"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Friday, May 6, 2016

தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்




தலைமுடி பிரச்சனையும் மருத்துவமும்




'இவனுக்கு இளநரையாக இருக்கிறது. என்ன செய்யலாம்' கேட்டவர் அவனது தகப்பனார்.

அவனுக்கு 13வயதுதான் ஆகிறது.வெளிப்படையாகப் பார்க்கும் போது நல்ல கருமையாகத்தான் தெரிந்தது.

ஆயினும் உற்றுப் பாரத்த போது ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகளாக சில தெரிந்தன. மகன் முகத்தில் சற்று வெட்கத்தின் சாயல் மெழுகியிருந்தது.

மற்றொருத்தியின் தலையில் பட்டை பட்டையாக வெள்ளை முடிகள் கருமுடிகளை அடாத்திப் பெரும்பான்மையாக நின்றன. சரும மருத்துவர் ஈடாக பலரிடம் மருத்துவம் செய்துவிட்டாராம். வயது 28 மட்டுமே.

அழைத்து வந்தது காதலன்.

எப்படிக் கழற்றி விடலாம் என வாய்புக்காகக் காத்திருப்பவன் போல அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான்.

பெண் முகத்தில் இயலாமையும் சோகமும் கருமேகங்களாக அப்பிக் கிடந்தன.

உண்மைதான் அகத்தை விட முகத்தையும் தோற்றத்தையும் மட்டுமே கவனத்தில் எடுக்கும் இன்றைய சமுதாயத்தின் பார்வையில் நரையும் பின்னடைவுதான்.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

முடி நரைப்பது ஏன்?

முடி ஏன் நரைக்கிறது?

எமது முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது.

எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளரும் என்றில்லை.
சில முனைகளிலுள்ள முடிகள் வளராது, வேறு சில ஓய்விலும் இருக்கும்.
சில உதிரும்.
ஓய்வில் இருந்தவை வளரும்.

எமது சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களிலிருந்து (hair follicles); வளர்கிறது. அங்குதான் முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (melanin) என்ற சாயம் உள்ளது.

அதில் மெலனின் உற்பத்தி நின்றுவிட்டால் அந்த வேரிலிருந்து வளரும் முடிக்கு கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும்.

ஆனால் அதே நேரம் வேறு முளைகளிலிருந்து கருமையான முடி வளரக் கூடும்.

படிப்படியாக ஏனைய முளை வேர்களிலும் மெலனின் உற்பத்தி அற்றுப் போக வெண் முடிகள் அதிகரிக்கும்.

மருத்துவ ரீதியாக 40 வயதிற்கு உட்பட்ட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை premature greying என்பார்கள்.

ஆனால் பேச்சு வழக்கில் நாம் சில முடிகள் நரைத்தால் கூட இளநரை என்கிறோம்.

பிரதான காரணம்

இளநரைக்குக் காரணம் என்ன?

பொதுவாக இது பரம்பரை சம்பந்தமானது. உங்கள் இரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத் தலையினர் எனின் உங்கள் முடியும் பெரும்பாலும் அந்தத் திசையிலேயே செல்ல நேரிடும்.

தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்கத் தொடங்கும்.
உடல் முடிகள் நரைக்கச் சற்றுக் காலம் செல்லும்.

வேறு காரணங்கள்

ஒரு சிலருக்கு இவை
தைரொயிட் சுரப்பி நோய்கள்,

வெண் குஷ்டம்,

இரத்தசோகை,

விட்டமின் பீ 12 gP 12 vitamin B12 deficiency குறைபாடு

ஆகியவற்றாலும் நேரலாம். ஆயினும் இவை அரிது.

'மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்துகள் கிடையாதா?' என நீங்கள் வினவுவது எனக்கும் கேட்கிறது.

தினமும் பத்திரிகைகளில் நரைமுடிக்கு மருந்துவம் என விளம்பரங்கள் வருகின்றன.

உண்மையில் அப்படி ஒரு மருந்து இருந்திருந்தால் இன்று மருந்துக்கடைகளை மக்கள் மொய்த்திருப்பார்கள்.

நரை முடியுடன் உலகில் எவருமே இருக்க மாட்டார்கள்.

வெளிப்படையாகச் சொல்வதானால் இதற்கான முயற்சிகளை பலரும் செய்திருக்கிறார்கள். ஆனால் வென்றவர் எவரும் இல்லை என்பதே.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அத்தகைய விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும்.

'எனக்கும் பத்து வயதிலேயே இளநரை வந்தது.. என ஆரம்பித்தார் தனது மகனுடன் வந்த அந்த 50வயதுத் தகப்பனார்.

நிமிர்ந்து அவரது தலையைப் பார்த்தேன்.

கன்னங்கரேல் எனக் கருமையாக இருந்தது.

காரணம் என்ன? கேட்காமலே அதற்கான விடை என்னிடம் இருந்தது.

'அப்போதிருந்தே நான் டைதான் பாவிக்கிறேன்' கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்னார்.

உலகை வென்றுவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது.

புத்தியுள்ளவர். மாயையில் இருக்கும் உலகை சுலபமாக வென்று விட்டார்.

இயற்கையின் நியதியையும் மற்றவர்கள் மனநிலையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆம்! இன்றைய நிலையில் உங்களது இளநரைக்கு ஒரே விடை தலை முடிச்சாயம் மட்டுமே.

ஆனால் நான் கூறிய அவ்வளவு விளக்கங்களையும் கேட்ட மற்ற இளம் பெண் அடுத்த மருத்துவரை தேடிச் செல்ல ஆயத்தமானார்.

ஆசைக்கு அளவேது. இன்னும் சிலகாலம் மருந்திற்கு பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துவிட்டு டை (Dye) க்கு இறுதியில் வருவார்.

ஆனால் இன்னொரு வழியும் உண்டு. "Grey hair is a crown of Glory"
என்கிறது பைபிள்.

முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு என நரைமுடியை மதிப்பவர்களும் உளர்.

நீங்கள் உங்கள் முடிக்கு சாயம் பூச விருப்பம் அற்றவராயின் மேற் கூறிய அந்தப் பெருமையைப் பெற்று மகிழ்வாக வாழ முடியும்.


##########################################################



சிலருக்கு மாணவப் பருவத்திலேயே இளநரை தோன்றும். அதை தடுக்க சில குறிப்புகள்:

கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும்.

இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும்.

வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.

(மூலம் – வெப்துனியா)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

முடி வளர சித்தமருத்துவம் – ஆக்கம் சிவகுமார்

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்


##########################################################


முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்,




முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்,

இய‌ற்கை வைத்தியம், மருத்துவ டிப்ஸ், ஹெல்த் ஸ்பெஷல்

முடி அடர்த்தியாக வளர.......... பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது. மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்.......... 1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். 3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். 5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

அனுபவ வைத்தியம்


அனுபவ வைத்தியம் - 1


வாதம்-பித்தம்- கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .

இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம் பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய் ,காயம் ,உளுந்தம் பருப்பு வறுத்து வைத்துப் புளி,உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும்.இது இட்லி,தோசை,மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி -சாதத்தில் பிசைந்து எண்ணெய் விட்டு சாப்பிடலாம் .

வாய்வு-பித்தம்-கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது.இதனை வாரம் ஒருமுறை சாபிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.எனவேதான் பண்டைய நாளில் அப்பளம் செய்யும் போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள் .உணவே மருந்து என்று உண்டார்கள் வென்றார்கள்.


அனுபவ வைத்தியம் - 2

நவீன உணவு கலாச்சாரம் அடிக்கடி ஓட்டல் சாப்பாடு போன்றவற்றால் செரிமானமின்மை புளித்த ஏப்பம் ,குமட்டல், பசிஇன்மை,போன்றவற்றை ஏற்படுத்துகிறது .அதற்கு என்று மாத்திரைகளை நாட வாலுபோயி ... கத்திவந்தது டும்...டும்....என்பது போல புதிய தொந்தரவுகள் இதற்கு எளிமையான மருந்து இஞ்சி.

100 கிராம் இஞ்சியைத் தோல்சீவி மெல்லியதாக நறுக்கவும். அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு இஞ்சி நனையும் வரை எலும்பிச்சை சாறு விடவும். சிறிது உப்பு போட்டுக் கிளறி வெயிலில் வைக்கவும் .(இந்துப்பு சேர்த்தால்கஊடுதல் நலம் ) சாறு சுண்டி உலர்ந்ததும் நன்கு காயவைதுப் பத்திரப் படுத்தவும்.

மேற்படி தொந்தரவு ஏற்படும் போது சிறிது வாயில் அடக்கிக் கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும் .


அனுபவ வைத்தியம் -3

மழைக்காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்கும் தருணம்.இந்த பருவ நிலை மாற்றத்தின் பொது அதிகம் தாக்கும் நோய் வயிற்றுப்போக்கு .இதைக் காலரா என்றும் சொல்வதுண்டு.

இது மிகவும் கொடுமையான வியாதி.நீர்சத்து இழப்பால் பெரும் பதிப்பு ஏற்படும். இதற்கு எளிமையான மருந்து. அதே சமயம் துரித நிவாரணம் தருவது புளியம்பட்டை. முற்றிய புளிமரத்துப் பட்டையை நாலு விரக்கடை அளவு வெட்டி எடுத்து அடுப்பில் போட்டு நன்கு எரிக்கவும். தணலாக மாறியபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு மூடிவிடவும்.சூடு ஆறியபின் திறந்தால் சாம்பலாக இருக்கும்.அதை தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட நன்கு குணம் தெரியும். ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு இரண்டுசிட்டிகை மருந்தை சிறிது தேனும் வெந்நீரும் கலந்து சங்கால் புகட்டலாம் .

அதன் கூடவே உப்பு -சர்க்கரை `கலந்த வெந்நீரை அடிக்கடிக் கொடுத்து வர நீர்சத்து இழப்பு சமன் செய்யப்படும் .

அனுபவ வைத்தியம் -4

சிறுநீரகக்கல்

தற்போது அனைவரையும் வாட்டும் நோய் இதற்குப் பலகாரணங்கள் உண்டு. முக்கியமாகக் குடிநீர் குறைபாடுகள். குடிநீர் சுத்திகரிப்பிற்காகப் பல கருவிகள், பாட்டில் குடிநீர் என பலதீர்வுகள் இருந்தாலும் சரியான தீர்வு அனைவரையும் சென்றடையவில்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கு என்னதான் தீர்வு?

வாழைத் தண்டு! இதை இடித்து சாறு பிழிந்து அருந்தி வர கல் கரையும். இதை அனைத்து மருத்துவ முறைகளுமே ஏற்றுக் கொள்கின்றன. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி குடல் சுத்திகர்ப்புக்கு வழி வகுக்கும்.

வாழைத் தண்டை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டுவர சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கலாம். பொரியல்-கூட்டு-பச்சடி-சாம்பார் எனப் பல ஐட்டங்கள் மாற்றி மாற்றி செய்து சாப்பிடலாம். உணவையே மருந்தாக்கி உடல் நலம் காக்கணும்.

அனுபவ வைத்தியம் -5

உடல் வெப்பம்!

இது அதிகரித்தால் வயிறுவலி - வாய்ப்புண் - கண் எரிச்சல் முதலியவை தலைதூகும். இதற் அற்புத நிவாரணி அகத்திக்கீரை!

அகத்தீ எனப்படும் உட்கட்டைத் தணிப்பதால் இதற்கு அகத்தீ என்ற காரணப்பெயர். இதைப் வொரியல் கூட்டு - சூப் செய்து சாப்பிட வயிற்று வலி வாய்ப்புண் குணமடையும்.

அக்கி எனப்படும் சிரங்கு வந்தால் அகத்திக்கீரையை அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பூசி வர அக்கித் தானே காய்ந்து உதிர்ந்து விடும்.

இதன் சாறும் தேங்காய் எண்ணையும் சம அளவு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத்தடவிவர கூந்தல் செழித்து வளரும். குறிப்பாக இளநரை மறையும். மூளை உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மண்டையில் ஏற்படும் கொதிப்பு அதன் காரணமாக ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும்.

இது அதிக சத்து உள்ளது. எனவே தான் ஏகாதசி அன்று பட்டினி கண் விழிப்பு செய்து மறுநாள் பாரணை செய்து விரதம் முடிக்கும் போது கட்டாயமாக அகத்திக்கீரையும் நெல்லிக்காயும் உணவில் சேர்ப்பது வழக்கம். பட்டினி கிடந்தகுடலின் உஷ்ணத்தைத் தணிக்கவும் முதல் நாள் பட்டினியால் ஏற்பட்ட சத்து இழப்புகளை ஈடுகட்டவும் இந்த ஏற்பாட்டினை நம் முன்னோர் கடை பிடித்தனர்.

அனுபவ வைத்தியம் -6

சூடு
உடம்பில் சூடு அதிகம் ஏற்பட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் வேக்காளம் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் குறிப்பாக மூளையை அதிகம் பயன்படுத்தும் அலுவல் இருப்பவர்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் இதற்கு அற்புத நிவாரணி மணத்தக்காளி.

இந்தக் கீரையை வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கழுநீரில் பானம் செய்து சாப்பிட விரைவில் நிவாரணம் கிட்டும். கீரையை வெற்றிலைப் பாக்குபோல் வெறும் வாயில் குதப்ப வாய்ப்புண் தீரும். கூட்டு செய்யலாம், இதன் காயை வற்றல் செய்து சாப்பிட இதய வலி குறையும், இந்த வற்றல் மிளகாய் இரண்டையும் வறுத்து உப்பு சேர்த்துப் பொடித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு சாதத்தில் எண்ணை விட்டுக் கலந்து சாப்பிட வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலி குறையும். இதைப் பூண்டு சேர்த்துக் குழம்பு செய்து சாப்பிட நல்ல செரிமாணம் ஏற்படும். பசியைத் தூண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடக் கொடுத்தால் மூளைச் சூடு குறைந்து படிப்பில் நல்ல தெளிவு ஏற்படும்.

சளி
சளி பிடித்தால் சனியன் பிடித்ததுபோல என்பது பழமொழி. அதுவும் நெஞ்சுச் சளி என்றால் மிகவும் தொல்லை, இருமல், சுசாசிப்பதில் சிரமம் கூடவே மலச்சிக்கல்.

இதற்கு அற்புத நிவாரணி ஆடு தொடா இல்லை - ஆடு தொடா இலைக்கு வாசிகா என்று வடமொழியில் பெயர். சித்தமருத்துவத்தில் தெற்குத்தனி இடம் உண்டு. வாசாவா வாசகாகிஷ்டம் போன்ற மருந்துகளின் மூலப்பொருள் ஆடாதோடை தான்.

இதன் துளிர் சிறிது எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தி வர சளி தொல்லை நீங்கும். இதன் வேரை இடித்து சலித்து வைத்துக் கொண்டு சிறிதளவு எடுத்துத் தேன்விட்டுக் குழைத்துச் சாப்பிட துரித நிவாரணம் கிட்டும், சிறுவர் முதல் முதியவர் வரை தேனைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வரும் ப்ரைமரிக்காம்ப்ளக்ஸ் அதாவது டி.வி.யின் ஆரம்பநிலை. இதற்கும் ஆடு தொடா இலை - வேர் அத்தனையும் சிறந்த மருந்து ஆகும்.

நோய்க்கு ஏற்ப ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம். நிச்சயம் குணம் கிட்டும்.

அனுபவ வைத்தியம்-7

காய்ச்சல் வந்தபின் இருமல் வருவது வழக்கம். காய்ச்சல் வரும்முன்னே இருமல் வரும் பின்னே என்று புதுமொழி கூறலாம். இருமும் போது சிறுநீர்க் கசிவு ஏற்படுதித் தர்ம சங்கட நிலை. இதற்கு நிவாரணம் மா இலை. முக்கனியில் மூத்த கனி தரும் மாவிலைக் கொழுந்து 10 அல்லது 15 எடுத்துக் கிள்ளிப் போட்டு 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 1/4 லிட்டராக சுண்டியவுடன் அந்த நீரில் தேன் சேர்த்து மூன்று வேளை பருகவும். இப்படி மூன்று நாட்கள் அருந்திவர நல்ல குணம் கிடைக்கும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

தேள் கொட்டினால் கொட்டிய இடத்தில் மாங்காய்ப் பாலை வைத்துத் தேய்க்க உடன் வலி நீங்கும். மாம்பூவை சேகரித்து உலர வைத்து தலையில் சாம்பிராணி போடுவது போல் புகையை விட்டால் கொசு வராது.

மாவிலை நல்ல கிருமி நாசினி. எனவேதான் நாள் கிழமை திருவிழாப் பந்தல்களில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். அத்துடன் புனித நீர்த் தெளிக்கும் சடங்குகளிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மாவிலைப் பயன்படுத்துகிறோம். மாமரத்து சுள்ளிகளை யாகங்களில் பயன்படுத்துவது சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவே.

இந்த விஞ்ஞான உண்மைகளை மெய்ஞ்ஞானத்துடன் கலந்த நம் முன்னோர் எத்தனை சிறந்த அறிஞர்கள்.

அனுபவ வைத்தியம்-8

உடலில் பித்தம் - வாதம் - கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாகத் திகழும். ஏதாவது ஒன்று கூடினாலோ அல்லது குறைந்தாலோ வியாதிதான். பித்தம் அதிகரிக்கும் போது உபரியாக சுரக்கும் பித்த நீர் பித்தப் பையிலேயேத் தங்கினால் கற்களாக மாறும். குடலில் தேங்கினால் குடற்புண் ஏற்படும். இது தீவிரமாக மாறி புற்று நோயாக மாறும் அபாயமும் ஏற்படும். எனவேதான் பழங்காலத்தில் பேதி மருந்து சாப்பிடும் முறை இருந்தது. இது அதிகப்படி கபம் - வாயு - பித்தம் ஆகியவற்றை வெளியேற்றிவிடும். அது தற்போது சாத்தியமும் இல்லை. எனவே இதற்கு என்னதான் வழி?

நூறு கிராம் இஞ்சியை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கவும், அத்துடன் பத்து கிராம் இந்துப்பு சேர்த்து கலக்கவும். அதன்மீது நான்கு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வெயிலில் வைக்கவும். நீர் சுண்டி ஊறுகாய் பதத்தில் வந்ததும் பாட்டிலில் பத்திரப்படுத்தி சிறிது சாப்பிட பித்தம் காரணமாக ஏற்படும் உபாதைகள் குறையும்.

அனுபவ வைத்தியம்-9

கோடையின் வெப்பம் ஆரம்பித்துவிட்டது. உடல் சூடு, கண் எரிச்சல், வயிற்றில் வலி என பல வெட்கை நோய்கள். இதைக் கட்டுப்படுத்துவது சோற்றுக் கற்றாழை.

இதைக் கீறி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தலையில் தேய்த்துக் களிக்க மூளையில் சூடு குறையும். இதை மோரிலோ அல்லது நீராகாரத்திலோ கலந்து உள்ளுக்கு சாப்பிட குடல் சூடு, மூலம், உடல்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை


நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை.

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து

எளிய பாட்டி வைத்தியம்



எளிய பாட்டி வைத்தியம்
1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லையா?
சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.


9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

11. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.
50. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

15. மெலிந்த உடல் பருக்க

i. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

ii.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

iii. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

iv. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.

v. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

vi. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

vii. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.


16. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

17. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

18. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.

19. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

20. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

21. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

22. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

23. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

24. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

25. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
28. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

29. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

30. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

31. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

32. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

33. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

34. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

35. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

36. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

37. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

38. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

39. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

40. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

41. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

42. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

43. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

44. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

46. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

47. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

48. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

49. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

50. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

51. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

52. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

53. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

54. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

55. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

56. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

57. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

58. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

59. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

60. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

61. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

62. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

63. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

64. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

இருமல் , சளி ,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்



சளித் தொல்லை, இருமல்,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்




தொண்டை எரிச்சல்

எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.

பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.



இருமல்

1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்

சளித் தொல்லை

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

ஜலதோஷம்

திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.


சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

மார்புச் சளி

ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.


தலை குளிர்ச்சி

காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர‌

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்

பாட்டி வைத்தியம்

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

பாட்டி வைத்தியம்


பாட்டி வைத்தியம்(Grannytherapy)
பாட்டி வைத்தியம்:
முகம்பளபளப்பாக...வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம்ஆகியமூன்றையும்சேர்த்துவேகவைத்துவாரத்தில்
இரண்டுஅல்லதுமூன்றுவேளைசாப்பிட்டுவந்தால்உடல்குளிர்ச்சியடைவதோடுமுகம்
சுருக்கம்மறையும். மேலும்முகம்பளபளப்பாகமாறும். வாரத்தில்ஒன்றுஅல்லதுஇரண்டு
நாளாவதுஆரஞ்சுமற்றும்கேரட்ஜீஸ்குடித்துவந்தால்முகம்பொன்னிறமாகமாறும்.
தலைவலிகுறைய...1.மகிழம்பூ, சுக்கு, சீரகம், சோம்பு, ரோஜாப்பூ, ஏலக்காய், அதிமதுரம், சித்தரத்தை
ஆகியவற்றைஒன்றாகசேர்த்துஇடித்துப்பொடிசெய்துகொள்ளவேண்டும். அந்தபொடியை
காலை, மாலைஎனஇருவேளைஅரைதேக்கரண்டிஅளவுஎடுத்துதேனில்குழைத்துச்
சாப்பிட்டுவந்தால் தலைவலிகுறையும்.(or)
2. வெற்றிலையைசாறுஎடுத்துஅந்தசாற்றில்கிராம்பைஅரைத்துஎடுத்துஇரண்டுபொட்டுப்பகுதிகளிலும்கனமாகப்பூசிவந்தால்தலைவலிகுறையும்.
கண்வலிகுறைய...1.வில்வம்மரத்தின்இளம்தளிரைவதக்கிஇளஞ்சூட்டில்கண்ணில்ஒத்தடம்கொடுத்து
வந்தால்கண்வலிகுறையும்.(or)
2.கருவேலம்கொழுந்துஇலையுடன்சீரகத்தைசேர்த்துஅரைத்துவலியுள்ளகண்ணை
மூடச்செய்துஅதன்மேல்வைத்துபின்புஒருவெற்றிலையைஅதன்மேல்வைத்துசுத்தமானதுணியால்கட்டிவிடவேண்டும். இரவில்கட்டிகாலையில்அவிழ்த்துவிடவேண்டும்.
இவ்வாறுமூன்றுநரட்கள்செய்துவந்தால்கண்வலிகுறையும்.
சளிகுறைய...1.பூண்டு, தக்காளி, வெங்காயம்ஆகியவற்றைநன்றாகநசுக்கிதண்ணீர்விட்டுவேகவைத்து
சூப்செய்துசாப்பிட்டுவந்தால்சளிகுறையும்.(or)
2.வெற்றிலையைஇடித்துச்சாறுஎடுத்துக்கொள்ளவேண்டும். அந்தசாற்றைக்கொதிக்க
வைத்துபின்புஆறவைத்துநெற்றிபகுதியில்பற்றுப்போட்டுவந்தால்ஓயாதச்
சளிக்குறையும்.(or)
3.தூதுவளைச்சாறு, துளசிஇலைச்சாறுஆகியவற்றைஒன்றாகக்கலந்துவேளைக்குஒரு
அவுன்ஸ்வீதம்சாப்பிட்டுவந்தால்ஓயாதசளிக்குறையும்.
மூச்சுவாங்குவதுகுறைய...தும்பைஇலைச்சாற்றைமூன்றுதேக்கரண்டியளவுகாலைவேளையில்மூன்றுநாட்கள்
சாப்பிட்டுவாந்தால்மூச்சுவாங்குவதுகுறையும்.
காதுவலிகுறைய...1.கரிசலாங்கண்ணிசாறு, நெல்லிக்காய்சாறுஇரண்டையும்பால்மற்றும்அதிமதுரப்பொடி
சேர்த்துதைலம்செய்துதலைக்குதேய்த்துகுளித்துவரகாதுநோய்குறையும். கடுகை
அரைத்துகாதுக்குபின்புறம்பற்றுப்போட்டுவந்தால்குளிர்ச்சியினால்ஏற்படும்காதுவலி
குறையும்.(or)
2. கடுகைஅரைத்துகாதுக்குபின்புறம்பற்றுப்போட்டுவந்தால்குளிர்ச்சியினால்
ஏற்படும்காதுவலிகுறையும்.
ஒற்றைதலைவலிகுறைய...1.ஒற்றைதலைவலிஏற்படும்போது 1 டம்ளர்கேரட்சாறில்சிறிதுவெள்ளரிகாய்சாறுமற்றும்பீட்ரூட்சாறுகலந்துகுடித்துவந்தால்ஒற்றைதலைவலிகுறையும்.(or)
2.முட்டைகோஸ்இலைகளைநன்குநசுக்கிஒருசுத்தமானதுணியில்கட்டி, அதைக்கொண்டுதலையின்மீதுஒத்தடம்கொடுத்தால்ஒற்றைத்தலைவலிகுறையும்.(or)இலவங்கப்பட்டைதூளைஎடுத்துநீர்விட்டுகுழைத்துசிறிதுதலையில்தேய்த்துவிட்டுசிறிதுநேரம்கழித்துகுளித்துவந்தால்மூக்கடைப்புகுறையும்.(or)
3. திப்பிலி, கஸ்தூரிமஞ்சள், சந்தனம்மற்றும்படிகாரம்ஆகியவற்றைபசும்பால், இளநீர்விட்டுதனித்தனியாகமுறைப்படிஊறவைத்துஅரைத்துஒன்றாககலந்துஉருண்டையாக்கிகாயவைத்துஇடித்துசலித்துமுகர்ந்துவந்தால்மூக்கடைப்பு, மூக்கெரிச்சல்குறையும்.
பல்வலிகுறைய...1.ஆலமரப்பட்டையைமைபோல்இடித்துபொடிசெய்துவைத்துக்கொள்ளவேண்டும். அந்தபொடியைவெந்நீரில்போட்டுகொதிக்கவைத்துஅதனுடன்சர்க்கரைசேர்த்துமூன்றுமாதங்கள்சாப்பிட்டுவந்தால்பல்நோய்கள்குறையும்.(or)
2.பல்வலிஏற்படும்போதுசிறிதுமிளகுத்தூளில்கிராம்புஎண்ணெய்கலந்துவலிஇருக்கும்பல்லில்தடவிவந்தால்வலிகுறையும்.
தொண்டைப்புண்குறைய...மிளகுத்தூள்மற்றும்கிராம்புத்தூள்எடுத்துவிட்டுசூடேற்றிதேன்கலந்துகுடித்துவந்தால்தொண்டைப்புண்மற்றும்தொண்டைவலிகுறையும்.
இருமல்குறைய...1.வெங்காயத்தைபொடியாகநறுக்கிஅரைத்துமெல்லியதுணியில்வடிகட்டிக்கொள்ளவேண்டும். அந்தசாற்றில்சர்க்கரைகலந்துபாகுபதமாககாய்ச்சிஇறக்கவேண்டும். வெங்காயப்பாகைஒருவேளைக்குஒருதேக்கரண்டிவீதம்சாப்பிட்டுவந்தால்இருமல்குறையும்.(or)
2.மணத்தக்காளிஇலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம்ஆகியவற்றைஒன்றாகசேர்த்துஒருமண்சட்டியில்போட்டுசிவந்துவரும்வரைநன்குவறுத்துக்கொள்ளவேண்டும். அதில்ஒருலிட்டர்தண்ணீர்விட்டு 1/8 லிட்டராகச்சுண்டக்காய்ச்சிக்கொள்ளவேண்டும். இந்தகஷாயத்தைமூன்றுவேளையும்சாப்பிட்டுவந்தால்இருமல்குறையும்.
கண்பார்வைஅதிகரிக்க...1.கேரட், துவரம்பருப்பு, தேங்காய்ஆகியவற்றைசோ்த்துசமைத்துக்கொள்ளவேண்டும். அதைசாதத்தில்கலந்துசாப்பிட்டுவந்தால்கண்பார்வைஅதிகரிக்கும்.(or)
2.சீரகம், கொத்தமல்லிவிதைமற்றும்வெல்லம்ஆகியமூன்றையும்எடுத்துநன்றாகஇடித்துபொடியாக்கிசலித்துகொண்டுகாலை, மாலைஇந்தபொடியைசாப்பிட்டுதண்ணீர்குடித்துவந்தால்கண்பார்வைதெளிவாகும்.(or)
3.வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.(or)
4.கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சோ்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச்செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.
இடுப்புவலிகுறைய...1.உளுந்தம்பருப்புஉணவுவகைகளைஉணவில்சேர்த்துசாப்பிட்டுவந்தால்இடுப்புபகுதிநரம்புகள்பலப்படும்.(or)
2.இலுப்பைஎண்ணெயைவெதுவெதுப்பாகச்சூடுசெய்துஆறியபின்நன்றாகதடவிவெந்நீர்ஒத்தடம்கொடுத்துவந்தால்இடுப்புவலி, நரம்புத்தளர்ச்சிஆகியவைகுறையும்.
கழுத்துவலிகுறைய...1.நொச்சிஇலையைஇடித்துசாறுபிழிந்துஅதனுடன்சமஅளவுநல்லெண்ணெய்சேர்த்துகாயவைத்து, அதைவலிஉள்ளஇடத்தில்தேய்த்துவெந்நீரில்வாரம்இருமுறைகுளித்துவந்தால்கழுத்துவலிகுறையும்.(or)
2.குப்பைமேனிசாறுஎடுத்துநல்லெண்ணெயுடன்கலந்துகாய்ச்சிவலியுள்ளஇடத்தில்தேய்த்துவரகழுத்துவலிகுறையும்.
முதுகுவலிகுறைய...1.வெட்டிவேரின்புல்லைஎடுத்துகற்கண்டுசேர்த்துநன்றாகஅரைத்துபாலில்கலந்துகுடித்துவந்தால்முதுகுவலிகுறையும்.(or)
2. மிளகு, கிராம்புமற்றும்சுக்குசேர்த்துநீர்விட்டுதேநீர்செய்துதினமும் 2 வேளைகள்குடித்துவந்தால்முதுகுவலிகுறையும்.(or)
3.பூண்டைநல்லெண்ணெய்சேர்த்து,கொதிக்கவைத்துவடிகட்டிமுதுகுவலியுள்ளஇடத்தில்தேய்க்கமுதுகுவலிகுறையும்.
தலைமுடிவளர...1.சதைப்பிடிப்புள்ளமூன்றுகற்றாழையைஎடுத்துஅதிலுள்ளசதைப்பகுதியைஒருபாத்திரத்தில்வைத்துஅதன்மீதுசிறிதுபடிகாரப்பொடியைதூவிவைத்திருக்கவேண்டும். இப்பொழுதுசோற்றுப்பகுதியிலுள்ளசதையின்நீர்பிரிந்துவிடும். இவ்வாறுபிரிந்தநீருக்குசமமாகநல்லெண்ணெய்அல்லதுதேங்காய்எண்ணெயைகலந்துசுண்டக்காய்ச்சவேண்டும். காய்ச்சியஅந்ததைலத்தைதினசரிதலையில்தேய்த்துவந்தால்தலைமுடிநன்றாகவளரும்.(or)
2. வேப்பம்பூவைஇலேசாகதணலில்காண்பித்துதாங்கக்கூடியசூட்டில்வேப்பம்பூவைஉச்சந்தலையில்வைத்துதேய்த்துவந்தால்தலைமுடிநன்றாகவளரும்.
வாய்ப்புண்கள்குணமாக...மணித்தக்காளிஇலைகளைநெய்யிலிட்டுவதக்கிமசித்துஉணவில்சேர்த்துஉண்டுவரவாய்ப்புண், உட்காய்ச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்சூட்டைக்குறைக்க.....எள்எண்ணெயைப்(நல்லெண்ணெய்) 15 நாட்களுக்குஒருமுறைதலையில்தேய்த்துவெந்நீரில்குளித்துவரக்கண்கள்குளிர்ச்சியடையும்;தலைப்பாரம், உடற்சூடுஆகியனகுறையும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடற்பலம்உண்டாக...சிறுகீரையைஉணவுடன்சேர்த்துஉண்டுவரஉடற்பலம்உண்டாகும் (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்பருக்க...கல்யாணப்பூசணிக்காயைவேகவைத்துஅரைத்துப்பால்,தேன்,நெய்கலந்துலேகியமாக்கிவைத்துக்கொள்ளவேண்டும். இதை 5 முதல் 10 கிராம்தினம்இருவேளைஉண்டுவரஉடல்பருக்கும்; உடற்சூடுநீங்கும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்இளைக்க...சந்தனத்தைச்சீவிகுடிநீர்செய்துகுடித்துவரபருத்தஉடல்இளைக்கும்; நீர்க்கட்டு, நீரெரிச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பசியின்மை, செரியாமைஆகியனதீர...தோல்நீக்கியஇஞ்சியைசிறுசிறுதுண்டுகளாகநறுக்கிச்சுத்தமானதேனில்ஊறவைத்துத்தினம்இரண்டுதுண்டுகள்மட்டும்உணவிற்குமுன்உண்டுவரப்பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
வயிற்றுப்புழுக்கள்நீங்க...சுண்டைக்காயைமோரில்ஊறவைத்துவெயிலில்காயவைத்துச்சுண்டைவற்றலாக்கிச்சூரணித்து 1 முதல் 2 கிராம்வெந்நீருடன்தினமும்இருவேளைஉட்கொள்ளவயிற்றுப்புழுக்கள்வெளிப்படும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
வயிற்றுவலி, கண்ணெரிச்சல்தீர...அதிமதுரத்தைஒன்றிரண்டாகஇடித்துவிதிப்படிக்குடிநீர்செய்துஅத்துடன்தேவையானஅளவுசர்க்கரை, பால்ஆகியனசேர்த்துத்தீப்பிடிக்காமல்பாகுபதம்வரும்வரைகாய்ச்சிவைத்துக்கொள்ளவும். இரண்டுதேக்கரண்டிதினம்இருவேளைஉண்டுவரநீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்றுவலி,பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
புண்கள்குணமாக...இலுப்பைப்பிண்ணாக்கைஇடித்துச்சூரணமாக்கிவைத்துக்கொண்டுஇளவெந்நீரில்குளித்து, இச்சூரணத்தைத்தேய்த்துக்கழுவ, அழுகிய, நாட்பட்டசீழ்கோர்த்தபுண்கள்குணமாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
உடல்அரிப்பு, சொறி, சிரங்குஆகியனநீங்க...குப்பைமேனிஇலைச்சாற்றுடன்மஞ்சள்சேர்த்துஉடலில்பூசிவரஉடல்அரிப்பு, சொறி, சிரங்குஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
இளநரைமாற...மருதோன்றி(மருதாணி) இலையைநீர்விட்டுஅரைத்துக்கற்கமாக்கித்தேங்காய்எண்ணெயில்இட்டுவெயிலில்வைத்து, ஈரம்வற்றியபின்வடித்துத்தலையில்தடவிவரஇளநரைமாறும், கண்குளிர்ச்சியடையும், நல்லதூக்கம்உண்டாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்'என்னும்நூலிலிருந்து)
முடிவளர...1.சடாமஞ்சிலைத்தேங்காய்எண்ணெயில்கலந்துதலையில்தேய்த்துவரகூந்தல்வளரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்'என்னும்நூலிலிருந்து).(or)
2. வழுக்கையில் முடிவளர்வது என்பது முடியாத காரியமே ஆனால் சிலருக்கு அது நடக்க கூடிய காரியமே. கீழாநெல்லி வேறை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும்.
சொத்தைப்பல்குணமாக...கண்டங்கத்தரிப்பழவிதையைக்காயவைத்துஅனலில்இட்டுவரும்புகையைவாயில்படும்படிசெய்யசொத்தைப்பல்குணமாகும்;பல்வலிகுறையும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பொடுகுகுணமாக, முடிஉதிர்வதைக்கட்டுப்படுத்த...பொடுதலைஇலைகளைநல்லெண்ணெயில்இட்டுவெயிலில்வைத்துஈரம்வற்றியபின்வடித்துத்தினமும்தலையில்தேய்த்துவரபொடுகுகுணமாகும்; முடிஉதிரல்கட்டுப்படும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
பற்களின்கறைநீங்க...நாயுருவிவேரைச்சூரணம்செய்துவைத்துக்கொண்டுபல்துலக்கிவரப்பல்துப்புரவாகும்; பற்களின்கறைநீங்கும்; 1/2 முதல் 1 கிராம்வரைஉண்டுவரஉடல்வலுவாகும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
மூக்கடைப்புசரியாக...ஓமத்தைஇலேசாகவறுத்துப்பொடிசெய்து 2 கிராம்எடுத்துஅத்துடன் 1 கிராம்பச்சைக்கற்பூரம்சேர்த்துவெள்ளைத்துணியில்கட்டிநுகர,மூக்கடைப்பு, மூக்குநீர்பாய்தல், பீனிசம்ஆகியனதீரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)
முகப்பரு, கால்ஆணி, பித்தவெடிப்புசரியாக...1.அம்மான்பச்சரிசிச்செடியைநன்குகழுவிநீர்விட்டுஅரைத்து 20 கிராம்பாலில்கலக்கி, தினம்இருவேளைபருகிவரதாய்மார்களுக்குப்பால்சுரக்கும்; முகத்தில்பூசிவர, முகப்பரு, எண்ணெய்ப்பசைஆகியவைமாறும்; காலில்பூசிவரக்காலாணி, பித்தவெடிப்புஆகியனதீரும்; மருக்கள்மீதுபூசஅவைஉதிரும். (தமிழகஅரசுவெளியிட்ட 'இந்தியமருத்துவமுறைகள்' என்னும்நூலிலிருந்து)(or)
2. சின்னவெங்காயத்தைஎடுத்துபாலில்வேகவைத்துமையாகஅரைத்துபருக்கள்மீதுதடவிவந்தால்பருக்கள்குறையும்.
விடியற்காலையில்நீர்அருந்துதல்....துளசி, வில்வம், அருகம்புல்ஆகியஏதாவதுஒன்றினைஎடுத்துஇரவில்ஒருலிட்டர்நீரில்ப