"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, June 14, 2016

சதாவேரி

D சதாவேரி

1 வேறுபெயர்கள் :-தண்ணீர் விட்டான் கிழங்கு, நீலாவரை, சதாவரி, சதாமூலம், சதாவரை, சதாமுல்லி, சித்தவரை, ஆஸ்வாலி, சக்ராகுல்.

2 தாவரப்பெயர் :-ஆஸ்பராகஸ் ரசிமோசஸ்.

3) தாவரக்குடும்பம் :-LILLIACEAE.

4) வகைகள் :- ஆ.ரெசிமோசஸ், ஆ.அட்செடன்ஸ்,ஆ. அப்பினாலிஸ், கோனோசினாமல், ஆ.ஆல்பராகஸ்.

5) வளரும் தன்மை :-வளமிக்க இரும்பொறை மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை, வடிகால் வசதிஉடைய மண் எனில் மிகவும் ஏற்றது. ஓரளவு வறட்சியை தாங்க வல்லவை. 1500 முதல் 4000 அடி உயரமுள்ள மலைப் பிரதேசங்களில் இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும், 15 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் இருப்பது நல்லது. மெல்லிய நறுமணமுடைய இக்கிழங்குக் கொடிகள் 6 அடி உயரம் வரை வளரக்கூடியது. தண்டுகளில் சிறிய முட்களை உடைய இந்தச் செடி ஒவ்வொன்றிலும் 15 - 20 நீண்ட கிழங்குகள் தோன்றும். இதன் இலைகளில் பறித்தவுடன் டையோஸ்ஜெனின் என்ற வேதியப்பொருள் கிடைக்கும். இதன் பழங்கள் மற்றும் பூக்களில் க்ளைக்கோசைடுகளான குயர்செட்டின்நிட்டின், மற்றும் ஹைப்பரோசைடு, சிட்டோஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால் மற்றும் வேர்க் கிழங்குகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. கிழங்குகள் முதிர்ச்சி அடைய 12 - 14 மாதங்கள் ஆகும். இதன் வேர் கிழங்குகளை நன்கு வெய்யிலில் காயவைத்து இழஞ்சூடாய் இருக்கும் போது இயற்கை தன்மை மாராமல் கிழங்குகளைக் காற்றுப் புகா கோணிப்பைகளில் சேமித்துவைத்தல் வேண்டும்.
6) பயன்தரும் பாகங்கள் :- கிழங்குகள், வேர்கள்.

7) பயன்கள் :- ஒரு பழம் பாடல்.

"நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா
முரைவிடுத் தோட வுறுகுங்காண் நாரியரே
வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந்
தண்ணீர் விட்டான் கிழங்குதான்'

சதாவரி கிழங்கு வெகு மூத்திரம், பழைய சுரம், சோமரோகம், வெள்ளை, உட்சூடு, ஆகியவற்றை நீக்கும்.

இதனால் தீரும் நோய்கள், வயிற்றுப் போக்கு, சர்க்கரை வியாதி, சுவாச நோய் முதலியன. உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கவும், மெல்லிய தேகம் உடையவர்கள் நல்ல சதைப்பிடிப் புடையவைகளாக மாறவும் பயன்படுகிறது.

உலர்ந்த கிழங்கை இடித்து சூரணம் செய்து வேளைக்கு 1-2 வராகனெடை நெய், சர்க்கரை, பால், இவற்றை இட்டு தினம் 3 வேளை கொடுக்கவும். அல்லது பச்சைக் கிழங்கை இடித்துப் பிழிந்து சாற்றில் வேளைக்கு1/4 - 1/2 அவுன்ஸ் அளவு பால், சர்க்கரையிட்டுக் கொடுக்கலாம். இதனால் நீர்கடுப்பு, எலும்புருக்கி, மேகசாங்கே, கை,கால் எரிவு, சுக்கிலபிரமேகம், தாதுபலவீனம், கரப்பான் முதலிய வியாதிகள் குணமடையும். தேகபுஷ்டி உண்டாகும்.i

மூலிகையின்பெயர் –:கிணற்றடிப்பூண்டு

மூலிகையின்பெயர் –:கிணற்றடிப்பூண்டு..

தாவரவியல்பெயர் –: TRIDAX PROCUMBENS.

தாவரவியல்குடும்பம் – COMPOSITAE.

மருந்தாகும்பாகங்கள் – இலைகள், செடிமுழுதும்.

வேறுபெயர்கள் – கிணற்றுப்பாசான், வெட்டுக்காயபச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்ததிப்பூண்டு, காயப்பச்சில்லை முதலியன.

ஆங்கிலப்பெயர்கள் – COAT BUTTONS, TRIDAX DAISY.முதலியன.

வளரியல்பு- கிணற்றடிப்பூண்டு எல்லாவித வளமான மண்ணில் வளரும் ஒரு சிறு செடி.
இதன் தாயகம் மத்திய அமரிக்கா.பற்களுள்ள சற்று நீண்ட தடிப்பான
சொரசொரப்பான பச்சை இலைகளையும், மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறு செடி .ஈரமான இடங்களில் தானே
வளரும் தன்மையுடையது .இலையின் நீளம் 3-6 1.5-3 செ.மீ.தண்டு 5 -10 எம்.எம்.நீளம், பூவின்விட்டம் 1.3 1.5 செ.மீ. பூவின் இதழ்கள் 5.நடுவில் வெண்மையாகஇருக்கும். இது தன்மகரந்தச் சேர்க்கையால்
விதை உண்டாகும். ஒரு செடியில் 1500 விதைகள் இருக்கும் அவை காற்றில் பரவி ஒட்டிக் கொள்ளும்.
இது சாலை யோரங்களில், தரிசு நிலங்களில், தோட்டங்கள், புல்வெளிகள் எங்கும் பரவி வளரும். சீதோஸ்ண, மிதசீதோஸ்ண வெப்பத்தில் வளரக்கூடியது. உலகெங்கும்பரவியுள்ளது.
லேசான பஞ்சுபோன்ற விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

கிணற்றடிப்பூண்டின் மருத்துவப்பயன்கள் – இது புண்ணாற்றும், ,குறுதியடக்கி, கபநிவாரணி .மூச்சுக்குழாய்ச்சிரை, மூக்கடைப்பு, தடுமல், நீர்கோப்பு, வயிற்றுப்போக்கு, பேதிமுதலியவை குணமாகும்.


இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில் பற்றிடச் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.

கிணற்றுப்பூண்டின் இலைச்சாறும், குப்பைமேனி இலைச்சாறும் மருத்துவரின் அலோசனைப்படி கலந்து குடித்தால் நஞ்சு முறிவு ஏற்படும் .மேலும் வயிற்றுக் கோளாருகள் தீரும்e

எள்ளுச்செடி

Swo எள்ளுச்செடி

மூலிகையின் பெயர் :- எள்ளுச்செடி.

தாவரப்பெயர் :- SESAMUM INDICUM.

.தாவரக்குடும்பம் :- PEDALIACEAE.

பயன்தரும் பாகங்கள் :- விதை, பூ, எண்ணெய் முதலியன.

வேதியல் சத்து :- PROTEINS – GLOBULIN.

வளரியல்பு :- எள்ளுச்செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு செடி. இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா. பின் உலகெங்கிலும் பரவிற்று. ஆதிகாலத்திலிருந்து எண்ணெய் வித்துக்களில் எள்ளின் விதைதான் முதலில் தோன்றியதாகச் சொல்வர். 5000 ஆண்டுகளுக்கு முந்தியது. சைனா மற்றும் இந்தியா உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் அதிகம் செய்தது. சைனா, தென்கிழக்கு ஆசியா, அமரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன.

எள்ளுச்செடி சுமார் 50 முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. ஆப்பிரக்காவில் 6 அடி உயரங்கூட வளரும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இது 4 – 14 செ.மீ. நீளம் இருக்கும். இது தும்ப இலையை ஒத்திருக்கும். ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும். எள் செடி வெண்மையான பூக்களை விடும். ஆனால் ஆப்பிரிக்காவில் மஞ்சள், நீலம், ஊதா நிறங்களிலும் பூக்கள் விடும். இதன் பூக்கள் தன்மகரந்தச் சேர்க்கையாலும், மற்றும் தேனீக்கள், பறவைகளாலும் அயல் மகரந்தச் சேர்க்கையால் பூக்கள் காயாக வளரும். காய்கள் நீண்டிருக்கும். 2 – 8 செ.மீ.நீளம் இருக்கும். ஒரு விதையில் சுமார் 100 விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை சுமார் 20 -40 மில்லிகிராம் எடை இருக்கும். கருப்பாக மென்மையாக இருக்கும், வெள்ளை நிறத்திலும் எள் இருக்கும். இதை வியாபார நோக்கில் பயிர் செய்பவர்கள் வளமான மண்ணை நன்கு உழுது, உரமிட்டு பாத்திகள் அமைத்து எள்ளை மணலுடன் கலந்து விதைப்பார்கள். அதன் பின் தண்ணீர் விட்டு சில நாட்களில் முழைக்க ஆரம்பிக்கும். பின் 10 நட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாச்சுவார்கள். பின் செடி ஒரு அடி வளர்வதற்குள் கழை எடுப்பார்கள். பின் செடி வளர்ந்து மூன்று அல்லது நான்கு மாதத்தில் காய்கள் முற்றி பழுக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அவைகள் அருவடை செய்து கல் மண் இல்லாத களத்தில் கொண்டு போய் காய்கள் மேல் நோக்கி இருக்கும் படி வைத்து வெய்யிலில் உலர வைப்பார்கள். காய்கள் நன்கு காய்ந்து மேல்முனையிலிருந்து வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை தலைகீளாக உலர்த்தி லேசாகத் தட்டினால் எள் கழத்தில் விள ஆரம்பிக்கும். அவ்வாறு விழுந்ததைச் சேகரித்து சுத்தம் செய்து மூட்டையாகக் கட்டுவார்கள். ஆனால் இது மானாவாரியாகவும் விளையும். தமிழ் நாட்டில் நெல் அருவடைக்குப் பின் எள்ளை விதைத்து எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். எள் விதையை ஆட்டி எண்ணைய் எடுப்பார்கள் அது தான் நல்லெண்ணெய் என்பது.

மருத்துவப்பயன்கள் :- எள் செடியிலிருந்து உண்டாகும் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் நல்ல மருத்துவ குணமுடையது. அதன் செய்கை மலமிளக்கி, உள்ளழலாற்றி, சிறுநீர் பெருக்கி செயலாற்றும். இதன் மருத்துவ குணம் அதிகம் ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்துகள் செய்ய துணை மருந்தாகப் பயன்படுகிறது. இதில் மெகனீசியம், காப்பர், கால்சியம் மற்றும் வைட்டமின் B1, E, A போன்றவை உள்ளன. இது கப, பித்த, வாத, மூலநோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், அனிமியா, தோல் நோய்கள் குணப்படுத்த வல்லது. அந்தக் காலத்தில் ஆண்கள் புதன் கிழமை மற்றும் சனிக்கிழை நாட்களில் இந்த எண்ணெய் தேய்த்து உலரவிட்டுப் பின் குழிப்பார்கள். பெண்கள் வெள்ளிக் கிழமை நாழில் இந்த எண்ணெயைத் தலை, உடம்புக்குத் தேய்த்துக் குழிப்பார்கள். சனி நீராடு என்ற பழமொழியும் உண்டு. இதன் நோக்கம் உடல் சூடு குறைக்க வேண்டியும், உடல் மென்பை பெற வேண்டியும் ஆகும். பாபிலோனியாவில் பெண்கள் இந்த எண்ணெயைத் தான் அழகு சாதனமாகவும் உடம்பை மசாஸ் செய்யவும் பயன் படுத்தியுள்ளார்கள். எள்ளில் இனிப்புச்சேர்த்து எள் உருண்டை செய்து ரோமானிய படைவீரர்கள் சக்திக்காகவும் பலத்திற்காகவும் சாப்பிட்டுள்ளார்கள். இந்த எண்ணெய் இறைவனுக்கு விழக்கு ஏற்றப்பயன் படுத்தியுள்ளார்கள். இறந்தவர்களின் மத சடங்குகளில் எள்ளைப் பயன்படுத்தியுள்ளார்கள். ரொட்டிக்கு மேல் எள்ளை வைப்பார்கள். மேலும் மெழுகுபத்தி, சோப்பு, பெயிண்ட், செண்ட், பூச்சிக் கொல்லி மருந்து செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் சமையலுக்கு இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

கண் எரிச்சல் நீங்க-

கண்ணில் சதா எரிச்சல் இருந்து கொண்டே இருந்தால், தேவையான அளவு எள்ளுப்பூவைக் கொண்டு வந்து, அதை ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இளஞ்சூடாக இருக்கும் போதே, இரவு படுக்கும் முன், அதை இரு கண்களையும் மூடிக் கொண்டு சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்துக்கொண்டு கட்டிக் கொண்டு உரங்கி, காலையில் எழுந்த பின் கட்டை அவிழ்த்து பூக்களை எடுத்து விட்டுக் கண்களைக் கழுவிக் கொள்ளவேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்குக் கட்டினால் போதும். கண் எரிச்சல் மாறிவிடும்.

கண் பார்வை தெளிவடைய-

நாற்பது எள்ளுப்பூ, மிளகு ஒன்பது, அரிசித் திப்பிலி இருபது, சம்பங்கி மொக்கு இருபத்தயிந்து இவைகளை வெய்யிலில் போட்டுச் சருகு போல காயவைத்து, உரலில் போட்டு இடித்து, துணியில் சலித்து ஒரு சுத்தமான சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை மிளகளவு தூளைக் கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். மருந்தை கண்களில் போட்டவுடன் எரியும், கண்ணீர் வடிய விட்டால் கண் எரிச்சல் தணிந்து விடும். தொடர்ந்து ஏழு நாட்கள் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

தலைமுடி பாதுகாப்பு-

ஒரு கைப்பிடியளவு எள்ளுச் செடியின் இலையை எடுத்து அளவான நீரில் 10-20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின் இரக்கி ஆரவைத்து, இலைகளை எடுத்து விட்டு அந்த நீரை தலைக்கு இட்டுத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் உதிர்வதும், இளநரை ஏற்படுவதும் தவிர்க்கலாம்.