"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, July 12, 2016

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா?


ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா?


ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும் பலர் இந்த புத்தாண்டில் இருந்து, உடல் எடையை குறைத்து, சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு.
அதற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு. அப்படி நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தால், தமிழ் போல்ட் ஸ்கை அட்டகாசமான டயட் டிப்ஸ்களை கொடுத்துள்ளது. அதனைப் படித்து, அதன் படி நடந்தால், நிச்சயம் ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில சூப்பரான வழிகள்!!! இந்த மாதிரி எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் படித்து பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும். என்ன நண்பர்களே! ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ரெடியா! ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா?
இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்..
நாள் 1

நாள் 1 ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.

நாள் 2 இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள்.

நாள் 3 மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

நாள் 4 நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும்.

நாள் 5 இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நாள் 6 ஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

நாள் 7 இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.
நன்றி http://tamil.boldsky.com


Like Loading...

 
    :)

    பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்

    இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… வயிற்றுக் கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இவ்வாறு வயிற்று கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாம் தோல்வியடைகிறோம். வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால் அதற்காக ஒன்றல்ல, இரண்டல்ல 10 வழிகள் இதோ.
    சரியாக சாப்பிடுதல்
    சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
    தண்ணீர்
    தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
    உடற்பயிற்சி
    பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.
    சர்க்கரை வேண்டாம்
    பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
    சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்
    உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.
    வைட்டமின் சி உணவுகள்
    உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.
    கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்
    கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.
    தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல்
    கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.
    காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும்
    காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.
    தூக்கம்
    உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.
     

    சிலர் தொப்பையினால் மிகவும் சிரமப்படுகின்றனர்


    தொப்பையா? அதிக எடையா? ஒரு வாரத்தில் 5 கிலோ எடை குறைய...!சிலர் தொப்பையினால் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கியமாக, உடல் உழைப்பு இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே வேலை செய்யும் நபர்களில் பெரும்பாலோருக்குத் தொப்பை இருக்கும். வாகன ஓட்டுனர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்வோரின் வயிறு விரைவில் பெருத்துவிடும்.
    நோய் வருமுன் காக்க வேண்டும் என்பது போல் தொப்பையும் வருமுன் காக்கவேண்டும். தொப்பை விழுந்துவிட்டால், அது வந்த வேகத்தில் குறைப்பது என்பது நிச்சயமாக இயலாத காரியம். தொப்பையினைக் குறைப்பதற்கான ஒரே வழி, உணவுக்கட்டுப்பாடும் சரியான முறையிலான உடற்பயிற்சியுமே!

    தொப்பை விழுவதன் காரணத்தை விளங்கிவிட்டால், அதனைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் பாதி கிணற்றைத்தாண்டியதற்கு ஒப்பானது.

    மனிதனின் உடல் இயக்கத்திற்குச் சக்தி தேவை. இந்தச் சக்தி உண்ணும் உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான சக்தியினை கலோரி எனும் அலகின் மூலம் குறிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு ஆணின் உடல் இயக்கத்திற்குத் தினசரி சுமார் 2000 கலோரி சக்தி தேவை. அதுவே பெண்ணாக இருந்தால், சுமார் 1600-1800 கலோரி சக்தி தேவை. வயது, உடல் எடை, உழைப்பு ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போன்று இந்த அளவில் சிறு வித்தியாசம் இருக்கும்.

    காலை எழுந்தது முதல், இரவு தூங்கச் செல்லும் வரை சராசரி உழைப்புடன் வாழும் ஒரு ஆணை எடுத்துக்கொள்வோம். அவருடைய உடலின் தினசரி இயக்கத்திற்கு சுமார் 2000 கலோரி சக்தி தேவைப்படுகிறது. ஆனால், அவர் 2000 கலோரி சக்தி தயாரிப்பதற்குப் போதுமான அளவைவிட குறைந்த அளவில் தினசரி உணவு உட்கொண்டால், 2000 கலோரியை ஈடுசெய்வதற்கான கூடுதல் கலோரியினை அவரின் உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு அல்லது சதையிலிருந்து உடல் தானாகவே எடுத்துக்கொள்ளும். அதே சமயம், 2000 கலோரி அளவைவிட கூடுதல் கலோரி தயாரிக்கும் அளவில் உணவு உட்கொண்டால், கூடுதலாக உருவாக்கப்பட்ட கலோரி சதையாகவும் கொழுப்பாகவும் அவர் உடலில் சேமிக்கப்படும்.

    இவ்வாறு அதிகப்படியாக உணவு உட்கொள்ளும் நபரின் தினசரி உடல் உழைப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில், சேமிக்கப்படும் அதிகப்படியான கலோரிகள் அவரின் உடலில் தேவையற்ற சதைகளையும் கொழுப்புகளையும் உருவாக்கும். இவ்வாறு உருவாகும் கொழுப்பு, முதல் கட்டமாக வயிற்றுப் பகுதியிலேயே(குடலைச் சுற்றி) படிகிறது. இதுவே தொப்பையாக வெளிப்புறத்தில் காட்சியளிக்கிறது.

    எனவே, தொப்பையைக் குறைக்க விரும்புபவர் தினசரி தான் உண்ணும் உணவினைவிட அதிகப்படியான கலோரியினைச் செலவழிக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அதிகக் கலோரியினைச் செலவழிக்க, அதிக உடல் உழைப்பு(உதா: உடற்பயிற்சி) தேவை.

    கணினி முன்னால் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றோருக்குத் தினசரி உடல் உழைப்பு குறைவு. இதனாலேயே இத்தகையவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், பெரிய தொப்பை விழுந்து விட்டவர்களுக்கு அவர்களாக விரும்பினால்கூட உடலை வருத்தும்வகையிலான உடற்பயிற்சிகள் செய்வது கடினம். தொப்பையின் மூலமாக, உடலில் படிந்த அதிக எடை சோர்வையும் அசதியையும் ஏற்படுத்துவதனால் தொடர் உடற்பயிற்சியில் ஈடுபடுவது கடினமாக இருக்கும்.

    எனவே, தொப்பையைக் குறைக்க விரும்பும் ஒருவர் முதல் கட்டமாக தம் உடல் எடையினை இருப்பதனைவிட சிறிதளவாவது குறைக்க வேண்டும். இருக்கும் உடல் எடையில் ஓரளவு குறைத்துவிட்டால், அதன் பின்னர் உட்கார்ந்து எழும்புதல், குனிந்து நிமிர்தல் ஆகிய இரண்டு எளிய உடற்பயிற்சிகளும் தொப்பையினை எளிதில் குறைக்க உதவும்.

    சரி, உடல் எடையினைக் குறைக்க என்னவழி?

    1. உடற்பயிற்சி(அதிக உழைப்பு)

    2. உணவு கட்டுப்பாடு

    சாதாரணமாக தினசரி எடுத்துக்கொள்ளும் உணவின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் உடல் எடையினைக் குறைக்கலாம்.

    ருசியாக உண்டு பழக்கப்பட்டோருக்கு உணவில் கட்டுப்பாடு என்பது வேப்பங்காயாக கசக்கும். இத்தகையவர்கள் ஒரு வாரம் தம் நாவினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டால், கீழ்கண்ட வழிமுறை ஒருவாரத்தில் குறைந்தது 5 கிலோ எடையினைக் குறைக்க உதவும். அதன் பின்னர், சாதாரண சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் தொப்பையினை விரைந்து குறைத்து விடமுடியும்.

    குறுகிய காலத்தில் அதிக எடை குறைத்தல் என்பது, உடலுக்குத் தீங்கானது. ஆனால், இந்த வழிமுறை உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாதது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா போன்ற இழுப்பு நோய் இல்லாத அனைவரும் கீழ்கண்ட வழிமுறையினைப் பின்பற்றலாம்.

    7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை:

    ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

    நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

    நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

    நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)

    நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.

    நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் - குறைந்தது 12 குவளை.

    நாள் 6: மற்றொரு காய்கறி நாள். சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்ச் சமைக்கும்போது பயன்படுத்தக் கூடாது. உடன் ஒரு குவளை அரிசி சாதம்.

    நாள் 7: 6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு பயன்படுத்தக்கூடாது.

    தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும். சோம்பல், உடல் களைப்பால் தினசரி அலுவல்களில் ஏதாவது இந்த டயட் நாட்களில் செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி!

    மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின் நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும்.

    "இந்த டயட்டை உணவுக்கு முன்னர் பின்பற்றுவதா அல்லது உணவுக்குப் பின்னர் பின்பற்றுவதா?" என்ற கேள்வி யாருக்காவது எழுந்தால் அத்தகையோர் மட்டும் இச்சந்தேகம் தீரும்வரை இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம்.

    உடல் மெலிய:

     

    100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.

    இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.

    கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

    25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீ­ர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.

    நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.


    வீட்டில் எளிய முறையில் சில மருத்துவக் குறிப்புகள்-இய‌ற்கை வைத்தியம்:-

    சில நோய்களுக்கான வைத்தியத்தை நம்முடைய வீட்டில் எளிய முறையில் செய்து கொள்வதற்காக அறிந்து கொள்ள வேண்டிய சில மருத்துவக் குறிப்புகள்:

    செருப்புக் கடி:

    பச்சை மூங்கில் குச்சியை துண்டாக வெட்டி எடுத்து நீர் விட்டு மைய அரைத்து செருப்புக்கடியின் மீது தடவிவர குணமாகும்.

    தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் இட்டு கருக்கி எடுத்து அதனை தூள் செய்து அதன் பின் தேங்காய் எண்ணை குழப்பி செருப்புக் கடிபட்ட இடத்தில் தடவிட குணமாகும்.

    தேள் கடி:

    தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

    எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்­ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.

    நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

    ஆண்மைக் குறைவு:

    மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

    தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

    அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

    அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

    படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

    தாது விருந்தி:

    முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

    நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

    கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

    அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

    வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

    உடல் மெலிய:

    100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.

    இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.

    கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

    25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீ­ர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.

    நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

    கை நடுக்கம்:

    காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.

    வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்

    வெள்ளைபடுதல்



    tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

     
    பெண்கள் பருவம் அடைந்தது முதல் அனுபவிக்கும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று வெள்ளை படுதல். ஆனால் அவர்கள் இதை பெரிதாக கருதுவதில்லை. அதனால் ஏற்படும் சிரமங்களையும் சாதாரணமாக விட்டு விடுகின்றனர். வெள்ளைப்படுதல், கேன்சர் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று எச்சரிக்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிகுமார். பருவம் அடையும் வயதில், மாதவிலக்கு நாட்களுக்கு முன்னர், கருவுற்றிருக்கும் போதும் வெள்ளை படுவது சாதாரண விஷயம். முட்டை உருவாகும் நேரத்திலும் 5 நாட்களுக்கு வெள்ளைப்படுதல் இருக்கலாம். இது தானாக சரியாகி விடும். பொதுவாக வெள்ளைப்படுதல் என்பது கிருமி தொற்றினால் ஏற்படுவது. கொனோரியா, டிரைகோமோனஸ், மொனிலியாசிஸ் ஆகிய பாக்டீரியாக்களின் தாக்குதலால் வெள்ளை படுதல் உருவாகிறது.

    வெள்ளைபடுதல் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் அலர்ஜியின் காரணமாகவும் வெள்ளை படுதல் ஏற்படலாம். மேலும் கருப்பை பகுதியில் உள்ள கோழைப்படலம் அரிக்கப்படுவதாலும் அங்கிருந்து திரவம் வெளிப்படுகிறது.  உள் பகுதியில் சின்னச் சின்ன சீழ் கட்டிகள் உருவாகலாம். அரிப்பு ஏற்படலாம். வெள்ளைப்படுதலின் போது எரிச்சலான உணர்வு ஏற்படும். இத்துடன் கர்ப்பப்பை உள்ளே புண் இருந்தாலும் வெள்ளைப் படுதல் ஏற்படலாம். இந்த நேரத்தில் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, மேலும் உடலுறவு கொண்ட 4 முதல் 48 மணி நேரத்துக்குள் வலி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொண்டால் ஆணுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது.

    இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடலாம் அல்லது இளைக்கலாம். அடிவயிற்றில் கனமான உணர்வு இருக்கும். இந்த பிரச்னை உள்ள பெண்கள் எப்போதும் எரிச்சலுடன் இருப்பார்கள். நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் திறனை இழந்து காணப்படுவர். கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த கிருமித் தொற்று சிறுநீர்ப்பாதையை பாதித்து கிட்னி வரை செல்ல வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பப்பையில் உள்ள நாள்பட்ட புண்களால் வெள்ளை படுதல் இருப்பின் அது பின்னாளில் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் வெள்ளைப்படுதலை உடனடியாக சிகிச்சை மூலம் குணமாக்க வேண்டியது அவசியம் என்கிறார் சசிகுமார்.

    பாதுகாப்பு முறைகள்

    வெள்ளைப் படுதல் பிரச்னை உள்ள பெண்கள் அதன் தன்மையை அறிய வேண்டும். பெண்கள் மாதவிலக்கு காலத்தில் சுகாதாரமான முறையை கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் நாப்கினை மாற்ற வேண்டியது அவசியம். துணி நாப்கினை தவிர்க்கலாம். ஒரு சில நேரங்களில் வெள்ளைப் படுதல் பால்வினை நோயின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கவனிக்காமல் விட்டால், கணவன் & மனைவி இருவரையும் பாதிக்கும். பெண்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தமாக இருக்க வேண்டும். கழிவறையில் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது. வெள்ளைப்படுதல் இருக்கும் போது  தொற்று உள்ளதா அல்லது கர்ப்பப்பை பகுதியில் புண் உள்ளதா என்பதையும் பரிசோதனையில் அறியலாம். பிரச்னையை ஆரம்பத்தில் கண்டறிந்து சரி செய்வதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கவும் வாய்ப்புள்ளது. பெண்கள் சுகாதாரமாக இருப்பதும் பிரச்னை ஏற்பட்டால் உடனடி சிகிச்சையும் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்.

    ரெசிபி

    சுண்டைக்காய், மணத்தக்காளிக் குழம்பு:

    நல்லெண்ணெயில் சுண்டைக்காயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். புளி எலுமிச்சை அளவு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக்கி, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள் கலந்து எண்ணெயில் வதங்கிய பின்னர் புளியைக் கரைத்து ஊற்றவும். கொதித்த பின்னர் உப்பு மற்றும் வறுத்த சுண்டைக்காய் அல்லது மணதக்காளி போட்டு ஒரு கொதி வந்த பின் இறக்கலாம். சுண்டைக்காய் மற்றும் மணத்தக்காளியில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து உள்ளது.

    வெஜ் வீட் ரொட்டி:

    கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொள்ள வும். பச்சைப் பட் டாணியை தனி யாக வேக வைத்து மசிக்கவும். கோதுமை மாவை ரொட்டி பதத்துக்கு பிசைந்து அதில் காய் துருவல், பட்டாணி, கரம் மசாலா, உப்பு மற்றும் நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை தோசைக்கல்லில் வார்த்து எடுக்கலாம். சாப்பிட சுவையாக இருப்பதுடன் முழுமையான சத்தான உணவாக இருக்கும்.

    அரைக்கீரை துவையல்:

    அரைக்கீரையில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. அரைக்கீரையை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள் ளவும். சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். சீரகம், வெந்தயம், மிளகு 2 ஆகியவற்றை தனியாக வதக்கி பொடித்துக் கொள்ளவும். அரைக்கீரை, வதக்கிய வெங்காயம், தக்காளி, பொடிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம்.

    பாட்டி வைத்தியம்

    ¥ அருகம்புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    ¥ அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் ஆகியவற்றில் தலா 20 கிராம் எடுத்து தட்டிச் சாறு பிழிந்து அதில் படிகார பஸ்பம் ஒரு கிராம் கலந்து குடிக்கலாம்.

    ¥ சுத்தம் செய்யப்பட்ட ஆகாயக் கருடன் கிழங்கு, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில் இரண்டு கிராம் அளவுக்கு வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடிக்கலாம்.

    ¥ உளுந்து, பார்லி இரண்டிலும் தலா 100  கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம்.

    ¥ எலிக்காதிலையுடன் கடுக்காய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.

    ¥கீழா நெல்லி இலை, கோவை இலை, அசோகமரப்பட்டை, நாவல்பட்டை அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மோரில் கலந்து குடிக்கலாம்.

    ¥சாணாக்கி கீரையுடன், சீரகம் சிறிதளவு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.

    ¥சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும்.

    ¥சிவப்பு நிற தண்டுக் கீரைத் தண்டுடன் துத்தி இலையை சேர்த்து கஷாயம் வைத்து குடிக்கலாம்.

    ¥துத்திக் கீரையில் ஒரு கடுக்காயை தட்டிப் போட்டு கஷாயம் வைத்து குடிக்கலாம்.

    டயட்

    வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் உணவில் கவனம் செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ரத்த சோகை இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி உள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் கால்சியம் சத்தும் உடலில் குறைவாக இருக்க வாய்ப்புண்டு. நாம் உட்கொள்ளும் உணவில் இரும்புச் சத்தை உடல் உட்கிரகித்துக் கொள்ள வைட்டமின் சி உள்ள பழச்சாறுகள் எடுக்க வேண்டும். பீசா, பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் இரும்புச் சத்தை உடல் எடுத்துக் கொள்வதைத் குறைக்கும்.

    சத்தான உணவுகள் சாப்பிட்டாலும் மாலை சிற்றுண்டியாக இது போன்ற பாஸ்ட் புட் சாப்பிடுவதால் உணவில் இருந்து உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துகள் தடுக்கப்படுகிறது. கீரை வகைகளை தினமும் உணவில் சேர்க்கலாம். முருங்கைக் கீரை, பருப்பு வகைகள், சுண்டல், அவல், முட்டை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச் சத்து உடலுக்குக் கிடைக்கும். மாதுளை மற்றும் கருப்பு திராட்சை நிறைய சாப்பிடலாம். சுண்டக் காய்ச்சிய பால் இரண்டு வேளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தும் கிடைக்கும்.

    குறட்டை


     

    tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

     
    எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு குறட்டையை தடுப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.கற்பூர துளசி இலைகளை பயன்படுத்தி குறட்டையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கற்பூர துளசி, தேன். கற்பூர துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர குறட்டை குறையும். இந்த தேனீர் நுண்கிருமிகளை அழிக்கும். நோய்களை போக்கும் தன்மை உடையது. வீக்கத்தை வற்ற செய்யும். கற்பூர துளசி வயிற்று கோளாறுகளை போக்குவதுடன், இருமல் சளிக்கு மருந்தாகிறது. கற்பூர துளசிக்கு பதிலாக புதினா அல்லது துளசியை பயன்படுத்தலாம்.

    குறட்டை மன உளைச்சலை தரக்கூடியது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது. ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றால் குறட்டை ஏற்படுகிறது.மஞ்சளை பயன்படுத்தி குறட்டையை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள், ஏலக்காய், தேன்.
    கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்க்கவும். இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். சளிக்கு மருந்தாக அமைகிறது. நெஞ்சக சளியை கரைக்கும்.
    திப்லி பொடியை பயன்படுத்தி குறட்டைக்கான மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுக்கவும். இதனுடன் சிறிது திப்லி பொடி, தேன் சேர்க்கவும். இதை அனைத்தும் ஒரு ஸ்பூன் வரும் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.
    பசும் நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும். காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை பிரச்னை தீரும்.அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோயை தடுக்கும் மருத்துவத்தை காணலாம்

    மகளிர் மருத்துவம் வெள்ளைபடுதலா...

    மகளிர் மருத்துவம் வெள்ளைபடுதலா...


                 பெண்கள் இந் நாட்டின் கண்கள் என்றார் பாரதி.  ஒரு பெண்ணின் நலமே குடும்பத்தின் நலம் என்றார்கள் நம் முன்னோர்கள்.

    பொதுவாக பெண்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுப்பது மாதவிலக்கும் வெள்ளைப்படுதலும் தான். அதில் வெள்ளைபடுதலைப் பற்றியும் அதன்பாதிப்புகளைப் பற்றியும் விரிவாக அறிவோம்.

    பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்று. ஆனால் இந்த இயற்கையான சுரப்பிலிருந்து வெள்ளை படுதலுக்கு உள்ள வித்தியாசங்களை உணர்வது ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமாகிறது. சாதாரணமாக இந்த சுரப்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படும். எப்படி வியர்வை சுரப்பு வித்தியாசப்படுகிறதோ அதுபோல. மாதவிலக்கு வந்து 10 லிருந்து 15 நாட்களுக்கு இந்த சுரப்பு அதிகமாகும். பின் திரும்ப மாதவிலக்கு வரும் 5 நாட்களுக்கு முன் சிறிது அதிகப்படும். இது இயற்கையானது. இது தவிர வெள்ளைப்படுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிப்பது. வெள்ளைப்படுதலுடன் பலஹீனம், இடுப்பு வலி, முதுகுவலி, மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும்.இவை அனைத்தும் இருந்தால் வெள்ளைபடுதல் நோய் என்று உணரலாம்.

    வெள்ளைப்படுதல் இருப்பது உணரப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    காரணம்:

    வெள்ளை படுதலுக்கு  நிறைய காரணங்கள் உள்ளன.  சித்த மருத்துவத்தில் கூறப்படும் காரணம்,வெள்ளைப்படுதல் நோய் ஒருவருக்கு திடீரென்று ஒரு நாளில் வருவது இல்லை.  பித்தம் மிகுந்து முன்னத்தண்டு கோர்வையை பற்றி குய்யம், மூலாதாரம் இவைகளில் கனல் மிகுந்து, நாடி, நரம்பு, ரத்தக்குழாய்கள் மூலமாக எலும்பைப் பற்றியும், சுரோணிதத்தில் கலந்தும், நீர்ப்பை, நீர்துவாரம் இவற்றில் ரணத்தையும் சூட்டையும் உண்டாக்கி சீழ் பிடித்து வலியுண்டாக்கி ஒழுக்கு ஏற்படும். 

    அல்லது, சாதாரண நிலையில் உடல் இருக்கும்போது பிறப்பு உறுப்பை ஒட்டிக் காணப்படும் தசைப்பகுதிகளில் உட்புறச்சுவர்கள் வழுவழுப்பாக வைத்துக் கொள்வதற்காக உடல் கூற்றின் இயல்பான பல நிலைகளுக் காகவும் ஒரு திரவம் சுரக்கிறது. இத்திரவம் பட்டினி கிடத்தல், காரம், புளிப்பு, உப்பு நிறைந்த பொருட்களை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதாலும், மூலாதாரத்தில் வெப்பம் மிகுந்து தாது கேடு அடைவதாலும் அத்திரவம் அதிகளவில் சுரந்து வெள்ளை போக்காக மாறுகிறது.

    தவறான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் அதிக நச்சுத்தன்மை உடலில் ஏற்படுகிறது. அவை தோல் மற்றும் வயிறு, நுரையீரல், சிறுநீரகங்கள் இவற்றின் மூலமாக வெளியேற்றப்படாமல் பெண்களின் கர்ப்பப்பை மூலமாக சளி சவ்வின் வழியாக வெளியேற்றப் படுகிறது.

    இளம் வயது பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிவதால் அதிகம் ஏற்படுகிறது. மேலும் காம உணர்வு சுய இன்பம் காணுதல் இவைகளாலும் வெள்ளைப்படுதல் உண்டாகலாம். முறையாக மாதவிடாய் ஏற்படாத சில பெண்கள் மாதவிடாயை தூண்டும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதாலும் ஏற்படுகின்றது. சில பெண்கள் செயற்கையான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படும். கருச்சிதைவு செய்து கொள்ளும் பெண்களுக்கும், பால்வினை நோய்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவைகளின் அறிகுறியாகவும் இந்த நோய் ஏற்படலாம். அதிகமாக உடலுறுவில் ஈடுபடும் பெண்களுக்கும், கோபம், வருத்தம், வெறுப்பு மன உளைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும்.

    திருமணமான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அடிக்கடி கருக்கலைப்பு  செய்வது, கிருமி தொற்று ஏற்படுவது. குழந்தை பேற்றின் போது கருப்பையில் உள்ள அழுக்குகள் முழுமையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், கருப்பையில் புண், கட்டி முதலியன உண்டாகி வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

    நோயின் அறிகுறிகள்:

    வெள்ளைப்படுதல் உள்ளவர்களுக்கு சிறுநீர்போகும் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். உடல் மெலிந்து போகும். கை, கால்கள், உடல் கணுக்கால் சதை, அனைத்து மூட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும். இந்த நோய் காரணமாக நாளுக்கு நாள் உடம்பு நலிவடைந்து விரைவிலேயே அவர்கள் களைப்படையக்கூடும். சிலருக்கு பிறப்பு உறுப்புகளில் அரிப்பும், புண்ணும் ஏற்படுவதுண்டு.

    ஒரு சிலருக்கு இந்த நோயினால் உஷ்ணம் அதிகமாகி வயிற்றை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும். மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி, அரிப்பு ஆகியவையும் இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு சரியாக வராது. இரத்த சோகையுடன் உடல் மெலிந்து வறட்சி ஏற்பட்டு நிறம் வெளுத்து மூட்டுவலி, இடுப்பு வலி, வேலை செய்யும்போது இதயம் படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.

    நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டவுடன், தகுந்த மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து பின் மருந்து உட்கொள்ள வேண்டும்.

    பாக்டீரியா மற்றும் கிருமியால் உண்டான வெள்ளைப்படுதல் என்றால் அதற்குரிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்திய மருத்துவத்தில் மூலிகைகளை கொண்டு குணப்படுத்த இயலும்.

    மணத்தக்காளி சூப்

    சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    அருகம்புல்

    கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

    உணவு முறை

    ·    அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
    ·    உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
    ·    தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
    ·    உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

    வெள்ளைபடுதல்

    பெண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்கள் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் வெள்ளைப்படுதலும், பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுநோயும் அவர்களுக்கு
    உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றுதான். எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
    பெண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்கள் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் வெள்ளைப்படுதலும், பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுநோயும் அவர்களுக்கு
    உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றுதான். எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் பெண் உறுப்பில் பூஞ்சை வளர்ந்து தொற்றினை உண்டாக்கும். நீரிழிவு வியாதி, உடல் பருமன் காரணமாகவும், கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது. இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது. வெள்ளைப்படுதல், நோய் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளைப்படுதல் நிற்க காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும். இரவு நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு எற்றது. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும். மனஅழுத்தமோ, உளைச்சலோ இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படும். எனவே ரிலாக்ஸ் ஆக இருங்கள். காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பினை 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும். சிறிது கடுக்காய், நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும். வால்நட் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி பிறப்புறுப்பினை கழுவ பயன்படுத்தலாம். யோகர்ட் சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது. அரிப்பு உள்ள இடத்தில் தயிரை பூசலாம். அதேபோல் மாங்காய் பவுடரை பேஸ்ட் போல செய்து பூசலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும். வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும்.



     என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் பெண் உறுப்பில் பூஞ்சை வளர்ந்து தொற்றினை உண்டாக்கும். நீரிழிவு வியாதி, உடல் பருமன் காரணமாகவும், கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது. இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது. வெள்ளைப்படுதல், நோய் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளைப்படுதல் நிற்க காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும். இரவு நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு எற்றது. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும். மனஅழுத்தமோ, உளைச்சலோ இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படும். எனவே ரிலாக்ஸ் ஆக இருங்கள். காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பினை 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும். சிறிது கடுக்காய், நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும். வால்நட் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி பிறப்புறுப்பினை கழுவ பயன்படுத்தலாம். யோகர்ட் சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது. அரிப்பு உள்ள இடத்தில் தயிரை பூசலாம். அதேபோல் மாங்காய் பவுடரை பேஸ்ட் போல செய்து பூசலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும். வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும்.











    வீட்டு மருத்துவக் குறிப்புகள்

    வீட்டு மருத்துவக் குறிப்புகள் - II- Home Medicine - II

    வீட்டு மருத்துவக் குறிப்புகள் - II
    வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மருந்து தயாரித்தல், பாகம் - II.
    கீழே உள்ள பெயர்களை 'க்ளிக்' செய்வதன் மூலம் அவற்றை குணமாக்குவதற்கான விபரத்தைக் காணலாம்.

    ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளிமூலிகை ஷாம்புமரு, காலாணி
    மூலிகைக் கண்மை
    வெள்ளைப்படுதல் உடல் பருமனைக் குறைக்க
    இளைத்த உடல் பருமனாக பேதி நிற்க தேமல் மறைய
    மலச்சிக்கல் மூலிகை காஸ் முகப்பரு
    வீட்டு மருத்துவக் குறிப்புகள்:
    01: ஜலதோஷம், இருமல், தொண்டை வலி, சளி இவைகள் தீர

    1. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.
    2. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்
    3. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

    02:மூலிகை ஷாம்பு

    செம்பருத்தி பூ, இலை (100 கி. அல்லது தேவையான அளவு), வெந்தயம் (10 கி.) இவ்விரண்டையும் சிறுது தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைத்து, பசையாக்கி குளிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தலையில் தேய்த்து பின் குளித்துவர தலைமுடி உதிரல், தலை ஊரல், கண் குளிர்ச்சி, மேகச்சூடு ஆகியன போகும். இதை இரு கினங்களுக்கு ஒரு முறை தேய்த்துக் குளித்துவர முடி அடர்த்தியாக வளரும். முடி மென்மை அடைந்து பளபளப்பாய்க் காட்சி தரும். சைனஸ் பிரச்சனையுள்ளவர்கள் வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.

    03:மரு, காலாணி குணமாக

    கற்சுண்ணாம்பு (10 கி.), மஞசள்பொடி (5 கி.), நாட்டு நவச்சாரம் (5 கி.), மயில் துத்தம் (2 கி.). இவற்றை ஒன்றாகக் கலந்து நீர்விட்டு அரைத்து பசையாக்கி தேவைப்படும் போது காலாணி உள்ள இடத்தில் நன்கு தடவி அல்லது துணியினால் கட்ட காலாணித் தடிப்பு மாறி வலி மிகக் குறையும். இதையே மரு உள்ள இடத்திலும் வெளிப்புறமாக தடவி வர மரு குணமாகும். மரு என்பது பாலுண்ணி போல் உடல் எங்கும் வரக்கூடிய சிறு சிறு தடிப்பாகும்.

    04:கண் பார்வையை மேம்படுத்தி கண்நோய் வராது காக்கும் 'மூலிகைக் கண்மை'

    வயல் ஓரங்களில் கிடைக்கும் மஞ்சள் கரிசாலைச் சாற்றில் சுத்தமான சிறிய வெள்ளைத் துணியை நன்கு மூழ்கி காயவைக்க வேண்டும். இவ்வாறு காய்ந்த துணியை திரும்ப திரும்ப மூழ்கி குறைந்தது 8 அல்லது 10 முறை செய்ய வேண்டும். ஒரு சிறு நெய் விளக்கில் இத் துணியை எரித்து சாம்பலாக்க வேண்டும். இச்சாம்பலை எடுத்து போதிய அளவு சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்கு அரைத்து பசையாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும் தேவைக்கேற்ப, தேவையான அளவு எடுத்து முறைப்படி கண்களுக்கு மைதீட்ட கண் எரிச்சல், இமை வீக்கம், இமை முடி உதிரல் உள்ளிட்ட நோய்கள் தீருவதுடன் கண் பார்வை கூர்மைப்படும். இதை ஆண், பெண் இரு பாலாரும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

    05:வெள்ளைபடுதல் நிற்க

    1. இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.
    2. பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.



     

    06: உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள்

    1. காலை மாலை நடைப் பயிற்சி
    2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல்
    3. பகல் தூங்காதிருத்தல்
    4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்
    5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல்
    6. இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல்
    7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல்
    7. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல்
    8. கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி உண்ணல்
    9. அமுக்கிராச் சூரணம், நவகக்குக்குலு, பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், மண்டூராதிக் குடிநீர் முதலிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்ளல்
    10.பசி அதிகம் இருந்தால் அதைக் குறைக்கும் வகையில் திரிபலாச்சூரணம், மாசிக்காய்ச் சூரணம், அஸ்வகந்தாதி சூரணம் போன்றவற்றை முறைப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி உண் ணல்.

    07:இளைத்த உடல் பருமனாக

    1. நேரம் தவறாமல் உணவு உண்ணல்
    2. மதிய உணவுக்குப்பின் சிறு தூக்கம்
    3. இரவில் நீர்ச்சத்துள்ள உணவு உண்ணல்
    4. உணவில் பூசணிக்காய், தடியங்காய் (வெண்பூசணி), வெண்ணெய் சேர்த்துக் கொள்ளல் 5. உடல் உஷ்ணம் குறையும் வகையில் எண்ணெய்க் குளியல் எடுத்தல். காய்கறி சூப், கஞ்சி வகைகளை உண்ணல், மலச்சிக்கல் இல்லாதிருத்தல், கடும் வெயிலில் அலையாதிருத்தல், இரவில் வெகு நேரம் விழிக்காதிருத்தல்.

    08:பேதி நிற்க

    1. வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்த பொடி 50 கிராம், ஓமம் பொடி 10 கிராம் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு தேக்கரண்டி மோரில் உட்கொள்ள உடன் தீரும்.
    2. மாசிக்காய் பொடி (100 கிராம்), காய்ச்சுக் கட்டி (100 கிராம்), இலவங்கப்பட்டை (25 கிராம்) மூன்றையும் பொடித்து ஒன்றாகக் கலந்து மேற்கூறியபடி உண்ணவும்.

    09:தேமல் மறைய

    தேங்காய் எண்ணெய் (200 மிலி), தேன் மெழுகு (15 கிராம்), தேன் (20 மிலி). எண்ணெயை சூடு செய்து மெழுகை இட்டு நன்கு உருகியவுடன், தேனையும் அதில் கலந்து ஆறவிடவேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.



     

    10:மலச்சிக்கல் தீர

    1. கடுக்காயத் தோல் பொடி(100 கிராம்), ஓமம் பொடி (20 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் இரண்டையும் ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும் முன் 1 1/2 - 2 தேக்கரண்டி (5-10 கிராம்) இள வெந்நீரால் பருக மலச்சிக்கல் தீரும். சிறியவர்களுக்கு அளவை குறைத்துக் கொடுக்க வேண்டும்.
    2. குப்பைமேனிச் சாறு (100 மிலி), விளக்கெண்ணெய் (500 மிலி) - இரண் டையும் ஒன்றாகக் கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சிச் சாறு வற்றியவுடன் இறக்கி வடிகட்டி 1 1/2 - 2 கரண்டி (5-10 மிலி) வீதம் உட்கொள்ள நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.
    3. அகத்திக்கீரைச் சாற்றை இரவு படுக்கும் முன் சர்க்கரை கலந்து 50-60 மிலி வரை பருக வயிற்றுப்புழுவுடன் மலச்சிக்கல் தீரும்.

    11:மூலிகை காஸ்
    gauze
    நாட்பட்டப் புண்களின் மீது துணியினால் ஆன காஸ் வைப்பதற்கு பதிலாக எருக்கிலை, ஊமத்தை இலை, வெற்றிலை, வேலிப்பருத்தியிலை போன்ற மூலிகைகளின் ஏதாவது ஒன்றின் இலையை புண்களின் மீது வைத்து அதன் மேல் துணி கொண்டு கட்டிவர புண்கள் விரைவில் ஆறி வரும். புண்களை முறைப்படி சுத்தம் செய்து மருந்து வைத்து அதன்மேல் இலையை ‍வைக்க வேண்டும்.

    12:முகப்பரு

    1. கறிவேப்பிலை, வெண்ணெய் அல்லது பசும்பால் (போதுமான அளவு). கறிவேப்பிலையை பால் அல்லது வெண்ணெயில் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு தீரும்.
    2. நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் முல்தாணி முட்டி என்னும் சரக்கை பொடித்து அதை பசும்பாலில் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகப்பரு குணமடையும்.

    3. நல்லெண்ணெய் 100 மி.லி., மிளகு 10 எண்ணம் நன்கு ‍சூடு செய்து மிளகு கருகியவுடன் வடிகட்டி, சூடு ஆறியவுடன் முகத்தில் தேவையான அளவு எடுத்து குளிக்கும் முன் தடவி வர குணமாகும்.








     

    வெள்ளைபடுதல் - வீட்டு மருத்துவம்


    வெள்ளைபடுதல் - வீட்டு மருத்துவம்.......

     பெண்ணுறுப்பில் சாதாரணமாக இருக்கும் 'கான்டிடா அல்பிகான்ஸ்'  எனும் காளானின் அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான பெண்ணுறுப்பின் தொற்று பாதிப்பு தான்.

    இது எதனால் ஏற்படுகிறது?

    • குறைந்த நோய் எதிர்ப்பு, சக்தி பலவீனமான உடல் ஆரோக்கியம்.

    • இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் உண்டாகிறது.

    • கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது.

    • நீரிழிவு வியாதி, உடல் பருமன்.

    • இந்த காளான்கள் சாதாரணமாக குடலிலும், தோலிலும் இருக்கும். இங்கிருந்து இவை யோனிக்கு பரவும்.

    • இறுக்கமான, ஈரத்தை உறிஞ்சாத உள் ஆடைகள் காளானின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    • சுகாதார குறைவு, வயிற்றில் பூச்சிகள்.

    இந்த நோயின் அறிகுறிகள்......

    • பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல்

    • யோனிலிருந்து அடர்த்தியான, தயிர்போன்ற வெள்ளை திரவ வெளியீடு

    • புண்படுவது – தேய்ப்பதினாலும், சொரிவதனாலும் அதிகரிக்கும்

    • எரிச்சல்/ சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு

    • உடலுறவின் போது வலி.

    சிகிச்சை முறைகள்........
    1. தனக்குதவி

    • நீண்ட விரல் நகங்களால் சொரியவோ அல்லது தேய்க்கவோ செய்யாதீர்கள்.

    • மிகச் சூடான நீரினால் கழுவ வேண்டாம்.

    • குளிக்கும் டவலால் கடுமையாக துடைத்து கொள்ளாதீர்கள்.

    • உடலுறவை சிகிச்சை பெறும் போது தவிர்க்கவும்.

    2. ஆயுர்வேத மருந்துகள்... அசோகரிஷ்டம், திராக்ஷதி சூரணம், அசோக்ருதம், அசோகாதிவடி, பிரதராந்தக ரஸ போன்றவை.

    3. இதர குறிப்புகள் உணவு முறைகள்.........

    • வெள்ளைப்படுதல், நோய் மற்றும் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள்.

    • மன உளைச்சலை குறைக்கவும்.

    • உடற்பயிற்சி உதவும்.

    • இந்த வியாதி உடலுறவினால் பரவும் நோயல்ல. இருந்தாலும் உடலுறவை தவிர்க்க முடியாவிட்டால் கணவரிடம் தெரிவிக்கவும் உடலுறவினால்  அதிகரிக்கவும்,  கணவருக்கும் தொற்று பாதிப்பு வரலாம். உடலுறவை தவிர்ப்பது நல்லது.

    வீட்டு மருத்துவம்.......
    • சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.

    • மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.

    • சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு காலை வெறும் வயிற்றில் தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும்.

    • லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.

    ஆயுர்வேத மருத்துவம்.......

    வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும். ஆயுர்வேத முறையில் மட்டுமே வெள்ளைபடுதலை நிரந்தரமாக போக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


    மணத்தக்காளி சூப்

    சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    அருகம்புல்

    கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

    உணவு முறை

    ·    அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
    ·    உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
    ·    தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
    ·    உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். 

    வெள்ளைபடுதல் நிற்க

    1. இளவறுப்பாய் வறுத்த வெந்தயப் பொடி (100 கி.) கறி மஞ்சள் பொடி (20 கி.). பனங்கற்கண்டு பொடி (120 கி.) இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து அதிகாலை உணவுக்கு முன்னும், இரவு படுக்கும் முன்னும் 10-15 கிராம் அளவு பாலில் உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.


    2. பெரு நெல்லிக்காய்ப் பொடி (100 கி.), பனங்கற்கண்டு (100 கி.). இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பின்பு ஒரு டம்ளர் பசும் பாலில் நாட்டுக் கோழிமுட்டை வெண்கருவை விட்டு நன்கு கலக்கிக் கொண்டு அதில் மேற்கண்ட கலவைப் பொடியை 10 கிராம் முதல் 15 கிராம் வரை கலந்து காலை, மாலை தொடர்ந்த உட்கொண்டு வர வெள்ளைப்படுதல் உடன் நிற்கும்.  


    உணவே மருந்து.....

    அன்னாச்சி பழத்தை எடுத்து தோல் சீவி  சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குறையும்.

    எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்


    எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

    எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்
    நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
    1. நெஞ்சு சளி
    தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
    2. தலைவலி
    ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
    3. தொண்டை கரகரப்பு
    சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
    4. தொடர் விக்கல்
    நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
    5. அஜீரணம்
    ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
    அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
    சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
    6. வாயு தொல்லை
    வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
    7. வயிற்று வலி
    வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
    8. சரும நோய்
    கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
    9. மூக்கடைப்பு
    ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
    10. கண் எரிச்சல், உடல் சூடு
    வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
    11. வயிற்றுக் கடுப்பு
    வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
    12. பற் கூச்சம்
    புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
    13. வாய்ப் புண்
    வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
    14. தலைவலி
    பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
    15. வயிற்றுப் பொருமல்
    வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
    16. அஜீரணம்
    ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
    ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
    17. இடுப்புவலி
    சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
    18. வியர்வை நாற்றம்
    படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
    19. உடம்புவலி
    சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
    20. ஆறாத புண்
    விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
    21. கண் நோய்கள்
    பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
    22. மலச்சிக்கல்
    தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
    23. கபம்
    வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
    24. நினைவாற்றல்
    வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
    25. சீதபேதி
    சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
    26. ஏப்பம்
    அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
    27. பூச்சிக்கடிவலி
    எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
    28. உடல் மெலிய
    கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
    29. வயிற்றுப்புண்
    பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
    30. வயிற்றுப் போக்கு
    கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
    31. வேனல் கட்டி
    வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
    32. வேர்க்குரு
    தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
    33. உடல் தளர்ச்சி
    முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
    34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
    நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
    35. தாய்ப்பால் சுரக்க
    அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
    36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
    கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
    37. எரிச்சல் கொப்பளம்
    நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
    38. பித்த நோய்கள்
    கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
    39. கபக்கட்டு
    நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
    40. நெற்றிப்புண்
    நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
    41. மூக்கடைப்பு
    இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
    42. ஞாபக சக்தி
    வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
    43. மாரடைப்பு
    சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
    44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
    வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
    45. கை சுளுக்கு
    கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
    46. நீரிழிவு
    அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
    47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
    உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
    48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
    புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
    49. உடல் வலுவலுப்பு
    ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
    50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
    கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
    எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
    நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
    கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
    இயற்கை முறைக்கு மாறுவோம்
    ஆரோக்கியமாக வாழ்வோம்

    சோற்றுக் கற்றாழை பயன்படுத்தினால்

    சோற்றுக் கற்றாழை பயன்படுத்தினால்…
    கொழுப்பு கரைந்து உடல் மெலியும்!

    –––––––––––––––––
    கற்றாழை, நீர்நிலை இல்லாத இடங்களிலும் வளரும் மருத்துவக் குணம் கொண்ட மகத்தான தாவரம். கற்றாழையின் எல்லையில்லா பயன்களைப் பற்றி, சித்த மருத்துவர் சொல்வதைப் படித்தால் அது உங்களுக்கே புரியும்.
    'எல்லோருக்கும் ஏற்ற எளிமையான, எல்லாவிதமான சத்துகளும் ஒருங்கே கொண்டது கற்றாழை. உரிய வயதில், பூப்பெய்யாத பெண்களுக்கு, கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் 'மூசாம்பர பெமுகைக் கொடுத்தால், ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரித்து, பூப்பெய்தல் எளிதாகும். வைட்டமின் ஏ, சி, இ மற்றும் வைட்டமின் பி1, பி6, பி12 இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அகரிக்க உதவும்.
    மேலும், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் கால்சியம், பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இருப்பதால், வளர் இளம் பருவத்தினருக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். கற்றாழையைத் தினமும் எடுத்துக்கொண்டால் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் ஸ்லிம் ஆகும்.
    நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய், அல்சர், தைராய்டு, சோரியாசிஸ், சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள், கற்றாழையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி, கழுத்து வலியின்போது, வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீளவாக்கில் வெட்டி, சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
    கற்றாழையில் ஆன்டி மைக்ரொபியல் என்ற ரசாயனம் இருப்பதால், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதன் ஜெல்லை முகத்தில் தொடர்ந்து பூசுவதன் மூலம் இளம் வயதில் உண்டாகும் தோல் சுருக்கம் மறைந்து அழகு கூடும். அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், முகத்தில் பூசி வந்தால் கருமை, கரும் புள்ளி ஏற்படாமல் காக்கும். இதன் தொடர்ச்சியை நாளையும் பார்க்கலாம்

    உடல் எடை குறைய

     

    உடல் எடை குறைய 

    சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத்தொல்லையே இருக்காது.

    அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

    வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

    வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

    நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகிவிடும்.

    மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வரவேண்டும்.

    கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் ‌வீ‌க்க‌ம் குறையும்.

    பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வை‌த்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

    தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

    சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

    உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் உண்ண வேண்டிய உணவுகள்:-

    இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் கலோரி குறைவு. அவைகளை சாப்பிடுவது நல்லது. தினமும் நீங்கள் சாப்பிடும் உணவில் 80 சதவீதம் வீட்டு உணவாக இருக்க வேண்டும். 20 சதவீதம் வெளி உணவாக இருக்கலாம். பேக்கரி உணவுகளில் கலோரி அதிகம். அதில் சேர்க்கப்படும் வனஸ்பதியில் இருக்கும் டிரான்ஸ்பாற்றி ஆசிட் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கும்.

    - நார்ச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பிஸ்கெட், மைதா, வெள்ளை அரிசி உணவுகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள்.

    - ஒரு உணவை சாப்பிடும் முன்பு அது ருசியா என்று மட்டுமே பார்க்கிறோம். அது ஆரோக்கியமானதா என்று பார்க்க பழகிக்கொள்ளுங்கள். – மாலை நேரத்தில் இனிப்பு, காரத்திற்கு பதில் காய்கறி- பழ சாலட் சாப்பிடுங்கள். மோர் பருகுங்கள்.

    - ஐஸ்கிரீம், கொழுப்புள்ள பால், கேக் வகைகளை தவிர்த்திடுங்கள்.

    - முடிந்த அளவு வீட்டு வேலைகளை செய்யுங்கள். வாரத்தில் நான்கு நாட்களாவது 45 நிமிடங்கள் வேகமான நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    இதை கடைபிடித்தால் எடை குறைந்து-இடை மெலிந்து ஆரோக்கியமாக வாழலாம்!

    வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம்

    வெள்ளைப்படுதலை போக்க சித்த மருத்துவம

    பெண்களே வெள்ளைப்படுகிறதா உஷார் - கவனக் குறைவாக இருந்தால் கார்பப்பை இழக்க நேரிடும்.

    பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும். கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்று கூறுகிறார் சித்த மருத்துவர் டாக்டர் சங்கர்.

    இது குறித்து மாமல்லன் சித்த மருத்துவமனையின் டாக்டர். சங்கர் இதோ விளக்குகிறார்.

    இந்த வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும்.

    இந்த நோய் வருவதற்கான காரணங்கள

    * தவறான உணவுப் பழக்கங்கள
    * கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல
    * சுகாதாரமற்ற உள்ளாடைகள
    * சுய இன்பம் காணுதல
    * மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல
    * ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள
    * உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.
    * கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள

    மேற்கூறிய காரணங்களாலேயே இந்த வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுகிறது.

    இந்த நோய்க்கான அறிகுறிகள

    * இந்நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் இறங்குவதற்கு முன்போ பின்போ வெண்ணிறத்துடன் சீழ்போல் வெளிப்பட்டு சிறுநீர் போகும் போது எரிச்சலை ஏற்படுத்தும்.

    * உடல் மெலிந்து இடுப்பு, ை, கால்கள், உடல், கணுக்கால், தசை அனைத்து முட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும்.

    * உடல் நலிவடைந்து விரைவிலேயே களைப்படையச் செய்வதால் மாடிப்படி ஏறுவதற்கும், இடுப்பில் தண்ணீர் தூக்குவதற்கும் முடியாது.

    * பிறப்பு உறுப்புகளில் அறிப்பு, புண் ஏற்படுவதோடு உஷ்ணம் அதிகமாவதால் வயிற்றைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி கருவளையம், மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி ஆகியவையும் ஏற்படும்.

    * மாதவிலக்கு சரிவர வராமல் இருப்பது என்பது உட்பட பல அறிகுறிகளைக் கூறலாம்.

    * இந்த வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பல பெண்கள் வெளியில் செல்ல வெட்கப்பட்டு மருத்துவரை அணுகுவதில்லை. அதன் விளைவு கர்ப்பபையை அகற்றுவதோடு கர்ப்பபை புற்று நோயால் ஏற்படக் கூட காரணமாகிறது.

    வெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம

    * கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும்.

    * வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

    * அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

    * வெள்ளைப்படுதலால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இலுப்பை புண்ணாக்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தூளாக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரால் கழுவ வேண்டும்.

    * தென்னம்பூ இரண்டு பிடி, உதிர மரப்பட்டை சிறுதுண்டு இவை இரண்டையும் நன்கு இடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியவுடன் ஆற வைத்து வடிகட்டி குடித்தால் சுமார் 25 நாட்களுக்குள் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    உணவு முறைகள

    * உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

    * எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

    * மசாலா பொருட்கள், காபி, ீ, புளியை தவிர்த்தல் நல்லது.

    * இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

    இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. சித்த மருத்துவத்தில் இதற்கு பல மருந்துகள் உள்ளன. என்னிடம் வரும் நோயாளிகளில் இந்த வெள்ளைப்படுதலை குணப்படுத்த வரும் பெண்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே வெள்ளைப்படுதலை அலட்சியப்படுத்தாமல் உடன் தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு உடலை பாதுகாக்க வேண்டும். சித்த வைத்தியத்தில் வெள்ளைப்படுதலை கணப்படுத்த எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.