"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Saturday, April 2, 2016

மருத்துவம்


நம் நலம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

நாட்டுப்பசுக்களும், நலம் பயக்கும் நுண்ணுயிரிகளும்!
சொந்த மண்ணில் வாழ்ந்து இயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும் நம் நாட்டு பசுக்களையே 'நாட்டுப்பசு' என்கிறோம்.
சிலர் நம் நாட்டுப் பசுவின் மகத்துவம் அறியாமல் வெளி நாட்டு பசு மாடுகளை வளர்க்கிறார்கள்.
ஆனால், பிரேசில் உள்ளிட்ட ஏராளமான வெளி நாடுகளில் வெள்ளைக்காரர்களே நம் நாட்டுப் பசுக்களை இலட்சக்கணக்கில் வளர்க்கிறார்கள்.
" நாட்டுப்பசுவினை வளர்த்து கெட்டவனுமில்லை, சீமை மாட்டை வளர்த்து வாழ்ந்தவனும் இல்லை"
என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டுப்பசுக்களின் சிறப்பு சொல்லி மாளாது.
இதில் நாட்டுப்பசு இன்றைய விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் அவசியம் தேவை.
நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவைகள் என்னென்ன?
இயற்கை விவசாயிகளும், இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பும் விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமும் இது.
நாட்டுப்பசுவின் குடலில் தொடர்ந்து நல்ல எதிர்உயிர் முறிகள் (Antibiotic) உருவாகின்றன. இவை நாட்டுப்பசு வெளிப்படுத்தும் பால், சாணி, மூத்திரம், போன்றவைகளுக்கு வலிமை தரும் மிக முக்கிய பொருட்களாகும்.
இந்த நல்ல எதிர் முறி உருவாக்கங்களுக்கு, சில பாக்டீரியா சிற்றினங்கள் பொறுப்பு உடையவைகளாக உள்ளன.
லேக்டோ பேசிலஸ், பயோஃபீடோ பாக்டீரியம், ஸ்டீரெப்டோ காக்கஸ், எண்ட்ரோ காக்கஸ், லியுகான்ஸ்டக், பிடியோகாக்கஸ், ஈஸ்ட், கல்சர்கள், அஸ்பர் ஜின்னஸ் போன்ற பாக்டீரியாக்களாகும்.
நாட்டுப்பசுவின் குடலில் நுண்ணுயிர்கள் சிறப்பான குடல் சூழல் சமநிலையை உருவாகுகின்றன. நிலையான நுண்ணுயிர்கள், நிலையற்ற நுண்ணுயிர்கள், உமிழ்நீர், மிடற்றுச்சுரப்பு, கனையச்சுரப்பு, கல்லீரல், முன் சிறுகுடல் சுரப்புகள், வெளியேறு கரைசல்கள், யூரியா, நிலையான புரதங்கள் போன்றவைகளும் குடல் அமைவில் கலந்துள்ள மீதி எண்ணற்ற பொருட்களும் உள்ளடங்கி உள்ளன.
அது போன்றே நாட்டுப்பசுவின் குடல்களிலும் செயல்பாடுமிக்க நுண் உயிர் குடியிருப்புகள் பல்கி பெருகி உள்ளன. அவைகள் உடலில் நோய் தடுப்பு ஆற்றலை உருவாக்குபவை.
இந்த நுண் உயிர்களில் லாக்டிக் அமில பாக்டீரியாவும்,லேக்டோ அமில பாக்டீரியாவும் மிக முக்கியமானவைகளாகும். எல்லா நுண் உயிர்களும் எதிர்பாற்றல் பொருட்களான, தொல்லை தரும் நொதிகள், அமிலங்கள், கணையசுரப்பு, பித்தசுரப்பு இவற்றில் உயிர் துடிப்புடன் இருக்கும். இவைகள் நம் நாட்டுப் பசுவின் குடலின் இருக்கும் தனித்தன்மையாகும்.
நீங்கள் கேலண்டர்களில் அச்சிட்டு வருகின்ற நாட்டுப் பசுவின் படங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக காணப்படும்.
உண்மையில் அவர்கள் முப்பத்து முக்கோடி முயற்சி மிக்க நன்மை தரும் நுண்ணுயிர்களாகும்.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண் உயிர்கள், ரைசோபியம், அசிடோ பேக்டர், அசோஸ் பைரில்லம், பீஜர்யின்கியா போன்ற நைட்ரஜனை நிலைப்படுத்திகள் பலவும், பிஎஸ்பி என்னும் பாஸ்பேட் கரைப்பு பாக்டீரியாக்களும், பொட்டாஸ் கரைக்கும் பேசில்லஸ் கைலிகஸ்சஸ் போன்றவைகளும், சல்பரை கரைக்கும் தைஆக்ஸிடண்டுகள் பலவும், ஃபெரஸ் பாக்டீரியாவும் (எங்கும் கிடைக்காத முயற்சி மிக்க நுண்ணுயிர்) டிஜெக்டர் பெப்டிக் பாக்டீரியா சிற்றின வகைகளும், பூஞ்சான வகைகளும், ஆக்டினோமைசிடாஸ் போன்ற பிற நுண்ணுயிரிகளும் உள்ளன.
நாட்டுப்பசுமாட்டுச் சாணத்தில் ஒரு கிராம் அளவில் 300 – லிருந்து 500 கோடி வரை நன்மை தரும், முயற்சிகள் கொண்ட பாக்டீரியாக்கள் உள்ளன. நாட்டுப்பசு மாட்டின் சாணி நுண் உயிர் வளர்ப்பு ஊக்கியாக உள்ளது.
மேலும் நாட்டுப்பசுமாட்டின் பால், சாணி, மூத்திரம் போன்றவைகள் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
இதில் பஞ்சகவ்யம் எனும் பஞ்ச அமிர்தங்கள் மனிதனில் அனைத்து வகையான உயிர் கொல்லி நோய்களுக்கு தடுப்பு மருந்தாக பயன்பாட்டில் உள்ளது.
இதில் பால் மூலம் பெறப்படும் தயிர், நெய் போன்றவைகள் மற்றும் பால், சாணி, மூத்திரம் என இந்த ஐந்தும் பஞ்சகவ்யம் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை:
-------------------------------------------------
பால் – 7 லிட்டர், தயிர் – 4 லிட்டர், நெய் – 1 லிட்டர், கோஜலம் (பசு மூத்திரம்) – 1 லிட்டர், கோமயம் (சாணம்) – கை கட்டை விரல் அளவு, தர்பைப் புல் ஊற வைக்கப்பட்ட நீர் – 1லிட்டர் கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.
வேத சாஸ்திரங்கள் கூறியுள்ள இந்த பஞ்சகவ்ய முறையை அனைத்து தர மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சகவ்யம் செய்து ஒரு மணி நேரத்தில் குடிக்கப்படவேண்டும், வைத்து சாப்பிட நினைப்பவர்கள் பஞ்சகவ்ய கிருதம் செய்தோ, வாங்கியோ சாப்பிடலாம்.
இந்த பஞ்சகவ்யம் சாத்வீக குண நலன்களை தந்து மனிதனை தெய்வ நிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது. என்பது சான்றோர் கருத்து.
அதுபோலவே "சாமியில்லையேல் சாணியைப் பார்!" என்ற பழமொழிக்கு ஏற்ப தெய்வப்படங்கள் இல்லாத சூழ் நிலையில் பசு மாட்டுச் சாணியை பிள்ளையார் போன்று பிடித்து வைத்து வழிபாடு செய்த வழக்கம் நம் நாட்டில் உண்டு.
இத்தகைய நாட்டுப் பசு மாட்டின் சாணிக்கே இந்த பெறுமை என்றால் அந்த நாட்டுப் பசுவின் பெறுமையை இனியும் சொல்லித் தெரிய வேண்டுமா?.
ஆனால் இந்த நாட்டுப் பசு மாடு இன்று நம் மக்களிடையே குறைந்து போனதற்கு காரணம், மக்களின் அறியாமைதான் ஆகும்.
இனியும் இதுபோன்ற உண்மைகளை அறியாமல் இருந்தால் நம் நாட்டுப் பசு இனத்தை நாமே முற்றிலும் ஒழித்துவிட்டு, சீமை பசு வின் பாலை குடித்து, குடித்து பல நோய்களை சேர்த்துக் கொண்டு, (டாஸ்மாக் சரக்கு குடிப்பதினால் வரும் நோய்கள் தனி) சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் வெளி நாட்டு மருந்து கம்பெனிகளின் வியாபாரத்தில் போட்டு விட்டு பல மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் உயிருக்கு ஊசலாடும் கூட்டத்தினை பார்த்தால் ?
பார்க்க... பார்க்க...
நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கையிலே...

சீமை மாட்டுப்பால் மெல்லக் கொல்லும் விஷம்!
சீமை மாடு என்பதே ஒரு நோய் கூடம். சீமை மாட்டுப் பாலும், நம் நாட்டுப் பசும்பாலும் பார்க்க ஒன்று போலவே இருந்தாலும், இரண்டிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
பாலின் முக்கிய அங்கமான பால் புரதமானது (Milk Protien) நாட்டுப் பசுவில் A2 Beta – Casein ஆகவும், சீமை மாடுகளில் A1 Beta – Casein ஆகவும் மாறுபடுகிறது.
இதில் A1 Beta – Casein புரதம் மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதை தற்பொழுது பல விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள். BCM7 என்னும் புரோட்டீன் மூலக்கூறு சீமை மாட்டுப் பாலில் பல வியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. மார்பின், ஓபியம் போதைப்பொருளோடு ஒப்பு நோக்கக்கூடிய ரசாயண மூலக்கூறுகளாகும்.
இதற்கு சரியான உதாரணம், நாட்டுப் பசுவின் கன்றுகள் பால் குடித்தவுடன் உற்சாகமாக துள்ளி விளையாடும். ஆனால் சீமை மாட்டுக் கன்றுகள் சோர்ந்து தூங்கும்.
இந்த சீமை மாட்டின் பாலை மனிதர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்க கொடுக்க குழந்தையின் மூளை வளர்ச்சி மந்தத்தன்மையுடன் வளரும், மேலும் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்காது. குழந்தைகளின் மரபணுக்களில் மாற்றம் உண்டாகுகின்றது, மனித உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் சம நிலையை தடுமாற செய்கின்றது.
இதன் தாக்கம் பிட்டியூட்டரி, தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட முக்கிய சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் உடலின் வளர்ச்சி முதல் அனைத்து உறுப்புக்கள், புத்தி, மனோ நிலை என அனைத்தும் தடுமாறச் செய்கின்றது. இதன் மூலம் புதுப்புது வியாதிகள் பெருகிக்கொண்டே போகின்றது.
இத்துடன் A1 Beta Casein புரதமானது நம் உடலின் இன்சுலின் சுரப்பியின் புரதத்தை ஒத்திருப்பதால் ஹார்மோன் சுரப்பி நிலை தடுமாறுகிறது. காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த தடுமாற்றம் சர்க்கரை நோயை வரவழைக்கிறது.
இன்னும் ஒரு மோசமான, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேட்டிராத நோய் ஆட்டிசம் ( சதை பிறழ்வு நோய்) இந்த சீமை மாட்டுப் பாலை குழந்தைகளுக்கு தொடர்ந்து தருவதால் அவர்களது உடலையும், மூளையையும் ஒரு சேர தாக்குகின்ற கொடிய நோய் ஆகும்.
சீமை மாட்டுகளின் உடலில் ஆண், பெண் செக்ஸ் ஹார்மோன்கள் சம நிலையில் இல்லை. பெரும்பாலும் பெண் (கிடாரிகள்) மாடுகளுக்கு இனப்பெருக்கத்திற்காக ஊசிகள் மூலமே நடைபெறுவதினாலும், அவைகளில் ஆண் (காளை) மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மந்தமானதாகவும், பசு மாட்டின் செக்ஸ் ஹார்மோன் மிகுதியாகவும் உடையதாகவும் உள்ளது.
இது போன்ற குறைபாடுள்ள சிமை மாட்டுப் பாலை பருகும் மக்களுக்கும் அந்த பாதிப்பு வெளிப்படுகிறது. மலட்டுத்தனம், பாலியல் குறைபாடு, மாதவிடாய், கர்பப்பை, பால் சுரப்பு கோளாறுகள் போன்றவை சில.
சீமை மாட்டுப் பால் ஒரு மெல்லக் கொல்லும் விஷம் போல. அதன் பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. சீமை மாடுகள் நம் நாட்டிற்கு வந்த புதிதில் சரிவிகிதமாக கலப்பு செய்யப்பட்டதால் நாட்டுப் பசுக்களின் தாக்கம் சரி விகிதமாக இருந்தது. அதனால் அன்றைய கால கட்டங்களில் தெரியவில்லை. தற்பொழுது நம் நாட்டு மாடுகள் பெரும்பாலும் ஒழிந்து, சீமை மாடுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் நோய்களின் பெருக்கம் நன்றாக தெரிய துவங்கியுள்ளது.
எனவே முடிந்தால் நாட்டுப் பசுவின் பாலை அருந்துங்கள், அல்லது தற்பொழுது கிடைத்து வரும் சீமை மாட்டுப் பால், பால் பொருட்கள் உபயோகிப்பதை தவிருங்கள்.
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!

ஆஸ்துமா (Asthma)
ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.
ஆஸ்துமா உள்ள நபர்களி‌ன் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ
அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போ‌ன்றவை செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாச‌க் குழா‌ய்க‌ள் சுரு‌ங்குவதா‌ல், அத‌ன் வ‌ழியாக கா‌ற்று‌ச் செ‌ன்றுவரு‌ம்போது அதிகமாக ச‌த்த‌ம் கே‌ட்‌கிறது. மேலு‌ம், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமாக‌க் காணப்படும்.
நாட்பட்ட ஆஸ்துமா வியாதியை குணப்படுத்துவது கடினம். ஆனால் ஆஸ்துமா நோய்கண்டவ‌ர்க‌ள் பல‌ர் இந்த நோயினை கட்டுப்பா‌ட்டி‌ல் வை‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இரு‌க்கு‌ம். அப்போது உரிய மரு‌த்துவ‌ம் செ‌ய்து கொ‌ண்டு மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.
நோயின் காரணங்கள்
***********************
நாம் சுவா‌சி‌க்கு‌ம் கா‌ற்று உட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிற ‌சில பொரு‌‌ட்க‌ள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது.
ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.
பொது வகையான அலர்ஜி (ஒவ்வாமை பொருட்கள்)
*******************************************************
1. மிருகங்களின் (உடலின் மேல்) உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)
2. தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் இரு‌க்கு‌ம் தூசியில் காணப்படுபவை)
3. கரப்பான்பூச்சி
4. மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்
5. மேல் பூசு பொருட்கள் - பெயிண்ட், டிஸ்டம்பர் போன்றவை
6. சிகரட் புகை
7. காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்
8. குளிர்ந்த காற்று அல்லது த‌ட்பவெ்‌ப்பநிலை மாற்றம்
9. வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை
10. நருமண மூட்டப்பட்ட பொருட்கள்
11. கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)
12. ஆஸ்பரின் மற்றம் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்
13. உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள் (உலர்ந்த பழவகைகளில் அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)
14. வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.
15. இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.
16. நோய்தொற்றுதல்
17. குடும்ப பின்னணி
18. குழந்தைகள் புகை‌யிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌ம் புகையை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது.
19. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.
19. உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.
நோயின் அடையாள அறிகுறிகள்
***********************************
மூச்சுத்தினறல் - திடீரென ச‌ளி ‌பிடி‌த்த‌ல், கா‌ய்‌ச்ச‌ல் போ‌ன்ற பாதிப்புக்குள்ளாகுதல், இது அடிக்கடி ஏற்படுதல்
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்
குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானாகவே மறைந்துவிடும் மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல் இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல் சாதாரணமாக வேலைக‌ள் செ‌ய்யு‌ம்போது மூச்சு இறைப்பினால் உட‌ல்‌நிலை மோசமாகுத‌ல் போ‌ன்ற அறிாகு‌றிக‌ள் காண‌ப்படு‌ம்.
பரிசோதனைகள்
******************
எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (பி.எப்.டி.) போ‌ன்ற ப‌ரிசோதனைக‌ள் மூல‌ம் ஆ‌ஸ்துமாவை‌க் க‌ண்ட‌றியலா‌ம்.
கா‌ய்‌ச்சலை அள‌்ப்பத‌ற்கு தெர்மாமீட்டர் உள்ளது போ‌ல், ஆஸ்துமாவிற்கும் பீக்ப்ளே மீட்டர் என்னும் ஒரு கருவி உள்ளது. இதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ஒரு நுரை‌யீர‌ல் எவ்வளவு சீராக காற்றை வெளியே விடுகிறது என்பதை அளவெடு‌க்கலா‌ம்.
சிகிச்சை முறை
*****************
நல்ல வீசிங்கில் இரவில் சிரமப்பட்டிருந்தால் கற்பூரவல்லி, துளசி, கரிசலாங்கண்ணி என இவை ஒவ்வொன்றிலும் கொஞ்சம் இலைகளை உதிர்த்து போட்டு கசாயமாக வைத்து இனிப்பிற்குத் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், நெஞ்சில் இரவில் சேர்ந்த சளி இலகுவாக வெளியேறி உடனடி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக இந்த கலவை கசாயத்தைக் காலை பானமாக குடித்துவர இரைப்பு கண்டிப்பாய்க் கட்டுப்படும். கூடவே தும்மல் இருந்தால் முசுமுசுக்கை இலைகளையும் சேர்த்துக்
கொள்ளலாம்.
இரவில் வீசிங்கில் சிரமப்பட்டவர்க்கு காலை உணவு சாப்பிடப் பிடிப்பதில்லை. பசியும் இருப்பதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிவப்பரிசி அவல், மிளகு ரச சாதம், இட்டிலி என ஏதொவொன்றை சாப்பிடுவது நல்லது. ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல், அரை வயிற்றிற்கு சாப்பிடுவதும் வேண்டும். இடையில் தேநீர் சப்பிடுவதும் நல்லது.
மதிய உணவில் நீர்சத்துள்ள சுரை,புடலை, சவ்சவ் இவற்றைத் தவிர்க்கலாம்.
மிளகு, தூதுவளை ரசத்துடன் நிறைய கீரை காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும். மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரணத்தை வேகப்படுத்தி எளிதில் மலம் கழிக்க வைக்கும் உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாயு உண்டாக்கும், செரிக்க நேரமாகும் கிழங்கு வகைகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள் நல்லதல்ல. மோர் சேர்ப்பது தவறல்ல. தயிரை தவிர்க்கலாம். சில வகை காய்களுக்கு சிலருக்கு அலர்ஜி இருக்கலாம். அவரவர்கள் அதை அடையாளம் காண வெண்டும். அதே சமயத்தில் தன் நாவிற்கு பிடிக்காததை எல்லாம், "அய்யோ எனக்கு பாவக்கா அலர்ஜி! வெண்டக்கா ஒத்துக்காது" என நடிக்கத் துவங்கினால் இழப்பு கூடும், இழுப்பும் கூடிடும்.
மாலையில் தேநீரோ/ சுக்குக் கசாயமோ எடுப்பது இரவு சிரமத்தை
பெருவாரியாகக் குறைக்கும். இரவு உணவினை முடிந்தவரை ஏழரை மணிக்கு முன்பதாக எடுத்துப் பழகிக் கொள்வது நல்லது.
கோதுமைரவை கஞ்சி, இட்டிலி நல்லது. பரோட்டா, பிரியாணி என படுக்கைக்குப் போகும் முன் புகுந்து உணவில் விளையாடுவது நல்லதல்ல. படுக்கைக்கு போகும் போது காலிவயிறு ஆஸ்துமாவை நன்கு கட்டுப்படுத்தும்.
பல ஆஸ்துமா நோயினருக்கு வாழைப்பழம் குறித்து தேவையற்ற அச்சம் உள்ளது. நாட்டு வாழைப்பழம் (தென் மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது), மலை வாழைப்பழம் தினசரி மாலை வேளையில் சாப்பிடலாம்.மலத்தையும் இளக்க அது உதவிடும். ஆற்றலையும் தரும்.
மோரிஸ் அல்லது தற்போது சந்தையில் கிடைக்கும் ஹைபிரிட் மஞ்சள் வாழை பழங்களை தவிர்க்கலாம்.
எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை பழங்களை மருந்து எடுத்துவரும் காலத்தில் கண்டிப்பாக 6-7 மாதம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பகல் பொழுதில் சிவப்பு வாழை, மாதுளை, அன்னாசித் துண்டுகள் சிறிது மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
சிறந்த உணவுத் தேர்வுடன், சரியான சித்த மருத்துவம், மூச்சுப்பயிற்சி எனும் பிராணாயாமம் இருந்தால் ஆஸ்துமாவைக் கண்டு பயம் கொள்ளத் தேவையே இல்லை.
இனிப்பு பண்டங்கள் ஆஸ்துமாவிற்கு நல்லதல்ல. ரொம்பா ஆசைப்பட்டால் பகல் வேளையில் கொஞ்சமாய் சுவைக்கலாம்.அதுவும் குளிர் காலத்தில் தேவையில்லை.
பெரியவர்கள் மதிய உணவிற்குப் பின்னர் 2 வெற்றிலை சவைப்பதும் ஆஸ்துமாவிற்கு நல்லது தான். வெற்றிலையும் மிளகும் ஆஸ்துமா நோயில் பயனளிப்பதை நம்ம ஊர் சித்தர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு ஆய்வாளர்களுமே சொல்லியுள்ளனர்.
வெற்றிலையுடன் புகையிலையை மட்டும் மறந்தும் சேர்த்துவிட வேண்டாம். புற்று நோய் வந்துவிடும்.
சிவப்பரிசி அவல், புழுங்கல் அரிசி கஞ்சி, திப்பிலி ரசம், தூதுவளை ரசம், முசுமுசுக்கை அடை, முருங்கைக் கீரை பொரியல், மணத்தக்காளி வற்றல், இலவங்கப்பட்டைத் தேநீர், இவையெல்லாம் ஆஸ்துமாகாரர் மெனு கார்டில் அவசியம் இடம் பெற வேண்டும்.
மேலும் ஆஸ்துமாவை நல்ல கட்டுப்பாட்டிலும், குணப்படுத்துவதற்கு ஏதுவான நல்ல மருந்துகளும் ஹோமியோ மருத்துவத்திலும் உள்ளது.
வெண்படை (Leucoderma)
வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா எனப்படுகிறது.
மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூகரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
வெண்படைக்கு எளிய மருந்து
********************************
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்
* கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்
இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.
மேல்பூச்சுக்கான மருந்து
**************************
1.அவுரிச்செடி
2.குன்றிமணி
குன்றிமணி விதைகளை 50 கிராம் அளவு எடுத்து, ஊறவைத்து அதன் மேல் தோலை உரித்து எடுத்துவிடவேண்டும். நமக்கு தேவையானது அதன் பருப்புகள் மட்டுமே. அந்த பருப்புகளை 200 மி.லி அவுரி இலைச்சாறு விட்டு அரைக்க வேண்டும். அந்த விழுதை, குச்சி அல்லது பென்சில் போல நீளமாக உருட்டி காய வைக்க வேண்டும். கல்லில், சிறிது நீர் விட்டுஅதில் அந்த காய்ந்த மருந்து குச்சியை அரைத்தெடுத்து, வெண்படை உள்ள பகுதிகளில் பூசி வந்தால் குணம் பெறலாம்.
அவுரிச் செடி கிடைக்கவில்லையெனில் நாட்டுமருந்துக் கடையில் அவுரி இலைப்பொடி கிடைக்கும். அதை 100 கிராம் வாங்கி ஒரு லிட்டர் நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, 200 மி.லி.யாக சுண்டவைக்கவும். பின் அந்த சுண்டிய நீரில் குன்றிமணி பருப்புகளை அரைத்து, அந்த விழுதை குச்சி போல உருட்டி காய வைக்கவும். பின் அதை கொஞ்சம் நீர் விட்டு இழைத்து வெண்படை உள்ள இடங்களில் பூசவும்.
வாய் உள்ளே வெண்படை இருக்குமானால், உதாரணமாக கீழ் உதட்டின் உள்புறத்தில் வெண்படை இருக்குமானால், இந்த பூச்சை உள்ளே போடக்கூடாது. மாறாக கீழ் உதட்டின் வெளிப்புறத்தில் பூசிவிட்டால் போதுமானது. இந்த பூச்சு வாயில் படுவதை தவிர்க்கவும்.
2. வெண்படை தீர இன்னுமொரு மருந்து
******************************************
தேவையானவை:
1. கார்போக அரிசி-200கிராம்
2. இஞ்சிச்சாறு-50கிராம்
3. மஞ்சள் கரிசாலைச் சாறு-50கிராம்
இஞ்சிச்சாறு, கரிசாலைச்சாறு ஆகிய இவ்விரண்டு சாறுகளை ஒன்றாகக் கலந்து, அதில் கார்போக அரிசியை ஊறவைக்கவும். கார்போக அரிசியின் மேல்தோல் கழலும் அளவுக்கு ஊறவைக்கவும்.
அந்த அளவுக்கு ஊறிய பின் நன்றாக பிசறினால், மேல்தோல் தனியாக வந்துவிடும். மேல்தோல் நீக்கப்பட்ட கார்போக அரிசியை மட்டும் தனியே எடுத்து, அதில் இஞ்சிச்சாறு, மஞ்சள் கரிசாலைச் சாறு விட்டு மைபோல அரைத்து, மிளகளவு இருக்கும்படியாக, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
காலை, மாலை என இரு வேளையும், வேளைக்கு ஒரு மாத்திரையாக,
உணவுக்கு முன் உண்டுவர வெண்புள்ளிப் படலம் பூரணமாக குணமாகும்.
மருந்து உண்ணும் போது பத்தியமாக காபி, அகத்திக்கீரை, சிறுகீரை, சுண்டக்காய், பாவற்காய் மற்றும் அசைவ உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

   

மாதவிடாய் ( Menses)
தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய், சுகமில்லை... பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள். அதை வைத்துத்தான் எத்தனை (மூட)நம்பிக்கைகள், பயங்கள்..
இதனை வெட்கப்படாது, தயங்காது அறிந்து கொள்வோம்.
மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம்படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... இப்படி பல கூடாதுகள்.
கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். பேய் அடித்துவிடுமாம்!
இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது. இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு எல்லாம் சேர, "ஏன்தான் பெண்ணாக பிறந்தோமோ" என்ற சலிப்பு தட்டுவது இயல்பு.
மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப்பகுதியின் நோக்கம்.
கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக் கூட அத்தனை தயங்கும் பெண்கள் எப்படி தன் பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றி புரியவைக்கப் போகிறார்கள்?
நம் உடல் பற்றி, அதன் மாற்றங்கள், இயல்பு, பிரச்னைகள் பற்றி தாய்மர்கள்தான் தயங்காமல் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பூப்பூக்கும் நேரம்
================
பூப்பெய்துதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி.
முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. 10-11 வயதில் (இப்போது 9 முதல் 13) இது துவங்கும். ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்பு மீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும். பின்பு உடல் வளர்ச்சியில் வேகம் தென்படும். அந்த வயது பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்தவளாக தெரிவாள்.
இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிக மாகும். பூசினாற்போல் சதைப் பற்று ஏற்படும். அக்குளில் முடி வளர்வதுதான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது. அதன்பின் இந்த மாற்றங்களின் வெளிப்பாடாக மாத விலக்கு நேர்கிறது.
இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள். உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றால், பலரும் நினைப்பதுபோல் மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை.
மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியை தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்து வரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பை மீதும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஆர்.ஹெச் ஹார்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம்.
இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதனால் முதல் மாத விலக்கு நிகழ்கிறது.
ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம். அதனால் தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாக வராது. இந்த கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம். போகப் போக சரியாகிவிடும்.
சிலருக்கு 18 வயது ஆகியும் கூட பூப்பெய்தல் ஏற்படாவிட்டால் நிச்சயமாக மருத்துவரை சந்தித்து நிவாரணம் பெறவேண்டும். நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள் கூட உண்டு. அதெல்லாம் அபூர்வம்.
7 முதல் 9 வயதுக்குள் பூப்படைதலை 'விரைவுபடுத்தப்பட்ட பூப்பெய்தல்' என்கிறோம். அதிக உடல் வளர்ச்சியால் அல்லது பரம்பரை காரணமாக இது நிகழலாம். மிகச்சிறிய வயதில் பூப்படைந்தாலும் அதிகப்படியான ஹார்மோன் சுரந்தால் மட்டுமே மாதா மாதம் விலக்காக முடியும். சிறு வயதில் பூப்படைந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
உடல்வாகு, உணவு, வளர்கிற சூழ்நிலை, குடும்ப பின்னணி ஆகியவற்றை பொறுத்து பூப்பெய்தும் வயது மாறுபடலாம். சிலர் 9 அல்லது 10 வயதில் பூப்பெய்த உடல்வாகுதான் காரணம் என்றாலும், சில சமயம் ஹார்மோன்கள் மாறுபாட்டாலும் இருக்கலாம். தாமதமாக பூப்பெய்துவதால் பிள்ளைப் பேறுக்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை. பூப் பெய்தும் வயதுக்கும் மாதவிலக்கு நிற்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை.
பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம். அதை சுழற்சி என்போம். அதாவது மாதவிடாய் சைக்கிள் என்கிறோம். சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி. சிலருக்கு இரண்டு, மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக வரலாம். அதனால் தவறில்லை.
அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக் கூடிய, உடல் உறவுக்கு பாதுகாப்பான நாட்களாகஅந்த 28 நாட்களை சில பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
அதாவது 1 முதல் 5 மாதவிலக்கு நாட்கள். 5 முதல் 10 ஆரம்ப நாட்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். கருமுட்டை வளர ஆரம்பிக்கும். கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும்.
10 முதல் 14 நாட்கள்
அதே வளர்ச்சி வேகமாகி 14-ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும். எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம்.
14 முதல் 28-வது நாள் வரைபின்பகுதி நாட்கள்.
ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். கர்ப்பப்பையின் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாக தென்படும். (ஒருவேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தை போல!) கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் அளவும் குறைந்துவிடும்.
ஆரோக்கியமான ஒருவருக்கு மாதவிலக்கு 3 முதல் 6 நாட்கள் இருக்கலாம். 3க்கு குறைவாக அல்லது 6க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம்.
இந்த மாதவிலக்கு காலங்களில் இரத்தம் வெளியேறுவது சுமார் 50 மில்லி லிட்டர். குறைந்தது 20 மில்லி லிட்டர் அதிகபட்சம் 80 மில்லி லிட்டர் என இந்த அளவும் வேறுபடலாம்.
அப்போது தினமும் அரை மில்லிகிராம் முதல் ஒரு மி.கி. வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது. உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச்சத்து உள்ள பழங்கள் அல்லது மருந்துகள் எடுப்பது நல்லது.
இந்த மாதவிடாய் வெளிப்படும் காலகட்டத்தில் ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 30 குமிழ்கள் உருவாக ஆரம்பித்து, பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒரு குமிழ் பெரிதாகி, அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14-ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்த குமிழ் வெடித்து கரு வெளிவந்து விந்துவை எதிர் கொள்ள தயாராகிறது.
ஒவ்வொருமுறை மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்களாக மார்பகம் பாரமாக தோன்றுவதும், பெரிதாவது போல் தெரிவதும், வலி ஏற்படுவதும் இயல்பு. இவை மாதவிலக்கு ஏற்பட 2 அல்லது 4 நாள் முன் ஏற்படும். இது சகஜம். சிலருக்கு இந்த அறிகுறிகள் சற்று அதிகமாகவும் இருக்கலாம்.
வயிறு 14-ம் நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வலி இருக்கலாம். வருமுன் வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம்.
உடல் எடை, நீர் கோர்த்தது போல, எடை அதிகமானது போல தோன்றும்.
கர்ப்பப்பை வாயில் 14-ம் நாளிலிருந்து வளவள என்ற திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும்.
இந்த மாற்றங்களை Pre Menstrual Syndrome என்பார்கள். தலைவலி, கால் வலி மற்றும் வீக்கம், அடிவயிற்றில் வலி, அதிக பசி, அலர்ஜி/சளி ஏற்படுவது, பருக்கள், குடல் உபாதை, முதுகு வலி, படபடப்பு, அரிப்பு, அதிக வியர்வை போன்ற மாற்றங்களும் நேரலாம்.
இதில் உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். அதாவது, கவலை, பதற்றம், ஆர்வமின்மை, ஈடுபாடின்மை, அசதி, கோபம், டென்ஷன், எரிச்சல், தூக்க மின்மை, குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல், தற்கொலை எண்ணம், தனிமை விரும்புதல், தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள். இந்த பிரச்னைகளுக்கு காரணம் இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்லவும் முடியாது.
இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம், பி-6 என்ற வைட்டமின் பற்றாக் குறையாக இருக்கலாம், தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகளின் தாக்கம், ஹார்மோன்களின் குறைபாடு காரணமாகலாம். அதிகப்படி நீர் சுரப்பதும், சர்க்கரை அளவு குறைவதும்கூட காரணங்களாக இருக்கலாம்.
இதற்கு என்று தனிப்பட்ட சிகிச்சை கிடையாது. மனநல ஆலோசனை, உடற்பயிற்சிகள் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்தலாம்.
பொதுவாக என்ன மாதிரியான மாத விலக்கு பிரச்னைகள் தோன்றும் எனில்,
1. குறைந்த அளவு உதிரப்போக்கு
2. உதிரப்போக்கே இல்லாமை.
3. அதிகப்படியான உதிரப் போக்கு
4. சுழற்சி முறையில் மாறுதல்
5.வலியுடன் கூடிய உதிரப்போக்கு.. இப்படி பல.
குறைந்த அளவு உதிரப்போக்கு
=============================
இது மாதவிலக்கு சுழற்சியில் எந்த நிலையில் குறை இருந்தாலும் ஏற்படலாம். மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப்படுவது.
உதாரணத்துக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது அதிக மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும்போது, உடல் எடை தடாலென்று குறையும்போது, உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது (உ-ம்: அதிக உடற்பயிற்சி, பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்வது) எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டை தடுக்கலாம்
.
தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும், ரத்த சோகை, வேறு நோய் இருந்தாலும் (உ-ம்: சிறுநீரக வியாதி, இதய வியாதி போன்றவற்றினாலும் உதிரப்போக்கு குறையலாம்.
சினைப்பையில் PCOD (Poly Cystic Ovarian Disease) என்ற நிலை இருந்தாலும் மாதவிலக்கு வராமல் அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கலாம். சில நேரங்களில் மிகச் சிறிய வயதி லேயே சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிலக்கு நின்றுவிடலாம்.
இப்படி இருப்பவர்கள் என்னென்ன பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றால்,
முதலில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் FSH & LH போன்ற ஹார்மோன்கள் அளவை கணக்கிட வேண்டும். ஸ்கேன் செய்து கர்ப்பப்பை, சினைப்பை சரியான அளவில் சரியான வளர்ச்சி அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர் D & C செய்து கர்ப்பப்பையின் உள்சதையை எடுத்தும் பரிசோதனை செய்வார்.
சிலருக்கு உதிரப்போக்கு 10 நாட்கள் வரை இருந்து தொல்லை கொடுக்கும், பெரிய மனுசியான முதலிரண்டு ஆண்டுகளில் மாதவிலக்கின் போக்கில் மாறுதல் இருப்பது இயற்கை. பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருவதும், உதிரப்போக்கு சராசரி 5 நாள் இருப்பதும் இயற்கைதான்.
உடல் வளர்ச்சியின்போது சுரக்கும் ஹார்மோன்களும் பாலின உறுப்புகளின் வளர்ச்சியும் இணைந்து செயலாற்றுகிற வரை மாதவிலக்கின் போக்கில் மாற்றங்கள் இருக்கலாம்.
சில பெண்களுக்கு பூப்புக்கு அடுத்த மாதவிலக்கு பல மாதங்கள் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோகூட ஏற்படலாம். இது இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும். ரத்தப் போக்கு 8 அல்லது 10 நாளுக்கு அதிகமாக இருந்தால் ரத்தசோகை ஏற்படும்.
மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பூப்புக்குப் பின் ஒரு மாதத்துக்குள் பலமுறை வந்தாலும், பல மாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும் பூப்பெய்திய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்கான சுழற்சிக்குள் வந்துவிடும்.
18 வயதை தாண்டியும் பூப்பெய்தவில்லை என்றால், கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும். பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி போன்றவை சுரக்கும் ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு, கருமுட்டைகளை உள்ளடக்கிய சினைப்பை மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதால், மாதவிலக்கு தோன்றுகிறது. அது தொடங்கவே இல்லை என்றால், பரிசோதனை அவசியம்.
நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு இருப்பின் அவற்றின் காரணங்களை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும். தாயின் வயிற்றுக்குள் பெண் கரு உருவாகும்போதே அதன் சினைப்பை தொடக்கநிலை கரு முட்டைகளை உள்ளடக்கிக் கொண்டு வளர்கிறது. இது பிறவியமைப்பில் வளர்ச்சி பெறாமல் வரிக்கீற்று சினைப்பையாக (Streak Ovary) அமைந்துவிட்டால் செயல்படாமல் போய்விடும், இதனால் பூப்பெய்துவது இல்லை.
இவர்களுக்கு குழந்தை பிறப்பது அரிது. சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இல்லாமலும் போகலாம். ஆனாலும் இவர்கள் தாம்பத்ய உறவு கொள்ள இயலும்.
கர்ப்பப்பை இல்லாமல், யோனிக் குழாயும் இல்லாமல் அந்த இடம் சிறு குழியாக மட்டுமே இருந்தால் தாம்பத்ய உறவில் சிக்கல்தான்.
காசநோய், இளம்பிராய நீரிழிவு நோய் (Juvenile Diabetes) ஆகியவற்றால் கர்ப்பப் பை பாதிக்கப்பட்டிருந்தாலும் மாதவிலக்கு வராது.
துளையற்ற கன்னிப்படலம் (Imperf orate Hymen), யோனி குழாய் அடைப்பு இருந்தாலும் உதிரம் வெளிவர இயலாமல் அடைபடும