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா? குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனால் இந்த காய்கறி கொண்டு செய்யப்படும் ஜூஸைக் குடித்தால், உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

இங்கு முட்டைக்கோஸ் ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, தொல்லைத்தரும் அல்சரை குணமாக்கும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால், வயிற்றின் உட்படலம் வலிமையடைந்து, இனிமேல் அல்சர் வராமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள சல்போராபேன் தான் காரணம். இது தான் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஐசோசையனேட் நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் நல்ல பாதுகாப்பை வழங்கும்.

கண்புரை நீடித்தால், அது பார்வையை இழக்கச் செய்யும். இந்த கண்புரையைப் போக்க அறுவரை சிகிச்சை மட்டும் தான் சிறந்த வழி அல்ல. தினமும் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவதன் மூலமும் கண்புரையைத் தடுக்கலாம்.

முட்டைக்கோஸ் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இதனால் இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, சரும பிரச்சனைகள் விரைவில் குணமாக உதவும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆய்வுகளிலும் முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால், அதில் உள்ள ஹிஸ்டிடைன் என்னும் பொருள் நோய்க்கிருமிகளை வலிமையுடன் எதிர்த்துப் போராடி நோய்கள் அண்டுவதைத் தடுக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

முட்டைக்கோஸ் ஜூஸ் மூளைக்கு நல்லது. முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே, ஆந்தோசையனின், மூளையின் செயல்பாட்டை கூர்மையாக்கி, ஒரு செயலில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். மேலும் முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடித்து வர, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறைய உதவும். முக்கியமாக முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவு.

முட்டைக்கோஸ் ஜூஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஜப்பானிய ஆய்வு ஒன்றிலும், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வருவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக குறைந்திருப்பது தெரிய வந்தது.

முட்டைக்கோஸ் ஜூஸில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது பருகி வர கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, அதன் செயல்பாடும் மேம்படும்.

முட்டைக்கோஸ் ஜூஸில் ஃபோலிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இரத்த சோகை என்று வரும் போது புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாக கருதப்படுகிறது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸைப் பருகி வர விரைவில் குணமாகும்.

* பாதி முட்டைக்கோஸை எடுத்து சுடுநீரில் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும்.

கீழே சில முக்கிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முட்டைக்கோஸை ஜூஸ் போட பயன்படுத்தும் முன், எப்போதும் அதனை உப்பு கலந்த நீரிலோ, சுடுநீரிலோ அல்லது வினிகரிலோ 30 நிமிடம் ஊற வைத்துக் கொண்டால், அதில் உள்ள புழுக்கள் அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகள் முழுமையாக வெளியேறும்.

முட்டைக்கோஸ் ஜூஸ் மூலம் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், அதனை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும்.

ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இதனைப் பருகக்கூடாது. ஒரு நாளைக்கு 1 டம்ளர் மட்டும் போதுமானது. அதிலும் கால் டம்ளர் முட்டைக்கோஸ் ஜூஸ் என்றால், அத்துடன் முக்கால் டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஜூஸில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அதன் தன்மை குறைந்துவிடும்.

வைட்டமின்

வைட்டமின் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் மற்றும் தீர்வளிக்கும் உணவுகள்!


நமது உடற்திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது வைட்டமின் சத்துக்கள். வைட்டமின் எ, பி, சி, டி, கே என பலவன இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் உறுப்பின் நலனுக்கு உறுதுணையாக செயல்படுகின்றன.

எனவே, வைட்டமின் குறைபாடு என்பது நமது உடலின் ஒட்டுமொத்த செயல்திறனை குறைக்கும் தன்மை உடையது ஆகும். சிலர் வைட்டமின் குறைபாடு என்றால் உடனே, மருந்தகங்களில் விற்கப்படும் மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இது முற்றிலும் தவறு.



நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலமாகவே இதை சரி செய்ய முடியும். மேலும், முதலில் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்...

வைட்டமின் பி , இரும்பு மற்றும் ஜின்க் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் உதட்டு வெடிப்புகள் தோன்றலாம். முட்டைகள், மீன், வேர்கடலை, போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் நிறைய இருக்கின்றன.

வைட்டமின் கே, ஈ, டி, பி7 மற்றும் எ போன்ற வைட்டமின் சத்துக்கள் குறைவாக இருந்தால் முடி உதிர்தல் ஏற்படலாம். உலர்ந்த பழங்கள், வாழைப்பழம், காளான், பூசணி விதைகள் போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் கிடைக்கின்றன.

வைட்டமின் எ மற்றும் டி ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் இந்த பிரச்சனை ஏற்படலாம். உலர்ந்த பழங்கள், சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட், வால்நட், பாதம் போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் இருக்கின்றன.

வைட்டமின் பி, பி 12, 9, 6 போன்றவற்றின் குறைபாடு ஏற்பட்டால் இது போன்ற மாற்றங்கள் உடலில் ஏற்படலாம். கடல் உணவுகள், முட்டை, பருப்பு உணவுகள் போன்றவற்றில் இந்த வைட்டமின் சத்துக்கள் நிறைய கிடைக்கின்றன.

வைட்டமின் பி, மினரல்ஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. பாதாம், வாழைப்பழம், கீரை, ஆப்பிள் போன்ற உணவுகளில் இந்த சத்துக்கள் நிறைய கிடைக்கின்றன.

மயக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம், செரிமான கோளாறு, உடல் எடையில் மாற்றம் போன்றவை வைட்டமின் பி குறைபாடு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்.

ஈறுகளில் இரத்தம் வழிதல், செரிமானக் கோளாறு, மூக்கில் இரத்தம் கசிதல், புண்கள் ஆற தாமதம் ஆவது போன்றவை வைட்டமின் சி குறைபாடு உள்ளது என வெளிக்காட்டும் அறிகுறிகள். தினமும் எலுமிச்சை ஜூஸ் பருகி வந்தால் இதற்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது?






நாம் உண்ணும் போது தவறான உணவு சேர்க்கையால் சில வித ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
உதாரணத்திற்கு மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் அதனுடன் இஞ்சி சாப்பிடக்கூடாது, அவ்வாறு சாப்பிட்டால் புட் பாய்சன் ஆகிவிடும்.

தர்பூசணி மற்றும் பால்

தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பப்பாளி மற்றும் தண்ணீர்

பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.

முட்டை மற்றும் பால்

இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.

பால் கலந்த ஓட்ஸ்

பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஓட்ஸை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும். நொதிகளை ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் அழித்துவிடும்.

மேலும் ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் பாலை திரிக்கச் செய்து, உடலில் சளி தேக்கத்தை அதிகரிக்கும். எனவே இந்த உணவு சேர்க்கைகளைத் தவிர்த்திடுங்கள்.

வாழைப்பம் மற்றும் பால்

வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.

மீன் மற்றும் பால்

மீன் சாப்பிட்ட உடனேயே பால் குடிக்கக்கூடாது என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனெனில் மீன் மற்றும் பால் அடுத்தடுத்தோ அல்லது ஒன்றாகவோ உடலினுள் சென்றால், அதனால் உடலில் உள்ள இரத்த பாழாவதோடு, சீரான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி- பாட்டி வைத்தியம் !!!

ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி
உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும்
ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும்
பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

காரணம்:
குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக்
கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும்
ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும்
பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.
அறிகுறிகள்:
இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்

தீர்வுகள்:
பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு
பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.

1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது
நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த
வேண்டும்.

3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது
ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில்
கட்டவும்.

4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.
பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை
தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து
இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவ்லியின்போது சாப்பிடலாம். இது
மிகவும் விலைமதிப்பானது.

7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு
(ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி
கேரட் சாறு
இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.

8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேடய்த்து விடலாம்.

செய்ய வேண்டியவை:
1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை
இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி,
ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு,
கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.

3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.

4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:
1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக்கூடியவை.
2. வெயிலில் அலைவது.
3. காரமான உணவு வகைகள்.
4. வயிறு முட்ட சாப்பிடுதல்.
5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை.

இதயம் ,கல்லீரல்,நுரையீரல்

(இதயம்-கல்லீரல் – நுரையீரல் மூன்றையும் சுத்தப்படுத்த அருமையான,எளியமருந்து செய்முறை!!! )

(1)சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம். பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
ஜெர்மனியில் பிரபலமான இந்த பானம் மூன்று உணவு பொருட்களை கொண்டு தயார் செய்கிறார்கள். இயற்கையான இந்த உணவுபொருட்கள் உடலில் ஏராளமான பலன்களை ஏற்படுத்துகின்றன.
இதய தமனிகளில் அடைப்புகள் ஏற்படாதவாறு தடுக்கின்றது.
இரத்தத்தில் கொழுப்பு விகிதத்தை சரியான அளவில் இருக்குமாறு கட்டுப்படுத்துகிறது.
தொற்றுநோய்களை அகற்றி சளித்தொல்லை ஏற்படாதவாறு செய்கின்றது.
இதை அருந்தும்போது ஈரலிலிருந்து நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகின்றது.
ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கூடுதலாக உள்ளதால் நோய்களை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சரிபடுத்தி முதுமை ஏறபடாதவாறும், கேன்சர் நோய்கள் வராதவாறும் காக்கின்றது.
இப்பொழுது தேவையானவை என்னவென்று பார்பபோம்:
1.முழு பூண்டு – 4
2.தோலுடன் கூடுய எலுமிச்சைப்பழம் – 4
3.இஞ்சி – ஒரு சிறிய துண்டு
4. தண்ணீர் – 2 லிட்டர்
செய்முறை:
எலுமிச்சை பழத்தை கழுவி சிறிதாக நறுக்கவும். பூண்டை உரிக்கவும். இஞ்சியின் தோலை அகற்றி சிறிதாக நறுக்கவும். இவை எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை வேறு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
இதை அடுப்பில் வைத்து சூடாக்கி கொதிக்கும் நிலை வரும் போது அடுப்பை அணைக்கவும். சூடாக்கியதை குளிரவைத்து சல்லடையால் சளித்து கண்ணாடி பாட்டில்களில் நிறைத்துக்கொள்ளவும்.
எவ்வாறு சாப்பிடுவது ?
காலையில் வெறும் வயிற்றில் உணவு சாப்பிடுவதற்க்கு இரண்டு மணிநேரம் முன்பு ஒரு கிளாஸ் குடிக்கவும். ஒவ்வொருமுறையும் குடிப்பதற்க்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்கி ஒரு கிளாஸில் ஊற்றவும்.