"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Monday, April 25, 2016

வயிற்று புண்


வயிற்று புண் என்றால் என்ன ? எங்கு ஏற்படுகிறது?

வயிற்று புண் என்றால் வயிற்றில்/சிறுகுடலில்/ அடியில் உள்ள திசுக்களில் காணப்படும் உள்திரைகளில் உராய்வு போன்ற புண் காணப்படுதலாகும். சுற்றியுள்ள திசுக்கள் வழமைக்கு மாறாக வீங்கியும் எரிச்சலூட்டும் தன்மையையும் கொண்டிருக்கும். வயிற்று புண் சமிபாட்டுத் தொகுதியிலுள்ள எந்த பகுதியிலும் ஏற்படலாம் ஆனால் பொதுவாக இரைப்பையிலும் (gastric ulcers - இரைப்பை புண்), சிறுகுடல் மேற்பகுதியிலும் அதாவது வயிறு நெருக்கமாகவிருக்கும் சிறு குடல் பகுதியில் (duodenal ulcers - சிறுகுடல் மேற்பகுதி புண்) ஏற்படுகிறது.

அறிகுறிகள் என்ன?

நீண்ட கால எரிவு, அரிக்கும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உணவருந்திய பின் அல்லது இரவில் பொதுவாக 55-60 நிமிடங்கள் வரை இவை ஏற்படலாம். உணவு, அமில எதிர்ப்பிகள் பாவித்தல், வாந்தி, அதிகமான நீர் அருந்துதல் ஆகியன இவ் எரிச்சல்களை/வலிகளை தணிக்க உதவுகின்றன. இந்த வலிகள் இலேசாக தொடங்கி கடிமையான வலியையும் ஏற்படுத்தலாம். மேற் குறிப்பிட்டது மட்டுமன்றி வேறு சில அறிகுறிகளுமுள்ளது.
உதாரணமாக- கீழ் முதுகு வலி ஏற்படல், உணர்ச்சிவசமடைதல், மூச்சு திணறல், தலைவலி, கடிக்கும் தன்மை, குமட்டல்/வாந்தி

ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

நொதியங்களின் விளைவுகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதற்கு வயிற்றில் உள்ள அகவரைகளுக்கு இயலாது போகும் சந்தர்ப்பத்திலும் வயிற்று புண் ஏற்படக்கூடும். இவ்வாறே அமிலங்கள் இரப்பையையும் புண்ணாக்கிவிடுகின்றன.

சிலர் பதட்டமும், மன அழுத்தமுமே வயிற்று புண் வருவதற்கு முக்கிய காரணங்கள் என நப்பினார்கள் . எவ்வாறாயினும் காலப்போக்கில் அவ் நம்பிக்கையை முறையடித்து வயிற்றில் இருக்கும் அமிலத்துடன் ஹெலிகோபாக்டர் பாக்டீரியாக்களும் இணைந்தே வயிற்று புண்ணை ஏற்படுத்துகிறது என அத்தாச்சிகள் எடுத்துக்காட்டுகின்றது. ஜீரண அமிலதிலிருந்து பாதுகாக்கின்ற சீத படலத்தையும், அகதிரையையும் சேதப்படுத்துகின்ற ஹெலிகோபாக்டர் பாக்டீரியா வயிற்றிலோ அல்லது சிறுகுடலிலோ வசிக்க முடியும்.

பல உடல் நல பரிந்துரையாளர்கள் இவ் பாக்டீரியா ஒருவரிலிருந்து எனொருவருக்கு அதாவது நெருக்கமான உறவுமுறைகளின் (close contact) மூலம் தொத்துகிறது என நம்புகிறார்கள். எவ்வாறாயினும் இன்னமும் சில உடல் நல பரிந்துரையாளர்கள் மனவழுத்தம் கூடும் போது வயிற்றமிலமும் அதிகரிக்கிறது அதனாலேயே வயிற்று புண் ஏற்படுகிறது என்கின்றனர்.
சில மருந்து தூள்களும், குறைநிரப்பிகளும் அமில உற்பத்தியை அதிகரிகின்றனர். அஸ்பிரின் எடுத்தல், நான்ஸ்டீராய்டல் அன்றிஇன்பிலமற்றரி போன்ற வலி நிவாரணிகளின் பாவனை (முக்கியமாக நீண்டகால பாவனை) வயிற்று அமிலத்தன்மையை அதிகரித்து வயிற்று புண்ககளை உருவாக்கின்றது. கீல்வாதம் போன்ற நோய்களுக்கு பாவிக்கும் ஸ்டீராய்டுகள் (steroids) மருந்துகளும் இதற்கு காரணமாக அமையலாம். பரம்பரையில் இந் நோய் காணப்படுமாயின் அது வயிற்று புண்ணுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கச் செய்யும். புகைப்பிடிப்பவர்களுக்கு வயிற்று புண் அதிகம் விருத்தியடைவதுடன் குணப்படுத்துவதும் மிகவும் கடினமாகும்.அது போன்று மது அருந்துபவர்களுக்கும் இது ஏற்படலாம். வயிற்று புண்கள் அக இரத்த கசிவு, வயிற்று/சிறுகுடல் குத்து ஆகியவற்றை உருவாக்கும்.

நெல்லிக்காய் ஜீஸ்

நெல்லிக்காய்
 
ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !
மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய்.
இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.
உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.
கொழுப்புக்கள் கரையும்:
நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.
எலும்புகள் ஆரோக்கியமாகும்:
எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
புற்றுநோய்:
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பருகுங்கள்.
உடல் சூடு தணியும்:
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
இரத்தம் சுத்தமாகும்:
நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும
 
 

வெந்தயம்


குறிச்சொற்கள் » வெந்தயம்





சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு

சாம்பார் கெட்டுப் போகாமல் இருக்க எளிய குறிப்பு
விருந்திலும் சரி, வீட்டிலும் சரி அதிமுக்கிய இடம்பிடிப்ப‍து சாம்பார் தான். அதிலும் துவரம் பருப்பில்

வெந்தயம் இருக்க வேறு என்ன வேணும்

கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையை ரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும்.
வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக வெந்தயம் தேவை. அதிலுள்ள டையோஸ்ஜெனின் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.கருப்பைக்குரிய சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால், பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது.
கருப்பைக்குரிய சுருங்குதலை வெந்தயம் ஊக்குவிப்பதால், பிரசவ வலியை குறைத்து குழந்தை பிறப்பை தூண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது. மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். உணவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்துக் கொண்டால், அதிகப்படியான அமிலப் பாய்ச்சல் அல்லது நெஞ்செரிச்சலுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
நமது வயிற்றின் அக உறை மற்றும் குடலில், வெந்தயத்தின் பசைப் பொருள் சூழ்ந்து கொள்வதால், எரிச்சலை உண்டாக்கும் இரையக குடலிய தசைகளை இதமாக்கும். அதனை உட்கொள்வதற்கு முன்பாக, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்தால், அதன் வெளிப்புறம் பசைத்தன்மையை பெறும். வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் கலந்து பருகினால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலை குறைத்து, உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். வெந்தயத்தின் பசைப்பொருள், இருமல் மற்றும் தொண்டை எரிச்சலையும் நீக்கும்.
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து (சபோனின்ஸ், பசைப்பொருள் போன்றவைகள்) உணவுகளில் இருந்து உள்ளேறிய நச்சுத்தன்மையை, உடலில் இருந்து வெளியேற்றும். இது பெருங்குடலின் சீதப்படலத்தை புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். செரிமானத்தை ஊக்குவித்து, உடலிலுள்ள தீமையான நச்சுக்களை வெளியேற்றும். இது செரிமானமின்மையை நீக்கி, மலச்சிக்கலுக்கு போக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால், அதிலுள்ள இயற்கையான கரையத்தக்க நார்ச்சத்துக்கள், பசியை அடக்கிவிடும். ஊற வைத்த சுத்தமான வெந்தயத்தில் இருந்து செய்யப்பட்ட பேஸ்ட்டை சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம். அதில் தீக்காயம், கொப்பளம், சரும படை போன்ற பிரச்சினைகளும் அடக்கம். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.
வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும். கரும்புள்ளிகள், பருக்கள், சுருக்கங்கள் போன்றவைகளை தடுக்க வெந்தயத்தை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். வெந்தயத்தை போட்டு கொதிக்க வைத்த நீரை கொண்டு முகத்தை கழுவினாலும் சரி அல்லது நற்பதமான வெந்தய இலைகளை கொண்டு செய்த பேஸ்ட்டை 20 நிமிடங்களுக்கு முகத்தில் தடவினாலும் சரி, சருமத்தில் பல அதிசயங்கள் அரங்கேறும்.
வெந்தயத்தை உணவோடு சேர்த்து கொண்டாலும் சரி அல்லது அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவிக் கொண்டாலும் சரி, உங்கள் தலைமுடியை பளபளவென கருமையாக்கும். தினமும் இரவு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்த வெந்தயத்தை கொண்டு, மறுநாள் காலை தலையில் மசாஜ் செய்தால், பொடுகை விரட்டும், முடி உதிர்தலுக்கு பெரிய நிவாரணியாக இருக்கும்.

மருத்துவம்




வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா?

வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா?

வெந்தயம் சாப்பிட்டால், பெண்களின் மார்பக‌ம் பெரிதாகுமா?
இன்றைய சில பெண்களுக்கு தங்களது சிறிய மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள், தினந்தோறும்

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி –அரை கிலோ
வெந்தயம் —கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.



மருத்துவப் பயன் நிறைந்த வெந்தயம்

வெந்தயம் ஒரு சிறு செடி, சுமார் 60 செ.மீ. உயரம் வரை வளரும்.. இதன் இலை நேர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மூன்றாகப் பிறியும் 5 செ.மீ. நீளமுடையது. இது செடியாக இருக்கும் பொழுது பூ பூக்கும் பூ வெண்மை நிறமாக முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். செடியாக இருக்கும் போது கீரையாகப் பறித்துப் பயன் படுத்துவார்கள்.
பூக்கள் முற்றிக் காய்கள் உண்டாகும். அதைக் காயவைக்கவேண்டும். காய்ந்த விதையை வெந்தயம் என்பார்கள் விதை இரு பிளவு போன்றிருக்கும் அது 50 -110 மில்லி நீளம் இருக்கும். அது மரக்கலரில் இருக்கும். ஒரு கிலோ வெந்தயத்தில் சுமார் 50,000 விதைகள் இருக்கும். இது மூன்று மாத த்தில் வளரக்கூடியது. இதை சமையல் செய்வதற்கும் மருந்தாகவும் பயன் படுத்துவார்கள்



சர்க்கரையை கரைக்கும் வெந்தயம்

சர்க்கரையை கரைக்கும் வெந்தயம்! — மருத்துவ டிப்ஸ்,

"என்ன அம்மணி, கோனாரைப் பாக்கப் போகணும்னு சொன்னா, உன் வீட்டுக்கே அழைச்சிட்டு வந்திட்டியே?"
 "அடியே வாசம்பா… வெந்தயக்கீரை என் வீட்டுக் கொல்லப்புறத்துலேயே கிடக்குதுடி… செடியா இருக்கிறப்பவே கீரையைப் பறிச்சிடணும். 'ஒரு காலத்துல மாட்டுத் தீவனமா இருந்த வெந்தயம், சமையலுக்குப் பயன்படுத்தப்போய், இப்ப நோய் தீர்க்கற மருந்தாவே ஆயிடுச்சு!" என்றபடியே விறுவிறுவென கோனார் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினாள் அம்மணி, கூடவே வாசம்பாவும்.
பாயோடு பாயாகக்கிடந்த கோனாரைப் பார்த்த அம்மணி, "என்ன கோனாரே, இப்படிக் குடிச்சே குடல் வெந்துபோயிக் கெடக்குற… எத்தனை முறை சொன்னேன் கேட்டியா… வயித்து வலி வராம என்ன பண்ணும்?"
"குடியை நிறுத்திட்டேன் அம்மணி அக்கா… நீ சொன்ன பத்தியத்தைத்தான் கடைப்பிடிக்காம விட்டுட்டேன். எனக்கு ஆக்கிப் போட யார் இருக்கா?" – வயிறு ஒட்டி, நாராகக்கிடந்த கோனாரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"இன்னிக்கு நீ அநாதையாக் கிடக்கறதுக்கும் நீயேதான் காரணம்… இருக்கிற சொத்தையாவது காப்பாத்திக்கலாம்னு உன் மகனுங்க… கைவிட்டதும் குடியினாலதானே" என்ற அம்மணி, உலையை வைத்து, சாதம் ஆக்கினாள். வெந்தயக்கீரையை ஆய்ந்து, பாசிப்பயறு சேர்த்து புளிக்குப் பதிலாக தக்காளி, வெங்காயம் சேர்த்து கூட்டு மாதிரி செய்தாள்.
"கையில சல்லிக் காசு இல்லாம, பேசக்கூட ஆளில்லாமப் போறப்பதான் உறவுங்க அருமை புரியுது… என்ன செய்ய?"
"உங்க உறவுல வேகுறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகுறது மேல்னு உன் மணவாட்டி மகனுங்ககூட போயிட்டா… கண் கெட்டப்புறம் சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோசனம்பா…" என்றபடியே சாதத்தில், வெந்தயக்கீரைக் கூட்டைப் போட்டு தந்தாள் வாசம்பா. பசியால் மயக்க நிலையில் இருந்த கோனார், சாதத்தை வாயில் அள்ளிப் போட்டார். முகத்தில் சோர்வு நீங்கி தெம்பாய் நிமிர்ந்த கோனாரின் கண்களில் ஆறாகப் பெருகியது நீர்.
"தெனமும் வெந்தயத்தை ஊறவெச்ச மோரைக் குடி… காரத்தைக் கண்ணுலகூட பார்க்காத. நீ சாதத்தை மட்டும் ஆக்கிக்கோ. ஒருவாரத்துக்குக் கீரை, கொளம்பு, பொரியலை நான் கொடுத்தனுப்பறேன்." அம்மணி சொல்ல, வாசம்பாவும் தன் பங்குக்குப் பேசினாள்.
"வாதத்துக்குகூட மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தே இல்ல. நல்லபடியா உடம்பு தேறினதும், உன் பிடிவாதத்தை விட்டுப்புட்டு, புள்ளைகளோட போய்ச் சேர்… அதுதான் உனக்கு நல்லது" என்ற வாசம்பா, அம்மணி பக்கம் திரும்பினாள்.
"வெந்தயக்கீரை அத்தனை குளிர்ச்சியா அம்மணி?"
"ஆமா வாசம்பா… வாரத்துக்கு மூணு நாள் வெந்தயக்கீரையைச் சமைச்சு சாப்பிட்டாப் போதும். உஷ்ணத்துனால ஏற்படுற வயிற்றுவலி சரியாயிடும். குடிப் பழக்கத்துனால பாதிக்கப்படற கல்லீரல்கூட பலப்படும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து கொஞ்சம் சோம்பும் உப்பும் சேர்த்து அரைச்சு மோர்ல கரைச்சுக் கொடுக்க வயித்துப்போக்கும் குணமாயிரும்."
"வெந்தயத்துக்கு இத்தனை மகத்துவமா?"
"ராத்திரியில கொஞ்சம் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீர்ல ஊறவெச்சு, அந்தத் தண்ணியை காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, சர்க்கரை நோயோட வீரியம் குறையும்டி."
"அடிக்கிற வெயிலுக்கு கண்ட இடத்துல கட்டி வந்து அவஸ்தைப்படுதுங்களே… அதுக்கு வெந்தயத்துல வைத்தியம் இருக்கா அம்மணி"
"வெந்தயத்துக்கூட சமஅளவு சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைச்சு, நீர்ல குழைச்சுத் தணல்ல களி போல கிண்டி, கட்டி மேல வெச்சுக் கட்டினா, நல்லாப் பழுத்து உடைச்சிடும்."
"அடேடே…"
"அது மட்டுமா, வெந்தயத்தை ஊற வெச்சு அரைச்சு, பரு வந்த இடத்துல பூசினா உடனே சரியாயிரும். தலைக்குச் சீயக்காய் அரைக்கிறப்ப, வெந்தயத்தைச் சேர்த்து அரைச்சுத் தேய்ச்சுக் குளிச்சா, உடம்புக்கும் குளிர்ச்சி. முடியும் நல்லா வளரும்."
"நம்ம பார்வதிக்குப் பொம்பளப் புள்ள பொறந்திருக்கு… ஆனா, தாய்ப்பாலே இல்லியாம்… என்னாடி பண்ணுறது?"
"தாய்பால் வராத தாய்மாருங்க, அஞ்சு கிராம் வெந்தயத்தை நல்லா வேகவெச்சி, கடைஞ்சிக்கணும். இதுகூடத் தேனைக் கலந்து சாப்பிட்டுவந்தா, தாய்பால் நல்லா சுரக்கும்.'
பேசிக்கொண்டே வந்த அம்மணி சுடலைமுத்து தோட்டத்தில் பசுங்காடாக இருந்த கறிவேப்பிலைச் செடிகளைப் பார்த்ததும் வாசனையும் யோசனையுமாக வாசம்பாவை அருகே அழைத்தாள் அம்மணி. அப்புறம் என்ன… கறிவேப்பிலை  கச்சேரிதான்!



சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி –அரை கிலோ
வெந்தயம் —கால கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.
:)