"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, November 8, 2016

சல்லிய கரணி” சஞ்சீவி மூலிகை

சல்லிய கரணி" சஞ்சீவி மூலிகை
.
துண்டிக்கப்பட்ட பாகத்தை ஒட்டவைக்கும் சக்தியுடைய இம்மூலிகைக்கு "சல்லிய கரணி சஞ்சீவி " என்று பெயர் – அந்த காலத்தில் போரில் கை- கால் – வெட்டுப்பட்டால் இந்த மூலிகையை அரைத்து காயத்தின் மீது தடவுவார்கள் - காயம் ஆறிவிடும் - இது சணப்ப இலை – போன்ற இலையுடையது- இதை தொட்டவுடன் பக்க இலையுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டு கை கூப்புவது போல் போன்று இருக்கும் –
சூரியன் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் இலை திரும்பி நிற்கும் – இது ஜீவசக்தி யுடைய மூலிகை - இதை முறைப்படி காப்பு கட்டி ஆணிவேர் அறுந்து விடாமல் – தோண்டி எடுத்து வந்து நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து – துணியில் வடிகட்டி –மூன்று விரல் அளவு தேனில் குழைத்து 48 நாட்கள் சாப்பிட்டால் சகல நோயும் தீர்ந்து நரை திரை மாறும் – பதினாறு வயது குமாரனாகவும்- மதயானை போன்ற வலிமை பெறுவதுடன் – அடித்தாலும் வலிக்காது வீங்காது எளிதில் உயிர் போகாது – என்று காலாங்கி நாதர் மலை வளம் என்ற ஓலைசுவடியில் கூறப்பட்டுள்ளது –
நான் இதைதான் சாப்பிடுகிறேன் – மிக அற்புதமான சஞ்சீவி மூலிகை – சர்க்கரை வியாதி புண்கள் – இம் மூலிகையை சாப்பிட்டவுடன் ஓடும் – அகத்திய மாமுனிவர் அந்த காலத்தில் அறுவை சிகிச்சை செய்து முடித்தவுடன் இந்த மூலிகையை அரைத்து மேலே தடவுவார் – அறுத்த பாகம் ஒட்டி மீண்டும் ஒட்டிக் கொண்டு ஆறிவிடும் –
இதன் வடக்கு போகும் வேரை எடுத்து தாயத்தில் அடைத்து வலது கையில் கட்டிக்கொண்டால் சகல வசியம்- லட்சுமி கடாட்சம் பெற்று வறுமை இன்றி – சுக வாழ்க்கை வாழ்வான் என்று காலாங்கி நாதர் மலை வாகடம் என்ற நூலில் கூறியுள்ளார் - 

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் !!!


கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.
* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.
* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்

அழுகண்ணி காயகற்பம் மூலிகை .


நூறு வயது ஆயுளை தரும். அழுகண்ணி மூலிகை
அழுகண்ணி காயகற்பம் மூலிகை .
இது கத்தி- துப்பாக்கி- விபத்து- சர்க்கரை வியாதி புண்- அனைத்து வகையான ஆறாத காயங்களை - பாதிக்கப்பட்ட பாகத்தை ஒட்டவைத்துப் புண் ஆகாமல் ஆற்றும் சத்தியுடைஞது: இதற்கு வட மொழியில் சாவல்யகரணி என்று பெயர்
.இது கடலை இலை போன்ற இலையுடன் ஒரு அடி உயரம் உள்ள குத்துச் செடியாக இருக்கும்.இதன் இலை தடிப்பாகவும் வழு வழுப்பாகவும் .இலையில் இருத்து பனித்துளிபோன்று நீர் கசிந்து சொட்டுவதால் இலையின் அடியில் ஈரமாகவும்.எறும்பு மொய்த்துக் கொண்டும் இருக்கும்.இது இனிபபு சுவையுடையது இதை முறைப்படி காப்பு கட்டி. சாபம் போக்கி எடுக்கவேண்டும்.
இதைக் கொண்டுவந்து நிழல்பாடம் செய்து உலர்ந்தபின் இடித்துத் தூள் செய்து துணியில் வஸ்திரகாயம் செய்து ஒரு சீசாவில் பதனம் செய்யவும் இதை திரிகடி பிரமாணம் தேனில் குழைத்துக் காலை மாலை இருவேளையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டால் வேல். ஈட்டி. அம்பு. முதலிய கூரிய ஆயுதம் உடலில் தாக்கப்பட்டவுடன் தண்ணீர் பிரிந்து கூடுவது போல் கூடும். வெட்டு குண்டு முதலியன உடலைஒன்றும் செய்ய இயலாது மேலும் நரை திரை நீங்கி காயகற்பம் ஆகும் யானையைப் போன்ற வலிமையும் அருணனைப் போன்ற அழகும் உண்டாவதுடன்
(வெகு காலம் உடல் அழிவுறாது.)- என்று காலாங்கி நாத சித்தர் தனது ஓலைசுவடியில் கூறியுள்ளார் -
இதன் வடக்குப்போகும் வேரை எடுத்துத் தங்கத்தால் தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து. பூஜை செய்து வலது புஜத்தில் கட்டிக்கொண்டால் சகல காரிய சித்திவுண்டாகும். லட்சுமி கடாட்சம் தொழில் விருத்தி வியாபாரம் விவகார ஜெயம் முதலிய காரியசித்தி ஏற்படும்.