"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Thursday, March 24, 2016

புகை பழக்கத்தை நிறுத்த வழிகாட்டி

புகைப்பழக்கத்தைவிடவேண்டுமா..?!
தினமும் ஒரு பாக்கெட் சிகரட்
வாங்கு வதற்கு பதில் உலர்
திராட்சை பாக்கெட் அல்லது 100
கிராம் வாங்கி வைத்து
கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம்
வரும் போது 2 உலர் திராட்சை
வாயில் போட்டுச்
சுவையுங்கள் .
மிகவும் அதிமிக முக்கியமான
மருத்துவக் குணம் கொண்ட
உலர் திராட்சை (கிஸ் மிஸ்)
அது. புகைப் பிடிப்பவர்களைத்
தடுக்கும் அறுமருந்து ஆம்
புகைபிடிப்பதால் ஏற்படும்
நிகோடினை உலர்திராட்சைக்
கரைத்து விடுகிறது, மேலும்
புகைபிடிக்க மனதுக்கு
தோன்றும் முன்பு சில
உலர்திராட்சைகளை சாப்பிடும்
பொழுது அதன் இனிப்பு
கரைசல் புகைப்பிடிக்க
தூண்டும் உணரவைக்
கட்டுப்படுத்துகிறது, இது
சைனாவில் பிரபலம் நமக்கு
காசு கொடுத்தால் மட்டுமே
நல்ல மருத்துவத்தை
சொல்லும் சில சிறந்தநாட்டு
மருத்துவர்கள் கூட இந்த
உண்மையை சொல்வதில்லை,
இதை நீங்களும், உங்கள்
உயிரான உறவுகளிடம்
சொல்லிப் புகைப்பழக்கத்தை
ஒழிக்கச் சிறந்த வழி.

138

எல்லோரும் அறிந்திக்க
வேண்டிய பயன்தரும் 138
வீட்டுக் குறிப்புகள்:!!!
1. வெள்ளி ஆபரணங்களுடன்
சிறிது கற்பூரத்தைப் போட்டு
வைப்பதால் வெள்ளி
ஆபரணங்கள் கறுப்பாவதைத்
தடுக்கலாம்.
2. வீட்டில் எறும்புப் புற்று
இருந்தால் அங்கே கொஞ்சம்
பெருங்காயத் தூளைத்
தூவிவிட்டால் எறும்புத்
தொல்லை இருக்காது.
3. ஒரு டம்ளர் தண்ணீரில்
நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு
கலந்து அதை அறையின்
நான்கு பக்க ஓரங்களில்
தெளித்துவிட்டால் எறும்பு
நடமாட்டம் இருக்காது.
4. குத்துவிளக்கு, காமாட்சி
அம்மன் விளக்கின் மேல்
நுனியில் ரப்பர் பேண்டைச்
சுற்றிப் பூ வைத்தால் கீழே
விழாது.
5. துணிகளில் எண்ணெய்
கறையோ, கிரீஸ் தாரோ பட்டு
விட்டால் அவற்றைத்
துவைக்கும் போது சில
சொட்டுக்கள் நீலகிரித் தைலம்
விட்டுக் கழுவினால் கறைகள்
போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள்
நாளடைவில் பளபளப்பு
மங்கினால் வாரத்துக்கு ஒரு
முறை விபூதியைக் கொண்டு
நன்கு தேய்த்து வாருங்கள்.
வெள்ளிப் பாத்திரங்கள் போல்
மின்னுவதைப் பார்க்கலாம்.
7. கோடை காலத்தில் மதிய
உணவில் வெஜிடபிள் சாலட்
அவசியம் சேர்க்க வேண்டும்.
அதிக எண்ணெயில் பொரித்த
உணவு வகைகளைத் தவிர்க்க
வேண்டும்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட்
ஓட்டையாகி விட்டால் அதைக்
கவிழ்த்து பழைய டூத்
பிரஷைத் தீயில் காட்டி
உருகும் திரவத்தை அந்த
ஓட்டை மீது படியச்
செய்யவும். ஓட்டை
அடைபடும்.
9. எப்பொழுதாவது
உபயோகிக்கும் "ஷூ"க்களில்
ரசகற்பூர உருண்டை ஒன்றை
ஒவ்வொரு "ஷூ"விலும்
போட்டு வைத்தால் பூச்சிகள்
அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு
பிளாஸ்டிக் கவர்கள்
காலியானதும் அவற்றைத்
துணிகளை ஊறவைக்கும்
போது அதனுடன் போட்டு
ஊறவைத்தால் துணி
வாசனையாக் இருக்கும்.
11. பிரஷர் குக்கரை
உபயோகபடுத்தாத
நேரங்களில் மூடி வைக்கக்
கூடாது.
12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்க
ு இட்லி மாவு, தோசை மாவு
புளித்துப் போகாமல் தடுக்க
அரைத்த மாவை பிளாஸ்டிக்
டப்பா அல்லது பக்கெட்டில்
போட்டு மூடினால் புளித்துப்
போகாமல் இருக்கும்.
13. வீட்டில் குளிர்சாதனப்
பெட்டி இல்லாதவர்கள்
காய்கறிகளின் மீது ஈரத்
துணியைப் போட்டு மூடி
வையுங்கள். வாடாமல்
இருக்கும்.
14. பொருட்களை கறையான்
அரிக்காமல் இருக்க
கற்பூரத்தைப் பொடி செய்து
தூவி வையுங்கள்.
15. வெள்ளி சாமான்களை
பீரோவில் வைக்கும்போது
அதற்குள் கற்பூரத்தைப்
போட்டு வைப்பது நல்லது.
16. அசைவம் சமைத்த பிறகு
பாத்திரங்களில் வீசும்
துர்நாற்றத்தை நீக்கப்
பாத்திரங்களில் சிறிதளவு
புளியைத் தடவிப் பிறகு
வழக்கம் போல் கிளீனிங்
பவுடர் போட்டுத் தேய்க்க
வேண்டும்.
17. இஞ்சியை ஈரத்துணியில்
சுற்றித் தண்ணீர்க் குடத்தின்
மேல் வைத்திருந்தால் பத்து
நாள் வரை புதிதாகவே
இருக்கும்.
18. காய்ந்த எலுமிச்சை,
ஆரஞ்சுத் தோல்களை
அலுமாரியில் வைத்தால்
பூச்சிகள் அணுகாது.
19. கடையில் மூக்குப் பொடி
வாங்கித் தண்ணீரில் கரைத்து
எறும்புப் புற்றின் மேல்
தெளித்து விடுங்கள்.
எறும்புகள் மாயமாய்
மறைந்து போகும்.
20. குழந்தைகளுக்கு
வெஜிடபிள் சூப் தரும் போது
அதில் துருவிய
கசுக்கொட்டையை (முந்திரி)
பொடியாக நறுக்கிய
பிரெட்டை நெய்யில் வறுத்து
சூப்பின் மேல் தூவித் தந்தால்
குழந்தைகள் விரும்பிச்
சாப்பிடுவர்.
21. புளித்த பாலில் (மோரில்)
வெள்ளிப் பாத்திரங்களையோ,
வெள்ளி நகைகளையோ அரை
மணிநேரம் ஊறப் போட்டுப்
பின் துலக்கினால் அவை
புதியவை போல் இருக்கும்.
22. வெள்ளை நிற
வாஸ்பேஷன், பாத்ரூம்,
டைல்ஸ் மற்றும் சிங்ககை
க்ளீனிங் பவுடர்களைக்
கொண்டு சுத்தம் செய்த பின்,
சொட்டு நீலம் கலந்த நீரால்
அலம்பிவிட்டால் பளபளப்பு
மேலும் கூடும்.
23. வீட்டில் ஹோமங்கள்
செய்யும் போது ஒரு டேபிள்
பானை (Fan) ஜன்னல் ஓரமாக
வெளிப்பக்கம் பார்த்து
வைத்துவிட்டால் புகை
உள்ளே பரவாது.
24. வெண்ணெயில் உப்பைத்
தூவி விட்டால் அது
நாட்பட்டாலும் கெடாமல்
இருக்கும்.
25. வெயில் காலத்தில் எங்கு
நோக்கினும் ஈக்கள்
மொய்த்துக் கொண்டிருக்கும்.
வீட்டைக் கழுவும் போது
நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப்
பின்பு கழுவுங்கள்.காய்ந்த
பின் அறையில் ஈக்கள் வராது.
26. காய்கறி மற்றும் பழங்களை
சிறிதளவு வினிகர் கலந்த
குளிர்ந்த நீரில் ஒரு சில
நிமிடங்கள் போட்டு
வைத்தால் கிருமிகள் இறந்து
விடும்.
27. பூண்டு, வெங்காயம்
போன்றவைகளை
நறுக்குவதால் கத்தியில்
ஏற்படும் துர்நாற்றத்தை
போக்க, சிறிதளவு உப்பை
கத்தியில் தடவி குளிர்ந்த நீரில்
கழுவவும்.
28. பால் பாத்திரத்தின் அடியில்
ஒட்டிக் கொள்ளாமல் இருக்க
பாத்திரத்தை முதலில்
குளிர்ந்த நீரால் நன்கு கழுவ
வேண்டும்.
29. கோதுமை உள்ள
பாத்திரத்தில் ஒரு கொத்து
வெந்தயக் கீரையை போட்டு
வைத்தால் பூச்சிகள் வராது.
30. இரவில் படுப்பதற்கு முன்
ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது
எடுத்து கழிப்பறையிலும்
குளியலறையிலும் தூவி
விட்டு அப்படியே விட்டு விட
வேண்டும். கரப்பான் பூச்சித்
தொல்லை இருக்காது.
31. நறுக்கி வைத்த
வெங்காயத்தில் சிறிதளவு
வெண்ணெய் கலந்து
வைத்தால் நீண்ட நேரம்
பிரஷ்ஷாக இருக்கும்.
32. தேங்காய் முடியை
தண்ணீரில் வைத்தால்
அல்லது முடியில் சிறிது
உப்பை தடவி வைத்தால்
கெடாமல் இருக்கும்.
33. நகைகளை பஞ்சில் சுத்தி
வைத்தால் புது பொலிவுடன்
இருக்கும்.
34. வீட்டு ஜன்னல்களுக்கு
கரும் பச்சை, கருநீலத்தினால்
ஆன திரைச் சீலைகளைப்
பயன்படுத்தினால் வெயிலின்
உஷ்ணம் உள்ளே வராது.
35. சமைக்கும் போது
எரிபொருள் சிக்கனம் செய்ய
வேண்டும். கீரையைத் தவிர
எது சமைத்தாலும்
பாத்திரத்தை மூடி
வையுங்கள்.
36. மொசைக் தரையில்
அழுக்கு நீங்கி பளபளப்பாக
இருக்க, வெதுவெதுப்பான
நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள்
மற்றும் சலவை சோடா
கலந்து ஸ்பாஞ்சை வைத்து
துடைத்து, பிறகு நல்ல
தண்ணீரில் மீண்டும் ஒரு
முறை துடைக்க வேண்டும்.
37. சமையலறையிலுள்ள
பாத்திரம் கழுவும்
தொட்டியைச் சுத்தப்படுத்த,
பழைய செய்தித்தாள்களைக்
கொண்டு தேய்த்தால் அழுக்கு
நீங்கி சுத்தமாக இருக்கும்.
38. கத்தியைச் சூடாக்கி
ரொட்டியை வெட்டினால்
பிசிறு இல்லாமல் நினைத்த
படி வெட்டலாம்.
39. மீன் பாத்திரத்தில் மீன்
வாடை இருந்தால் சீயக்காய்த்
தூளையும், புளியையும்
சேர்த்துப் பாத்திரத்தைத்
துலக்கினால் மீன் வாடை
போய்விடும்.
40. எலுமிச்சம்பழம் உலர்ந்து
விட்டால் கொதிநீரில் ஐந்து
நிமிடம் போட்டு பிறகு சாறு
பிழிந்தால் நிறையச் சாறு
கிடைக்கும்.
41. மழை நீரில் பருப்பு
வகைகளை வேக வைத்தால்
ஒரு கொதியில் வெந்து
விடும். ருசியும் அதிகரிக்கும்.
42. ஊறுகாயைக்
கிளறுவதற்கு மர அகப்பை
உபயோகிக்க வேண்டும்.
43. தயிர், மோர் பாத்திரங்களைச்
சுத்தம் செய்து வெயிலில்
காய வைத்தால் அந்த
பாத்திரத்தில் உள்ள வாடை
நீங்கி விடும்.
44. பிளாஸ்க்கில் உள்ள
துர்நாற்றம் அகல வினிகர்
போட்டு கழுவலாம்.
45. கறிவேப்பிலை காயாமல்
இருக்க வேண்டுமானால்
அதன் மீது ஓர் அலுமினியப்
பாத்திரத்தை மூடி வைத்தால்
அது காயாமல் இருக்கும்.
46. சின்ன வெங்காயத்தை
வாங்கி வெயிலில் உலர்த்தி
எடுத்து வைத்திருந்தால் ஒரு
மாதம் வரை கெடாமல் முளை
வராமல் இருக்கும்.
47. எலுமிச்சம் பழத்தை
நாளொன்றுக்கு ஒரு மணி
நேரம் தண்ணீரில் போட்டு
எடுத்து வைத்திருந்தால் ஒரு
வாரம் வரை வாடாமலும்
கெட்டுப் போகாமலும்
இருக்கும்.
48. இஞ்சியை ஈர மணலில்
புதைத்து வைக்க வேண்டும்.
49. வாழைக்காயை தண்ணீரில்
போட்டு வைத்திருந்தால் ஒரு
வாரம் வரை கெடாமல்
இருக்கும்.
50. வெண்டைக்காயின்
காம்பையும்,
தலைப்பாகத்தையும் நறுக்கி
விட்டு வைத்தால் மறுநாள்
சமைப்பதற்குள் முற்றிப்
போகாமல் இருக்கும்.
51. கடலை எண்ணெய்
கெடாமல் இருக்க சிறிது
புளியை போட்டு வைக்க
வேண்டும்.
52. எரிந்து கொண்டிருக்கும்
பல்பின் மேல் இரண்டு
சொட்டு சென்டைத்
தெளியுங்கள். அறை முழுக்க
கமகமவென்று வாசனை
பரவும்.
53. நைலான் துணியை
தைக்கும் போது ஊசி லேசில்
இறங்காது ஊசியை அடிக்கடி
சோப்பில் குத்தி எடுத்து
நைலானைத் தைத்தால்
சுலபமாக ஊசி இறங்கும்.
54. டூத் பேஸ்டை கடைசி
வரை எடுக்க அதனை
வெந்நீரில் போட்டுச் சிறிது
நேரம் கழித்துப் பின் அழுத்த
மிச்சம் மீதி பேஸ்டும்
வந்துவிடும்.
55. உப்புக் கரைந்த குளிர்ந்த
நீரில் ரத்தக்கறை பட்ட
துணிகளைக் கொஞ்ச நேரம்
ஊறவைத்து பின் எடுத்துச்
சுத்தம் செய்யுங்கள். கறை
போய்விடும்.
56. மாவடு ஊறுகாயில்
சிறிதளவு விளக்கெண்ணெய்
விட்டால் பூச்சிகள் வராமல்
நீண்ட நாள் இருக்கும். கெட்டுப்
போகாது.
57. வெள்ளைத்துணி பளிச்சிட
வெள்ளைத் துணிகளைத்
துவைக்கும் போது
தண்ணீரில் சிறிது டேபிள்
சால்ட் சேர்த்துக் கொண்டால்
துணிகள் வெள்ளை வெளேர்
என்று இருக்கும்.
58. முகம் பார்க்கும்
கண்ணாடியின் மீது
தேயிலையினால் துடைத்தால்
அழுக்கு நீங்கிக் கண்ணாடி
பளபளவென்று இருக்கும்.
59. பச்சை
கொத்தமல்லியையும்
கறிவேப்பிலையையும்
வதக்கக் கூடாது. பச்சையாக
உணவில் சேர்த்தால் தான்
சத்து அதிகமாக இருக்கும்.
60. கிழங்கு வகைகளை கறி
செய்யும் போது அதிகமாக
எண்ணெய் விட்டு வறுக்கக்
கூடாது. எளிதில்
ஜீரணமாகாது.
61. மின்சாரம் தடைப்பட்டிருக்க
ும் போது மெழுகுவர்த்தியை
ஏற்றுவோம். மெழுகுவர்த்தியி
ன் வெளிச்சத்தை அதிகரிக்க
மெழுகுவர்த்திக்கு பின்புறம்
முகம் பார்க்கும்
கண்ணாடியை வைக்கவும்.
இரு மடங்கு வெளிச்சம்
கிடைக்கும்.
62. வெல்லம் சேர்த்து செய்யும்
பொருட்களுக்கு நெய்
ஊற்றுவதால் சுவையும்
மணமும் கூடும்.
63. கேரட், பீட்ரூட் வாடி
போனால் அதை நறுக்குவது
கடினம். உப்பு கலந்த நீரில்
சிறிது நேரம் போட்டு
வைத்தால் புதியது ஆகி
விடும். வெட்டவும்
எளிதாகிவிடும்.
64. சிறிது வெதுவெதுப்பான
நீரில் அழுக்குத் துணிகளை
ஊறவைத்து பிறகு சோப்பு
போட்டு துவைத்தால்
சுலபமாக வெளுக்கும்.
65. ஒரு டப்பாவில் சிறிதளவு
சர்க்கரையை தூவி அதனுள்
பிஸ்கட்டை வையுங்கள்.
பிஸ்கட் நீண்ட நாட்கள்
கெடாமல் இருக்கும்.
66. அரிசி மற்றும் காய்கறிகள்
கழுவிய தண்ணீரை
வீணாக்காமல் அதனை
செடிகளுக்கு கொட்டினால்
செடிகள் செழிப்பாய் வளரும்.
67. மிளகாய் நீண்ட நாட்கள்
இருக்க வேண்டுமானால்
அதன் காம்பை எடுத்துவிட்டு
பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில்
வையுங்கள். நீண்ட நாட்கள்
கெடாமல் இருக்கும்.
68. உருளைக்கிழங்கு வேக
வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால்
பாத்திரங்கள் ஜொலிக்கும்.
69. வீட்டில் புகை அதிகமாக
காணப்படுகிறதா? அறையில்
ஈரத் துணியை தொங்க
விட்டால் புகை காணாமல்
போய் விடும்.
70. அலுமினிய பாத்திரங்களில்
அடிப்பிடிப்புக் கறையை நீக்க
உப்பு காகிதத்தால் தேய்த்தால்
பாத்திரம் புதுப்பொலிவுடன்
இருக்கும்.
71. சமையல் மேடையில் கேஸ்
ஸ்டவ்வைத் துடைக்க
தேங்காய் எண்ணெய், கெரசின்
இரண்டையும் சம அளவு
கலந்து பயன்படுத்தினால்
கிச்சன் பளிச்சென்று
இருக்கும்.
72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம்,
பாத்ரூம் இவற்றில் கரப்பான்
பூச்சி தொல்லை இருந்தால்
ஆஸ்பிரின் மாத்திரைகளை
ஆங்காங்கே வைத்தால்
கரப்பான் தொல்லை
இருக்காது.
73. பச்சை வெங்காயம்
சாப்பிட்ட நாற்றத்தை போக்க
உப்பு கலந்த நீரில்
வெங்காயத்தை ஊற வைத்து
எடுத்து சாப்பிட்டால் காரம்,
நாற்றம் இருக்காது.
74. மிதியடிக்கு அடியில் அதே
சைசில் பழைய நியூஸ்
பேப்பரை வெட்டி
வைத்துவிட்டால் மிதியடிகள்
அழுக்கு எல்லாம் பேப்பரில்
சேர்ந்திருக்கும்.
75. வாழைப்பழம் சீக்கிரம்
கறுத்துவிடாமல் இருக்க ஈரத்
துணியால் சுத்தி வைத்தால்
பிரஷ்ஷாக இருக்கும்.
76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட்
இரண்டையும் ஒரே
கம்பார்ட்மெண்டில்
வைக்காதீர்கள். ஆப்பிளில்
இருந்து வெளிவரும் ஒரு வித
வாயு கேரட்டைக் கசக்கச்
செய்துவிடும்.
77. பீன்ஸ், அவரை போன்ற
காய்களை வேக வைக்கும்
போது எலுமிச்சை, தக்காளி
ஜூஸ் சிறிது பிழிந்தால்
சீக்கிரம் வெந்துவிடும்.
78. லேசான வெந்நீரில்
வெங்காயத்தை நனைத்து
வெட்டினால் கண்கள் எரியாது.
79. உணவில் அதிக அளவு
உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த
உருளைக்கிழங்கை அப்படியே
உணவில் போட்டு விடுங்கள்.
உணவில் அதிகமாக இருந்த
உப்பு குறைந்துவிடும்.
80. சாப்பிட்ட பிறகு, சிறிது
வினிகரும், பேரபின்
எண்ணெயும் கலந்து
மேஜையை
துடைத்துவிட்டால் மேஜை
பளபளப்பாக இருக்கும்.
நாற்றம் இருக்காது.
81. கொஞ்சம் நீரில் கடுகு
எண்ணெய் கலந்து
மிருதுவான துணியில்
நனைத்து மரச் சாமான்களை
துடைத்தால் வார்னீஷ்
செய்தது போல் இருக்கும்.
82. பழைய புத்தகங்களை
பூச்சி அரிப்பில் இருந்து
பாதுகாக்க புத்தக
அலமாரியில் சிறிதளவு
புகையிலையை தூவினால்
பூச்சி அரிப்பு இருக்காது.
83. வேக வைத்த
உருளைக்கிழங்கு தோலை