"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, July 12, 2016

வெள்ளைபடுதல்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 
பெண்கள் பருவம் அடைந்தது முதல் அனுபவிக்கும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று வெள்ளை படுதல். ஆனால் அவர்கள் இதை பெரிதாக கருதுவதில்லை. அதனால் ஏற்படும் சிரமங்களையும் சாதாரணமாக விட்டு விடுகின்றனர். வெள்ளைப்படுதல், கேன்சர் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று எச்சரிக்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிகுமார். பருவம் அடையும் வயதில், மாதவிலக்கு நாட்களுக்கு முன்னர், கருவுற்றிருக்கும் போதும் வெள்ளை படுவது சாதாரண விஷயம். முட்டை உருவாகும் நேரத்திலும் 5 நாட்களுக்கு வெள்ளைப்படுதல் இருக்கலாம். இது தானாக சரியாகி விடும். பொதுவாக வெள்ளைப்படுதல் என்பது கிருமி தொற்றினால் ஏற்படுவது. கொனோரியா, டிரைகோமோனஸ், மொனிலியாசிஸ் ஆகிய பாக்டீரியாக்களின் தாக்குதலால் வெள்ளை படுதல் உருவாகிறது.

வெள்ளைபடுதல் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் அலர்ஜியின் காரணமாகவும் வெள்ளை படுதல் ஏற்படலாம். மேலும் கருப்பை பகுதியில் உள்ள கோழைப்படலம் அரிக்கப்படுவதாலும் அங்கிருந்து திரவம் வெளிப்படுகிறது.  உள் பகுதியில் சின்னச் சின்ன சீழ் கட்டிகள் உருவாகலாம். அரிப்பு ஏற்படலாம். வெள்ளைப்படுதலின் போது எரிச்சலான உணர்வு ஏற்படும். இத்துடன் கர்ப்பப்பை உள்ளே புண் இருந்தாலும் வெள்ளைப் படுதல் ஏற்படலாம். இந்த நேரத்தில் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, மேலும் உடலுறவு கொண்ட 4 முதல் 48 மணி நேரத்துக்குள் வலி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பு இன்றி உடலுறவு கொண்டால் ஆணுக்கும் தொற்ற வாய்ப்புள்ளது.

இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடலாம் அல்லது இளைக்கலாம். அடிவயிற்றில் கனமான உணர்வு இருக்கும். இந்த பிரச்னை உள்ள பெண்கள் எப்போதும் எரிச்சலுடன் இருப்பார்கள். நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் திறனை இழந்து காணப்படுவர். கண்டுகொள்ளாமல் விட்டால் இந்த கிருமித் தொற்று சிறுநீர்ப்பாதையை பாதித்து கிட்னி வரை செல்ல வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பப்பையில் உள்ள நாள்பட்ட புண்களால் வெள்ளை படுதல் இருப்பின் அது பின்னாளில் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் வெள்ளைப்படுதலை உடனடியாக சிகிச்சை மூலம் குணமாக்க வேண்டியது அவசியம் என்கிறார் சசிகுமார்.

பாதுகாப்பு முறைகள்

வெள்ளைப் படுதல் பிரச்னை உள்ள பெண்கள் அதன் தன்மையை அறிய வேண்டும். பெண்கள் மாதவிலக்கு காலத்தில் சுகாதாரமான முறையை கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் நாப்கினை மாற்ற வேண்டியது அவசியம். துணி நாப்கினை தவிர்க்கலாம். ஒரு சில நேரங்களில் வெள்ளைப் படுதல் பால்வினை நோயின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கவனிக்காமல் விட்டால், கணவன் & மனைவி இருவரையும் பாதிக்கும். பெண்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தமாக இருக்க வேண்டும். கழிவறையில் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது. வெள்ளைப்படுதல் இருக்கும் போது  தொற்று உள்ளதா அல்லது கர்ப்பப்பை பகுதியில் புண் உள்ளதா என்பதையும் பரிசோதனையில் அறியலாம். பிரச்னையை ஆரம்பத்தில் கண்டறிந்து சரி செய்வதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கவும் வாய்ப்புள்ளது. பெண்கள் சுகாதாரமாக இருப்பதும் பிரச்னை ஏற்பட்டால் உடனடி சிகிச்சையும் மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்.

ரெசிபி

சுண்டைக்காய், மணத்தக்காளிக் குழம்பு:

நல்லெண்ணெயில் சுண்டைக்காயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். புளி எலுமிச்சை அளவு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக்கி, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள் கலந்து எண்ணெயில் வதங்கிய பின்னர் புளியைக் கரைத்து ஊற்றவும். கொதித்த பின்னர் உப்பு மற்றும் வறுத்த சுண்டைக்காய் அல்லது மணதக்காளி போட்டு ஒரு கொதி வந்த பின் இறக்கலாம். சுண்டைக்காய் மற்றும் மணத்தக்காளியில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து உள்ளது.

வெஜ் வீட் ரொட்டி:

கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொள்ள வும். பச்சைப் பட் டாணியை தனி யாக வேக வைத்து மசிக்கவும். கோதுமை மாவை ரொட்டி பதத்துக்கு பிசைந்து அதில் காய் துருவல், பட்டாணி, கரம் மசாலா, உப்பு மற்றும் நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனை தோசைக்கல்லில் வார்த்து எடுக்கலாம். சாப்பிட சுவையாக இருப்பதுடன் முழுமையான சத்தான உணவாக இருக்கும்.

அரைக்கீரை துவையல்:

அரைக்கீரையில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. அரைக்கீரையை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள் ளவும். சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவும். சீரகம், வெந்தயம், மிளகு 2 ஆகியவற்றை தனியாக வதக்கி பொடித்துக் கொள்ளவும். அரைக்கீரை, வதக்கிய வெங்காயம், தக்காளி, பொடிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம்.

பாட்டி வைத்தியம்

¥ அருகம்புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

¥ அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் ஆகியவற்றில் தலா 20 கிராம் எடுத்து தட்டிச் சாறு பிழிந்து அதில் படிகார பஸ்பம் ஒரு கிராம் கலந்து குடிக்கலாம்.

¥ சுத்தம் செய்யப்பட்ட ஆகாயக் கருடன் கிழங்கு, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில் இரண்டு கிராம் அளவுக்கு வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடிக்கலாம்.

¥ உளுந்து, பார்லி இரண்டிலும் தலா 100  கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா பத்து கிராம் அளவுக்கு எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம்.

¥ எலிக்காதிலையுடன் கடுக்காய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நோய் தீரும்.

¥கீழா நெல்லி இலை, கோவை இலை, அசோகமரப்பட்டை, நாவல்பட்டை அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மோரில் கலந்து குடிக்கலாம்.

¥சாணாக்கி கீரையுடன், சீரகம் சிறிதளவு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம்.

¥சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும்.

¥சிவப்பு நிற தண்டுக் கீரைத் தண்டுடன் துத்தி இலையை சேர்த்து கஷாயம் வைத்து குடிக்கலாம்.

¥துத்திக் கீரையில் ஒரு கடுக்காயை தட்டிப் போட்டு கஷாயம் வைத்து குடிக்கலாம்.

டயட்

வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் உணவில் கவனம் செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ரத்த சோகை இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி உள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல் கால்சியம் சத்தும் உடலில் குறைவாக இருக்க வாய்ப்புண்டு. நாம் உட்கொள்ளும் உணவில் இரும்புச் சத்தை உடல் உட்கிரகித்துக் கொள்ள வைட்டமின் சி உள்ள பழச்சாறுகள் எடுக்க வேண்டும். பீசா, பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் இரும்புச் சத்தை உடல் எடுத்துக் கொள்வதைத் குறைக்கும்.

சத்தான உணவுகள் சாப்பிட்டாலும் மாலை சிற்றுண்டியாக இது போன்ற பாஸ்ட் புட் சாப்பிடுவதால் உணவில் இருந்து உடலுக்கு கிடைக்க வேண்டிய சத்துகள் தடுக்கப்படுகிறது. கீரை வகைகளை தினமும் உணவில் சேர்க்கலாம். முருங்கைக் கீரை, பருப்பு வகைகள், சுண்டல், அவல், முட்டை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச் சத்து உடலுக்குக் கிடைக்கும். மாதுளை மற்றும் கருப்பு திராட்சை நிறைய சாப்பிடலாம். சுண்டக் காய்ச்சிய பால் இரண்டு வேளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தும் கிடைக்கும்.