"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Sunday, May 8, 2016

புற்று நோய்


புற்று நோய்

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.
தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.
கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.
இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீருடன் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) (metastasis) என்பர்.
இது ஒரு வகையான பரம்பரை அலகுகளில் (gene or in chromosomal DNA region) ஏற்படும் மாற்றங்களினால் அல்லது டி.என்.ஏ க்களில் பிறழ்வுகளை தூண்டும் பொருள்களினால் (புற்று நோயூட்டி or carcinogen) அல்லது தீ நுண்மங்களினால் (virus, ex Human Papilloma virus) ஏற்படும் நோய் ஆகும்.உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் (Ex. Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் தடுக்கும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளினால் உயிரணு பிரிதல் கட்டுப்பாடுகள் அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லமால் ஊக்கமடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது. இவ்வாறு தோன்றும் புற்று செல்கள் இரத்தம் அல்லது நிணநீர் (லிம்ப்) வழியாக உடலின் மற்ற பாகங்களை அடைந்து நிவாரணம் செய்யமுடியாத நிலைக்கு கொண்டு செல்கின்றன. இவ்வாறு புற்று செல்கள் கடந்து செல்லும் நிலைக்கு மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) எனப்பெயர். அண்மைய ஆய்வுகளில் குறு ஆர்.என்.ஏ (microRNA) க்களில் ஏற்ப்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளது. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக்களை (cancer stem cells, Glioblastoma stem cell) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள். இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதரண குருத்தணுக்களில் (normal stem cells, ex. neuronal stem cells) உள்ள கல குறிகைகளில் (cell signaling pathway) ஏற்ப்படும் பிறழ்வுகளால் புற்று குருத்தணுக்களை தோற்றுவிக்கின்றன.
புற்று நோய் சில வேளைகளில் ஒரு குறிபிட்ட இடத்தில் கட்டியாக வெளிப்படுவதை தீங்கற்ற கட்டி அல்லது பெனின் (benign) கட்டி என அழைக்கப்படும். அவை தன்னிடத்திலேயே எல்லைக்கு உட்பட்டு அடங்குபவை ஆகும், மேலும் அவை ஊடுருவி தாக்கவோ அல்லது இதர இடங்களுக்கு பரவவோ செய்யாது. பொதுவாக இக்கட்டிகளை குறிபிட்ட இடத்தில் அகற்றி விட்டால், புற்று நோயின் தாக்கம் இல்லை என நம்பலாம். பின்னாளில் கண்ணுற்ற புற்று குருத்தணுக்களால் மீண்டும் புற்று தாக்கும் என தெரிகிறது. மிக குறைந்த அளவில் உள்ள புற்று குருத்தணுக்கள் மறுபடியும் புதுபித்து (self=renewal), பெருகி புற்று செல்களாக உருமாற்றம் அடைய வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. இக்கரணியத்தால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று குருத்தணுக்களையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகவும், அதே வேளையில் சாதரண குருத்தணுக்களை பாதுகாக்கும் வண்ணம் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன. ஆனால் சில நோய்கள், எடுத்துக்காட்டாக இரத்தப்புற்றுநோய், கட்டி இல்லாமலேயே தாக்கும். மருத்துவ முறைகளில் புற்றுநோயைப்பற்றி படித்தல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயைத்தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப்பிரிவினை ஆன்கோலோஜி புத்தாக்கவியல் (புற்றுநோயியல்) என்று அழைக்கப்படுகிறது.
புற்று நோய் மாந்தரை எந்த அகவையிலும் தாக்கலாம் என்றாலும் கூட, வயது ஏற ஏற அதற்க்கான வாய்ப்புகள் வேகமாக கூடுகின்றன.[1] புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது.[2] அமெரிக்கன் கான்செர் சொசைட்டி நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர்.[3] புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது.
பொதுவாக நிறப்புரியில் ஏற்படும் பிறழ்வுகளால் அல்லது மாற்றங்களால், ஒரு உயிரணு புற்று செல்களாக மாற்றப்படும். இந்நிகழ்வுக்கு உருமாற்றம் (transformed cells) எனப்பெயர். இவ்வாறு உருமாற்றம் அடைந்த உயிரணுக்கள் கட்டுப்பாடு இன்றி பல்கி பெருகி புற்றணுவை உருவாக்குகிறது.[4] இவ்வகையான ஒவ்வாத இயல்பு மாற்றங்களுக்கு புற்று ஊக்கிகள், எ.கா.புகையிலை புகை, கதிர் இயக்கம் , வேதியியல் பொருள்கள், அல்லது தொற்றுநோய் பரப்பும் பொருட்கள் காரணமாக அமைகிறது. மேற்கூறிய பொருட்கள் டி.என்.ஏ நகலாக்கம் அல்லது அச்செடுத்தலின் போது பல்வேறு வகையான பிறழ்வுகளை தூண்டுவதால் புற்று செல்கள் தோன்றுகின்றன. சில வேளைகளில் புற்று நோய் மரபு வழியாகவும் கடத்தப்படும். இந்த புற்றுநோயின் பாரம்பரியத்திறன்ஆனது புற்று ஊக்கிகளுக்கும் இடத்தையளிக்கும் ஜெனோம்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான இடைவினைகளால் வழக்கமாக பாதிப்படைகின்றன. நோய் தோற்ற வகையினை கண்டறியும் புதிய கண்டுபிடிப்பான மெத்தைலேற்றம் மற்றும் குறு ஆர்.என்.ஏ தற்போது மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
பொதுவாக புற்று உயிரணுக்களில் இரு வகையான மாற்றங்களை காணலாம்.
௧.மிகையான உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் (Oncogene)
௨. புற்று உயிரணுக்களை கட்டுப்படுத்தும் மரபணுவில் (tumor suppressor genes) ஏற்படும் பிறழ்வுகள்.
முதல் வகையில், உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் வெளிப்பாடு வெகுவாக்கப்படுவதால் (Bcl2) அவைகள் கட்டுப்பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஊக்கவிக்கும். இவ்வகையான மரபணுக்கள் நமது உடலில் நடைபெறும் உயிரணு இறப்பை அல்லது திட்டமிடப்பட்ட உயிரணு இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை தடுக்க வல்லவையால் , உருமாறிய உயிரணுக்கள் பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.
இரண்டாவது நிகழ்வில், இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளால் , புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.
புற்று நோயின் அறிகுறியாக கட்டிகள் அமைந்தாலும், அதனை உறுதிபடுத்த திசுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தபட்டே புற்று உள்ளதா? இல்லையா ? என அறியப்படும். வீரிய புற்றுகள் (Malignant tumor) கதிரியயக்க படமாக்கத்தில் மூலம் அறியலாம். ஒரு திசுவின் இழையவியலுக்குரிய சோதனை உடல் திசு ஆய்வு மூலம் அதற்குரிய நோயியல் மருத்துவரின் உதவியுடன் நோயை அறுதிசெய்துகொள்வது அவசியமாகும். புற்றுநோயின் வகை, இடம் மற்றும் நிலையைப் பொறுத்து மிக்க புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம், சில வகைகளை குணப்படுத்தலாம். ஒருமுறை அறுதி செய்தபின், பொதுவாக புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமொதெராபி (வேதிச்சிகிச்சை), கதிரியக்கச்சிகிச்சை ஆகிய மூன்று முறைகளும் அடங்கிய வகைகளில் சிகிச்சை அளிக்கலாம். மேலும் ஆராய்ச்சி மேம்பட்டு வருவதால், சிகிச்சை முறையும் ஒவ்வொரு வகை புற்றுநோய் வகைக்கும் ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் மாற்றமடைந்து வருகின்றன. குறிவைத்த சிகிச்சை மருந்துவகைகளில், அவை சில கட்டிகளில் தனிப்பட்ட முறையில் சில மூலக்கூற்று பிறழ்தல்களை குறிவைத்து, மேலும் இயற்கையாக இருக்கும் கலன்களை அதிக பாதிப்பு அடையாமல் செயல் புரியும் மருந்துகளின் மேம்பாட்டில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்றுநோயாளிகன் முன்கணிப்பு மிக்கவாறும் புற்றுநோயின் வகை மற்றும் அதன் நிலைநிலைமை, அல்லது நோயின் பரிமாணத்தை பொறுத்திருக்கும். மேலும், இழையவியலுக்குரிய தரம்பிரித்தல் மற்றும் சில குறிப்பிட்ட மூலக்கூற்று அடையாளம் காட்டிகளை முன்னிலையில் வைத்தலும், முன்கணிப்பிற்கு பயன்படுகிறது, மேலும் தனிப்பட்ட நோயாளி சார்ந்த சிக்ச்சையையும் அளிக்க உதவுகிறது.
கிளவியாக்கம்
வகையாக்கம்
Further information: List of cancer types
ஒரு பெரிய பரவும் குழல் கார்சினோமா (புற்றுநோய்) ஒரு முலை நீக்கம் மாதிரி.
கட்டி எந்த வகையானது என்பதைப்பொறுத்தே புற்றுநோய் வகையாக்கம் செய்யப்பட்டுள்ளது, அதனால், அதன் திசுவானதே அந்த கட்டியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. அவற்றின் ஹிச்டோலோஜியும் (கலனமைப்பியல்; திசு இயல்) பாதித்த இடமும், முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவான சில பகுப்புகளின் எடுத்துக்காட்டு :
கார்சினோமா (புற்றுநோய்): எபிதேலியல் (தோல் மேல்புறத்தில்) நோய் காரணம் கட்டி பாதித்த உடல் பகுதியில் உயிரணுக்களில் கலந்து காணப்படும் மாலிக்னன்ட் ட்யுமர்கள் (புற்றுப்பண்புகொண்ட கட்டி). இப்பகுப்பு மிகவும் பொதுவாக நோயாளிகளை தாக்கும் பொதுவான புற்றுநோய் வகையாகும், அவற்றில் பொதுவானவை மார்பக, ப்ரோச்டெட் (சுக்கிலவகம்), லங் (நுரையீரல்), கொலோன் (பெருங்குடல்) புற்றுநோய் போன்றவையாகும்.
சர்கோமா (சதைப்புற்று): இணைப்புத் திசு, அல்லது மேசென்கிமல் (கரு உடல் நார் திசு வலைசார்ந்த) உயிரணுக்கள், போன்ற இடங்களில் இருந்து உருவாகும் மாலிக்னன்ட் ட்யுமர்கள் (புற்றுப்பண்பு கொண்ட கட்டிகள்).
லிம்போமா (நிணநீர் திசுக்கட்டி) மற்றும் லுகேமியா (இரத்தப்புற்றுநோய்): ஹெமடோபோயிஎடிக் (இரத்தத்தை -உருவாக்கும்) உயிரணுக்கள் காரணம் ஏற்படும் பரவும் புற்று.
ஜெர்ம் செல் ட்யுமர் (கருச்செல் கட்டி): டோடிபோட்டேன்ட் (பூரண ஆற்றலுடைய) உயிரணுக்கள் காரணம் விளையும் கட்டி. வயதுவந்தவர்களில் மிக்கவாறும் டெச்டிகில் (விரை,விதை) மற்றும் ஓவரி (சூலகதில்) காணப்படுவது; கரு, சிசுக்கள், மற்றும் சிறுவர்களிடம் உடலின் நடுப்பகுதியில் காணலாம், அதுவும் பின்தொடர் எலும்பின் அற்றத்தில் காணலாம், குதிரைகளில் அதன் மண்டை ஓட்டின் கீழ்.
ப்ளாஸ்டிக் ட்யுமர் (முன்செல்) அல்லது ப்ளாஸ்டோமா (கருத்திசுக்கட்டி): வளராத கருத்திசுவைப் போல் அமைந்த ஒரு கட்டி (பொதுவாக புற்றுப்பண்புடன் கூடியது). இதுபோன்ற பல கட்டிகள் குழந்தைகளில் காணலாம்.
புற்றுப்பண்பு கொண்ட கட்டிகளுக்கு (புற்றுநோய்களுக்கு) -கார்சினோமா (-புற்றுநோய்), -சர்கோமா (-சதைப்புற்று) அல்லது -ப்ளாஸ்டோமா (-கருத்திசுக்கட்டி) என்ற பின் ஒட்டுச்சொல்லை பயன்படுத்துவது வழக்கம், மேலும் முன் பாகத்தில் பாதிப்படைந்த உடலுறுப்பின் கிரேக்க அல்லது லத்தீனிய மூலப்பெயர் இணைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கல்லீரலில் ஏற்படும் புற்று நோயினை ஹெபடோ-கார்சினோமா (கல்லீரல்-புற்றுநோய்); கொழுப்பு உயிரணுக்கள் காரணம் வரும் கட்டி லிபோ-சர்கோமா (கொழுப்பணு-சதைப்புற்று). பொதுவான புற்றுநோய்களுக்கு, ஆங்கில உடற்சொல் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டிற்கு, மிகவும் பொதுவகையான மார்பக புற்றுநோய் டக்டால் கார்சினோமா ஒப் தி பிரெச்ட் (மார்பக நாள புற்றுநோய்) அல்லது மம்மரி டக்டால் கார்சினோமா (முலையின் நாளப்புற்றுநோய்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு, உரிச்சொல்லான டக்டால் உருபெருக்கிக் கண்ணாடியில் (மைக்ரோஸ்கோப்) பன்மடங்கு அளவில் காட்சி தரும் பொதுவான மார்பக நாளங்களைக் குறிக்கிறது.
தீங்கற்ற கட்டிகளை (அவை புற்றுநோய் அல்ல) பெயரிடுகையில் -ஓம என்ற பின் ஒட்டுச்சொல், உடல் பாகத்தை மூலமாக கொண்டு சேர்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கருப்பையில் உள்ள மழமழப்பான திசுவில் வழங்கும் ஒரு தீங்கற்ற கட்டி்யை லேயிஒம்யோமா (தசைத்திசுக்கட்டி) என்று பெயரிட்டுள்ளார்கள் (இந்த அடிக்கடி பாதிக்கும் கட்டியின் பொதுவான பெயர் பைப்ரொயிட் (நார்த்திசுக்கட்டி) ) ஆகும். நற்பேறற்றமையாக, சில புற்றுநோய்களுக்கும் இந்த -ஓம என்ற பின் ஒட்டு பயன்படுத்துவதுண்டு, எடுத்துக்காட்டு, மெலனோமா (கருங்கட்டி) மற்றும் செமிநோமா (விரைப்புற்று).
கட்டி எந்த வகையானது என்பதைப்பொறுத்தே புற்றுநோய் வகையாக்கம் செய்யப்பட்டுள்ளது, அதனால், அதன் திசுவானதே அந்த கட்டியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. அவற்றின் ஹிச்டோலோஜியும் (கலனமைப்பியல்; திசு இயல்) பாதித்த இடமும், முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவான சில பகுப்புகளின் எடுத்துக்காட்டு :
கார்சினோமா (புற்றுநோய்): எபிதேலியல் (தோல் மேல்புறத்தில்) நோய் காரணம் கட்டி பாதித்த உடல் பகுதியில் உயிரணுக்களில் கலந்து காணப்படும் மாலிக்னன்ட் ட்யுமர்கள் (புற்றுப்பண்புகொண்ட கட்டி). இப்பகுப்பு மிகவும் பொதுவாக நோயாளிகளை தாக்கும் பொதுவான புற்றுநோய் வகையாகும், அவற்றில் பொதுவானவை மார்பக, ப்ரோச்டெட் (சுக்கிலவகம்), லங் (நுரையீரல்), கொலோன் (பெருங்குடல்) புற்றுநோய் போன்றவையாகும்.
சர்கோமா (சதைப்புற்று): இணைப்புத் திசு, அல்லது மேசென்கிமல் (கரு உடல் நார் திசு வலைசார்ந்த) உயிரணுக்கள், போன்ற இடங்களில் இருந்து உருவாகும் மாலிக்னன்ட் ட்யுமர்கள் (புற்றுப்பண்பு கொண்ட கட்டிகள்).
லிம்போமா (நிணநீர் திசுக்கட்டி) மற்றும் லுகேமியா (இரத்தப்புற்றுநோய்): ஹெமடோபோயிஎடிக் (இரத்தத்தை -உருவாக்கும்) உயிரணுக்கள் காரணம் ஏற்படும் பரவும் புற்று.
ஜெர்ம் செல் ட்யுமர் (கருச்செல் கட்டி): டோடிபோட்டேன்ட் (பூரண ஆற்றலுடைய) உயிரணுக்கள் காரணம் விளையும் கட்டி. வயதுவந்தவர்களில் மிக்கவாறும் டெச்டிகில் (விரை,விதை) மற்றும் ஓவரி (சூலகதில்) காணப்படுவது; கரு, சிசுக்கள், மற்றும் சிறுவர்களிடம் உடலின் நடுப்பகுதியில் காணலாம், அதுவும் பின்தொடர் எலும்பின் அற்றத்தில் காணலாம், குதிரைகளில் அதன் மண்டை ஓட்டின் கீழ்.
ப்ளாஸ்டிக் ட்யுமர் (முன்செல்) அல்லது ப்ளாஸ்டோமா (கருத்திசுக்கட்டி): வளராத கருத்திசுவைப் போல் அமைந்த ஒரு கட்டி (பொதுவாக புற்றுப்பண்புடன் கூடியது). இதுபோன்ற பல கட்டிகள் குழந்தைகளில் காணலாம்.
புற்றுப்பண்பு கொண்ட கட்டிகளுக்கு (புற்றுநோய்களுக்கு) -கார்சினோமா (-புற்றுநோய்), -சர்கோமா (-சதைப்புற்று) அல்லது -ப்ளாஸ்டோமா (-கருத்திசுக்கட்டி) என்ற பின் ஒட்டுச்சொல்லை பயன்படுத்துவது வழக்கம், மேலும் முன் பாகத்தில் பாதிப்படைந்த உடலுறுப்பின் கிரேக்க அல்லது லத்தீனிய மூலப்பெயர் இணைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கல்லீரலில் ஏற்படும் புற்று நோயினை ஹெபடோ-கார்சினோமா (கல்லீரல்-புற்றுநோய்); கொழுப்பு உயிரணுக்கள் காரணம் வரும் கட்டி லிபோ-சர்கோமா (கொழுப்பணு-சதைப்புற்று). பொதுவான புற்றுநோய்களுக்கு, ஆங்கில உடற்சொல் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டிற்கு, மிகவும் பொதுவகையான மார்பக புற்றுநோய் டக்டால் கார்சினோமா ஒப் தி பிரெச்ட் (மார்பக நாள புற்றுநோய்) அல்லது மம்மரி டக்டால் கார்சினோமா (முலையின் நாளப்புற்றுநோய்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு, உரிச்சொல்லான டக்டால் உருபெருக்கிக் கண்ணாடியில் (மைக்ரோஸ்கோப்) பன்மடங்கு அளவில் காட்சி தரும் பொதுவான மார்பக நாளங்களைக் குறிக்கிறது.
தீங்கற்ற கட்டிகளை (அவை புற்றுநோய் அல்ல) பெயரிடுகையில் -ஓம என்ற பின் ஒட்டுச்சொல், உடல் பாகத்தை மூலமாக கொண்டு சேர்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கருப்பையில் உள்ள மழமழப்பான திசுவில் வழங்கும் ஒரு தீங்கற்ற கட்டி்யை லேயிஒம்யோமா (தசைத்திசுக்கட்டி) என்று பெயரிட்டுள்ளார்கள் (இந்த அடிக்கடி பாதிக்கும் கட்டியின் பொதுவான பெயர் பைப்ரொயிட் (நார்த்திசுக்கட்டி) ) ஆகும். நற்பேறற்றமையாக, சில புற்றுநோய்களுக்கும் இந்த -ஓம என்ற பின் ஒட்டு பயன்படுத்துவதுண்டு, எடுத்துக்காட்டு, மெலனோமா (கருங்கட்டி) மற்றும் செமிநோமா (விரைப்புற்று).
அறிகுறிகள்
காரணங்கள்
முதன்மைக் கட்டுரை: Carcinogenesis
புற்றுநோய் என்பது வெவ்வேறான பலபிரிவுகள் கொண்ட நோய்வகைகளை சாரும், அவை அதன் காரணங்களிலும், உயிரியலிலும் பரவலாக வேறுபடுகின்றன. எந்த உயிரினம் ஆனாலும், தாவரங்களுக்கும் கூட, புற்றுநோய் வரலாம். இதுவரை தெரிந்த அனைத்து வகை புற்றுநோய்களும் படிப்படியாகத்தான் எழுகின்றன, பிழைகள் ஆனது ஒன்றொன்றாக புற்றுநோய் உயிரணு அதன் குழந்தைகளான அடுத்த தலைமுறையினரிலும் சேர்ந்து குவியும்போது எழுகிறது.(பொதுவான பிழைகள் எழும் விதங்ககளை அறிவதற்கு இயக்கமுறைப் பிரிவை பாருங்கள்).
ஏதொன்று (நமது) உயிரணுக்ககளை தன் பிரதி அமைக்கின்றதோ, அவற்றில் பிழைகள் ஏற்படும் சாத்தியக்கூறு களால் பாதிக்கப்படுகின்றன. (திசு மரபு பிறழ்வுகள்). பிறழ்வுகளை (பிழைகளை) திருத்துவது மற்றும் தடுப்பதை சரிவர செய்யாவிட்டால், பிறழ்வுகள் பிழைத்துக் கொள்ளும், மேலும் அவை அதன் மகள் உயிரணுக்களை சென்றடையும். பொதுவாக, நம் உடல் நம்மை புற்றுநோய்க்கெதிராக பல வகைகளில் பாதுகாக்கிறது, எடுத்துக்காட்டு : அபோப்டொசிஸ், (திட்டமிட்ட செல் மரணம்) ஏற்பட உதவும் அணுத்திரள்கள் (சில டிஎன்ஏ போளிமேரேசஸ்), (செநேச்சென்ஸ்) மூப்படைவதாக இருக்கலாம். எனினும், பிழைகள் மேலும் எழுவதற்கும் மேம்படுவதற்கும் ஏற்ற தனி சூழ்நிலைகளில், இவ்வகையான பிழை-திருத்தும் முறைகள் பலதடவை சிறு காரணங்களால் தோல்வி அடைகின்றன. எடுத்துக்காட்டாக, இச்சூழ்நிலைகளில் கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்), எனப்படும் தகர்க்கும் புற்று ஊக்கி்ப்பொருட்களை உள்ளடிக்கி இருக்கலாம் அல்லது காலப் போக்கில் ஏதேனும் ஒரு காயமோ (உடல், வெப்பம், போன்ற காரணங்களால்), அல்லது உயிரணுக்களால் தாங்க முடியாத இதர சுற்றுச்சூழல்கள் அமைந்திருக்கலாம், எடுத்துக் காட்டு ஹைபோக்சியா (உயிர்வளிக்குறை)[5] (உட்பிரிவுகளை பார்க்கவும்). புற்றுநோய் இப்படியாக நாளுக்கு நாள் முன்நோக்கி செல்லும் வியாதி ஆகும், மேலும் இவ்வகையான முன்நோக்கி செல்லும் பிழைகள் சிறுகச்சிறுக குவிந்துவிடும்போது விலங்கின் ஒரு கலமானது தனது செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட துவங்குகிறது.
புற்றுநோயில் பிழைகளை பெருகவைக்கும் பிழற்வுகள் தன்னைத்தானே பெருக்கும் தன்மையை சார்ந்தது, முடிவில் அது (பணத்தைப்போல்) அடுக்கேற்ற விரைவில் பெருகிக்கொண்டே போகும். எடுத்துக்காட்டு:
ஒரு கலனில் பிழை திருத்தும் எந்திர இயல் விகாரமடைந்து கலனிலும் அதன் பிறப்புகளிலும் அதிவிரைவில் பிழற்வுகளை மேலும் குவிய வைக்கலாம்.
ஒரு கலனின் சைகைகளை அனுப்பும் (நாளமில்லா உட்சுரப்பு சார்ந்த) எந்திர இயல் விகாரம் அடைந்து அருகாமையில் இருக்கும் கலன்களுக்கு பிழைகளை உருவாக்கும் சைகைகளை அனுப்பலாம்.
ஒரு விகாரம் (பிறழ்வு) ஆனது உயிரணுக்களில் நியோப்பிளாஸ்டிக் மாற்றங்களை உருவாக்கலாம், அதனால் அவை மற்ற இடங்களுக்கு சென்று ஆரோக்கியமான உயிரணுக்களை தகர்த்து அழிக்கலாம்.
ஒரு விகாரமானது ஒரு கலனை அமரனாக செய்யலாம் (பாருங்கள் டெலோமியர்ஸ் (கடைத் துணுக்கு)), அவை ஆரோக்கியமான உயிரணுக்களை என்றென்றைக்கும் தகர்க்கலாம்.
இப்படியாக புற்றுநோய் சில பிழைகளால் ஒரு தொடர் விளைவு ஏற்படுவதால், அவை மேலும் கூடுதலான பிறழ்வுகளுக்கு காரணமாகிறது. பிழைகளால் மேலும் பிழைகள் ஏற்படுவதே புற்றுநோயின் மூல காரணம் ஆகும், மேலும் அதனாலே அதை குணப்படுத்துவதும் கடினமாக இருப்பது :அங்கு 10,000,000,000 புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் இருந்து, அவற்றில் பத்து உயிரணுக்களைத்தவிர மற்ற அனைத்தையும் அழித்துவிட்டாலும், இந்த உயிர்பிழைத்த பாதிப்படைந்த உயிரணுக்கள் (மற்றும் பிழைகளுக்கு வழிவகுக்கும் இதர புற்றுமுன்னோடி உயிரணுக்கள்) திரும்பவும் தன்னை-தானே உருவாக்கவோ, அல்லது பிழற்வுகளை ஊக்குவிக்கும் சமிஞைகளை இதர உயிரணுக்களுக்கு அனுப்பவோ செய்து, மீண்டும் இப்பிரச்சினைகளை உருவாக்கும். இந்த கிளர்ச்சி கலந்த சூழ்நிலை, ஒரு தேவையற்ற தக்கனபிழைத்துவாழ்தல், இதில் பரிணாம வளர்ச்சியை தூண்டும் உந்து விசைகளை உடலின் வடிவமைப்புக்கு எதிராக வேலை செய்வதோடல்லாமல் ஒழுங்குமுறைகளை செயலாக்குவதையும் தடைசெய்கிறது. உண்மையில், ஒரு முறை புற்றுநோய் வந்துவிட்டால், இந்த விசையானது மேலும் பரவும் நிலைமைக்கு கொண்டுசெல்கிறது, மேலும் அதனை க்லோனல் (முளைவகை) பரிணாம வளர்ச்சி என்று அழைக்கிறோம்.[6]
புற்றுநோய்க்கான காரண ஆய்வுகள் கீழே கொடுத்துள்ள பகுப்புகளுக்கு உற்பட்டவை:
முகவர்கள் (எ.கா.நோய்க்கிருமிகள்) மற்றும் நிகழ்வுகள் (எ.கா.விகாரங்கள்/ பிறழ்வு) அவை மரபியல் மாறுபாடுகளை எளிதாக்கி புற்றுநோயை ஏற்படுத்தும்.
உயிரணுக்களில் ஏற்படும் மரபுக்கருவில் சேதத்திற்கான துல்லியமான இயல்பு காரணி மேலும் அவற்றால் பாதிப்படைந்த மரபணுக்கள்.
இந்த மரபியல் மாறுபாடுகளால் கலன்களின் உயிரியலில் ஏற்படும் விளைவுகள், உருவாகும் நிலை மற்றும் உருவாகிய புற்றுநோய் கலனின் குணங்கள், மேலும் கூடுதலான மரபணு சார்ந்த நிகழ்வுகளுக்கு காரணிகளாக இருந்து வியாதியை மேலும் தீவிரமாக்குவதற்கான காரணிகளாக அமைகின்றன.
விகாரம்:ரசாயன கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)
மேலும் தகவல்களுக்கு: Carcinogen
புற்றுநோய் தோன்றும் முறையானது டிஎன்ஏ விகாரங்கள்/ பிறழ்வுகள் ஏற்படுவதாலும் அதனால் கலன் வளர்ச்சி பாதிப்படைந்தும், மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) காரணம் நோய் இடம் மாறி பரவுவதாலும் ஏற்படுகின்றன. டிஎன்ஏ விகாரங்களை ஏற்படுத்தும் பொருட்களை முடாஜென்ஸ் (மரபணு சடுதி மாற்றக்காரணிகள்) என்பர், மேலும் புற்றுநோயை உருவாக்குபவை கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)ஆகும். குறிப்பாக சிலபொருட்கள் தனிப்பட்ட சிலவகை புற்றுநோய்களுடன் இணைந்து காணப்படுகின்றன. புகையிலை புகைபிடிப்பது பலவகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையது,[7] மற்றும் 90% நுரையீரல் புற்றுநோய் [8] க்கு காரணி ஆகும். நீண்ட காலங்களுக்கு அச்பெச்டாஸ் நார்களுடன் இடர் காப்பின்மை காரணம் மீசொதேலியோமா (இடைத்தோலியப்புற்று)[9] என்ற புற்றுநோய்க்கு உள்ளாகலாம்.
பல முடாஜென்ஸ் (மரபணு சடுதி மாற்றக்காரணிகள்) கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)ஆகவும் இருக்கிறது, ஆனால் சில புற்று ஊக்கிகள் மரபணு சடுதி மாற்றக்காரணிகள் அல்ல. சாராயம் / மது ஒரு ரசாயன புற்று ஊக்கியாகும் ஆனால் மரபணு சடுதி மாற்றக்காரணி அல்ல.[10] இது போன்ற வேதியியல் பொருள்கள் களப்பகுப்பினை விரைவடைய செய்து புற்றுநோயை தூண்டுகிறது. மிக விரைவான தன்-பகற்சி ஏற்படுகையில், பாதிப்படைந்த டிஎன்ஏ தன்பிரதி அமைத்தலினை கட்டுப்படுத்துவதற்காக செலுத்திய நொதிகள் (என்சைம்கள்) செயலிழந்து விடுகின்றன, அதனால் பிறழ்வுகள் மேலும் விரைவுபடுகின்றன.
நுரையீரல் புற்று நோய் நிகழ்வு ஆனது புகை பிடிப்பிற்கு தொடர்புடையது மூலம்:என் ஐ எச்.
பத்தாண்டுகளாக நீடிக்கும் ஆராய்ச்சி, புகையிலை பயன் பாட்டையும் புற்றுநோய்க்குண்டான தொடர்பையும் வெளிப்படுத்தி உள்ளது, அது நுரையீரல், குரல்வளை, தலை, கழுத்து, வயிறு, நீர்ப்பை, சிறுநீரகம், உண்குழல், கணையம் ஆகியவற்றை பாதிக்கிறது.[11] புகையிலை புகையில் ஐம்பதுக்கும் மேலான நன்கறிந்த (கார்சினொஜென்ஸ்) புற்று ஊக்கிகள் உள்ளன, அவற்றில் நைற்றசமைன்கள் மற்றும் polycyclic aromatic hydrocarbonபலவட்ட கற்றைகள் கொண்ட நறுமணஹைட்ரோகார்பன்கள் சேரும்.[12] புகையிலை மேம்பாட்டு அடைந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு இறப்பிற்கு காரணமாக திகழ்கிறது,[7] மேலும் உலக அளவில் ஐந்தில் ஒருவர் அதனால் இறக்கின்றனர்.[12] உண்மை கூறுவதானால், அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய் காரணமான இறப்பு விகிதம் புகைபிடிப்போரின் பாங்கினை பொறுத்தே இருந்து வருகிறது, அதிகமாக புகைபிடிப்போர் இருந்தபோது, நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதம் மிகையாகவும் மேலும், தற்போது, புகை பிடிப்போரின் எண்ணிக்கைக்குறைவுடன் நுரையீரல் புற்றுநோய் காரணம் இறந்த மனிதர்களின் விகிதம் குறைவாகவும் காணப்படுகிறது. எனினும், புகைபிடிப்போரின் எண்ணிக்கை உலக அளவில் வளர்ந்து கொண்டே வருகிறது, இதனால் சில நிறுவனங்கள் புகையிலை தொற்றுநோய் ,[13] ஏற்படலாம் என்று அறிவுருத்தி வருகின்றனர்.
பிறழ்வுகள் : அயனாக்கற்கதிர்ப்பு
அயனாக்கற்கதிர்ப்பு உருவாகும் மூல இடங்கள் கூட, அதாவது ரேடான் வாயுவைப் போல, புற்றுநோயை ஏற்படுத்தும். சூரியனின் புற ஊதா கதிர்வீச்சிற்கு மிகையான நேரம் வெளிப்பட்டிருந்தால், அது மெலனோமா (கருங்கட்டி; கறும்புத்து) மற்றும் இதர சருமம் சார்ந்த புற்றுநோய்களுக்கு வகைவகுக்கும்.[14]
மொபைல் தொலைபேசி மற்றும் இதர கருவிகளில் இருந்து வரும் அயனாக்காத வானொலி அலை வெண்கதிர்வீச்சு கூட, புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறுவர், ஆனால் அதற்கான சரியான ஆதாரம் இல்லை.[15] இருந்தாலும், சில வல்லுனர்கள் முன்னெச்சரிக்கை கொள்கை[16] யை கருத்தில் கொண்டு அதிக நேரத்திற்கு வெளிப்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதிநுண்ணுயிரால் அல்லது நுண்ணுயிரால் கிருமித் தொற்று.
சில புற்றுநோய்கள் நோய்க்கிருமிகளுடன் தொடர்பு கொள்வதால் கிருமித்தொற்று ஏற்படலாம்.[17] பல புற்றுநோய்கள் அதிநுண்ணுயிரால் கிருமித்தொற்று மூலம் ஏற்படுவது; இது விலங்குகளைப் பொறுத்தவரை உண்மை, பறவை களுக்கு மட்டும் விதிவிலக்கு, ஆனால் மனிதர்களுக்கும் உண்மையாகும், ஏனென்றால் உலகில் 15% மனித இன புற்றுநோய்களுக்கு, அதிநுண்ணுயிரே காரணம். மனித இனத்திற்கு புற்றுநோய் விளைவிக்கும் முக்கிய அதி நுண்ணுயிர்கள் மனித பாப்பிலோமா நச்சுயிரி, ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் C அதிநுண்ணுயிரிகள், எப்ச்டேஇன்-பர்ர் அதிநுண்ணுயிரி , மனித T-லிம்போற்றோபிக் அதிநுண்ணுயிரி ஆகியவை ஆகும். சோதனையுடன் நோய் விபரவியல் தரவை ஆராய்வினால் அதினுண்ணியிரிகளின் புற்றுநோய்க் காரணிக்கான பங்கு தெரியவருகிறது மேலும் புகையிலைப்பயன்பாட்டுக்குப் பின் மனிதரில் புற்றுநோயைப் பரப்புவதற்கு இரண்டாம் இடம் வகிப்பதற்கு அவையே காரணம்.[18] அதிநுண்ணுயிரிகள் மூலம் தூண்டுதலுக்குள்ளான ட்யுமர்ஸ் (கட்டிகள்) இருவகைகளை சாரும், கடுமையாக-உருமாறுபவை அல்லது மெதுவாக-உருமாறுபவை. கடுமையாக-உருமாறுபவையான அதிநுண்ணுயிரிகள், மிகையாகவும் விரைவாகவும் செயல் புரியும் தன்மை படைத்தவை, வைரல்-ஒன்கொஜனி என்றழைக்கப்படுபவை (v-onc), அத்துடன் பாதிப்படைந்த கலன் v-onc யுடன் தொடர்பு கொண்டதும் உருமாற்றம் அடைந்துவிடுகிறது. அதற்கு எதிர்மறையாக, மெதுவாக உருமாறும் அதிநுண்ணுயிரிகள், அதிநுண்ணுயிரி ஜெனோம் ஆனது தங்க இடம் அளிக்கும் ஜெநோமில் ஒரு ப்ரோடோ ஒன்கோஜினை நுழைக்கிறது. அதி நுண்ணுயிரி மேம்படுத்துனர் அல்லது இதர படியெடுத்தல் கட்டுப்பாட்டு தனிமங்கள் அப்போது அந்த ப்ரோடோ ஒன்கோஜீனிடம் மிகை வெளிப்பாடு செய்து விடுகின்றன. இதனால் கட்டுப்பாடில்லாத கலப்பகுப்பு ஏற்படுகிறது. அதிநுண்ணுயிரிகளை நுழைப்பதற்கான இடம் தனிப்பட்டதாக இல்லாததால், ஒரு ப்ரோடோ-ஓன்கோஜீனுக்கு (முன்னோடி-புற்றணுக்களுக்கு) அருகே நுழைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும், அதனால் மிகையாக உருமாறும் அதி நுண்ணுயிரிகளை விட மெதுவாக உருமாறும் அதிநுண்ணுயிரிகளில் மிகவும் தாமதித்தே கிருமித்தொற்று இடங்களில் ட்யுமர்ஸ் (கட்டிகள்) உருவாகும்.
ஹெபடைடிஸ் அதிநுண்ணுயிரிகள், அதில் ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் Cயும் சேரும், ஒரு நீடித்த அதிநுண்ணுயிரி கிருமித்தோற்றத்தை ஏற்படுத்துவதால் அதனால் ஹெபடைடிஸ் B நோயாளிகளுக்கு, கல்லீரல் புற்றுநோய் 0.47% அளவுக்கு ஆண்டொன்றில் விளைகிறது (குறிப்பாக ஆசியாவில், வட அமெரிக்காவில் குறைவாகவும்), மேலும் ஹெபடைடிஸ் C நோயாளிகளுக்கு அது 1.4% அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தென்படுகிறது. ஈரல் கரணைநோய், ஹெபடைடிஸ் நோய் காரணமோ, அல்லது குடிப்பதனாலோ வந்தாலும், கல்லீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது ஆகும். இரு நோய்களும் கலந்திருந்தால், அதனால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. வைரல் ஹெபடிடிஸ் பரவுதல் மேலும் நோய்வாய்ப்படுதல் போன்றவற்றின் பெரிய சுமைகளால், உலக அளவில், கல்லீரல் புற்றுநோய் என்பது மிகவும் பொதுவான, மிகவும் பயங்கரமான புற்றுநோயாகத் திகழ்கிறது.
புற்றுநோய் ஆராய்ச்சியில் நிகழ்ந்து வரும் முன்னேற்றம் காரணம் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசி இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
2006 ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஒரு மனித பாபில்லோமா வைரஸ் கொண்ட தடுப்பூசியான கர்டாசில் என்பதைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. இத்தடுப்பூசியானது நான்கு விதமான எச்பிவி வகையிலான புற்று நோயை கட்டுப்படுத்தும், அவை நாலும் சேர்ந்து 70% கழுத்துப்பட்டை புற்றுநோய் மற்றும் 90% இன உறுப்பு சார்ந்த மறுக்களுக்கும் காரணியாகும். மார்ச் 2007 அன்று, அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) அட்வைசரி கம்மிட்டீ ஒன் இம்முனைசேஷன் ப்ராக்டிசெஸ் (ஏசிஐபி ) அதிகாரபூர்வமாக 11–12 வயதுள்ள பெண் குழந்தைகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது, மேலும் 9 முதல் 26 வயது ஆனவர்கள் கூட இதை பயன்படுத்த ஊக்குவித்தது.
அதிநுண்ணுயிரிகள் அல்லாமல், பாக்டீரியா மற்றும் சில புற்றுநோய்களுக்கும் இடையே உள்ள இணைப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதில் மிக முக்கியமான எடுத்துக்காட்டு, வயிற்றுச்சுவரில் ஏற்படும் நீண்ட நாள் பாதிப்பிற்கும், ஹெளிகோபாக்டேர் பைலோரி மற்றும் இரையக புற்றுநோய் இடையே உள்ள உறவு.[19][20] ஹெளிகோபாக்டேரா ல் பாதிப்படைந்த சிலரே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றாலும், இந்த நுண்ணுயிரி பொதுவானதாக இருப்பதால், இது போன்ற புற்றுநோய் வருவதற்கு அவையே காரணமாக இருக்கலாம்.[21]
இயக்குநீர் நொதி சமசீரின்மை
சில நொதிகள் உரு மாற்றம் அடையா கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்) போலவே செயல்படுகின்றன, ஏன் என்றால் அவை மிகையான கலன்களின் வளர்ச்சிக்கு காரணம் ஆகின்றன. இதற்கான நன்கு நிரூபித்த எடுத்துக்காட்டு ஹைபெரேச்ற்றோஜெனிக் (மிகையான எஸ்ட்ரோஜென் வெளிப்பாடு) நிலைமைகளின் பங்கும் என்டோமேற்றியல் (கருப்பையகம் சார்ந்த) புற்றுநோய் பாதிப்படைவதற்கான தொடர்பும்.
நோய் எதிர்ப்பு மண்டல செயல் பிறழ்ச்சி
எச்ஐவி ஆனது பல புற்றுநம் பரவுவதற்கான இடர்பாடுகளுடன் தொடர்புள்ளது, அவற்றில் காபோசியின் சர்கோமா (சதைப்புற்று), நான்-ஹோட்க்கின்னான லிம்போமா (நிணநீர் திசுக்கட்டி), மற்றும் எச்பிவி-சார்ந்த புற்றுநம் பரவுதல் எ.கா.குத புற்றுநோய் மற்றும் கழுத்துப்பட்டை புற்றுநோய். எயிட்ஸ்-நோயை விளக்கும் கூறுகள் வெகு நாட்களாக இவ்வாறான கண்டறிதலை ஏற்றுக்கொண்டுள்ளன. எச்ஐவி நோயாளிகளிடம் தோன்றும் மிகையான புற்றுநம் பரவுதலுக்கான நிகழ்வு எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் நோய் தடுப்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளே, இது புற்றுநோய்க்கும் பொருந்தும்.[22] மேலும் சில இதர நோய் எதிர்ப்பு சக்திக்குறைவு நிலைமைகள் (எ.கா. பொதுவான மாறுபடும் நோய்த்தடுப்புக்குறை மற்றும் ஐஜிஏ குறைவு ) இவையும் மிகையான அளவில் புற்றுநம் பரவுதலுக்கு காரணமாகலாம்.[23]
மரபு வழி
புற்றுநோயின் மிக்க வகைகள் தொடர்ச்சியற்றவை ஆகும், அதாவது அது மரபுசார்ந்ததாக தெரியவில்லை. எனினும், நன்றாக கண்டறிந்த பல நோய்க் குறித்தொகுப்புகள் உள்ளன, மரபுசார்ந்த புற்றுநோய் வருவதற்கு, மிக்கவாறும் ஒரு உயிரணுவில் உள்ள குறை காரணமாக அது ட்யுமர் (கட்டி) உண்டாகவிடாமல் தடுக்கும் தன்மையை இழந்திருக்கலாம். புகழ் பெற்ற எடுத்துக் காட்டுக்கள்:
சில மரபுசார்ந்த திசுமரபு பிறழ்வுகள் BRCA1 மற்றும் BRCA2 வகையான உயிரணுக்களில் அதிக அளவிலான மார்பக புற்றுநோய் மற்றும் முட்டையகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
பல நாளமில்லா உட்சுரப்பு உறுப்புகள் காரணம் விளையும் ட்யுமர்ஸ் (கட்டிகள்) பன்மடங்கு நாளமில்லா உட்சுரப்பு நியோப்லாசிய (MEN வகைகள் 1,2a,2b)
லி-பிராவமேனி நோய்க் குறித்தொகுப்பு (பலவிதமான ட்யுமர்ஸ் (கட்டிகள்)ஆன ஓச்டியோ சர்கோமா (சதைப்புற்று), மார்பக புற்றுநோய், மென்மையான திசு சர்கோமா (சதைப்புற்று), மூளைக்கட்டி கள்) போன்ற p53 பிறழ்வுகள்.
டுர்கோட் நோய்க் குறித்தொகுப்பு (மூளைக் கட்டி கள் மற்றும் பெருங்குடல் விழுதியம்)
குடும்பவழி சுரப்பிப் பெருக்க விழுதியம் ஒரு மரபு சார்ந்த பிறழ்வு ஆகும், அதில் APC உயிரணு விரைவாக பெருங்குடல் கார்சினோமா (புற்றுநோய்) துவக்கத்திற்கு காரணமாகும்.
மரபு சார்ந்த விழுதியமல்லாத பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்றுநோய் (HNPCC, அதை லின்ச் நோய்க் குறித்தொகுப்பு என்றும் கூறுவர்), அவற்றில் குடும்பவழி நிகழ்ச்சிகளான பெருங்குடல் புற்றுநோய், கருப்பைக்குரிய புற்றுநோய், இரைப்பைக்குரிய புற்றுநோய், மற்றும் முட்டையக புற்றுநோய், மற்றும் மிகு பெரும்பான்மை இல்லாமல் உள்ள பெருங்குடல் பவள மொட்டுக்கள்அடங்கும்.
இரெத்தினோபிளாசுத்தோமா, சிறு குழந்தைகளிடம் தென்படுவது, இரெத்தினோபிளாசுத்தோமா உயிரணுவில் ஏற்பட்ட மரபுசார் பிறழ்வினால் வருவதே.
டோவ்ன் நோய்க் குறித்தொகுப்பு நோயாளிகள், அதிகமாக ஒரு கூடுதல் நிறமி 21 கொண்டுள்ளவர்களுக்கு, லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) மற்றும் விரை விதை புற்றுநோய் போன்ற பிறழ்வுகளுக்கு காரணமாகலாம், ஆனால் இந்த வேறுபாட்டுக்கு உரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை.
இதர காரணங்கள்
கருவுற்றிருக்கும் போது சில அரிய பரப்புதல் ஏற்பட்டிருந்தாலும் அல்லது உறுப்புகள் தானம் செய்யும் போது குறைவாக சிலதும் நிகழ்ந்திருந்தாலும், பொதுவாக புற்றுநோய் ஒரு தொற்றிக்கொள்ளும் நோயல்ல. இந்த திசு ஒட்டுமை நிராகரிப்புக்கு முக்கிய காரணம் MHC ஒவ்வாமையாகும் .[24] மனிதரில் மற்றும் இதர முதுகெலும்பு விலங்குகளுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலம் MHC உடற்காப்பு ஊக்கிகளை "தன்" மற்றும் "தனது-அல்லாத" உயிரணுக்களை வேறுபடுத்த பயன்படுத்துகின்றன, ஏன் என்றால் இவ்வகை உடற்காப்பு ஊக்கிகள் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டிருக்கும். தனது-அல்லாத உடற்காப்பு ஊக்கிகளை எதிர்கொள்ளும் பொது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு ஒப்பான உயிரணுக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் கட்டியின் உயிரணுக்களை தவிர்த்து கட்டி ஒட்டாமல் இருக்குமாறு எதிராக செயல்பட்டு காக்கின்றன. அமெரிக்காவில், ஆண்டு தோறும் சுமார் 3,500 கர்பிணிகள் புற்றுப் பிறழ்வுகளால் அவதியுறுகின்றனர், மற்றும் மாறுபக்க கருக்குடை பரப்புதல் காரணம் கடின லுக்கேமியா (வெண்செல்லிரத்தம்) , லிம்போமா (நிணநீர் திசுக்கட்டி), மெலனோமா மற்றும் கார்சினோமா (புற்றுநோய்) தாயிடம் இருந்து கருவிற்கு மாறுவது கண்காணிக்கப்பட்டுள்ளது.[24] உறுப்பு தானம் செய்தவர்களிடம் இருந்து கட்டிகள் மேம்படுவது என்பது மிகவும் அரிதாகும். மாற்று உறுப்பு பொருத்தல் விளைவாக கட்டி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புற்றுப்பண்பு மெலனோமாவாக (கருங்கட்டி; கறும்புத்து) இருக்கலாம், அதை உறுப்பை பெறும் வேளையில் பார்க்காமல் விட்டுவிட்டதே காரணம்,[25] எனினும் இதர காரணங்களும் இருக்கிறது.[26] உண்மையில், ஒரு உயிரினத்திலிருந்து, அதே வகையிலான இன்னொரு உயிரினத்திற்கு புற்றுநோய் தாக்குவதற்கு, இரு வகையினருக்கும் ஒரே போன்ற இழையமாக்கிப்பொருத்தம் கொண்ட உயிரணுக்களாக இருக்க வேண்டும் [27], இது எலிகளை வைத்து நிரூபணமாகி உள்ளது; எனினும் அது அப்படி நிஜ உலகத்தில் நடக்காது, மேற்கூறிய எடுத்துக்காட்டினைத் தவிர.
மனித இனம் அல்லாதோரிடம், ட்யுமர் (கட்டி) உயிரணுக்கள் அவர்களுக்குள்ளாகவே பகர்ந்து கொண்டதால், சில வகையிலான புற்றுநோய் அவைகளை பாதிப்பதாக கண்டுள்ளது. இந்த நிகழ்வு, நாய்களில் ச்டிச்கேர்ஸ் சர்கோமா (சதைப்புற்று) உள்ள நாய்களில் தென்படுகிறது, இதை கநைன் ட்றன்ச்மிச்சிபில் வேநேரியல் கட்டி [28] என்று அழைப்பர், மேலும் டெவில் பேசியல் ட்யுமர் நோய் என்று டாச்மேனியன் டெவில்களிலுள்ளது..
இயங்குமுறை
தடுக்கும் முறைகள்
புற்றுநோய் தடுப்பு என்பது புற்றுநோய் நிகழ்வை குறைப்பதற்கான சுறுசுறுப்பான நடவடிக்கைகளை எடுத்தல் என்று வரையறுத்துள்ளார்கள். இதை கார்சினொஜென்ஸ் என்ற புற்று ஊக்கிகளை தவிற்பதாலும் அல்லது அதன் வளர்சிதை மாற்றத்தை மாற்றி அமைப்பதாலும், வாழ்க்கை பாணியை அல்லது உணவு முறைகளில் சிறு திருத்தங்கள் செய்தும், மற்றும் / அல்லது மருத்துவ குறுக்கீடு மூலமாகவும் ((இரசாயன வகை தடுப்பு முறையில், முன்-புற்றுப்பண்பு கட்டிகளுக்கு சிகிச்சை அளித்து நிறைவேற்றலாம்). நோய் விபரவியலுக்கான கருத்துப்படிவம் படி "தடுப்பு" என்பது பொதுவாக தொடக்க நிலை தடுப்பு , இதில் எந்த நோயாலும் பாதிக்கப்படையாத மக்கள் அடங்குவர், அல்லது உயர் நிலை தடுப்பு, இது நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான நோக்குடன் ரிகர்ரன்ஸ் (மறுபீடிப்பை) குறைத்தல் அல்லது முன்னதாகவே அறிந்த நோயின் சிக்கல்களை குறைத்தல்.
மாற்றியமைக்கத்தகுந்த ("வாழ்க்கைப்பாணி") சூழ் இடர் காரணிகள்.
இவற்றையும் பார்க்க: Alcohol and cancer
நுரையீரல் மாதிரியில் மூச்சுக் குழாய்களின் அருகாமையில் தோன்றும் (வெள்ளையான கட்டி) ஒரு செதிள் உயிரணு கார்சினோமா (புற்றுநோய்)
புற்றுநோய் ஏற்படுவதற்கான பெரும்பான்மை சூழ் இடர் காரணிகளானவை சுற்றுச்சூழல் சார்ந்தவை அல்லது வாழ்க்கைப் பாணியை சார்ந்தவை ஆகும், அதனால் புற்றுநோய் ஒரு பெரிய தடுக்கக்கூடிய நோய் என்று உரிமையாக கேட்பவரும் உண்டு.[40] மாற்றியமைக்கத்தகுந்த புற்றுநோய் சூழ் இடர் காரணிகளுக்கான எடுத்துக்காட்டில் மது அருந்துதல் (இது வாய், உணவுக்குழாய், மார்பக, மற்றும் இதர புற்றுநோய்களுக்கான அதிக சூழ் இடர் கொண்டது), புகை பிடித்தல் (நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களில் 20% பெண்கள் புகை பிடிக்கவில்லை என்றாலும், எதிரில் 10% ஆண்கள் [41]), உடல் மந்த நிலை (இது பெருங்குடல், மார்பக, மற்றும் இதர புற்றுநோய்களுடன் அதிக சூழ் இடருடன் தொடர்புடையது), மற்றும் மிகையான உடல் எடையுடன் /உடல் தடித்து இருப்பது (இது பெருங்குடல், மார்பக, கருப்பையக மற்றும் இதர புற்றுநோய்களுடன் அதிக சூழ் இடருடன் தொடர்புடையது). நோய் விபரவியல் ஆதாரங்களை கருத்தில் கொண்டு, அதிகமான அளவில் மது அருந்துவதை தவிர்த்தால் புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் குறையும்; எனினும், இதை புகையிலை பழக்கத்துடன் ஒப்பிடுகையில், இதன் விளைவுகளின் குறைந்த அல்லது சிறிய முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஆதாரத்தின் வலு பலநேரங்களில் பலவீனமாகவே உள்ளது. மற்ற வாழ்க்கைமுறை மற்றும் சுகாதார காரணிகள் புற்றுநோய் சூழ் இடரை பாதிக்கும் (சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ) இதில் பாலியல் சார்ந்த நோய்களும் (மனித பாப்பிலோமா நச்சுயிரி), வெளி நொதிகளின் உபயோகம், அயனாக்கற்கதிர்ப்புக்கு வெளிப்பாடு மற்றும் புற ஊதாக் கதிரியக்கம், மற்றும் சில பணி மற்றும் ரசாயனம் சார்ந்த வெளிப்பாடுகள் போன்றவை அடங்கும்.
உலக அளவில் ஒவ்வொரு வருடமும், குறைந்தது 200,000 மக்கள் பணி இடம் சார்ந்த புற்றுநோயால் இறக்கின்றனர்.[42] கோடிக்கணக்கான ஊழியர்கள் ஆச்பெச்டாஸ் நாருகளை சுவாசிப்பதாலும் மற்றும் புகையிலை புகை பிடிப்பதாலும், பணி இடத்தில் பென்சீன் போன்ற இரசாயனங்களின் வெளிப்பாட்டினாலும் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் இடைத்தோலியப்புற்று அல்லது லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) போன்ற இதர புற்றுநோய் வரும் சூழ் இடர் பெருகிக்காண்கிறது.[42] தற்போது, மிகுதியான புற்றுநோய் இறப்புகள் வளர்ச்சி பெற்ற நாடுகளில் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.[42] அமெரிக்காவில் மட்டும் ஆண்டு தோறும் குறைந்தது சுமார் 20,000 மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் மேலும் 40,000 புதிய புற்றுநோய் நிகழ்வுகள் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.[43]
பத்தியம்
முதன்மைக் கட்டுரை: Diet and cancer
உணவு முறை மற்றும் புற்றுநோய் சார்ந்த கருத்திணக்கமானது உடல் பருமன் புற்றுநோய் ஏற்படும் சூழ் இடரை அதிகரித்திருக்கிறது என்பதாகும். வேறுபட்ட பத்திய வழக்கங்கள் அடிக்கடி புற்றுநோய் நிகழ்வுகளில் உள்ள வேறுபாடுகளை நாடுகளிடையே காட்டுகிறது. (எ.கா.இரைப்பைக்குரிய புற்றுநோய் ஜப்பானில் அதிகமாக நிகழ்கிறது, பெருங்குடல் புற்றுநோய் அமெரிக்காவில் பொதுவாக காணப்படுகிறது. முன் கூறிய எடுத்துக்காட்டில் ஹப்லோக்ரூப்ஸ் (ஒற்றையினங்கள்) கணக்கில் எடுக்கவில்லை). வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் அவர் குடியேறிய புதிய நாட்டின் சூழல் இடரை பெருக்குகின்றனர், அடிக்கடி ஒரே தலைமுறையில் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது உணவு மற்றும் புற்றுநோய்க்கு இடையே இருக்கும் இணைப்பு கணிசமானதாகும் என்பதை அறிவுறுத்துகிறது.[44] உடல் பருமனை ஒரு மக்கள் தொகையில் குறைத்தால், புற்றுநோய் நிகழ்வை குறைக்குமா என்பது தெரியவில்லை.
ஒரு தனிப்பட்ட பொருள் (உணவையும் சேர்த்து) சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் கொண்டதாக அடிக்கடி அறிக்கைகள் வந்தாலும், இவற்றில் சிலதே புற்றுநோயுடன் தொடர்பு கொண்டதாக நிரூபித்துள்ளது. இந்த அறிக்கைகள் மிக்கவும் விலங்குகள் அல்லது செயற்கை உயிரணு வளர்ப்பு ஆய்வுகளை ஆதாரமாக கொண்டது.பொது சுகாதார பரிந்துரைகள் இவ்வறிக்கைகளின் அடிப்படையில் செய்ய இயலாது, எனினும் இவை ஆதாரபூர்வமாக நோக்கற்குரிய மனித கள ஆய்வுகள் (அல்லது எப்போதாவது இடைத்தடை கள ஆய்வுகள்) மூலம் நிரூபணம் செய்தால் மட்டுமே கருத்தில் கொள்ள முடியும்.
ஒரு பெருங்குடல் பகுதி நீக்கிய மாதிரியின் பரவும் பெருங்குடல் மலக்குடலுக்குறிய கார்சினோமா (புற்றுநோய்) (மேலே நடுவில்)
முதன்மையான புற்றுநோய் சூழ் இடர் ஒடுக்கங்களுக்கு உத்தேசித்த பத்திய இடைத்தடைகளை பயன்படுத்துவதை நோய் விபரவியல் சங்கத்தின் ஆய்வுகள் ஆதரிக்கின்றன. குறைவாக இறைச்சி உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோய்க்கான சூழ் இடர்கள் குறைகின்றன என்பதை ஒரு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது போன்ற அறிக்கைகள் இந்த ஆய்விற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[45] மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான சூழ் இடர் காபி பருகுவதினால் குறைகின்றன என்று ஒரு அறிக்கை கூறுகிறது.[46] வாட்டு இறைச்சியை உட்கொண்டால் வயிற்று புற்றுநோய்,[47] பெருங்குடல் புற்றுநோய் ,[48] மார்பக புற்றுநோய்,[49] மற்றும் கணையச்சிரை புற்றுநோய்க்கான சூழ் இடர் அதிகரிக்கின்றன,[50] அதிக வெப்பத்தில் இவ்வுணவுப் பொருட்களை சமைத்தலால் பென்சோபைரீன் போன்ற புற்று ஊக்கிகள் தோன்றுவது தான் இதற்கான காரணம்.
மரக்கறி உணவு மற்றும் வாழ்க்கைப்பாணி மாறுதல்களால் சுக்கிலவகம் புற்றுநோயால் பாதிப்படைந்த பொதுவாக ஏற்றுக்கொண்ட சிகிச்சை முறைகளை பயன்படுத்தாத ஆண்களில் புற்றுநோய் குறியீடுகள் குறைந்து காணப்பட்டதை 2005 ஆம் ஆண்டில் நடத்திய உயர்நிலை தடுப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[51] 2006 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வு மேல் காணப்பட்ட ஆய்வின் முடிவுகளை பெருக்கிக்காட்டியது, இதில் பங்கேற்ற 2400 பெண்களில் பாதி நபர்களுக்கு பொதுவான உணவும் மற்றவர்களுக்கு 20% கொழுப்புச்சத்து கலோரிகள் குறைவாக இருந்த உணவும் அளித்தார்கள். கொழுப்புச்சத்து குறைவாக இருந்த உணவை உட்கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மீளல் அறிகுறிகள் குறைவாக இருந்ததை டிசம்பர் 2006 இடைக்கால அறிக்கை தெரிவிக்கிறது.[52]
அண்மையில் நடத்திய ஆய்வுகள் சில புற்றுநோய்களுக்கும் தூய்மித்த வெல்லங்கள் மற்றும் இதர எளிமையான கார்போஹைட்ரேட்டுகளுக்கும் இணைப்பு உள்ளதை பறைசாற்றுகிறது.[53][54][55][56][57] எந்த அளவுக்கு இவை இயைப்படுகிறது மற்றும் காரணமாகச்செயல்படுகிறது என்பது சர்ச்சைக்குள்ளானது,[58][59][60] இருந்தாலும் உண்மையில் சில நிறுவனங்கள் தூய்மித்த வெல்லங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை குறைவாக உட்கொள்வதை அவர்களது புற்றுநோய் தடுப்பு பத்தியத்தில் பரிந்துரைக்கின்றனர்.[61][62][63]
நவம்பர் 2007 ஆம் ஆண்டில், தி அமேரிக்கன் இன்ஸ்டிடுட் போர் கான்செர் ரிசெர்ச்(ஏஐசிஆர்), மற்றும் வோர்ல்ட் கான்செர் ரிசெர்ச் பண்ட் (WCRF) இணைந்து புட், நுட்ரிஷன், பிசிகல் ஆக்டிவிடி மற்றும் ப்ரிவென்ஷன் ஒப் கான்செர்:எ குளோபல் பெர்ச்பெச்டிவ், என்ற "புட், பிசிகல் ஆக்டிவிடி மற்றும் கான்செர் பற்றிய மிகவும் தற்போதைய மற்றும் எல்லாமுட்கொண்ட பகுப்பாய்வு கொண்ட இலக்கியத்தை" வெளியிட்டார்கள்.[64] இந்த WCRF/AICR வல்லுநர் அறிக்கையில் மக்களுக்கு பயன்படக்கூடிய புற்றுநோய் தாக்குதலுக்கான சூழ் இடரை குறைப்பதற்காக 10 பரிந்துரைகளை பட்டியலிட்டுள்ளார்கள், அவற்றில் கீழே கொடுத்துள்ள உணவு சம்பந்தப்பட்ட பின்பற்றத்தக்க வழிமுறைகள் அடங்கும்:(1) எடையை அதிகரிக்கும் உணவுகளை மற்றும் பானங்களை குறைத்தல், அதாவது சக்தி நிறைந்த உணவுகள் மற்றும் சீனி கலந்த பானங்கள், (2) தாவரங்களை மூலமாகக்கொண்ட உணவுகளை மிகையாக உண்பது, (3) புலால் இறைச்சியை குறைவாக உட்கொள்வது மற்றும் பதப்படுத்திய இறைச்சியை தவிர்ப்பது, (4) மதுபானங்களை குறைத்து உட்கொள்வது, மற்றும் (5) உணவில் உப்பை குறைத்து உட்கொள்வது மேலும் காளானால் பாதித்த உணவுகளை (தானியங்களை) மற்றும் பருப்பு வகைகளை (அவரையினத்தினை) தவிற்பது போன்றவை அடங்கும்.[65][66]
உயிர்ச்சத்துக்கள்
புற்றுநோயை கூடுதல் உயிர்ச்சத்து அளிக்கும் மூலப்பொருள்களால் தடுக்கலாம் என்ற யோசனை இதற்கு முன் நடந்த கவனிப்புகளில் மனித நோய்கள் மற்றும் உயிர்சத்துக் குறைவுகளுக்கு இடையே தொடர்புறல் காணப்பட்டதே ஆகும், அதாவது உயிரைப் போக்கும் இரத்த சோகையான பித்தபாண்டு மற்றும் வைடாமின் 12 குறைவுக்கான தொடர்புறல், கேவிநோய் வைட்டமின் சி குறையுடன் தொடர்புறல் போன்றவை. புற்றுநோயைப் பொறுத்தவரை இது பெரிய அளவில் நிரூபிக்கப் படவில்லை, மேலும் கூடுதல் உயிர்ச்சத்து அளிக்கும் மூலப்பொருள்கள் பெரிய அளவில் புற்றுநோயை தடுப்பதாகவும் தெரியவில்லை. புற்றுநோயுடன்-போராடும் உணவில் காணப்படும் பொருட்களும் எண்ணிக்கையில் மிகையாகவும் மேலும் வேறுபட்டும் காணப் படுகின்றன, அவை முன்னர் சரிவர அறிவுக்கு எட்டவில்லை, அதனால் நோயாளிகளை அதிக அளவில் புத்தம்புதியதானதும், பதப்படுத்தப் படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை முழு அளவில் உடல்நலம் பயனடைவதற்கு, உணவில் சேர்த்துக்கொள்ள, அறிவுரை வழங்கப்படுகிறது.[67]
நோய் விபரவியல் ஆய்வுகள் குறைவான வைட்டமின் D நிகழ்நிலைக்கும் புற்றுநோய் தொடர்புரல் இருப்பதால் புற்றுநோய் சூழ் இடருக்கு அதிக வாய்ப்புள்ளதை காட்டுகிறது.[68][69] எனினும், இது போன்ற ஆய்வுகளின் விளைவுகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும், ஏன் என்றால் இரு காரணிகளுக்கிடையே இயைபுபடுத்தல் இருந்தாலும் ஒன்றின் விளைவாக மற்றொன்று ஏற்படுவதாக நிரூபிக்க இயலாது. (அதாவது இயைபுபடுத்தல் இருந்தாலும் அது நோய்க்காரணியாக இருக்காது).[70] வைட்டமின் D புற்றுநோயை தடுக்கவல்லது என்ற சாத்தியக்கூறு, சூரிய ஒளி வெளிப்பாட்டின் காரணம் பரவும் புற்றிநம் ஏற்படும் சூழ் இடருடன் முரண்பாடாக உள்ளது. சூரிய ஒளிக்கு உடலை வெளிப்படுத்துவதால் இயற்கையாகவே மனித உடலில் வைட்டமின் D உற்பத்தி பெருகுகிறது, சில புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சூரிய வெளிப்பாட்டால் ஏற்படக்கூடிய தீங்கு விளைவிக்கும் ஆற்றல் கொண்ட புற்றுப்பண்பு தாக்கங்களை விட, சூரிய வெளிச்சத்திற்கு உட்பட்ட சருமத்தில் உற்பத்தியாகக்கூடிய மிகையான வைட்டமின் D கலவையின் புற்றுநோயை தடுப்பதற்கான விளைவுகள் அதிக அளவில் சாதகமாக இருக்கும் என்று வாதிக்கின்றனர். 2002 ஆம் ஆண்டில், டா. வில்லியம் B. கிராண்ட் அமெரிக்காவில் ஆண்டுதோறும் புற்றுநோய் காரணமாக 23,800 முழுமுதிர்வற்ற இறப்புகள் போதுமளவிற்கு UVB வெளிப்பாடு இல்லாததால் (தெளிவாக வைட்டமின் D குறைவால்) நிகழ்வதாக கூறுகிறார்.[71] இந்த எண்ணிக்கையானது, மெலனோமா (கருங்கட்டி) அல்லது செதிள் கலன் கார்சினோமாவால் (புற்றுநோய்) நிகழும் 8800 இறப்புகளைவிட மிக அதிகமானது, அதனால் சூரிய வெளிப்பாட்டால் ஒட்டுமொத்தமாக பயனடையலாம் என்பது அவர் கருத்து. மற்றோர் ஆராய்ச்சிக்குழுவினர் [72][73] ஆண்டுதோறும் முழுமுதிர்ச்சி அடையாமலேயே புற்றுநோய் காரணமாக 50,000–63,000 தனி நபர்கள் அமெரிக்காவில் மற்றும் 19,000-25,000 தனிநபர்கள் UK நாட்டிலும் குறைவான வைட்டமின் D காரணம் இறப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.
பீட்டா-காரோடீன் சார்ந்த நிகழ்வு சமவாய்ப்புள்ள மருத்துவ சோதனை ஒத்திகைகளின் முக்கியத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.புறப்பரவியல் நிபுணர்கள் ஆராய்ந்த உணவு மற்றும் ஊனீர் அளவுகளை உற்றுநோக்கிய பொழுது அதிக அளவில் பீட்டா-காரோடீன்,[[வைட்டமின் A (A உயிர்ச்சத்து)|வைட்டமின் எ]]யின் முன்னோடியை கண்டனர், இவை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது, புற்றுநோயின் சூழ் இடர்களை குறைக்கின்றது. இந்த தாக்கம் நுரையீரல் புற்றுநோயில் அதிகமாக காணப்பட்டது. இந்த கருதுகோள் காரணம் மேலும் அதிக அளவிலான சமவாய்ப்புள்ள மருத்துவ சோதனை ஒத்திகைகள் பின்லாந்து மற்றும் அமெரிக்க (CARET ஆய்வு) நாடுகளில் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் நடந்தன. இந்த ஆய்வில் 80,000 புகைப்பிடிப்போர் அல்லது புகைபிடிப்பை விட்ட மக்களிடம் பீட்டா-காரோடீன் அல்லது மருந்துப்போலிகள் சேர்க்கைப்பொருட்களாக அளித்து சோதித்துப்பார்த்தனர். எதிர்பார்ப்பிற்கு எதிராக, இச்சோதனைகளில் பீட்டா-காரோடீன் சோக்கைப்பொருள் நுரையீரல் புற்றுநோய் நிகழ்வு மற்றும் இறப்பியல்பை குறைத்ததாக தெரியவில்லை. உண்மையில், நுரையீரல் புற்றுநோய் உண்டாவதற்கான சூழ் இடர் சற்று குறைந்தாலும் பீட்டா-காரோடீன் இதை சற்று உயர்த்தினாலும், அது மிகையாக குறையவில்லை, அதனால் இந்த ஆய்வு சற்று முன்பாகவே கைவிடப்பட்டது.[74]
ஜெர்னல் ஒப் தி அமெரிக்கன் மெடிகல் அஸ்சோசியேஷன் (JAMA) 2007 ஆம் ஆண்டில் போலிக் அமிலத்தின் சேர்க்கையால் பெருங்குடல் புற்றுநோய் தவிர்க்கப்படுவதில்லை என்றும், மேலும் போலேட் பயன்படுத்தியவர்களுக்கு பெருங்குடல் பவளமொட்டுக்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தங்களது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.[75]
கெமொப்ரிவேன்ஷன் (இரசாயன வகை தடுப்புமுறை)
மருந்துகளை உட்கொள்வதால் புற்றுநோயை தடுக்க இயலும் என்ற கருத்துப் படிவம் மனதை கவர்வதாக இருப்பதுடன், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ரசாயனவகை தடுப்புமுறையானது பல உயர்தர மருத்துவ சோதனை ஒத்திகைகளில் பயனுள்ளதாக இருப்பதால் அதற்கான ஆதரவு இருந்து வருகிறது.
தமொக்சிபென் என்ற ஒரு தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி (SERM), தொடர்ச்சியாக தினமும் ஐந்து வருடங்களுக்கு உட்கொண்டால், அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் அதிக சூழ் இடர் கொண்ட பெண்களில் 50% அளவுக்கு குறைவதாக கண்டறிந்துள்ளார்கள். அண்மையில் நடந்த ஒரு ஆய்வில் தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி ரலோக்சிபென் என்ற மருந்தும் தமொக்சிபென் போலவே அதே போன்ற இயல்புகளை கொண்டு, அதிக சூழ் இடர் கொண்ட பெண்களில், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது, மேலும் அது சாதகமான பக்கவிளைவுகள் கொண்டதாகவும் உள்ளது.[76]
ரலோக்சிபென் என்பதும் தமொக்சிபென் போல ஒரு தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி (SERM) ஆகும்; மேலும் அது (STAR ஒத்திகையில் நடந்ததை போலவே) தமொக்சிபென் னுக்கு இணையாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழ் இடரை உயர்ந்த சூழ் இடர் கொண்ட பெண்களில் குறைக்கவல்லதாகும். இந்த ஒத்திகையில், அது ஏறத்தாழ 20,000 மகளிரை சோதனையில் ஈடுபடுத்தியது, ரலோக்சிபென் உட்கொண்டவர்களுக்கு, தமொக்சிபேன் பயன் படுத்தியவர்களை விட குறைவான பக்க விளைவுகள் ஏற்பட்டது, எனினும் அது அதிக அளவில் DCISஐ உற்பத்தி செய்தது.[76]
பிநஸ்டேரைட், அது ஒரு 5-அல்பா-ரிடக்ட்ஸ் இன்கிபிடர் ஆகும், சுக்கிலவகம் புற்று நோய் ஏற்படும் சூழ் இடரை அது குறைப்பதாக கண்டறிந்துள்ளது, ஆனால் அவை மிக்கவாறும் தரம் குறைந்த புற்றுநோய்கள் ஆகும்.[77] COX-2 மட்டுப்படுத்திகள் ரோபிகோக்சிப் மற்றும் சேலேகோக்சிப் பயன்பாட்டால் பெருங்குடல் பவளமொட்டுக்கள் பாதிப்பை அறிவதற்கு குடும்பவழி சுரப்பிப்பெருக்க விழுதிய நோயாளிகளையும் [78] பொது மக்களையும் கொண்டு ஒத்திகை நடந்தது. [163][165] இரு குழுக்களிலும்,பெருங்குடல் விழுது நிகழ்வு ஏற்படும் சூழ் இடரில் கணிசமான குறைப்பு இருந்தாலும், ஆனால் அதனால் இதய குழலில் நச்சுப்பண்பு மிகையாக தென்பட்டது.
மரபுக்கரு பரிசோதனை
புற்றுநோய்க்கு அதிக சூழ் இடர் உள்ள தனி மனிதர்களின் மரபுக்கரு பரிசோதனை சில புற்றுநோய் சம்பந்தமுள்ள பிறழ்வுகளுக்கு நிகழக்கூடியவையாகும். மரபுக்கரு பிறழ்வுகளால் பாதிப்படைந்தவர்களுக்கு புற்றுநோய் தாக்கத்தின் சூழ் இடர் அதிகமாக உள்ளதால், அவர்கள் அதிக அளவிலான கடும் கண்காணிப்பு, இரசாயன தடுப்புமுறைகள், அல்லது சூழ் இடரை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற புற்றுநோயை முன்னரே அடையாளம் காட்டும் பரிசோதனைகள், மரபுரிமை சார்ந்தவர்களுக்கு சூழ் இடர் அதிகமாக உள்ளதால், புற்றுநோயை தடுக்கும் அறுவை சிகிச்சை மற்றும் கடும் கண்காணிப்பு போன்ற இடைத்தடைகளுடன் செயல்படுவது உயிரை காக்கவல்லதாக இருக்கும்.
மரபணு புற்றுநோய் வகைகள் கிடைக்கக்கூடிய தன்மை
BRCA1, BRCA2 மார்பக, முட்டையக, கணையம்.
மருத்துவ மாதிரிகளுக்கு வணிகரீதியாக கிடைக்கும்
MLH1, MSH2, MSH6, PMS1, PMS2 பெருங்குடல் , கருப்பைக்குரிய, சின்ன குடல்,
வயிறு, சிறுநீருக்குரிய பாதை
மருத்துவ மாதிரிகளுக்கு வணிகரீதியில் கிடைக்கும்
தடுப்பூசி போடுதல்
நச்சுயிரிகள் போன்ற புற்றுநோய் தோற்று காரணிகளால் தோற்று நோய் வராமல் தடுப்பதற்காக முற்காப்பி தடுப்பூசிகள் கண்டறிந்துள்ளார்கள். மேலும் குறிப்பிட்ட புற்றுநோயைக் குறிவைத்த, எபிடோபுகளுக்கு (வெளிசிறுசுறாக்கள்) (எதிராக செயல்படும் நோய் தடுப்பாற்றல் கொண்ட) மருத்துவ தடுப்பூசிகளை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.[79]
மேலே கூறியது போல், மனித பாப்பிலோமா நச்சுயிரி தடுப்பூசி ஒன்று நிகழ்வில் உள்ளது, அது சில பாலியல் சார்புடைய மனித பாப்பிலோமா நச்சுயிரியை குறியாக கொண்டு, அதனால் விளையும் கழுத்துப்பட்டை புற்றுநோய் மற்றும் இன உறுப்பு மருக்கள் போன்றதை தடுப்பதற்கான தடுப்பூசியாகும். ஒக்டோபர் 2007 ஆம் ஆண்டு வரை இரு HPV தடுப்பூசிகளே சந்தையில் கிடைக்கப் பெற்றது, அவை கர்டாசில் மற்றும் செர்வரிக்ஸ் ஆகும்.[79] மேலும் ஹெபடிடிஸ் B தடுப்பூசி, அது ஹெபடிடிஸ் B தீநுண்மத்தினால் ஏற்படும் தொற்றை தடுக்கிறது, அந்த தொற்று நோய்பரப்பி மூலம் கல்லீரல் புற்றுநோய் வரலாம்.[79] ஒரு விலங்கின மெலனோமா (கருங்கட்டி; கறும்புத்து) தடுப்பூசியைக் கூட மேம்படுத்தியுள்ளார்கள்.[80][81]
திரையிடல்
முதன்மைக் கட்டுரை: Cancer screening
புற்றுநோய் திரையிடல் என்பது ஒரு அறிகுறியில்லா மக்கள்தொகையில் இருப்பவர்களிடையே எதிபாராத புற்றுநோய் தாக்கலை முன்னரே கண்டுபிடித்து அறிந்து கொள்ளும் முயற்சியே ஆகும். பெரிய எண்ணிக்கையில் உடல் நலன் கொண்ட மக்களை திரையிடல் சோதனைக்கு ஆளாக்குவது என்பது செலவுகள் குறைந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், உடலில் துளைக்கும் நுட்பம் அல்லாத மற்றும் பாதிப்பு விளையும் தன்மை இல்லாததாகவும் மேலும் அதன் விளைவாக தவறுதலான நோய்பாதிப்பை குறிக்கும் விளைவுகள் குறைந்த விகிதம் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், அப்போது உறுதி செய்யும் வகையிலான மற்றும் உடலை துளைக்கும் நுட்பம் கொண்ட சோதனைகளை மேற்கொண்டு மருத்துவ அறுதியிடலை உறுதி செய்யவேண்டும்.
புற்றுநோய்க்கான திரையிடல் மூலம் சில தனிப்பட்ட நிகழ்வுகளில் முன்னரேயே அறுதியிடல் சாத்தியமாகிறது. முன்னரேயே அறுதியிடல் ஆனால், அதனால் நீண்ட வாழ்க்கை வாழ வழி வகுக்கும், ஆனால் அதுவே இறப்பிற்கு இட்டுச்செல்லும் நேரத்தை தவறுதலாக நீடிக்க, அதாவது இட்டுச்செல்லும் நேர ஒருபுறச்சாய்வு அல்லது நீட்ட நேர ஒருபுறச்சாய்வு, மூலம் வழி வகுக்கும்.
பல விதமான வேறுபட்ட திரையிடல் சோதனை முறைகள் வெவ்வேறு புற்றுப்பண்புகளை சோதித்து அறிவதற்கு மேம்படுத்தப் பட்டுள்ளன.மார்பக புற்றுநோய் திரையிடல் மார்பக தன்-சோதனை (தன் உடலை தானே சோதித்துக் கொள்வது) மூலம் செய்யலாம், ஆனால் சைனாவில் 300000 பெண்கள் பங்கு கொண்ட 2005 ஆம் ஆண்டில் நடந்த சோதனையில் இந்த முறை தவறானது என்று மதிப்புக்குலைவு ஏற்பட்டது. முலை ஊடுகதிர்ப்படம் சோதனைகள் மூலமாக மார்பக புற்றுநோய் அறிகுறியை திரையிடுதல் ஒரு மக்கள் தொகையின் சராசரி அறியுறுதல் நிலையை குறைப்பதாக கண்டுள்ளது. முலை ஊடுகதிர்ப்படம் சோதனை முறைகளை அறிமுகபடுத்திய பத்து ஆண்டுகளுக்குள், ஒரு நாட்டின் அறுதியிடல் நிலையானது குறைவதை கண்டுள்ளனர். பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்றுநோய் மல மறைவான இரத்த சோதனை மற்றும் பெருங்குடல் அகநோக்கல் மூலம் ஆய்ந்து காணலாம், இதனால் பெருங்குடல் புற்றுநோய் நிகழ்வு மற்றும் இறப்பு குறைந்து காணப் படுகிறது, அதை முன்னதாகவே அறுதியிட்டதாலும் மற்றும் முன்-புற்றுப்பண்பு (உயிரணுக்களில் புற்றுநம் பரவுவதற்கு முன்) பவளமொட்டுக்கள் அகற்றப் பட்டதாலும் அது நிகழ்ந்திருக்கலாம். அதேபோல், கழுத்துப்பட்டை உயிரணுவியல் சோதனை காரணம் (போப் ஸ்மியர்பயன்பாடு மூலம்) நோயை அடையாளம் கண்டு புற்றுப்பண்பு அடையும் கலன்கள் குறைவாக இருக்கும் நிலையிலேயே அகற்றப்படுகிறது. காலப்போக்கில், இது போன்ற சோதனைகளால் கழுத்துப் பட்டை புற்றுநோய் நிகழ்வுகள் மற்றும் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. விரைச்சிரை புற்றுநோய்கண்டறிதலுக்கு 15 வயது முதல் ஆண்கள் விரைச்சிரை தன் சோதனைமூலம் தன்னையே சோதித்துப்பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுக்கிலவகம் புற்றுநோய் திரையிடலுக்கு ஒரு டிஜிட்டல் மலக்குடல் சோதனை கருவியுடன் சுக்கிலவக தனிப்பட்ட எதிர்ச்செனியை பயன்படுத்தி, (PSA) இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், சில அதிகாரப்பட்டயங்கள் (US ப்ரிவெண்டிவ் செர்விசெஸ் டாஸ்க் போர்ஸ் (போன்ற)) எல்லா மனிதர்களிடமும் வழக்கமாக திரையிடுதலை அனுமதிப்பதில்லை.
சோதனைகளால் உயிர்கள் காக்கப்படலாம் என்பதில் சந்தேகம் இருக்கும் நிகழ்வுகளில், புற்று நோய்க்கான திரையிடல் சர்ச்சைக்குரியதே. திரையிடுவதன் மூலம் ஏற்படும் ஆதாயங்கள் பின்னர் ஏற்படக்கூடிய அறியிடுதல் சோதனை மற்றும் புற்று நோய்க்கான சிகிச்சை மேற்கொள்வதற்கான சூழ் இடரை விட அதிகமாக இருப்பதற்கான தெளிவு சரியாக அமையாத போது, இது போன்ற சர்ச்சைகள் எழுகின்றன. எடுத்துக் காட்டு:சுக்கிலவகம் புற்றுநோய்க்கான திரையிடல் மேற்கொள்ளும் போது, PSA சோதனையில் சிறிய புற்றுநோய் காரணிகள் தென்படலாம், அவை உயிருக்கு பாதகம் விளைவிக்காமல் இருக்கலாம், ஆனால் அவற்றை கண்டுபிடித்ததால் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும். இந்த நிலைமை, அதாவது ஓவர்டையக்நோசிஸ் (மிகையான அறுதியிடல்), மனிதனை தேவையில்லாத சிகிச்சைகளுக்கான சூழ் இடரை ஏற்படுத்துகிறது, அதாவது அறுவை சிகிச்சை மற்றும் கதிர் இயக்கம். பின்தொடர் விளைவுகளான சுக்கிலவகம் புற்றுநோய் அறுதியிடலுக்கு (சுக்கிலவகம் உடல் திசு ஆய்வு) மேற்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படலாம், அதில் இரத்தக் கசிவு மற்றும் நோய் தொற்று அடங்கும். சுக்கிலவகம் புற்றுநோய் சிகிச்சை முறையால் அடக்கமற்ற மலமொழுக்கு (மலம் கழிப்பதை கட்டுப்படுத்த இயலாமை) மற்றும் விறைக்கும் செயல் பிறழ்ச்சி (புணற்சி விரத்தல் இயலாமை) ஏற்படலாம். அதேபோல, மார்பக புற்றுநோய், அண்மையில் மார்பக திரையிடல் நிகழ்வுகளுக்கு ஏகப்பட்ட மதிப்பீடுகள் வந்தன, சி்ல நாடுகள் திரையிடுவதால் தீரும் பிரச்சினைகளை விட உருவாகும் பிரச்சினைகள் மிகைப்படுவதாக அவர்கள் காண்கிறார்கள். இது ஏன் என்றால் பொது மக்களில் இருந்து பெண்களை திரையிடுவதற்கு அதிக எண்ணிக்கையில் தவறான விடைகளை அளிக்கும் சாத்தியக்கூறினால் பின்தொடரும் நீண்ட நாட்கள் கொண்ட சோதனைகளை மேற்கொள்தலும், அதனால் அதிக அளவில் சோதனை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது, ஒரே ஒரு மார்பக புற்றுநோய் நிகழ்வினை முன்னரே அறிந்து கொள்வதற்காக.
மக்கள் உடல் நலனை கருத்தில்கொண்டு பார்த்தால், போப் ஸ்மியர் முறையில் கழுத்துப்பட்டை புற்றுநோய் திரையிடல் செயலாக்கம் மிகவும் நல்ல சிலவு-ஆதாயம் பாகுபாட்டை தருகிறது, மற்ற அனைத்து வகையிலான புற்றுநோய் திரையிடல்களை விட, ஏன் என்றால், அது மிக்கவாறும் தீநுண்மம் காரணம் உருவாகிறது, அதன் சூழ் இடர் காரணிகள் தெளிவானவை ஆகும் (பாலியல் தொடர்பு), மற்றும் கழுத்துப்பட்டை புற்றுநோயின் இயற்கையான வளர்ச்சி அது பொதுவாக மிகவும் மெதுவாக பல ஆண்டுகளுக்கு பிறகு பரவுகிறது அதனால் திரையிடல் திட்டம் மூலம் அதை முன்னராகவே அறிந்து கொள்ளலாம். அதோடல்லாமல், இந்த சோதனையை எளிதாக செயலாக்க இயலும் மற்றும் ஒப்பிட்டு பார்க்கையில் மலிவானதாகவும் இருக்கிறது.
இக்காரணங்களால், ஆதாயங்கள் மற்றும் அறுதியிட்டு கூறுதலுக்கான சூழ் இடர்கள் மற்றும் சிகிச்சை அளித்தல் போன்றவைகளை முக்கியமாக கணக்கில் எடுத்துக்கொண்டு புற்றுநோய் திரையிடல் செய்வதற்கான முடிவை எடுக்க வேண்டும்.
இதைப்போலவே மருத்துவ இயல்நிலை வரைவு பயன்பாடு, மக்களில் புற்றுநோய் நிகழ்வதை தெரிந்து கொள்வதற்காக, தெளிவான அறிகுறிகள் இல்லாமல் மேற்கொள்வது என்பதும் சர்ச்சைக்குரியதே. இன்சிதேண்டலோமா என்ற தீங்கற்ற நசிவை கண்டுபிடிப்பதற்கு மிக அதிக சூழ் இடர் இருப்பது தெளிவாகியது, அது பரவும் புற்றுப்பண்பு கொண்ட நோய் என்று பொருள் விளக்கம் செய்துகொண்டு பின்னர் அபாயகரமான விளைவுகள் கொண்ட சோதனைகளை மேற்கொள்ளும் கட்டாயம் ஏற்படும். CT ஸ்கேன் ஆதாரமாக கொண்டுள்ள அண்மையில் நடந்த புகையிலை புகை பிடிப்போர்களிடம் நுரையீரல் புற்று நோய் திரையிடல் ஆய்வின் முடிவில், முடிவுகள் சமநிலையாக இருந்தன மேலும் முறையான திரையிடலுக்கான அறிவுரை, ஜூலை 2007 ஆம் ஆண்டில், பரிந்துரை செய்யவில்லை. புகை பிடிப்போரின் எளிய திரை நுரையீரல் X-ரேக்களை கொண்டு நுரையீரல் புற்றுநோய் ஆய்வுகள் சமவாய்ப்புள்ள மருத்துவ சோதனை ஒத்திகைகள் முறையில் நடத்திப்பார்த்ததில் இந்த அணுகுமுறையால் ஒரு பயனும் காணவில்லை.
நாய்களில் புற்றுநோய் கண்டுபிடிப்புகளால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் அவை ஆராய்ச்சியின் முதல் கட்ட நிலையில் தான் இருக்கிறது.
நோய் நிர்ணயம்
மிக்க வகையான புற்றுநோய்களையும் முதலில் அதன் தோற்றங்கள் மற்றும் அறிகுறிகளை வைத்தோ அல்லது திரையிடல் மூலமாகவோ கண்டறியலாம். இவ்விரு வழிகளும் ஒரு நோயை அறுதியிட்டுக்கூற இயலாது, அதற்கு ஒரு நோயியல் மருத்துவரின் (பாதொலோஜிச்ட்டின்) உதவி தேவைப்படுகிறது, அவர் ஒரு புற்றுநோய் மற்றும் இதர நோய்களை அறுதியிடும் மருத்துவராவார்.
பரிசோதனை
நெஞ்சின் x-ரே நுரையீரல் புற்று நோய் இடது புற நுரையீரலில்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகம் கொண்டவர்களை மருத்துவ சோதனைகள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றனர். இவை பொதுவாக இரத்தப் பரிசோதனைகள், X-ரேக்கள் (கதிர்கள்), CT ஸ்கேன்ஸ் (வருடிகள்) மற்றும் உடற்குழாய் உள்நோக்கல் போன்றவையாகும்.
உடல் திசு ஆய்வு
பல காரணங்களுக்காக புற்றுநோய் இருப்பதாக சந்தேகித்தாலும், புற்றுநத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு புற்றுநோய் கலன்களை நோயியல் மருத்துவரின் திசுவியல் பரிசோதனைக்கு பிறகே புற்றுநோய் இருப்பதாக உறுதியாக கூறமுடியும். திசுவை உடல் திசு ஆய்வு (பைஆப்ஸி) அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் பெறலாம். பலவகையான உடல் திசு ஆய்வுகள் (சருமம், மார்பகம் அல்லது குடல் போன்றவை) மருத்துவரின் அலுவலகத்தில் செய்யலாம். உறுப்புகளின் திசு ஆய்வை உணர்வகற்றலுக்கு பிறகு அறுவையரங்கில் அறுவை சிகிச்சை மூலம் பயனடையலாம்.
நோயியல் மருத்துவர் அளிக்கும் திசு ஆய்வு அறியிடுதல் அறிக்கையில் இனப்பெருக்கம் அடையும் கலனின் வகை மற்றும் அது பரவும் விதம், அதன் திசுவியல் தரம், சார்ந்த மரபணு இயல்பு மாற்றங்கள், மற்றும் கட்டியின் இதர அம்சங்கள் அனைத்தும் அடங்கும். ஒன்றுசேர்ந்து, இந்த தகவல் நோயாளியை முன்கணிப்பு செய்வதற்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வுசெய்யவும் பயன்படுகிறது. உயிரணு மரபியல் மற்றும் இம்முனோஹி்ஸ்டோகெமிஸ்ட்ரி போன்ற இதரவகை (தடுப்பாற்றதிசுவேதியியல்) சோதனைகளை நோயியல் மருத்துவர் திசு மாதிரியில் மேற்கொள்வார். இச்சோதனைகளின் மூலம் புற்றுநோய் கலன்களில் ஏற்பட்டுள்ள மூலக்கூற்று மாற்றங்களையும் (பிறழ்வுகள், கலந்திணைப்பு மரபணு, மற்றும் எண்ணுக்குரிய நிறமி மாறுதல்கள் போன்றவை), மேலும் அதன் எதிர்கால நடத்தை (முன்கணிப்பு) மற்றும் அதற்கான சிறந்த சிகிச்சை முறை ஆகியவை பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
சிகிச்சை
முதன்மைக் கட்டுரை புற்றுநோய்க்கான சிகிச்சை
புற்றுநோயை அறுவை சிகிச்சை, கெமொதெராபி (வேதிச்சிகிச்சை), ரேடியேஷன் தெரபி (கதிர் இயக்க சிகிச்சை), தடுப்பாற்றடக்கு மருத்துவம், ஒரு செல் நோய் எதிரணு மருத்துவம் அல்லது இதர முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். புற்றுநோய் பாத்தித்த இடம், கட்டியின் தர வரிசை, புற்றுநோயின் நிலை, மற்றும் நோயாளியின் பொதுவான (செயல்திறன் நிலைமை) நிலை ஆகியவற்றை அறிந்துகொண்ட பின்னரே சிகிச்சை முறையை தேர்வுசெய்யலாம். பல சோதனை புற்றுநோய் சிகிச்சை முறைகள் மேம்பாடு அடைந்துள்ளன.
முன் கணிப்பு
புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாக பெயர் பெற்றது. இது சில தனிப்பட்ட வகைகளுக்கு ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், புற்றுநோயின் பின்னணியில் உள்ள உண்மை நிலைமைகளை அறிந்து செயல்படுவதால், மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் வரலாற்றுப பண்புகளை தலை கீழாக மாற்றி வருகின்றன. சில புற்றுநோய்களை (ப்ரோக்நோசிஸ்) முன்கணிப்பு செய்ய இயலும் என்பதால், சில புற்றுப்பண்பில்லாத இதயத்திறனிழப்பு மற்றும் தாக்கம்போன்ற நோய்களை விட இந்நிலை கணிசமாக மேம்பட்டதாகும்.
நாளுக்கு நாள் முன்நோக்கி செல்லும் மற்றும் பரவிய புற்றுப்பண்பு நோயால் புற்றுநோயாளியின் வாழ்க்கைத்தரம் பாதிப்படைகிறது, மேலும் பல புற்றுநோய் சிகிச்சை முறைகள் (எடுத்துக்காட்டு கெமொதெராபி (வேதிச்சிகிச்சை)) போன்றவை மிகையான பக்க விளைவுகள் கொண்டதாகும். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், பல நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை தேவைப்படுகிறது, அது அவர்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் பாதிக்கிறது. நோய்குறி நீக்கல் கவனிப்பு தீர்வுகளில் நிரந்தரமான அல்லது "ஓய்வுக்கான" சிகிச்சையகத்தில் சேர்த்தல் மற்றும் பேணுதல் அடங்கும்.
உணர்ச்சிவசவகை தாக்கவிளைவுகள்
பல உள்ளூர் நிறுவனங்கள் பலவகை நடைமுறையிலான, ஆதரவுடன் கூடிய சேவைகளை புற்றுநோயாளிகளுக்கு அளித்து வருகின்றனர். ஆதரவானது துணை குழுக்கள், கருத்துரை வழங்கல், ஆலோசனை, நிதியுதவி, சிகிச்சை செய்வதற்கு சென்று வருவதற்கான வாகனவசதிகள், மற்றும் புற்றுநோயைப் பற்றிய தகவல்களை அல்லது படங்களை பகிர்தல். அக்கம்பக்கத்து நிறுவனங்கள், உள்ளூர் உடல்நல பொது பணியாளர்கள், அல்லது வட்டார ஆசுபத்திரிகளில் இதற்கான வளவசதி மற்றும் சேவைகளை அளிக்கலாம்.
கருத்துரை வழங்குதல் மூலம் புற்று நோயாளிகளுக்கு உணர்ச்சிவசவகை ஆதரவு அளித்து, அவர்கள் நோயைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள வழிவகுக்கலாம். பலவகை கருத்துரை வழங்குதலில், தனிப்பட்ட, குழு சார்ந்த, குடும்ப, பெரியவர்கள் போதனை, இழப்பு, நோயாளியுடன்-நோயாளி மற்றும் பாலுறவுக்குற்றம் போன்றவை அடங்கலாம்.
புற்றுநோயாளிகளின் வேதனையை அறிந்து அவர்களுக்கு சேவை புரிவதற்காக பல அரசாங்க மற்றும் அறநல நிறுவனங்கள் நிறுவியுள்ளார்கள். இந்நிறுவனங்கள் அடிக்கடி புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புறப்பரவியல்
முதன்மைக் கட்டுரை: Epidemiology of cancer
அமெரிக்காவில் நிகழும் 25% இறப்புக்கு புற்றுநோயே காரணமாகும்; மற்றும் உலகத்தின் பலபாகங்களிலும் புற்றுநோய் ஒரு பெரிய பொது சுகாதாரப்பிரச்சினை ஆகும். அமெரிக்காவில், புற்றுநோயால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 30% பங்கு நுரையீரல் புற்றுநோய் காரணம் இறந்தவராகும், ஆனால் அது புதிய புற்றுநோய் நிகழ்வுகளின் சுமார் 15% பங்கு வகிக்கிறது; ஆண்களில் பொதுவாக மிகையாக காணப்படுவது சுக்கிலவக புற்றுநோய் ஆகும் (சுமார் 25% புதியநிகழ்வுகள்) மற்றும் பெண்களில் மார்பக புற்றுநோய் (அதுவும் சுமார் 25%). புற்றுநோய் சிறுவர்களிலும் மற்றும் இளம் வயதினருக்கும் வரலாம், ஆனால் அது அரிதாகும் (அமெரிக்காவில் சுமார் 150 நிகழ்வுகள் ஒரு மில்லியணுக்கு), இதில் பொதுவாக காணப்படுவது லுகேமியா (இரத்தப்புற்று) நோயாகும்.[82] அமெரிக்காவில், வாழ்க்கையின் முதல் ஆண்டில் இதன் நிகழ்வு சுமார் 230 நிகழ்வுகள் ஒரு மில்லியனுக்கு, அதில் மிகவும் பொதுவானது நரம்புமூலச்செல்புற்று ஆகும்.[83]
உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய் காரணமான இறப்பு, மாற்றக்கூடிய சாத்தியமுள்ள சூழ் இடர்கள் கொண்டவையாகும், அவற்றில் முதலில் வருவன புகையிலை புகைபிடித்தல், மது அருந்துதல், மேலும் உட்கொள்ளும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள்குறைவாக இருத்தல். முன்னேற்றமடைந்த நாடுகளில் எடைகூடுதல் மற்றும் உடல் பருமன் போன்றவையும் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன, மேலும் குறைந்த-மற்றும்-நடுத்தர வருமானம் கிடைக்கப்பெறும் நாடுகளில் பாலியல் செலுத்தல் காரணமான மனித பாப்பிலோமா நச்சுயிரிமூலம் கழுத்துப்பட்டை புற்றுநோய்க்கு மிகையான சூழ் இடருள்ளதாகும்.[40]
வரலாறு
இன்று, கார்சினோமா (புற்றுநோய்)என்று வழங்கும் மருத்துவச்சொல், எபிதேலியல் (தோல் மேல்புறத்து) உயிரணுக்களில் தோன்றும் புற்றுப்பண்புகொண்ட கட்டியை குறிக்கும் கார்சினோமா என்ற கிரேக்கச்சொல்லில் இருந்து பெற்றதாகும். செல்சஸ் என்பவர் கார்சிநோஸ் என்ற சொல்லை லத்தீன் மொழியில் கான்செர் என்று மொழிபெயர்த்தார், அதன் பொருளும் நண்டு ஆகும். காலேன் என்பவர் "ஆன்கோஸ் " என்ற சொல்லை, அனைத்து வகையான கட்டிகளையும் விளக்க பயன்படுத்தினார், நவீனச்சொல்லான ஆன்கோலோஜி (புத்தாக்கவியல்)[84] யின் மூலம் அதுவேயாகும்.
ஹிப்போக்ரேடஸ் பலவகையான புற்றுநோய்களுக்கு விளக்கம் தந்துள்ளார். அவர் தீங்கற்ற கட்டிகளை ஆன்கோஸ் என்று அழைத்தார், கிரேக்க மொழியில் வீக்கம், மற்றும் மாலிக்னன்ட் ட்யுமர்களை (புற்றுப்பண்பு கொண்ட கட்டி) கார்சிநோஸ், கிரேக்க மொழியில் நண்டு அல்லது க்ரேபிஷ் என்று பொருள்படும். ஒரு திடமான புற்றுப்பண்பு கொண்ட கட்டியை வெட்டியெடுத்து அதன் மேல்புறம் பார்க்கையில் கிடைக்கும் தோற்றத்தின் அடிப்படையில், "நண்டு என்ற விலங்கின் கால்களைப்போல அதன் நரம்புகள் எல்லா பக்கங்களிலும் நீட்டி இருந்ததால், அதிலிருந்து இந்தப்பெயர் நிலைத்தது."[85](படம் பார்க்க). அவர் பிறகு பின் ஒட்டு சொல்லான -ஒமாவை, கிரேக்க மொழியில் வீக்கம், சேர்த்தார், அப்படி அந்தப்பெயர் கார்சினோமா (புற்றுநோய்) என்று மறுவியது. உடலைத்திறந்து காட்டுவது என்பது கிரேக்கப்பண்பாட்டிற்கு எதிராக இருந்தமையால், ஹிப்போக்ரேடஸ் அவற்றை விளக்குவதோடு நிறுத்திக்கொண்டார் மற்றும் வெளியே பார்க்ககூடிய சருமம், மூக்கு, மற்றும் மார்பக கட்டிகளின் படங்களை வரைந்தார். நகைச்சுவை கோட்பாட்டின் அடிப்படையில், நான்கு உடலை சார்ந்த திரவங்கள் (கருப்பு மற்றும் மஞ்சள் பித்த நீர், இரத்தம், மற்றும் கபம்) போன்றவற்றை கணக்கில்கொண்டு சிகிச்சை அளித்தார்கள்.. நோயாளியின் நகைச்சுவை நிலையினைப்பொறுத்து, பத்தியம், இரத்த வெளியேற்றம், மற்றும்/அல்லது மலமிளக்கி மருந்துகளைக்கொண்டு சிகிச்சையளித்தார்கள். நூற்றாண்டுகளில் புற்றுநோய் உடலில் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்று கண்டுபிடித்தார்கள், ஆனால் 19 ஆம் நூற்றாண்டு வரை நகைச்சுவை கோட்பாடு அடிப்படையிலான சிக்ச்சை பிரபலமாக நிலுவையில் நீடித்துவந்தது உயிரணுக்களை கண்டறியும் வரை.
புற்றுநோய்க்கான மிகவும் புராதனமான விளக்கம் மற்றும் அறுவை சிகிச்சை எகிப்த்திய நாட்டில் கண்டறிந்தார்கள். அது சுமார் 1600 கி.மு.நடந்ததாக தெரிகிறது. பாபிரஸ் 8 மார்பகப்புண் நிகழ்வுகளை, தீய்த்தல் சிகிச்சை மூலமாக, "நெருப்புத்துளை" என்ற கருவியைக்கொண்டு நிகழ்த்தியதாக விவரித்துள்ளது. "இந்த நோயைப்பற்றி எழுதுகையில், "இதற்கு ஒரு சிகிச்சையும் கிடையாது" என்றுரைத்துள்ளது.[86]
மேலும் மிக முன்னதான புற்றுநோய்க்கான அறுவை சிக்ச்சை 1020 ஆம் ஆண்டுகளில் ஆவிசென்னா (இப்ன் சின) என்பவர் தி காணன் ஆப் மெடிசினில் விவரித்துள்ளார். அவர் அரிதல் சமத்தொடுகோட்டுக்குரியதாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து நோயுற்ற திசு பாகங்களும் அகற்றப்படவேண்டும் என்று் கூறினார், அவற்றில் உறுப்பு நீக்கம்அல்லது கட்டியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நரம்புகளையும் நீக்க வேண்டும் என்றார். தேவைப்பட்டால் பாதிப்படைந்த பாகங்களை தீய்த்து விடலாம் என்றும் பரிந்துரைத்தார்.[87]
16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில், இறப்பின் காரணத்தை அறிவதற்காக, உடல்களை வெட்டிச்சோதித்தலை ஏற்றுக்கொள்ள மருத்துவர்கள் முன்வந்தனர். ஜெர்மன் பேராசிரியரான வில்ஹெல்ம் பாப்ரி மார்பக புற்றுநோய் முலையின் நாளங்களில் பால் உறைவதால் ஏற்படுகிறது என்று நம்பினார். டச்சு பேராசிரியரான பிரான்கோஸ் தே ல போ சில்வியஸ், டெகார்டேயின் சீடர், அனைத்து நோய்களும் ரசாயன செயல்முறைகளின் விளைவுகளால் ஏற்படுவதாகவும், மேலும் அமிலத்தன்மை கொண்ட நிணநீர் திரவம் தான் புற்றுநோய்க்கு காரணம் என்று நம்பினார். அவருடன் வாழ்ந்தவரான நிகோலஸ் துள்ப் புற்றுநோய் மெதுவாக பரவும் ஒரு விஷம் என்று நம்பினார், மற்றும் அது ஒரு படரும் வியாதியாகும் என்று முடிவெடுத்தார்.[88]
பர்சிவல் பாட் என்ற, பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணரால் புற்றுநோயின் முதல் காரணம் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது, அவர் 1775 ஆம் ஆண்டில் விதைப்பையில் ஏற்படும் புற்றுநோய் புகைபோக்கி பெருக்குபவர்களை பொதுவாக பாதித்தது என்பதை கண்டறிந்தார். இதர தனி மருத்துவர்களின் பணிகள் பல உண்மை உளநிலை தெளிவுகளை ஏற்படுத்தியது, ஆனால் மருத்துவர்கள் இணைந்து செயல்படத்தொடங்கிய போது அவர்களால் இன்னும் உறுதியான முடிவுகளை எடுக்கமுடிந்தது.
18 ஆம் நூற்றாண்டில் உருபெருக்கி மிகவும் பரவலாக பயன்பட்டது, 'கான்செர் விஷம்' (புற்றுநோய் நச்சு) தொடக்கநிலை கட்டியிலிருந்து நிணநீர் நாளங்கள் வழியாக மற்ற இடங்களுக்கு பரவுவதாக கண்டுபிடித்தனர். ("மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்)"). மெடாச்டாசிஸ் 1871 மற்றும் 1874 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, ஆங்கில அறுவை சிகிச்சை நிபுண மருத்துவரான காம்ப்பெல் தே மோர்கன்[89] புற்றுநோயை பற்றிய இந்த கருத்தை வகைப்படுத்தி முதலில் கூறினார்: அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தது சுகாதார குறைபாடுகளினால் குறைவான விளைவுகளை ஏற்படுத்தியது. பெயர்பெற்ற ஸ்காட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணரான அலெக்சாண்டர் மொன்றோ 60 மார்பக புற்று நோயாளிகளிலிருவர் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு உயிர் பிழைத்ததாக கண்டார். 19 ஆவது நூற்றாண்டில், சீழ்த்தவிர்ப்பு அறுவை சிகிச்சையின் சுகாதாரத்தை மேம்படுத்தியது மேலும் உயிர்பிழைத்தலுக்கான புள்ளிவிபரம் மேல்நோக்கி சென்றது, அறுவை சிகிச்சை மூலமாக கட்டியை நீக்குவது புற்றுநோய்க்கு முதன்மையான சிகிச்சைமுறையாக ஆனது. 1800 ஆம் ஆண்டின் இறுதியில், வில்லியம் கோலியை தவிர, அவர் சீழ்த்தவிர்ப்பு முறைக்கு முன்னர் நடந்த அறுவை சிகிச்சைகளில் குணப்படுத்தும் விகிதம் அதிகமாக இருந்ததாக உணர்ந்தார் (மேலும் அவர் நுண்ணுயிர்களை ஊசி மூலம் கட்டிகளில் செலுத்தி கலந்த முடிவுகளை பெற்றார்), புற்றுநோய் சிகிச்சை ஒரு தனி கலையாக, அறுவை சிகிச்சை நிபுணரின் கட்டியை நீக்கும் கைவண்ணத்தை பொறுத்து இருந்தது. அதே நேரத்தில், உடலானது பல திசுக்களை கொண்டது மற்றும், அவை தன் சுற்றில் ஆயிரக்கணக்கான உயிரணுக்களால் உருவானவை என்ற எண்ணம், உடலில் உள்ள ரசாயன சமசீரின்மைபோன்ற கருத்துக்கள் கொண்ட நகைச்சுவை கோட்பாடுகள் மறைவதற்கு காரணமாக திகழ்ந்தன. உயிரணு நோய்க்குறியியலின் காலம் பிறந்து விட்டது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்,மேரி குரீ மற்றும் பிஏர் குரீ கதிர் இயக்கத்தை கண்டுபிடித்த போது, அவர்கள் தட்டுத்தடுமாறி முதன் முதலான அறுவை-அல்லாத புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் முறையை இடறித்தடுமாறி வழிவகுத்தார்கள். கதிர் இயக்கத்துடன் இணைந்து முதல் முறையாக புற்றுநோய் சிகிச்சைக்கு பன்முக அணுகுமுறை அமலானது. அறுவை சிகிச்சை நிபுண மருத்துவர் மேலும் தனியாக செயல் படவில்லை, ஆனால் மருத்துவமனையின் கதிரியக்க நிபுணர்களு்டன் நோயாளிகளை உதவுவதற்கு சேர்ந்து பணிசெய்ய தொடங்கினார்.
இதனால் கருத்துப்பரிமாற்றத்தில் பல சிக்கல்கள் தோன்றின, மேலும் அதனால் நோயாளியை வீட்டிற்கு பதிலாக ஆசுபத்திரியில் சிக்கிச்சையளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் அத்துடன் சேர்ந்து நோயாளியின் தரவு மருத்துவமனை கோப்புகளில் சேகரித்தார்கள், அதன் மூலமாக முதல் முறையாக நோயாளிகளின் புள்ளி விவர ஆய்வுகள் மேற்கொண்டார்கள்.
ஜானெட் லேன்-க்லைபன்புற்றுநோய் புறப்பரவியல் பற்றிய தன் பணிகளை, ஒரு நிறுவும் கட்டுரையானது, அவர் 1926 ஆம் ஆண்டில் 500 மார்பக புற்றுநோயாளிகள் மற்றும் 500 கட்டுப் படுத்திய நோயாளிகளை, அவர்கள் ஒரே மாதிரியான பின்னணி மற்றும் வாழ்வு முறை கொண்டவர்கள், ஒப்பிட்டு பிரிட்டிஷ் சுகாதார அமைச்சகத்திற்காக ஒரு கட்டுரையை வெளியிட்டார். அவர் புற்றுநோய் புறப்பரவியலில் புரிந்த பணிகளை மேலும் ரிச்சர்டு டால் மற்றும் ஆஸ்டின் பிராட்போர்டு ஹில் தொடர்ந்தார்கள், அவர்கள் "புகைபிடிப்பதை சம்பந்தப்படுத்தும் நுரையீரல் புற்று நோய் மற்றும் இறப்பிற்கான இதர காரணங்கள்" என்ற கட்டுரையை வெளியிட்டார்கள். இதை தொடர்ந்து மொர்டாலிடி ஒப் பிரிட்டிஷ் டாக்டர்ஸ்" என்ற இரண்டாம் அறிக்கை 1956 ஆம் ஆண்டில் பின்தொடர்நதது. (இல்லை எனில் பிரிட்டிஷ் டாக்டர்ஸ் ஸ்டடி என்று அறியப் படுவது). ரிச்சர்டு டால் லண்டன் மெடிகல் ரிசெர்ச் சென்டரை (எம் ஆர் சி) யை விட்டு, தி ஒக்ச்போர்ட் யூனிட் போர் கான்செர் எபிடிமியோலோஜியை 1968 ஆம் ஆண்டில் தொடங்கினார். கணினிகளை பயன் படுத்தி, இந்த யூனிட் (அலகு) முதன் முறையாக அதிக அளவிலான புற்றுநோயைப்பற்றிய தரவுகளை தொகுத்தளித்து. நவீன நோய் விபரவியல் முறைகள் மற்றும் தற்போதைய நோயைப்பற்றிய கருத்துப்படிவம் மற்றும் பொது நல கொள்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வருகிறது. கடந்த 50 வருடங்களாக, அவர்கள் மருத்துவ பழக்கவழக்கம், மருத்துவமனை, மாநிலத்திற்குரிய, நாடு, மற்றும் நாட்டின் எல்லைகளையும் மீறி, அதன் வழியாக ஒன்றில்லொன்றின் சார்புள்ளமை காரணம் சுற்று சூழல் மற்றும் பண்பாட்டு காரணிகள் எவ்வாறு புற்றுநோய் நிகழ்வு ஏற்படுவதை பாதிக்கின்றது என்பதை அறிவதற்காக மிகவும் பாடுபட்டு தரவுகளை சேகரித்து உள்ளனர்.
இரண்டாம் உலக யுத்தம் வரை, புற்றுநோயாளிகளின் சிகிச்சை மற்றும் ஆய்வுகள், தனி மருத்துவரின் வழக்கங்களை பொறுத்து எல்லைக்குட்பட்டதாக இருந்தது, அப்போது மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அனைத்துலக நாடுகளுக்கிடையே புற்றுநோய் நிகழ்வில் வேறுபாடுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த உண்மையான உளநிலை, தேசீய பொது நல அமைப்புகளை சுகாதாரம் பற்றிய தரவுகளை தொகுப்பதற்கு, ஒரு இடத்தில் இருந்து அதன் கடைசி வரையிலான, அனைத்து வழக்கங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் சாத்தியமாக, வழிவகுத்தது, இந்த செயல்பாட்டை பலநாடுகளும் இன்று கடைபிடித்து வருகின்றனர். ஜப்பானிய மருத்துவர்கள் ஹிரோஷிமாவில் மற்றும் நாகசாகியில் நடந்த அணுகுண்டு வெடி சிதறலில் இறந்தவர்களின் எலும்புச்சோறு முற்றிலும் அழிந்து விட்டதாக கண்டார்கள். அதை வைத்துக்கொண்டு நோயுற்ற எலும்புச்சோறைக் கூட கதிர் இயக்கத்தால் அழிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர், மற்றும் இது லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) சிகிச்சைக்காக எலும்புச்சோறு திசுப்பொருத்தல் அறுவை சிகிச்சை முறை கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. உலக யுத்தம் II கழிந்த பின், புற்றுநோய் சிகிச்சை போக்கானது, மிக நுண்ணிய அளவில் நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது, அவற்றை தரப்படுத்துதல், மற்றும் உலகமயமாக்கிய புறப்பரவியல் மற்றும் அனைத்துலக கூட்டாண்மை வழியாக மருத்துவமுறைகளை கண்டுபிடித்து குணமடைய செய்தல் ஆகும்.
ஆராய்ச்சி வழிகாட்டுதல்
முதன்மைக் கட்டுரை: Cancer research
புற்றுநோய் ஆராய்ச்சி என்பது வியாதியின் செயல் முறைகளை அறியவும் மேலும் அதற்கான மருத்துவத்தை கண்டறிவதற்கான முனைப்பான அறிவியல்பூர்வமாக எடுக்கப்படும் தீவிர முயற்சி ஆகும். 1971 ஆம் ஆண்டில் ப்ரெசிடென்ட் நிக்ஸ்ன் "வார் ஆன் கான்செர் (கான்செருடன் போர்)" என்று உரைத்ததில் இருந்து, புற்றுநோய் ஆராய்ச்சி காரணமாக மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரணுசார் உயிரியல் போன்றவைகளில் மேம்பட்ட புரிந்துகொண்மை ஏற்பட்டதால் பல புதிய, பலனுடைய மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 1971 ஆம் ஆண்டில் இருந்து புற்றுநோய் ஆராய்ச்சியில் அமெரிக்கன் டாலர் $200 பில்லியனுக்கும் மேல முதலீடு செய்துள்ளனர்; இதில் தனியார், பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் அளித்த மூலதனமும் சேரும்.[90] இவ்வாறு கணிசமான தொகை முதலீடு செய்து இருந்தும், அந்நாடு 1950 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையே புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் ஐந்து விழுக்காடு குறைவே கண்டுள்ளது. (வயது மற்றும் மக்கள் தொகையை சரிசெய்த பின்)[91]
முன்னணியில் நிற்கும் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் ஆனவை அமெரிக்கன் அச்சொசியேஷன் போர் கான்செர் ரிசெர்ச், தி அமெரிக்கன் கான்செர் சொசைடி (ACS), தி அமெரிக்கன் சொசைடி ஒப் கிளினிக்கல் ஆன்கோலோஜி, தி யுரோபியன் ஒர்கனைசேஷன் போர் ரிசெர்ச் அண்ட் ட்ரீட்மென்ட் ஒப் கான்செர், தி நேஷனல் கான்செர் இன்ஸ்டிடுட், தி நேஷனல் கொம்ப்ரிஹென்சிவ் கான்செர் நெட்வொர்க், மற்றும் தி கான்செர் ஜினோம் அட்லஸ் திட்டம் என் சி ஐ யில் உள்ளது.
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.
புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?
புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
புகையிலை பயன்படுத்தக்கூடாது.
கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.
சூரிய ஒளியினை-10 மணியிலிருந்து 4 மணிவரை- தவிர்க்க வேண்டும்.
நல் நடத்தை.
40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்து,உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?
புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:
மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
புதிய மச்சம் அல்லது ஏற்கனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
குணப்படாத புண்கள்.
கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி
புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?
அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.
புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?
புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.
புற்று நோய் வகைகள்
புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலன்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என வழங்குகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
மார்பகப் புற்று நோய்
இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல
இரத்தப்புற்று நோய்
லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.
அறிகுறிகள்
அதிகளவில் இரத்தம் வடிதல்
இரத்தசோகை
காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
பலவீனம் மற்றும் சோர்வு
பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
மூட்டு வலி
உள்நார்தசைகள் வீக்கமடைதல்
மார்பகப் புற்றுநோய்
மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை கண் முன் நிறுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.
அறிகுறிகள்
மார்பு வீங்குதல்
மார்புக் காம்பிலிருந்து வடிதல்
மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
மார்பகம் பெரியதாகுதல்
மார்பு சுருங்குதல்
மார்பகம் கல்போல் கடினமாதல்
எலும்பு வலி
முதுகு வலி
இடர் காரணிகள்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
ஏற்கனவே பாதிப்படைந்த மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கனவே உள்ள மார்பக நோய்கள்.
மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
குழந்தை இல்லாமை.
மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.
சிகிச்சை முறை
மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது:
பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்றுவிட்டதா?
மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது?
மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை.
புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது :
புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவியிருக்கிறது?
புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தலும் எலும்பு அல்லது மூளைக்கு பரவுதலும்
புற்றுநோய் செல்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது
மோர் அக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
லெஸ் அக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)
மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்:
கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவது.
முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.
தடுத்துக் காத்தல்
மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல்.
சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.
உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்.
உலக அளவிலான புற்று நோய் மருத்துவ மையங்கள்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை - சென்னை, இந்தியா.

உணவே மருந்து உணவை உணருங்கள் - கட்டுப்படுத்த முடியாததா கேன்சர்.


உணவே மருந்து

உணவை உணருங்கள் - கட்டுப்படுத்த முடியாததா கேன்சர்..?

''ஒருநாள் குளிக்கும்போது, மார்பகத்தில் கட்டி மாதிரி தெரிஞ்சது. ஆனா, வலிக்கான எந்த அறிகுறியும் இல்லை. டாக்டரைப் பார்க்கப் போனேன். சோதிச்சவர், எனக்கு மார்பகப் புற்றுநோய்னு சொல்லிட்டார்.' - இப்படித் தலைவலி, ஜுரம் போல் சர்வ சாதாரணமாகச் சொல்லும் அளவுக்கு புற்றீசலாய் பெருகிக்கொண்டிருக்கிறது புற்றுநோய்.

''புற்றுநோய்க்கு இதுவரை முழுமையான மருந்து என்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் புற்றுநோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.

'உணவே' மருந்து. சித்த மருத்துவத்தின் தாரக மந்திரமும் அதுதான். சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. பாட்டி வைத்திய முறையை முற்றிலும் மறந்து நாம் ரொம்பவே விலகிவிட்டதால் வியாதிகள் பெருகிவிட்டன என்றுகூடச் சொல்லலாம். கொடிய நோயாகச் சித்தரிக்கப்படும் புற்றுநோய்க்குக்கூட சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் இருக்கின்றன.'' என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன். அவரது விரிவான விவரங்கள் இங்கே...

புற்றுநோயும் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவத்தில் சில நோய்களை அசாத்திய நோய்கள் என்று வகைப்படுத்தினார்கள். அதில் புற்றுநோயும் ஒன்று.

கட்டிகள் கழுத்தில் வரக்கூடிய கழுத்துக் கழலைகள் போன்றவற்றைக் 'கண்ட மாலை' என்று சொல்லுவார்கள். அது புற்றாகவும் இருக்கலாம். புற்றுநோய் பற்றி வெவ்வேறு வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

காரண காரியங்கள்:

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று வகைப்படுத்தினால், கிடைக்கும் பதில் ஆச்சர்யத்தை தரும். அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன தொடர்பு என்பதைப் போன்றதுதான்... ஆனால், உண்மை.

சித்த மருத்துவத்தில் புற்றுநோய் வருவதற்கு மூன்று முக்கிய காரணங்களைச் சொல்கிறார்கள். அவை :

1. உணவு

2. சுற்றுச்சூழல்

3. மனம்

உணவை உணருங்கள்:

பட்டைத் தீட்டின பச்சரிசி, சுத்திகரிக்கப்பட்ட மாவு, அரிசி, கோதுமை, வெள்ளை உப்பு இவற்றை இன்று அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். அவற்றைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

உடலுக்கு ஒவ்வாத உணவுகள் மற்றும் அஜீரணம் ஏற்படுத்தும் எண்ணெய், புலால் உணவுகளைத் தவிர்த்து, கஞ்சி, பாலாடை, அவல், சிறுதானிய உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, 45 வயதைக் கடந்தவர்கள், நேரடியாக இனிப்பு உண்பதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை வந்த பிறகுதான் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. காபிக்கு இனிப்பு சேர்க்க, பனை வெல்லம், கருப்பட்டியைப் பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். மாட்டுப் பால் சிறந்தது.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் பல வேதிப்பொருட்களைச் சேர்க்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்தே பெரும்பாலானவை சந்தையில் கிடைக்கின்றன. இவை உடல்நலத்துக்குக் கேடானவை.

சுகாதாரமான சுற்றுசூழல்:

இப்போது உலகம் சுருங்கிவிட்டது. வெளிநாட்டுப் பழங்கள் உணவுகள் போன்றவை எளிதில் கிடைக்கின்றன. அவை நாடு கடந்து இங்கு வரும்வரை கெடாமல் இருக்கச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. வசிக்கும் இடத்திற்கு அருகே விளையும் காய்கறி, பழங்களையேப் பயன்படுத்தவேண்டும். அதிலும் இயற்கை உரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், மிகவும் நல்லது.

மனம்

உள்ளார்ந்த மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும். இயற்கை எழிலை ரசிப்பது, படைப்பாற்றலை வெளிப்படுத்துவது, நல்ல நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவது, கலை இலக்கியங்களில் செலவிடுவது, தினமும் கொஞ்ச நேரமாவது கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாகப் பேசுவது, உற்றார் உறவினரோடு நல்லுறவை வளர்ப்பது, குழந்தைகளின் மழலையை ரசிப்பது போன்றவைதான் உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும்.

இன்று டி.வி.யே கதியாகக்கிடக்கும் குழந்தைகள் இரவு எட்டு மணி வரை பேய்ப் படத்தைப் பார்த்துவிட்டுத் தூங்கும்போது விளக்கை எரியவிட்டுக்கொண்டுதான் தூங்குகின்றனர். இரவு நேரத்தில் நல்ல கும்மிருட்டில் தூங்கும்போது, நம் உடலில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அந்த ஹார்மோன் புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது. பல அமெரிக்கவாசிகள், உறங்கச்செல்லும்போது மெலட்டோனின் கண்ணாடியை அணிந்து தூங்குகிறார்களாம்.

இந்த மூன்று காரணங்களைத் தவிர, ஒபிசிட்டி எனப்படும் கூடுதல் உடல் பருமன், நாட்பட்ட ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், கட்டுப்பாட்டில் இல்லாத அளவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் புற்றுநோய் வரும் வாய்ப்புகளை அதிகமாக்கும். இவைத் தவிர பரம்பரைக் காரணிகளும் காரணமாகலாம்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகள்:

எளிய மணமூட்டிகள் எல்லாமே புற்றுநோயை வரவிடாமல் தடுக்கக்கூடிய அருமருந்துகள்தான்.

மஞ்சள் அற்புதமான மருத்துவக் குணங்கள்கொண்டது. சிஸ்டோபிளாஸ்டி என்ற சிகிச்சை புற்றுநோய் வளராமல் தடுக்கும் ஆற்றலைக்கொண்டது. ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மஞ்சளில் உள்ள மூலக்கூறுகள், பக்க விளைவுகள் ஏதும் இன்றி கேன்சர் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப் பூ, வெந்தயம், இஞ்சி, கொத்தமல்லி விதை, மிளகு இவை எல்லாவற்றிலும் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றல்கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது, சில மருந்துகளால் ரத்தத் தட்டுக்கள் குறையும். சளி, இருமலுக்குப் பயன்படக்கூடிய ஆடாதொடை இலை ரத்தத்தட்டுக்களை உயர்த்தும்.

தாளித்தபத்ரி புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகை. புற்றுநோயைத் தடுக்கக்கூடிய வேதிப் பொருளான 'டாக்சால்' (Taxol), தாளித்தபத்ரி மரத்திலிருந்துதான் கிடைக்கிறது.

தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற மூலிகைகள் எல்லாமே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியன. வீரியமிக்க இந்த மூலிகைகளை முறையான ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும்.

மருந்தின் பலன்கள்:

புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளில் தாவர, உலோக உப்புக்களிலிருந்து செய்யக்கூடிய உயரிய சித்த மருந்துகள் இருக்கின்றன. ரத்தப் புற்றுநோய், குடல் புற்றுநோய், இரைப்பை, கருப்பை, மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கான புராஸ்டேட் புற்றுநோய் எனப் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் இருக்கின்றன. ஆனால், எல்லாமே, ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் புற்று நோய்களுக்குப் பலன் அளிக்கக்கூடியன. அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு மீண்டும் புற்று வராமல் தடுக்க சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கதிர்வீச்சு எடுத்த பிறகும், ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

புற்றுநோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும்போது, உடல் மிகவும் சோர்ந்துவிடும். வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுக்கள் குறைந்துவிடும். வெள்ளை அணுக்கள், தட்டுக்களை அதிகரிக்கவும் உடலை உறுதிப்படுத்தவும் சித்த மருத்துகள் உதவும்.

இணைந்த மருத்துவம்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் குழு (இன்டகரேடிவ் ஆன்காலஜிஸ்ட்) செயல்படுவது மிகப் பிரபலம். நோயாளிக்கு நேரத்தையும், செலவையும் இது குறைக்கும். நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கவும் வழிவகுக்கும். மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்வதும் நல்ல பலனைத் தரும். அதேபோல், நம் நாட்டில் எந்தெந்தத் துறையில் என்னென்ன சிறப்பான மருந்துகள் இருக்கிறதோ, அந்தந்தத் துறை மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாய்வு செய்து சிறப்பான சிகிச்சையை நோயாளிக்குத் தர முயற்சிப்பதன் மூலம் புற்றுநோயின் தீவிரத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தலாம்.

புற்றுநோய் குணப்படுத்த சோற்று கற்றாழை

புற்றுநோய் குணப்படுத்த சோற்று கற்றாழை


புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். சிங்கம் போல சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்றுநோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கிவிட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிபட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும், பாதிரியாருமாகிய ரோமனோ சகோ ஆவார்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்றுநோயால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.

இதற்கென எடுத்து கொள்ளவேண்டிய மருத்துவ பொருட்கள். சோற்று கற்றாழை 400 கிராம். சுத்தமான தேன் 500 கிராம். விஸ்கி அல்லது பிராந்தி 50 மி.லி (மருந்தாகமட்டும் எடுத்து கொள்ளவேண்டும்).

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவேண்டும். அப்போது மருந்து தயாராகிவிடும்.

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேலை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மி.லி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேர்த்து வைக்ககூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம் உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுங்கோங்க... கண் முன்னாலே உங்கள் மனைவி, குழந்தைகள், வயசான அப்பா, அம்மா, எல்லோரும். நீங்க இல்லாம கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க அந்த கருமத்தை இதுக்கு மேலே தொடாதீங்க.

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்

புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். சிங்கம் போல சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்றுநோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கிவிட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிபட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும், பாதிரியாருமாகிய ரோமனோ சகோ ஆவார்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்றுநோயால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.

இதற்கென எடுத்து கொள்ளவேண்டிய மருத்துவ பொருட்கள். சோற்று கற்றாழை 400 கிராம். சுத்தமான தேன் 500 கிராம். விஸ்கி அல்லது பிராந்தி 50 மி.லி (மருந்தாகமட்டும் எடுத்து கொள்ளவேண்டும்).

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவேண்டும். அப்போது மருந்து தயாராகிவிடும்.

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேலை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மி.லி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேர்த்து வைக்ககூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம் உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுங்கோங்க... கண் முன்னாலே உங்கள் மனைவி, குழந்தைகள், வயசான அப்பா, அம்மா, எல்லோரும். நீங்க இல்லாம கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க அந்த கருமத்தை இதுக்கு மேலே தொடாதீங்க.


கேன்சர் - கட்டுப்படுத்த




கேன்சர் - கட்டுப்படுத்த முடியாததா
புற்றுநோய்க்கு இதுவரை முழுமையான மருந்து என்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் புற்றுநோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.'உணவே' மருந்து. சித்த மருத்துவத்தின் தாரக மந்திரமும் அதுதான். சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. பாட்டி வைத்திய முறையை முற்றிலும் மறந்து நாம் ரொம்பவே விலகிவிட்டதால் வியாதிகள் பெருகிவிட்டன என்றுகூடச் சொல்லலாம். கொடிய நோயாகச் சித்தரிக்கப்படும் புற்றுநோய்க்குக்கூட சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் இருக்கின்றன.

புற்றுநோயும் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவத்தில் சில நோய்களை அசாத்திய நோய்கள் என்று வகைப்படுத்தினார்கள். அதில் புற்றுநோயும் ஒன்று.

கட்டிகள் கழுத்தில் வரக்கூடிய கழுத்துக் கழலைகள் போன்றவற்றைக் 'கண்ட மாலை' என்று சொல்லுவார்கள். அது புற்றாகவும் இருக்கலாம். புற்றுநோய் பற்றி வெவ்வேறு வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

காரண காரியங்கள்:

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று வகைப்படுத்தினால், கிடைக்கும் பதில் ஆச்சர்யத்தை தரும். அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன தொடர்பு என்பதைப் போன்றதுதான்... ஆனால், உண்மை.

சித்த மருத்துவத்தில் புற்றுநோய் வருவதற்கு மூன்று முக்கிய காரணங்களைச் சொல்கிறார்கள். அவை :

1. உணவு
2. சுற்றுச்சூழல்
3. மனம்

உணவை உணருங்கள்:

 பட்டைத் தீட்டின பச்சரிசி, சுத்திகரிக்கப்பட்ட மாவு, அரிசி, கோதுமை, வெள்ளை உப்பு இவற்றை இன்று அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். அவற்றைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

 உடலுக்கு ஒவ்வாத உணவுகள் மற்றும் அஜீரணம் ஏற்படுத்தும் எண்ணெய், புலால் உணவுகளைத் தவிர்த்து, கஞ்சி, பாலாடை, அவல், சிறுதானிய உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, 45 வயதைக் கடந்தவர்கள், நேரடியாக இனிப்பு உண்பதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை வந்த பிறகுதான் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. காபிக்கு இனிப்பு சேர்க்க, பனை வெல்லம், கருப்பட்டியைப் பயன்படுத்தலாம்.

 வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். மாட்டுப் பால் சிறந்தது.


 பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் பல வேதிப்பொருட்களைச் சேர்க்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்தே பெரும்பாலானவை சந்தையில் கிடைக்கின்றன. இவை உடல்நலத்துக்குக் கேடானவை.

சுகாதாரமான சுற்றுசூழல்:

இப்போது உலகம் சுருங்கிவிட்டது. வெளிநாட்டுப் பழங்கள் உணவுகள் போன்றவை எளிதில் கிடைக்கின்றன. அவை நாடு கடந்து இங்கு வரும்வரை கெடாமல் இருக்கச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. வசிக்கும் இடத்திற்கு அருகே விளையும் காய்கறி, பழங்களையேப் பயன்படுத்தவேண்டும். அதிலும் இயற்கை உரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், மிகவும் நல்லது.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகள்:

எளிய மணமூட்டிகள் எல்லாமே புற்றுநோயை வரவிடாமல் தடுக்கக்கூடிய அருமருந்துகள்தான்.

 மஞ்சள் அற்புதமான மருத்துவக் குணங்கள்கொண்டது. சிஸ்டோபிளாஸ்டி என்ற சிகிச்சை புற்றுநோய் வளராமல் தடுக்கும் ஆற்றலைக்கொண்டது. ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மஞ்சளில் உள்ள மூலக்கூறுகள், பக்க விளைவுகள் ஏதும் இன்றி கேன்சர் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

 லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப் பூ, வெந்தயம், இஞ்சி, கொத்தமல்லி விதை, மிளகு இவை எல்லாவற்றிலும் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றல்கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

 புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது, சில மருந்துகளால் ரத்தத் தட்டுக்கள் குறையும். சளி, இருமலுக்குப் பயன்படக்கூடிய ஆடாதொடை இலை ரத்தத்தட்டுக்களை உயர்த்தும்.

 தாளித்தபத்ரி புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகை. புற்றுநோயைத் தடுக்கக்கூடிய வேதிப் பொருளான 'டாக்சால்' (Taxol), தாளித்தபத்ரி மரத்திலிருந்துதான் கிடைக்கிறது.

 தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற மூலிகைகள் எல்லாமே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியன. வீரியமிக்க இந்த மூலிகைகளை முறையான ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும்.

மருந்தின் பலன்கள்:

புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளில் தாவர, உலோக உப்புக்களிலிருந்து செய்யக்கூடிய உயரிய சித்த மருந்துகள் இருக்கின்றன. ரத்தப் புற்றுநோய், குடல் புற்றுநோய், இரைப்பை, கருப்பை, மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கான புராஸ்டேட் புற்றுநோய் எனப் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் இருக்கின்றன. ஆனால், எல்லாமே, ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் புற்று நோய்களுக்குப் பலன் அளிக்கக்கூடியன. அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு மீண்டும் புற்று வராமல் தடுக்க சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கதிர்வீச்சு எடுத்த பிறகும், ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

புற்றுநோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும்போது, உடல் மிகவும் சோர்ந்துவிடும். வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுக்கள் குறைந்துவிடும். வெள்ளை அணுக்கள், தட்டுக்களை அதிகரிக்கவும் உடலை உறுதிப்படுத்தவும் சித்த மருத்துகள் உதவும்.

இணைந்த மருத்துவம்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் குழு (இன்டகரேடிவ் ஆன்காலஜிஸ்ட்) செயல்படுவது மிகப் பிரபலம். நோயாளிக்கு நேரத்தையும், செலவையும் இது குறைக்கும். நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கவும் வழிவகுக்கும்.

மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்வதும் நல்ல பலனைத் தரும். அதேபோல், நம் நாட்டில் எந்தெந்தத் துறையில் என்னென்ன சிறப்பான மருந்துகள் இருக்கிறதோ, அந்தந்தத் துறை மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாய்வு செய்து சிறப்பான சிகிச்சையை நோயாளிக்குத் தர முயற்சிப்பதன் மூலம் புற்றுநோயின் தீவிரத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தலாம்.



புற்றுநோயை தடுக்கும்





ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தொpவிக்கின்றன.

புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு.. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல தோன்றுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

இந்நிலையில் புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டாக்டர் மைக்லே; டபிள்யு. ஸ்மித் தெரிவித்துள்ளார். தக்காளியில் அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்றொரு பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் ஆகியவற்றிலும் லைக்கோ பீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒக்ரோபர் 
புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நம் நாட்டிலே இதற்குப் `புற்ற

நம் நாட்டிலே இதற்குப் `புற்ற
ு'
என்று பெயர். ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் காரணத்தோடு தான் அப்பெயர் வைத்துள்ளார்கள்.
பாதை ஓரங்களில் கறையான் புற்றுக் கட்டியிருப்பதைப் பார்த்திருக்கலாம். அது கறையான் புற்று. அதில் பாம்பு குடி இருக்கும் இந்தச் `செல
்'
எனப்படும் கரையான் நயப்பான பூமிகளிலே புற்றைக் கட்டுகிறது. மண்ணைக் கொண்டும
்,
தன்வாயில் ஊறும் எச்சிலைக் கொண்டும் இதனைக் கட்டுகிறது. இது மழைக்கும் வெயிலுக்கும
்,
காற்றுக்கும் கரையாது : அப்படியே இருக்கும்.
பாம்பு கறையான்களை உண்டு அதில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். கறையான் மேலும் மேலும் உற்பத்தியாகி கொண்டே இருக்கும். இதற்குத் தான் `புற்ற
ு'
என்று பெயர். இந்தப் புற்றை நிலத்துச் சொந்தக்காரன் வெட்டி எடுத்தானேயானால் ஒரு பதினைந்து இருபது நாட்களுக்குள் அதைவிட உயரமான புற்றைக் கரையான்கள் கட்டிவிடும். இந்தப் புற்று பற்றிய செய்தி மனித உடம்பில் வரும் புற்று நோய்க்கும் பொருந்தும். இக்காரணம் கருதித்தான் இந்நோய்க்குப் `புற்று நோய
்'
என்று பொருத்தமான பெயர் வைத்திருக்கிறார்கள்.
நவீன மருத்துவத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் என்றால் அந்தப் பகுதியிலிருந்து கொஞ்சும் சதையை அறுத்து எடுத்து `க்

iடியீள
ல'
செய்து பார்க்கிறார்கள். அதன் பிறகு தான் சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். என்ன ஆகிறது தெரியும
ா?
இந்தப் பரிசோதனைச் சாலையில் செய்து முடிப்பதற்குள்ளாகவே இந்த நோய் தீவிரமாக உடலில் பரவ ஆரம்பித்து விடுகிறது.
ஆனால
்,
நம் முன்னோர்கள் புற்றுநோய்க்கு ஆபத்து இல்லாத மருந்தினைக் கண்டு பிடித்துக் குணப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மருந்துகளை எல்லாம்நம் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்து பயன்படுத்தியிருந்தார்களேயானால் வெகு காலத்துக்கு முன்ப
ே,
ஆபத்தில்லாத இம்மருந்தால
்,
வெகு சீக்கிரமாகப் புற்று நோயாளிகளை குணப்படுத்தியிருக்க முடியும். நம் நாட்டினருக்குக் கூட பயன்படக் கூடிய அளவு இதனை விளம்பரப்படுத்தியிருக்கவும் கூடும்.
நாற்பதாண்டுகளுக்கு முன்னால் நவீன மருத்துவம் இன்றைக்கு இருக்கிற அளவு வளர்ந்திருக்கவில்லை. இந்த அளவு ஆராய்ச்சிகளோ வசதிகளோ அப்போது கிடையா. அந்தக் காலத்திலே சித்த மருத்தவர் தாம் நல்ல முறையிலே மருந்துகள் தயாரித்து எண்ணற்ற புற்று நோயாளிகளை குணப்படுத்தியிருக்கிறார்கள்.
எனக்கு ஒரு காலத்திலே மருத்துவத்துறை ஆசிரியராக இருந்த பண்டிதர் எஸ். எஸ். ஆனந்தம் அவர்கள் பல பெரிய நிலையிலேயே இருந்தவர்களுக்கெல்லாம் புற்று நோயைக் குணப்படுத்தியிருக்கிறார். சேராங் கொட்டையிலிருந்து பால் எடுத்து அதில் இரசவீரம் போன்ற பாஷாணங்களை எல்லாம் கலந்து மருந்து தயாரித்து நாங்களெல்லாம் கொடுத்து வந்திருக்கின்றோம். அடையாறு புற்று நோய் மருத்துவமனைத் தொடங்குவதற்கு முன்னால் கூ
ட,
டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் இதில் சில மருந்துகளைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.
அண்ணா நகரில் உள்ள அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த ஆராய்ச்சிக் கூடத்தில் இயக்குனராக டாக்டர். ஆனந்தகுமார் அவர்கள் இருந்தபோது சில சித்த மருத்துவர்ளை அழைத்துப் புற்றுநோய் மருந்தில் ஆராய்ச்சி நடத்தினார்கள். இம் முறையில் பல புற்று நோய்களைக் குணப்படுத்திப் போட்டோக்களும் எடுத்து வைத்திருக்கின்றனர்.
புற்று நோய்க்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்து உண்டு. நான் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறேன். அந்தச் சிகிச்சையின் போது உள்ளுக்கு மருந்து கொடுப்பதோட
ு,
மேலே இரணமாக இருக்குமானால் அதற்கான ஒரு புகை கொடுக்கும் கருவி தயார் செய்த
ு,
அதன் மூலம் புகை கொடுத்திருக்கிறேன். மேலே உள்ள இரணங்களுக்கெல்லாம் இப்புகை ஆற்றும் மருந்து பயன்பட்டது. இப்படிப் பல நோயாளிகளை குணப்படுத்தியிருக்கிறேன்.
சித்த மருத்துவத்தில் கட்டு மாத்திரை என்று ஒன்று உண்டு. இரசம
்,
லிங்கம
்,
வீரம
்,
பூரம் இவைகளை எல்லாம் நெருப்பில் ஓடாமல் கட்ட
ி,
கட்டு மாத்திரையாகச் செய்வார்கள். அதில் "அந்நிய கால சொர்ணபூபதி" என்று ஒரு கட்டு இது ஒருவர் பேச்சு மூச்சடக்கி ஆபத்தான கட்டத்தில் - உயிர் போகும் தருவாயில் இருக்கிறபோது அவரிடமிருந்து ஏதேனும் வாக்கு மூலம் வாங்க வேண்டியிருந்தால் அவருக்கு நினைவு திரும்பச் செய்து நன்றாகப் பேசவைக்கக் கூடியது. இக்கட்டுமாத்திரையை உரைத்து மருந்தை நாக்கில் நான்கைந்து முறை தடவினால் நோயாளி தம் உறவினருடன் நன்கு பேசத் தொடங்குவார். உறவினர்கள் அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டுக் கொள்ளலாம். இம்மருந்துக்கு `அந்திய கால சொர்ண பூபத
ி'
என்பது பெயர்.
சித்த மருத்துவத்தில் இவை தவி
ர,
மக்களை நீண்ட காலம் உயிர் வாழச் செய்வதிற்கான கற்பங்களும் உண்டு
;
சில பயிற்சிகள் குண்டலினியோகம் போன்றவையும் உண்டு
;
நோய் வராமல் தடுக்கவும் நீண்ட நாள் உயிர் வாழவும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டு.
சித்த மருத்துவத்திற்கு இத்தனைச் சிறப்புக்கள் உண்டு. எனவ
ே,
பொதுமக்களாகிய நீங்கள் இதில் ஆர்வம் கொண்டு எங்கள் ஊருக்குச் சித்த மருத்தவக் கல்லூரி வேண்டும்
;
சித்த மருத்துவமனை வேண்டும் என்று அரசாங்கத்தினிடம் விண்ணப்பிக்க வேண்டும்
;
அரசாங்கம் மருத்துவத் துறையினை மேம்படுத்த ஆர்வமுள்ளதாயிருக்கிறது. அரசாங்கம் தான் சித்த மருத்துவவாரியம் ஏற்படுத்தியிருக்கிறது. பழனியில் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் பல நல்ல காரியங்கள் எல்லாம் செய்திருக்கிறார்கள். மேலும் செய்யக் காத்திருக்கிறார்கள். எனவ
ே,
பொதுமக்கள் சித்த மருத்துவத்தின் பெருமையை உணர்ந்த
ு,
பத்திரிகை வாயிலாகவோ வேறு விதமாகவோ சித்த மருத்துவத் துறை மேம்பாட்டுக்காக விண்ணப்பிப்பது பயன்தரும் முயற்சி என்பதில் ஐயமில்லை!
முன்னோர்கள் தேடி வைத்த மூலப் பொருளாகும் பன்னோய்கள் தீர்க்கப் பயனாகும் - நன் மருந்தைச் சித்த மருத்துவத்தால் சீராகப் பெற்று நீர் நித்தியமாய் வாழ்க நிறைந்து.