"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Wednesday, May 11, 2016

தினமும் கீரை சாப்பிடுங்கள்

தினமும் கீரை சாப்பிடுங்கள்
அன்றாடம் ஏதேனும் ஒருவகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதனால், எந்தெந்த கீரையில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்துசாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்புஆகியவை குணமாகும்.

கீரைகளில்மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பைசேர்த்துச் செய்ய வேண்டும். இதுசுவையைக் கூட்டுவதோடு, உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.
பாலக்கீரையில்அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்புசேர்த்து லேசாக வேக வைத்து,மிக்ஸியில் அரைத்து… கடுகு, காய்ந்த மிளகாய்தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாகவைக்கும்.

வயிற்றில்இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச்செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு.லேசாக வேக வைத்து பொரியல்செய்துகூட சாப்பிடலாம்.

மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறிவெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.
இரவுவேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.

சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு,தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிதுபருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… பித்தம்,நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம்குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம்.கீரையை நிறம் மாறாமல் நன்றாகவதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டுபல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும்.

பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச்சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும்அப்படியே உடல் சேரும்.