"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, May 9, 2016

வெண் புள்ளி



 வெண்புள்ளி» வெண் புள்ளி மறைய இயற்கை மருத்துவம் |
வெண் புள்ளி மறைய இயற்கை மருத்துவம் |
வெண்புள்ளி விரைவில் மறைய வேண்டுமா? கண்டிப்பா இதை செய்து பாருங்க.. நீங்க எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே குணமாகிடும்.


வெண்புள்ளி நீங்க இயற்கை மருத்துவம்


தேவையான மூலிகைகள்
1. வேப்பம் கொழுந்து
2. மோர் (வீட்டில் தயாரித்தது)
3. கஸ்துரி மஞ்சள்

வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பதிப்பு உள்ள இடங்களிலும் , விரும்பினால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.


உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து, சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும். நீர் அதிகமாக அருந்த வேண்டும். உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும். உள் பிரயோகம் மற்றும் வெளிப்பிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்.

தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள், பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் "C" உள்ள பொருள்கள், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு, அசைவம், வெள்ளை சர்க்கரை , ஊறுகாய், மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.

எந்தவித side-effect வும் ஏற்படுத்தாது.

பெண்களுக்கு கற்பப்பை நோய் வராமல் தடுக்கும் மூலிகை வைத்தியம்



பெண்களுக்கு கற்பப்பை நோய் வராமல் தடுக்கும் மூலிகை வைத்தியம்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, நீர்க்கட்டி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற கீழ்க்கண்ட கசாயத்தை மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே ,மாதவிடாய் நிற்கும் வரை குடிக்கவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு குடித்து வந்தால் கற்பப்பை சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.
தேவையான பொருட்கள்
அசோகமரத்துப்பட்டை 15கிராம்
கிராம்பு 4
மிளகு 5

கருஞ்சீரகம் 1கிராம்

சீரகம் அரை ஸ்பூன்
இவற்றை 2டம்ளர் நீரில் கொதிக்கவைத்து காலை,மாலை இருவேளையும் குடித்து வந்தால் நோய் குணமாகும்.



டிப்ஸ்

பனி வெடிப்புக்கு டிப்ஸ் வேண்டுமா?
பனி வெடிப்பு தைலம்

தேங்காய் எண்ணெயில் அருகம்புல்,வசம்பு ,விரலிமஞ்சள் இவைகளை
போட்டு மிதமாக சூடுசெய்து குளிப்பதற்கு முன் இந்த தைலத்தை ப்பூசி அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்துவந்தால் மேனிபளபளக்கும்

பாதவெடிப்பு நீங்க சூரணம்

பூந்திக்கொட்டை ,உப்பு,எலுமிச்சை ,படிகாரம் இவைகளின் கலவையை சுமார் 10கிராம் அளவு எடுத்து 2லிட்டர் வெந்நீரில் கலந்து அரைமணி நேரம் கால்களை ஊறவைக்க வேண்டும்.

உடல்,முடி -முழுமையாகப் பராமரித்தல்

கறிவேப்பிலை,மருதாணி,கரிசலாங்கண்ணி,துளசி,வேம்பு,குப்பைமேனி,நெல்லிக்காய் இவைகளை பசைபோல் அரைத்து சிரசிலிருந்து பாதம்வரை தேய்த்து அரைமணிநேரம் கழித்து இளம் வெந்நீரில் குளிக்கவேண்டும்.


முகம் அழகு பெறுவதற்கு டிப்ஸ்

உளுந்து,பாசிபைறு,கடுக்காய்,மஞ்சள் இவைகளை நன்கு அரைத்து சிறிது நீரில் கலந்து முகம்,கை,கால் இவற்றில் பூசி 30நிமிடம் கழித்து இளம்சூடான வெந்நீரில் கழுவ வேண்டும்.

முகப்பருக்கள் நீங்க டிப்ஸ்

.சோ ற்றுக்கற்றாலை,வேப்பிலை ,எலுமிச்சை சாறு ,ஆலிவ் ஆயிலில் கலந்து முகப்பரு உள்ள இடங்களில் தடவ வேண்டும்.முகப்பவுடரை தவிர்க்க வேண்டும்.

புற்றுநோயும் - சிகிச்சைகளும்

புற்றுநோயும் - சிகிச்சைகளும் - நோயை தடுக்கும் மூலிகைகளும், – அறிந்து கொள்வோம்

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ந்துவிட்ட இந் காலகட்டத்தில் புற்று நோயை இனம் கண்டு சிகிச்சை அளித்து குணப்படுத்த வியக்க வைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் கண்டு பிடிக்கப்பெற்று சிகிச்சை அளிக்கப் பெற்று வருகின்ற நிலையில் நோயின் தீவிரம் காரணமாக தினமும் அதிகமானோர் பலியாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


இந் நோயை ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து.

இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.


ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப் படுத்திவிடலாம் என வைத்திய நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் முற்றிய நிலையில் நோய் கண்டு பிடிக்கப் பெற்றால் குணப்படுத்துவது கடினமாகிவிடுகின்றது. ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் இது ஒரு ஆபத்தான உயிர் கொல்லி நோயாக உடம்பில் புற்றெடுத்து குடிகொண்டு விடுகின்றது.

இந் நோய் வந்தபின் சுகப்படுத்துவதைவிட வராது தடுக்கும் தடுப்பு மருந்துகள் ஊசிகள் மற்றைய கொடிய நோய்களுக்கு இருப்பதுபோல் எதுவும் இதுவரை இந் நோய்க்கு இருப்பதாக தெரியவில்லை.


புற்றுநோய் என்றால் என்ன?
உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப் பெற்றது. புற்றுநோய் என்பது உடம்பில் உள்ள கலன்கள் (செல்கள்) கட்டுப்பாடு (ஒழுங்கு) இல்லாது பிரிந்து பெருகுவதால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும்.

இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறன. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்களையும் தோன்றுகின்றன. அத்துடன், உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே (தங்கி) மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. இதனால் உடம்பில் கழலைகள், கட்டிகள் தோன்றுகின்றன.

எல்லாக் கழலைகளும் (டியூமர்), கட்டிகளும் புற்று நோய் உடையன அல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் தீங்கான கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

தீங்கான கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீருடன் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) (metastasis) என்பர்.

இது ஒரு வகையான பரம்பரை அலகுகளில் (gene or in chromosomal DNA region) ஏற்படும் மாற்றங்களினால் அல்லது டி.என்.ஏ க்களில் பிறழ்வுகளை தூண்டும் பொருள்களினால் (புற்று நோயூட்டி or carcinogen) அல்லது தீ நுண்மங்களினால் (virus, ex Human Papilloma virus) ஏற்படும் நோய் ஆகும்.

உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் (Ex. Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் தடுக்கும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளினால் உயிரணு பிரிதல் கட்டுப்பாடுகள் அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லமால் ஊக்கமடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது.

இவ்வாறு தோன்றும் புற்று செல்கள் இரத்தம் அல்லது நிணநீர் (லிம்ப் நொட்ஸ்) வழியாக உடலின் மற்ற பாகங்களை அடைந்து நிவாரணம் செய்யமுடியாத நிலைக்கு கொண்டு செல்கின்றன. இவ்வாறு புற்று செல்கள் கடந்து செல்லும் நிலைக்கு மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) எனப்பெயர்.

அண்மைய ஆய்வுகளில் குறு ஆர்.என்.ஏ (microRNA) க்களில் ஏற்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளது. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக்களை (cancer stem cells, Glioblastoma stem cell) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள்.

இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதரண குருத்தணுக்களில் (normal stem cells, ex. neuronal stem cells) உள்ள கல குறிகைகளில் (cell signaling pathway) ஏற்ப்படும் பிறழ்வுகளால் புற்று குருத்தணுக்களை தோற்றுவிக்கின்றன.

புற்று நோய் சில வேளைகளில் ஒரு குறிபிட்ட இடத்தில் கட்டியாக வெளிப்படுவதை தீங்கற்ற கட்டி அல்லது பெனின் (benign) கட்டி என அழைக்கப்படும். அவை தன்னிடத்திலேயே எல்லைக்கு உட்பட்டு அடங்குபவை ஆகும்,

மேலும் அவை ஊடுருவி தாக்கவோ அல்லது இதர இடங்களுக்கு பரவவோ செய்யாது. பொதுவாக இக்கட்டிகளை குறிபிட்ட இடத்தில் அகற்றி விட்டால், புற்று நோயின் தாக்கம் இல்லை என நம்பலாம். பின்னாளில் கண்ணுற்ற புற்று குருத்தணுக்களால் மீண்டும் புற்று தாக்கும் என தெரிகிறது.

மிக குறைந்த அளவில் உள்ள புற்று குருத்தணுக்கள் மறுபடியும் புதுபித்து (self=renewal), பெருகி புற்று செல்களாக உருமாற்றம் அடைய வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. இக்கரணியத்தால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று குருத்தணுக்களையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகவும், அதே வேளையில் சாதரண குருத்தணுக்களை பாதுகாக்கும் வண்ணம் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன.

ஆனால் சில நோய்கள், எடுத்துக்காட்டாக இரத்தப் புற்றுநோய், கட்டி இல்லாமலேயே தாக்கும். மருத்துவ முறைகளில் புற்றுநோயைப்பற்றி படித்தல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயை தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப் பிரிவினை ஆன்கோலோஜி புத்தாக்கவியல் (புற்றுநோயியல்) என்று அழைக்கப்படுகிறது.

புற்று நோய் மானிடரை எந்த வயதிலும் தாக்கலாம் என்றாலும் கூட, வயது ஏற ஏற அதற்கான வாய்ப்புகள் வேகமாக கூடுகின்றன புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கன் கான்செர் சொசைடி நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர். புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது.

பொதுவாக நிறப்புரியில் ஏற்படும் பிறழ்வுகளால் அல்லது மாற்றங்களால், ஒரு உயிரணு புற்று செல்களாக மாற்றப்படும். இந்நிகழ்வுக்கு உருமாற்றம் (transformed cells) எனப்பெயர். இவ்வாறு உருமாற்றம் அடைந்த உயிரணுக்கள் கட்டுப்பாடு இன்றி பல்கி பெருகி புற்றணுவை உருவாக்குகிறது இவ்வகையான ஒவ்வாத இயல்பு மாற்றங்களுக்கு புற்று ஊக்கிகள், எ.கா.புகையிலை புகை, கதிர் இயக்கம் , வேதியியல் பொருள்கள், அல்லது தொற்றுநோய் பரப்பும் பொருட்கள் காரணமாக அமைகிறது.

மேற்கூறிய பொருட்கள் டி.என்.ஏ நகலாக்கம் அல்லது அச்செடுத்தலின் போது பல்வேறு வகையான பிறழ்வுகளை தூண்டுவதால் புற்று செல்கள் தோன்றுகின்றன. சில வேளைகளில் புற்று நோய் மரபு வழியாகவும் கடத்தப்படும். இந்த புற்றுநோயின் பாரம்பரியத்திறன்ஆனது புற்று ஊக்கிகளுக்கும் இடத்தையளிக்கும் ஜெனோம்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான இடைவினைகளால் வழக்கமாக பாதிப்படைகின்றன. நோய் தோற்ற வகையினை கண்டறியும் புதிய கண்டுபிடிப்பான மெத்தைலேற்றம் மற்றும் குறு ஆர்.என்.ஏ தற்போது மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

பொதுவாக புற்று உயிரணுக்களில் இரு வகையான மாற்றங்களை காணலாம்.
1. மிகையான உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் (Oncogene)

2. புற்று உயிரணுக்களை கட்டுப்படுத்தும் மரபணுவில் (tumor suppressor genes) ஏற்படும் பிறழ்வுகள்.

முதல் வகையில், உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் வெளிப்பாடு வெகுவாக்கப்படுவதால் (Bcl2) அவைகள் கட்டுப்பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஊக்கவிக்கும். இவ்வகையான மரபணுக்கள் நமது உடலில் நடைபெறும் உயிரணு இறப்பை அல்லது திட்டமிடப்பட்ட உயிரணு இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை தடுக்க வல்லவையால், உருமாறிய உயிரணுக்கள் பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.

இரண்டாவது நிகழ்வில், இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளால், புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.

புற்று நோயின் அறிகுறியாக கட்டிகள் அமைந்தாலும், அதனை உறுதிபடுத்த திசுக்கள் ஆய்வுக்கு உட்ப்படுத்தபட்டே புற்று உள்ளதா? இல்லையா ? என அறியப்படும்.

வீரிய புற்றுகள் (Malignant tumor) கதிரியயக்க படமாக்கத்தில் மூலம் அறியலாம். ஒரு திசுவின் இழையவியலுக்குரிய சோதனை உடல் திசு ஆய்வு மூலம் அதற்குரிய நோயியல் மருத்துவரின் உதவியுடன் நோயை அறுதிசெய்துகொள்வது அவசியமாகும்.

புற்றுநோயின் வகை, இடம் மற்றும் நிலையைப் பொறுத்து மிக்க புற்றுநோய்களுக்கும் சகிச்சை அளிக்கலாம், சில வகைகளை குணப்படுத்தலாம். ஒருமுறை அறுதி செய்தபின், பொதுவாக புற்றுநோய் அறுவை சிகிச்சை, கெமொதெராபி (வேதிச்சிகிச்சை), கதிரியக்கச்சிகிச்சை ஆகிய மூன்று முறைகளும் அடங்கிய வகைகளில் சிகிச்சை அளிக்கலாம்.

மேலும் ஆராய்ச்சி மேம்பட்டு வருவதால், சிகிச்சை முறையும் ஒவ்வொரு வகை புற்றுநோய் வகைக்கும் ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் மாற்றமடைந்து வருகின்னறன. குறிவைத்த சிகிச்சை மருந்துவகைகளில், அவை சில கட்டிகளில் தனிப்பட்ட முறையில் சில மூலக்கூற்று பிறழ்தல்களை குறிவைத்து, மேலும் இயற்கையாக இருக்கும் கலன்களை அதிக பாதிப்பு அடையாமல் செயல் புரியும் மருந்துகளின் மேம்பாட்டில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது.

புற்றுநோயாளிகன் முன்கணிப்பு மிக்கவாறும் புற்றுநோயின் வகை மற்றும் அதன் நிலைமை, அல்லது நோயின் பரிமாணத்தை பொறுத்திருக்கும். மேலும், இழையவியலுக்குரிய தரம்பிரித்தல் மற்றும் சில குறிப்பிட்ட மூலக்கூற்று அடையாளம் காட்டிகளை முன்னிலையில் வைத்தலும், முன்கணிப்பிற்கு பயன்படுகிறது, மேலும் தனிப்பட்ட நோயாளி சார்ந்த சிகிச்சையையும் அளிக்க உதவுகிறது.

புற்று நோய் எமக்கு ஏற்படுவதற்கான காரணம் என்ன?
புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

புற்றுநோய் எமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். 

புற்றுநோயை தடுக்கும் வழிகள்


புற்றுநோயை தடுக்கும் வழிகள் - இதில் புற்றுநோயுடன் தொடர்பு பட்டி செய்திகளை இணைத்துவிடுங்கள், பலருக்கு உதவும்

புற்றுநோய் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!



நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

புற்றுநோய் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

· 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் புற்றுநோய் செல்கள் உள்ளன. அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். புற்றுநோய் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் புற்றுநோய் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள புற்றுநோய் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

· 2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

· 3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

· 4) ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

· 5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

· 6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

· 7) புற்றுநோய் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

· 8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை புற்றுநோய் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை புற்றுநோய் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

· 9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்டுவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

· 10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் புற்றுநோய் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் புற்றுநோய் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

· 11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, புற்றுநோய் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

· 12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதி தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

· 13) புற்றுநோய் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை புற்றுநோய் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) புற்றுநோய் செல்லை அழிக்க உதவியாகிறது.

· 14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

· 15) புற்றுநோய் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

· 16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் புற்றுநோய் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் புற்றுநோய் செல் வளர காரணிகள்:-

· 1) புற்றுநோய் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது புற்றுநோய் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

· 2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் புற்றுநோய் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், புற்றுநோய் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

· 3) அமிலத் தன்மையில் புற்றுநோய் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹார்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

· 4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கின்றன‌. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளைப் பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

· 5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளைத் தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் புற்றுநோய் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரைத் தவிர்த்து விடவும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!

புற்றுநோய் வராமல் தடுக்க, வந்த பின்னும் புற்று செல்களை அழிக்கவல்ல உணவு வகைகளைத் தெரிந்துகொள்வதுடன், தினசரி உணவில் அதை வாடிக்கை யாக்குவதும் அவசியம்.


 திராட்சையின் தோலில், குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவேதான், திராட்சை சாப்பிடுவது புற்று செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள்.



 தக்காளியில் உள்ள விட்டமின் `சி' ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள 'லைகோபைன்' வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

 புரொக்கோலி, மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துணவு. புரொக்கோலியில் உள்ள 'இன்டோல் 3-கார்பினோல்', பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.



 பூண்டு… குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.



 தினமும் கேரட் எடுத்துக் கொண்டால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படு வதைத் தவிர்க்கலாம்.



 காளான், உடலில் உள்ள செல்களை வலுவாக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.



 புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி அளிப்பதில், நட்ஸ் மிகச் சிறந்த உணவு. இவற்றில் உள்ள க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.



 பப்பாளியை தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் வரும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வலு தரும். தொடர்ந்து சாப்பிடும்போது, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றும்.

 ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும் இது ஆல்கஹால் என்பதால் அளவாகப் பருகவில்லை எனில் எதிர்விளைவுகள் ஏற்படும்.

அதிர்ச்சிப் புள்ளிவிவரம்!

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.4 கோடி பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகள் எண் ணிக்கை 70% அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்று நோயாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்ப தாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. மனிதர் களைப் பொறுத்தவரை, புற்று நோய்க்கு 80% – 90% சுற்றுச்சூழலே காரணமாக இருக்கிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையும்… சில புரிதல்களும்!

 மருத்துவத் துறையில் பெருகியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, புற்றுநோய் குறித்த அச்சத்தை விலக்கி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

 சருமப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களை முழுவதுமாக எளிதில் குணப்படுத்திவிடமுடியும்.

 புற்றுநோயை பொறுத்தவரையில் விரைவில் கண்டறியப்படுவதும், உடனடி சிகிச்சையும்தான் மிக முக்கியம்.

 ஆரம்பநிலையில் புற்றுநோய் கண்டறியப்பட்டவர்கள் உண்மையில் அதிர்ஷ்டக்காரர்கள். உடனடியாக சிகிச்சையைத் தொடங்கி குணம் பெறலாம்.

 'முதல் வாய்ப்பு… சிறந்த வாய்ப்பு!' என்பது புற்றுநோயின் தாரக மந்திரம் எனலாம்.

 புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின், அது எந்த நிலையென்றாலும் நம்பிக்கை இழக்காமலும், ஒரு நிமிடம்கூட தாமதம் செய்யாமலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.