"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, July 12, 2016

மகளிர் மருத்துவம் வெள்ளைபடுதலா...

மகளிர் மருத்துவம் வெள்ளைபடுதலா...


             பெண்கள் இந் நாட்டின் கண்கள் என்றார் பாரதி.  ஒரு பெண்ணின் நலமே குடும்பத்தின் நலம் என்றார்கள் நம் முன்னோர்கள்.

பொதுவாக பெண்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுப்பது மாதவிலக்கும் வெள்ளைப்படுதலும் தான். அதில் வெள்ளைபடுதலைப் பற்றியும் அதன்பாதிப்புகளைப் பற்றியும் விரிவாக அறிவோம்.

பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்று. ஆனால் இந்த இயற்கையான சுரப்பிலிருந்து வெள்ளை படுதலுக்கு உள்ள வித்தியாசங்களை உணர்வது ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமாகிறது. சாதாரணமாக இந்த சுரப்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படும். எப்படி வியர்வை சுரப்பு வித்தியாசப்படுகிறதோ அதுபோல. மாதவிலக்கு வந்து 10 லிருந்து 15 நாட்களுக்கு இந்த சுரப்பு அதிகமாகும். பின் திரும்ப மாதவிலக்கு வரும் 5 நாட்களுக்கு முன் சிறிது அதிகப்படும். இது இயற்கையானது. இது தவிர வெள்ளைப்படுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிப்பது. வெள்ளைப்படுதலுடன் பலஹீனம், இடுப்பு வலி, முதுகுவலி, மூட்டு வலி, மற்றும் உடல் சோர்வு சேர்ந்தே தோன்றும்.இவை அனைத்தும் இருந்தால் வெள்ளைபடுதல் நோய் என்று உணரலாம்.

வெள்ளைப்படுதல் இருப்பது உணரப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

காரணம்:

வெள்ளை படுதலுக்கு  நிறைய காரணங்கள் உள்ளன.  சித்த மருத்துவத்தில் கூறப்படும் காரணம்,வெள்ளைப்படுதல் நோய் ஒருவருக்கு திடீரென்று ஒரு நாளில் வருவது இல்லை.  பித்தம் மிகுந்து முன்னத்தண்டு கோர்வையை பற்றி குய்யம், மூலாதாரம் இவைகளில் கனல் மிகுந்து, நாடி, நரம்பு, ரத்தக்குழாய்கள் மூலமாக எலும்பைப் பற்றியும், சுரோணிதத்தில் கலந்தும், நீர்ப்பை, நீர்துவாரம் இவற்றில் ரணத்தையும் சூட்டையும் உண்டாக்கி சீழ் பிடித்து வலியுண்டாக்கி ஒழுக்கு ஏற்படும். 

அல்லது, சாதாரண நிலையில் உடல் இருக்கும்போது பிறப்பு உறுப்பை ஒட்டிக் காணப்படும் தசைப்பகுதிகளில் உட்புறச்சுவர்கள் வழுவழுப்பாக வைத்துக் கொள்வதற்காக உடல் கூற்றின் இயல்பான பல நிலைகளுக் காகவும் ஒரு திரவம் சுரக்கிறது. இத்திரவம் பட்டினி கிடத்தல், காரம், புளிப்பு, உப்பு நிறைந்த பொருட்களை அளவுக்கு மீறி உட்கொள்வதாலும் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதாலும், மூலாதாரத்தில் வெப்பம் மிகுந்து தாது கேடு அடைவதாலும் அத்திரவம் அதிகளவில் சுரந்து வெள்ளை போக்காக மாறுகிறது.

தவறான உணவு பழக்க வழக்கங்கள் மூலம் அதிக நச்சுத்தன்மை உடலில் ஏற்படுகிறது. அவை தோல் மற்றும் வயிறு, நுரையீரல், சிறுநீரகங்கள் இவற்றின் மூலமாக வெளியேற்றப்படாமல் பெண்களின் கர்ப்பப்பை மூலமாக சளி சவ்வின் வழியாக வெளியேற்றப் படுகிறது.

இளம் வயது பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிவதால் அதிகம் ஏற்படுகிறது. மேலும் காம உணர்வு சுய இன்பம் காணுதல் இவைகளாலும் வெள்ளைப்படுதல் உண்டாகலாம். முறையாக மாதவிடாய் ஏற்படாத சில பெண்கள் மாதவிடாயை தூண்டும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதாலும் ஏற்படுகின்றது. சில பெண்கள் செயற்கையான கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படும். கருச்சிதைவு செய்து கொள்ளும் பெண்களுக்கும், பால்வினை நோய்கள், கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவைகளின் அறிகுறியாகவும் இந்த நோய் ஏற்படலாம். அதிகமாக உடலுறுவில் ஈடுபடும் பெண்களுக்கும், கோபம், வருத்தம், வெறுப்பு மன உளைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும்.

திருமணமான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அடிக்கடி கருக்கலைப்பு  செய்வது, கிருமி தொற்று ஏற்படுவது. குழந்தை பேற்றின் போது கருப்பையில் உள்ள அழுக்குகள் முழுமையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், கருப்பையில் புண், கட்டி முதலியன உண்டாகி வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

நோயின் அறிகுறிகள்:

வெள்ளைப்படுதல் உள்ளவர்களுக்கு சிறுநீர்போகும் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். உடல் மெலிந்து போகும். கை, கால்கள், உடல் கணுக்கால் சதை, அனைத்து மூட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும். இந்த நோய் காரணமாக நாளுக்கு நாள் உடம்பு நலிவடைந்து விரைவிலேயே அவர்கள் களைப்படையக்கூடும். சிலருக்கு பிறப்பு உறுப்புகளில் அரிப்பும், புண்ணும் ஏற்படுவதுண்டு.

ஒரு சிலருக்கு இந்த நோயினால் உஷ்ணம் அதிகமாகி வயிற்றை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும். மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி, அரிப்பு ஆகியவையும் இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு சரியாக வராது. இரத்த சோகையுடன் உடல் மெலிந்து வறட்சி ஏற்பட்டு நிறம் வெளுத்து மூட்டுவலி, இடுப்பு வலி, வேலை செய்யும்போது இதயம் படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.

நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டவுடன், தகுந்த மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து பின் மருந்து உட்கொள்ள வேண்டும்.

பாக்டீரியா மற்றும் கிருமியால் உண்டான வெள்ளைப்படுதல் என்றால் அதற்குரிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்திய மருத்துவத்தில் மூலிகைகளை கொண்டு குணப்படுத்த இயலும்.

மணத்தக்காளி சூப்

சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்

கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.

உணவு முறை

·    அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
·    உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
·    தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
·    உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.