"இந்த பக்கத்திற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு அறக்கட்டளை.......!"

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் கல்வி உபகரணம் வழங்கல்

பள்ளிகளில் உதவி

பள்ளிகளில் உதவி

Tuesday, November 8, 2016

சல்லிய கரணி” சஞ்சீவி மூலிகை

சல்லிய கரணி" சஞ்சீவி மூலிகை
.
துண்டிக்கப்பட்ட பாகத்தை ஒட்டவைக்கும் சக்தியுடைய இம்மூலிகைக்கு "சல்லிய கரணி சஞ்சீவி " என்று பெயர் – அந்த காலத்தில் போரில் கை- கால் – வெட்டுப்பட்டால் இந்த மூலிகையை அரைத்து காயத்தின் மீது தடவுவார்கள் - காயம் ஆறிவிடும் - இது சணப்ப இலை – போன்ற இலையுடையது- இதை தொட்டவுடன் பக்க இலையுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டு கை கூப்புவது போல் போன்று இருக்கும் –
சூரியன் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் இலை திரும்பி நிற்கும் – இது ஜீவசக்தி யுடைய மூலிகை - இதை முறைப்படி காப்பு கட்டி ஆணிவேர் அறுந்து விடாமல் – தோண்டி எடுத்து வந்து நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து – துணியில் வடிகட்டி –மூன்று விரல் அளவு தேனில் குழைத்து 48 நாட்கள் சாப்பிட்டால் சகல நோயும் தீர்ந்து நரை திரை மாறும் – பதினாறு வயது குமாரனாகவும்- மதயானை போன்ற வலிமை பெறுவதுடன் – அடித்தாலும் வலிக்காது வீங்காது எளிதில் உயிர் போகாது – என்று காலாங்கி நாதர் மலை வளம் என்ற ஓலைசுவடியில் கூறப்பட்டுள்ளது –
நான் இதைதான் சாப்பிடுகிறேன் – மிக அற்புதமான சஞ்சீவி மூலிகை – சர்க்கரை வியாதி புண்கள் – இம் மூலிகையை சாப்பிட்டவுடன் ஓடும் – அகத்திய மாமுனிவர் அந்த காலத்தில் அறுவை சிகிச்சை செய்து முடித்தவுடன் இந்த மூலிகையை அரைத்து மேலே தடவுவார் – அறுத்த பாகம் ஒட்டி மீண்டும் ஒட்டிக் கொண்டு ஆறிவிடும் –
இதன் வடக்கு போகும் வேரை எடுத்து தாயத்தில் அடைத்து வலது கையில் கட்டிக்கொண்டால் சகல வசியம்- லட்சுமி கடாட்சம் பெற்று வறுமை இன்றி – சுக வாழ்க்கை வாழ்வான் என்று காலாங்கி நாதர் மலை வாகடம் என்ற நூலில் கூறியுள்ளார் -