"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Saturday, May 7, 2016

முல்லைப் பூ



முல்லைப் பூவின் மருத்துவ குணம்..! முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் மருத்துவ குணம்..!முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

குடற்புழு (Ascarids)

[07/05 9:41 PM] anbuananth85@gmail.com 98: வோம்ஸ் (Worms) என்பது இரப்பை பாதைகளில் வளர்கின்ற ஒட்டுண்ணிகளாகும். இதில் நாக்குப் பூச்சி/உருளைப்புழு (Roundworms) மற்றும் தட்டைப் புழு (Tapeworms) வகையே அதிகமாகக் காணப்படுகின்றன. நாக்குப் பூச்சி / உருளைப்புழுவகையினுள் சிறு குடற்புழு (Ascarids), கொக்கிப் புழு (Hookworms), ஊசிப் புழு (Pinworms), நூல் புழு (Threadworms) போன்றனவும் உள்ளடங்கும். நாக்குப் பூச்சி/ உருளைப்புழு (Roundworms) தொற்றும் இயல்புடைய ஒரு குடல் ஒட்டுண்ணியாகும். இவை மண்புழுக்களை ஒத்த வடிவத்தைக் கொண்டிருக்கும் ஆனால் உருவத்தில் சிறியதாகத் தென்படும். இவை இலகுவாக மனிதனுடைய வெற்று கண்ணுக்கு புலப்படுவனவாகக் காணப்படுகின்றது. ஊசிப் புழு வெள்ளை நிறப்புழுவாகும். நூலைப் போல் உள்ள புழுக்கள் 1-3 இஞ்சி நீளமுடையதாகக் காணப்படும். தட்டைப் புழுக்கள் மிகவும் நீளமானவை. தட்டைப்புழுவானது 1 இஞ்சியிலிருந்து 30 அடிவரை அதன் வளர்ச்சி காணப்படலாம். அத்தோடு 25 ஆண்டுகள் உடலில் வசிக்கக்கூடிய ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளது.
[07/05 9:41 PM] anbuananth85@gmail.com 98: எவ் வகையான வோம்ஸ் (Worms) என்பதிலேயே அவ் தொற்றுக்களின் தீவிரத் தன்மை தங்கியுள்ளது. இவ் வோம்ஸ் (Worms) பல்வேறு வகையான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட வகையினருக்கு சில வேளைகளில் உணரக்கூடிய அறிகுறிகளைக் காட்டாது. அதே போன்று சில வகையானோரை எடுத்துக் கொண்டால் அவர்கள் கழிக்கும் மலத்தில் வோம்ஸ்சைக் (Worms) கணக்கூடியதாக இருக்கும்.
[07/05 9:41 PM] anbuananth85@gmail.com 98: ஊசிப் புழுக்கள் ஆசன வாயிற்க்கு வெளியே இடம் பெயர்ந்து வந்து அதன் முட்டைகளை இட முனைகின்றன. ஆகையால் இவை கடுமையான ஆசன வாய் அரிப்பை (anal itching) ஏற்படுத்துகின்றன. மற்றும் இவை தூக்கமின்மை (Insomnia), அமைதியின்மைகளுக்கும் (Restlessness) வழிவகுக்கும். கொக்கிப் புழுக்கள் உள்ளங்கால்களில் அரிப்பை ஏற்படுத்துவதோடு சிலவேளைகளில் சளியோடு இரத்தம் வெளியேறல், சொறி, பசியின்மை, போன்றவற்றின் வெளிப்பாட்டுக்கும் காரணமாகின்றது. நூல் புழுக்கள் இருமல் / மூச்சு குழாய்ஒவ்வாமை (Coughing / bronchitis), அடிவயிற்று வலி, வயிற்றோட்டம், வாயு வெளியேற்றம், சிறிய சிராய்வுகள் உருவாதல் (இவை சில வேளைகளில் கடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்), போன்றவற்றுக்கு காரணமாக அமைகின்றன. சிறிய தட்டைப்புழுக்கள் நிறைகுறைவு / பசியின்மை, அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம் போன்றவற்றுக்கு காரணமாகின்றது. பெரிய தடைப் புழுக்களும் சிறிய தட்டைப் புழுக்களைப் போன்ற அறிகுறிகளையே ஏற்படுத்துகின்றது.
[07/05 9:41 PM] anbuananth85@gmail.com 98: ஆனால் பொதுவாக உடல் நிறைகுறைப்பை ஏற்படுத்துவதில்லை. Ascarids (சிறுகுடற் புழு) அஸ்காரைசிஸ் (Ascariasis) ஐ உருவாக்குகின்றது. அதன் இயல்புகளாக வயிறு ஊதல், வயிற்று வலி, வாந்தி மற்றும் மூச்செடுப்பதில் சிரமமான நிலை ஏற்படும். நுண்ணிய நாக்குப் பூச்சியால் ரைககோனோசிஸ் (Trichinosis) என்ற நோய் உருவாகிறது. இதை முற்று முழுதாகக் குணப்படுத்த முடியாவிடில் அது தசைகளை சேதம் செய்வதோடு, இதயம் சார்ந்த / நரம்பு மண்டலம் சார்ந்த சிக்கல்களையும் உருவாக்கிவிடுகின்றது. வோம்ஸ் தொற்றுக்கள் சாதாரண நிலையிலிருந்து தீவிர நிலையை அடைகின்றன. வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் அபாயங்களும் உள்ளது. குறிப்பாக சிறுவர்களுக்கு மிக ஆபத்தாக அமைகிறது. இந் நோய் உள்ள சிறுவர்களைப் பார்ப்போமானால் அவர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்‌சத்துக்களை அகத்துருஞ்சும் தன்மை மிகக் குறைவாகவே காணப்படுகிறது. சிலருக்கு இரப்பை பாதையில் இரத்த கசிவோ அல்லது இரத்த இழப்போ ஏற்படலாம். ஆகையால் அவை குறைபாடு தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக- இரத்த சோகை, வளர்ச்சியில் ஏற்படும் கோளாறுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பல நோய்களுக்கு காரணமாக அமைகின்ற அகத்துறிஞ்சாமை பிரச்சனைகளுக்கு ஒட்டுண்ணித்தன தொற்றுக்களே காரணமாக அமைகிறது. ஏனென்றால் இதன் விளைவாக நோயெதிர்ப்பு செயற்பாடு குறைகிறது.

கொத்தமல்லி


கொத்தமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா, இலங்கை முழுதும் காணப்படும்.
இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.

வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை

கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.

உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.

கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்

ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.

இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.

கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.

பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

தோல் நோய்களை குணமாக்குகிறது

மன அமைதி, தூக்கம் கொடுக்கும்

4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.

வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.

தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.

தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

பிரண்டை


காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து இரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்க இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்று துளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை, வேப்ப ஈர்க்கு, முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.

பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊற வைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.




(ஆர்த்ரைடிஸ்-Arthritis

நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.

அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறு சிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.

சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை.
இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.

அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.